Tuesday 26 March 2024

தொடர்ந்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் ஜாதகம் எப்படி இருக்கும்?


 தொடர்ந்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் ஜாதகம் எப்படி இருக்கும்?



செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவர் ஜாதகத்தினை பார்த்தவுடனேயே தெரிந்து கொள்ளலாம் .இவர் பிறப்பிலிருந்து தொடர்ந்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார் என்பதை தெளிவாக இந்த ஜாதகம் காட்டிக் கொடுத்து விடும்.


  இவ்வாறு தொடர்ந்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்க கூடிய ஜாதகத்தில் ராசி, லக்கனம் மற்றும் அதன் அதிபதி ஆகிய மூன்றும் மிகவும் பலவீனமான நிலையில் பாவ தன்மை அடைந்து இருக்கும்.


 இவர்கள் ஜாதகத்தில் வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்து காட்டக் கூடிய தசா புத்தி மிகவும் கஷ்டங்களை தரக்கூடிய நிலையில் இருக்கும்.


இது போன்ற அமைப்பை கொண்டுள்ள ஜாதகத்தில் பெரும்பாலான கிரகங்கள் பாவர் பார்வை அல்லது சேர்க்கை போன்ற நிலைகளில் தொடர்பு பெற்று இருக்க வேண்டும்.


இவர்கள் ஜாதகத்தில் சனி , செவ்வாய் மற்றும் ராகு போன்ற மிகவும் கஷ்டமான சூழ்நிலையினை தரக்கூடிய கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கை தனித்தனியாக அல்லது சேர்ந்த நிலையில் தொடர்பு கொண்டிருக்கும்.


உதாரணமாக பிறந்ததிலிருந்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் ஜாதகரின் ஜாதகத்தில் பிறந்ததிலாருந்து  தொடர்ந்து நடக்கும் தசா புக்தி அவ யோகத்தை தரக்கூடிய நிலையிலே இருக்கும்.


ஒரு உதாரண ஜாதகம்


கன்னி லக்கனம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம்


2-ல் ராகு

3-ல் குரு

6-ல் சனி 

8-ல் சுக்கிரன் மற்றும் கேது

9-ல் சூரியன், சந்திரன் மற்றும் புதன்

12-ல் செவ்வாய் 


  தன ஸ்தானமான இரண்டாம் இடத்தில் ராகு பகவான் அமர்ந்து கெட்டு போனதுடன் தன அதிபதி சுக்கிரன் மேஷ வீட்டில் அதாவது எட்டில் மறைந்து கேது  பகவான் உடன் சேர்ந்து லக்கனத்திற்கு ஆறாம் வீட்டில்  கும்ப வீட்டில் இருந்து மூன்றாம் பார்வை பார்த்து கெட்டு விட்டது.


தன காரகன் குரு பகவான் லக்கனத்திற்கு மூன்றாம் வீட்டில் வக்ர நிலையில் அமர்ந்து  சனியின் பத்தாம் பார்வை , சனியின் சம சப்தம பார்வையை பெற்ற செவ்வாய் பகவானின் நான்காம் பார்வை மற்றும் தேய்பிறை சந்திரன் அதாவது பாவரான அமாவாசை சந்திரன் பகவானின் சம சப்தம பார்வை ஆகிய முக்கூட்டு தாக்குதல் நிலையில் தன காரகன் குரு பகவான் மிகவும் பலவீனம் அடைந்து விட்டார்.ஆக மொத்தத்தில் தன ஸ்தானம்,தன அதிபதி மற்றும் தன காரகன் குரு ஆகிய மூன்றும் கெட்ட நிலையில் பிறந்ததிலிருந்து எவ்விதமான சாம்பாத்தியத்தை செய்யவில்லை.


லக்கன அதிபதி புதன் சூரியன் உடன் பின்னோக்கிய அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் ஆகிய நிலையை அடைந்து தேய்பிறை சந்திரன் உடன் சேர்க்கை இவை மட்டும் அல்லாமல் சனி மற்றும் செவ்வாய் ஆகிய இருவரின் பார்வை பெற்று மிகவும் பங்கம் அடைந்த குரு பகவான் பார்வை ஆனது லக்கன அதிபதி மற்றும் ராசியையும் பாவத்துவம் அடைய செய்து விட்டது.ராசி அதிபதி சுக்கிரன் சனி பார்வை பெற்று பாவ நிலை அடைந்து விட்டது.


 இவர் சுக்கிரன் அணியை சேர்ந்த கன்னி லக்கனம் என்பதால் சுக்கிரன்,சனி மற்றும் புதன் தசை யோகம் தரும் திசையாக வரும்.சூரியன், சந்திரன், செவ்வாய் மற்றும் குரு தசை அவ யோக தசையாக அமைகிறது.


இவருக்கு பிறப்பிலிருந்து தொடந்து நடைபெறும் தசைகளும் அவ யோக தசையாக அமைந்து உள்ளது.

ஜெனன கால சந்திரன் தசை  எதிர் அணியின் தசை கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் அதனை தொடர்ந்து கன்னி லக்கனத்திற்கு வர கூடாது என்று அழைக்கப்படும் செவ்வாய் தசை இவ்விரு தசைகளும் பதினான்கு ஆண்டுகள் ஆகும்.


இதனை தொடர்ந்து வந்த ராகு தசை சுக்கிரன் அணியை சேர்ந்த கன்னி லக்கனத்திற்கு யோகத்தை தரக்கூடிய தசை என்றாலும் ராகு பகவான் சுக்கிரன் வீட்டில் இருப்பதால் சுக்கிரனை போல செயல்படுவார்.ஆனால் இவரது ஜாதகத்தில் சுக்கிரன் பகவான் எட்டில் கேது உடன் இணைந்து சனியின் பார்வை பெற்று பாவத்துவ நிலைக்கு தள்ளப்பட்டாதால் ராகு தசையிலும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்.ராகு தசை முப்பத்திரண்டு வயது வரை நீடிக்கும்.


அடுத்து வரும் குரு தசை லக்கனத்திற்கு எதிர் அணி தசை மட்டும் அல்லாமல் சனி மற்றும் செவ்வாய் மற்றும் தேய்பிறை சந்திரன் ஆகிய மூவரின் பார்வை பெற்று மிகவும் பலவீனமான நிலையில் குரு தசை பதினாறு ஆண்டுகள் நன்றாக இருக்காது.ஆக குரு தசை நாற்பத்தி எட்டு வயது வரை நீடிக்கும்.


தொடர்ந்து வரும் சனி தசை லக்கன யோக தசையாக இருந்தும் ஆறாம் இடத்தில் ஆட்சி பெற்று    செவ்வாய் பகவானின் சம சப்தம பார்வையை பெற்று உள்ளது.எனவே நாற்பத்தி எட்டு வயதில் தொடங்கி பத்தொன்பது ஆண்டுகள் அறுபத்தி ஏழு வயது வரை இந்த கஷ்டமான நிலை நீடிக்கும்.


   இவ்வாறாக பிறப்பிலிருந்து தொடந்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் நிலை சிலர் ஊழ்வினை பயனால் இப்பிறப்பில் அனுபவிக்க கூடிய கர்ம வினை தொடர்கிறது.


 இவருக்கு திருமணம் வாழ்க்கை என எடுத்துக் கொண்டால் திருமணம் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக காணப்படுகிறது.


  இவரது ஜாதகத்தில் தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க கூடிய ஏழாம் இடத்தை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்து பார்த்தால் களத்திர ஸ்தான அதிபதி என்று அழைக்கக்கூடிய ஏழாம் இட அதிபதி குரு பகவான் ஆவார் .இவரே புத்திர ஸ்தான அதிபதியும் ஆவார் .


     இங்கு குரு பகவான் இரண்டு சனியின் பார்வையை பெற்றதற்கு நிகரான சனி மற்றும் தேய்பிறை சந்திரனுடைய பார்வையும் மற்றும் சனி பார்த்த செவ்வாயின் பார்வையையும் பெற்று மிகவும் பலவீன நிலையை அடைந்துள்ளார். ஏழாம் இடத்திற்கு காரகரும் தாம்பத்திய சுகத்தை ஜாதகருக்கு கொடுத்து அனுபவிக்க கூடிய சுக்கிர பகவானும் எட்டாம் இடத்தில் கேதுவோடு இணைந்து செவ்வாய் பார்த்த சனியின் பார்வையை பெற்றுள்ளார்.ஆக ஏழாம் இடத்தை தவிர ஏழாம் இட அதிபதி மற்றும் காரகன் ஆகிய இரண்டும் கெட்டு விட்டது.


குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் ராகு ,குடும்ப அதிபதி சுக்கிரனும் பாவத்துவம் அடைந்து விட்டார்.


மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தில் கேது அமர்ந்து சனியின் பார்வையை பெற்று கெட்டுவிட்டது .எட்டாம் இட அதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்தில் அமர்ந்து சனியின் பார்வையால் பாவத்துவம் அடைந்து விட்டது.


இதே போல ராசி அடிப்படையில் பார்க்கும் பொழுது ராசி அதிபதி சுக்கிரன் கெட்டுவிட்டார் .சந்திரனோ தேய்பிறை சந்திரன் ஆவார் .ராசிக்கு ஏழாம் இடத்தில் சனி, செவ்வாயின் பார்வை ராசிக்கு எட்டாம் இட அதிபதி குருவும் சனி செவ்வாயின் பார்வையில் கெட்டுவிட்டார்.


இவ்வாறாக லக்கனம் மற்றும் ராசிக்கு திருமண ஸ்தானமான 1 , 2 ,7 ,8 ஆகிய இடங்கள் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது.


தாம்பத்திய சுகத்தை தரும் சுக்கிரன் பகவான் மற்றும் புத்திர பாக்கியம் தரக்கூடிய குரு பகவான் ஆகிய இரண்டும் பாவ தன்மையை அடைந்து இருப்பதால் மனைவியாலும்,பிள்ளைகளாலும் யோகத்தை அனுபவிக்க இயலாத நிலையில் உள்ளது.


ஆனால் இவர் சுக்கிரன் மீது சனி பார்வை மற்றும் சனி மற்றும் செவ்வாய் ஒன்றை ஒன்று சமசப்தமாக பார்த்து கொள்ளும் தன்மை உடையவர் என்பதால் திருமணம் செய்து கொள்ளும் அமைப்பை பெற விட்டாலும் பெண் காம சுகத்தை பெற்று இருப்பார்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 

மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.SC,M.A,BEd (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


Email masterastroravi@gmail.com.

No comments: