Sunday, 1 October 2017

திருமணபொருத்தம் பார்க்கும்போது கவனிக்கவேண்டிய முக்கிய அம்சநிலை


திருமண பொருத்தம் பார்க்கும்போது கவனிக்கப்ட வேண்டிய முக்கிய அம்சநிலை.

                                                              

கிரகங்கள் படுத்தும் பாடு-( 174 )
செவ்வாய்பட்டி அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை !

                               திருமணம் ஆனவுடன் எல்லோராலும் கேட்கப்படுகின்ற கேள்வி மட்டுமல்லால், உறவினர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர் பார்ப்பும் குழந்தைப்பேறுதான் ஆகும்.

                                தம்பதிகளின் வாழ்வில்  ஏற்றதாழ்வுகள் ,பிரச்சினைகள் இருந்தாலும் அவர்களுக்கு குழந்தை பிறந்து இருப்பின் அவர்களுக்கு இடையே எவ்வளவு பிணக்குகள் இருந்தாலும் தடம் புரளாமல் அவர்களது குடும்ப வாழ்வு எனும் தேர்  சிறப்பாக நகர்ந்து  செல்லும்.    ஒரு திருமணத்தின் முழு வெற்றியே குழந்தைபிறப்பில்தான் அமைகிறது.

                           குழந்தையின்மை என்பது பழைய காலங்களில் லட்சம் நபரில் ஒன்று அல்லது இரண்டு என இருந்தாலும் தற்சமயம் அந்த பிரச்சினை ஆயிரம் நபரில் ஒருவர் என்ற அளவில் வளர்ந்து நிற்கிறது.
இதற்கு அறிவியல் அடிப்படையில் தரும் காரணங்களை ஆய்ந்து நோக்கும்போது பலவித காரணங்களை தருகிறார்கள்.
அவைகள் என்ன என்பதை விளக்கி அதற்கு பிறகு சோதிட அடிப்படையிலான காரணங்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என உள்ளேன்.

                                                                   


                                            இப்பிரச்சினைக்கு முக்கியமான காரணம் இன்று வளர்ந்து நிற்கும் தொழில்நுட்பம் ஆகும்.இன்றைக்கு உலக விஷயங்கள் மற்றும் பலவித தேவைகளை பெறும் முயற்ச்சிகள் அனைத்தும் கையடக்க அலைபேசிக்குள் வந்துவிட்டது.இதன் அபரித வளர்ச்சியும்,அதிக நேரம் இவற்றில் செலவிடலும் ஒருவித மன அழுத்தம்,பொறாமை உணர்வு மற்றும் போட்டி மனப்பான்மை இவை அனைத்தும் சேர்ந்து ஒருவரது மலட்டுத்தன்மைக்கு காரணமாக அமைகிறது.

                                      அடுத்தபடியாக இந்த நவீன தொழில்நுட்ப விளைவால் பாலியல் சார்ந்த படங்களை (sex video) பார்க்கும் வாய்ப்பு இனையவழி சேவை வழியாக எளிதாக கிடைப்பதால் திருமணத்திற்கு முன்பாக ஆடவரும் ,பெண்டீரும் பாலியல் சார்ந்த தவறான செயல்களில் ஈடுபடல் (சுய இன்பம்,கருக்கலைப்பு ....) மூலமாக தனது திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறக்கும் தன்மையினை இழந்துவிடுகிறார்கள்.
சில நேரங்களில் பொறாமை உணர்வும் ஒருவரது மலட்டுத்தன்மைக்கு காரணமாக அமைகிறது.

                                சோதிட அடிப்படையில் ஆராய்ந்து பார்க்கும்போது சிலருக்கு கிரகபலன்களால் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.ஒரு சிலருக்கு பாலியல் ஆசைகளும்,உணர்வுகளும் இருந்தாலும் அவர்களால் செயல்பாடுகளில் ஈடுபடும் தன்மை குறைவாகவோ அல்லது செயல்பாடுகள் அற்றவர்களாக இருப்பர்.இது சோதிட அடிப்படையில் நன்கு ஆய்ந்து பார்க்க புலப்படும்.

                                                            


                                ஒரு பெண்ணிற்கோ/ஆணுக்கோ இணை தேடும்போது இன்றைய கால கட்டத்தில் தனக்கு வரும் துணையின் சாதகத்தினை ஆய்ந்து பார்க்கவேண்டிய நிர்பந்தம் உள்ளது.ஆராயாமல் பொருத்தம் பார்த்து திருமணம் செய்த பிறகு தம்பதிகள் இருவரில் யாரோ ஒருவருக்கு அலித்தன்மை இருக்கும் பட்சத்தில் திருமண வாழ்வே பெரிய பிரச்சினைக்கு உள்ளாகிவிடுகிறது.தடம் மாறாத தன்மையுள்ளவராக இருப்பின் விவாகரத்து வரை சென்றுவிடுகிறது..

                                ஒருவரது சாதகத்தில் சனிபகவானும்,புதன்பகவானும் சமசப்தமாக பார்த்துக்கொள்ளும் அமைப்பினை தனது சாதகத்தில் பெற்றவர்கள் அலித்தன்மை பெற்றவர்களாக உள்ளனர்.
சூரியன்பகவான்,சந்திரபகவான் இருவரும  சமசப்தமான அமைப்பு உடையவர்களும் சாதகர் அலித்தன்மை பெற்றவராக திகழ்வர்.
புத்திர தடை உண்டவாதற்கான காரணங்களை ஆய்ந்து உற்று நோக்க தம்பதிகள் இருவரது சாதகமும் அவசியம் ஆகும்.தம்பதிகள் இருவரில் யாரோ ஒருவருடைய சாதகத்தில் புத்திரதோஷம் இல்லையெனில் அவர்களுக்கு புத்திரசந்தானம் உருவாகிவிடும்.

                                   புத்திரம் தொடர்பாக ஆராய்ந்து பார்க்க தம்பதிகள் இருவரது சாதகத்திலும் புத்திரகாரகன் குருபகவான்,காமகாரகன் செவ்வாய்பகவான்,மனநலகாரகன் சந்திரபகவான் மற்றும் களத்திரகாரகன் சுக்கிரபகவான் ஆகியவரது நிலையினை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

                                        இதேபோல தம்பதிகளது சாதகத்தில் லக்கனாதிபதி,புத்திரஸ்தானதிபதி மற்றும் தர்மஸ்தானாதிபதி ஓன்பதாம் அதிபதி ஆகியவர்களின் அதிபதிகள் ஆகியவர்களது நிலையினை பொறுத்துதான் புத்திரபாக்கியம் அமைகிறது .எனவே தம்பதிகளுக்கு விவாகம் செய்யும்போது மேற்கண்ட நிலைகளை ஆராய்ந்து பார்க்தவேண்டும்.

                                            மேற்கண்ட அதிபதிகள் நீசம்,அஸ்தமனம்,பகை மற்றும் வக்கிரம் போன்ற அமைப்புகள் பெற்றிருப்பின் புத்திபாக்கியம் கால தாமதம் உண்டாக வாய்ப்பு உருவாகிறது.

                                        மேற்கண்ட அதிபதிகள் மறைவிடங்கள் செல்லாம்ல் இருக்கவேண்டும்.ஆறு,எட்டாம் அதிபதிகளின் சேர்க்கையோ அல்லது பார்வையற்று இருக்கவேண்டும்.

                                          மேற்கண்ட அதிபதிகள் அரவுகளான ராகு,கேது சேர்க்கையற்றோ அல்லது அரவுகளின் சாரம் அற்றோ இருக்கப்படவேண்டும்.
மேலும் மேற்கண்ட ஸ்தானங்களில் அரவுகளான ராகு,கேது இடம்பெறாமல் இருக்கவேண்டும். மறைவிட அதிபதிகள் இந்த இடங்களில் இடம்பெறாமல் இருக்கவேண்டும்.

(தங்களது சாதக பலன்,திருமணபொருத்தம் மற்றும்  ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்கலது பிறந்ததேதி,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)


வாட்ஸ்அப் எண்  97 151 89 647

    செல்  97 151 89 647      740 257 08 99





அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.Sc ,MA,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: