Tuesday 26 March 2024

புதன் பகவான் தரும் "பத்ர யோகம்"

 புதன் பகவான் தரும் "பத்ர யோகம்"




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


 " பஞ்ச மஹா புருஷ கிரகங்கள் என்பது குரு, புதன், சுக்கிரன்,சனி மற்றும் செவ்வாய் ஆகும்.இந்த ஐந்து கிரகங்களில் ஒவ்வொரு கிரகமும் தனி தனியாக  தரக்கூடிய யோகங்களை தான் "பஞ்ச மஹா புருஷ யோகங்கள்" என்று அழைக்கப்படுகிறது.


 இதில் வித்தைக்காரர் என்று அழைக்கப்படும் புதன் பகவான் தரக்கூடிய யோகம் தான் "பத்ர யோகம்" என்று அழைக்கப்படுகிறது.


'  பத்ர' - என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு நல்லது , அதிர்ஷ்டம் அல்லது மங்களம் என்று அழைக்கப்படுகிறது.


  எனவே பத்ர யோகம் ஒரு மனிதனுக்கு தேவையான நல்ல விஷயங்களை தரும் யோகமாகவும்,நல்ல அதிர்ஷ்டம் தரும் யோகமாகும் மற்றும் நல்ல மங்களகரமான விஷயங்களை தரும் யோகமாகும் அழைக்கப்படுகிறது.


   சில நூல்களில் "பத்திர யோகம்"என்று அழைக்கப்படுவதால்   என் மனதிற்குள் தோன்றிய எண்ணப்படி கற்பனை செய்து பார்த்தால் நாம்  பாதுகாத்து வைக்க வேண்டிய ஆவணத்தை"பத்திரம்" என அழைப்போம்".பத்திரம் என்ற சொல்லுக்கு பாதுகாத்து வைக்க வேண்டிய ஒரு பொருள் அல்லது ஆவண படுத்தி வைக்க வேண்டிய ஒன்று ஆகும்.


 இந்த பத்திரம் என்ற சொல்லில் இருந்து தான் பத்திர " என்ற வார்த்தை எடுக்கப்பட்டிருக்கும்.பத்திரப்படுத்த வேண்டிய யோகம் என்ற பொருளில் நாம் எடுத்துக் கொள்ளலாம்.இது ஒருவிதமான எனது பார்வை ஆகும்.


      பத்திர யோகத்தை தரக்கூடியவர் யார்? என்பதை தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் உங்களுக்கு இருக்கும்.


 இதோ தருகிறேன்.வித்தை காரகன் என அழைக்கப்படும் புதன் பகவான் தரும் யோகம் தான் இந்த "பத்ர யோகம்" ஆகும்.


   பத்ர யோகம் என்பது லக்கனம் மற்றும் ராசிக்கு கேந்திர ஸ்தானமான 1,4,7,10 ஆம் இடங்களில் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் வலிமை பெற்று நின்றால் "பத்திர யோகம்" உண்டாகிறது.


  பத்திர யோகம்   ஒருவருக்கு   நல்ல யோக பலனை தர வேண்டுமாயின் புதன் பகவான் உடன் சனி மற்றும் செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் தொடர்பு இருக்க கூடாது.


 புதன் பகவான் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் வலிமை பெற்று இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறை சந்திரன், தனித்த புதன் போன்ற சுப கிரகங்களின் தொடர்பு கொள்ள பத்திர சிறப்பாக வேலை செய்கிறது.


 குறிப்பாக வளர்பிறை சந்திரன் கேந்திரத்தில் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் வலுப்பெற்று நின்றால் நல்ல புலமையும் மற்றும் ஞானமும் பெற்ற புகழ் பெற்ற ஜோதிடராக திகழ்வார்.


 புதன் பகவான் வலிமை பெற்ற நிலையில்  புத்தி கூர்மை படைத்தவராக நல்ல அறிவும் மற்றும் ஞானமும் நிறைந்தவராக திகழ்வார்.கணித மற்றும் கனிப்பொறி அறிவு நிறைந்தவராக விளங்குவார்.


 எழுத்து, பேச்சு இசை   மற்றும் நுண்கலை போன்றவற்றில் ஆர்வம் உடையவராக திகழ்ந்து அதில் படைப்பாற்றல் மிக்கவராக விளங்குகிறார்.


 இலக்கிய ரசனை மற்றும் இசையில் நாட்டம் உடையவராக இருப்பதால் என்றும் மனதை இளமையாக வைத்து கொள்ளும் மனநிலை உடையவராக இருப்பார்.


வங்கி ,நிதி  மற்றும்  புள்ளியியல் மற்றும் பத்திரிகை போன்ற துறைகளில் மற்றவர்களை விட மாறுபட்ட வகைகளில் திறமைசாலியாக  மற்றும் சமயோசித புத்தி உடையவராக செயல்பட்டு புகழ் பெறும் யோகம் உடையவராக திகழ்வார்.


 கண்டு பிடிக்கும் ஆற்றல் , ஓவியம்,சிலை ,சிற்பம் ,கூடை முடைதல் ,பாய் பின்னுதல் போன்ற கைவேலைப்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் தன்மை படைத்தவராக திகழ்வார்.


  திரை சீலைகள் , சாளரங்கள், தரை விரிப்புகள்  போன்ற வகையிலான அலங்காரங்களில் ஆர்வம் உடையவராக திகழ்வார். சினிமாவில் பின்புலமாக  எடிட்டிங் ,இசை ,திரைக்கதை எழுதுதல், நிகழ்ச்சிகளை தொகுத்தல், ஆர்ட் டைரக்டர் ,பாடகர்கள் ,பாடல் எழுதுபவர் மற்றும் செட் போடுதல்  போன்றவற்றில் புகழ் அடைவார்கள்


புதுமையான விஷயங்களில் ஆர்வம் உடையவராக, படைப்பாற்றல் மிக்கவராக, காலத்திற்கு ஏற்றார் போல் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் ஆர்வம் உடையவராக படிக்காத மேதையாக திகழ்வார்கள்.


 ஆலோசனை வழங்கும் மதி யுகி மந்திரியாக, பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் வல்லமை படைத்தவராக திகழ்வார்.


விதி விலக்கு


  புதன் பகவான் லக்கனத்தை தவிர ஏனைய சொந்த  கேந்திர வீடுகளில் நின்றால் கேந்திர ஆதிபத்திய தோஷத்தை தருவார்.தனது சொந்த வீடுகள் அல்லாத மறு கேந்திரம் ஏறினால் கேந்திர ஆதிபத்திய தோஷத்தை புதன் பகவான் தர மாட்டார்.


    உதாரணமாக மிதுனம் லக்கனத்திற்கு நான்காம் வீடுகளில் உச்சம்,மூல திரிகோணம் மற்றும் ஆட்சி  போன்ற மூன்று நிலைகளில் வலுப்பெற்று நின்றாலும் கேந்திர ஆதிபத்திய தோஷத்தை தருவார் என்ற வகையில் பத்திர யோகம் சரியாக செயல்படாது . ஆனால் ஏனைய லக்கனம் ,ஏழு மற்றும் பத்தாம் வீடுகளில் பத்ர யோகம் சிறப்பாக செயல்படும்.


கன்னி லக்கனத்திற்கு பத்தாம் இடத்தில் ஆட்சி நிலையில் கேந்திர ஆதிபத்திய தோஷத்தை தருவார்.பத்ர யோகம் சிறப்பாக செயல்படாது.


மிதுனம் மற்றும் கன்னி லக்கனத்திற்கு தனது சொந்த வீடுகள் அல்லாத வீடுகளில் மறு கேந்திரம் ஏறினால் கேந்திர ஆதிபத்திய தோஷத்தை தராது‌ மாறாக பத்ர யோகம் சிறப்பாக செயல்படுகிறது


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.Sc,M.A,BEd (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Email masterastroravi@gmail.com

No comments: