Friday, 27 October 2017

விதியை மதியால் வெல்ல முடியுமா ?

விதியை மதியால் வெல்ல முடியுமா ?


ஸ்ரீ பத்ரகாளியம்மன் அருளாசியுடன்....

       உலகில் எல்லாம் விதிப்படிதான் நடக்கும் அதில் எவ்வித மாற்றமும் இல்லை என உறுதியாக யாராலும் கூற முடியாது.விதிப்படிதான் நடக்குமெனில் கல்விக்கூடங்கள் எதற்காக ? ஆசிரியப்பெருமக்கள் எதற்காக ?
வியாதியைப்போக்கும் மருத்துவர்கள் மருத்துவக்கூடங்கள் எதற்காக ?
நடப்பவை அனைத்தும் விதிப்படி எனில் முயற்சிகள் எதற்காக ?
விதியை பணிரெண்டு கட்டம் வழியாக தந்த இறைவன் விதியை மதியால் வெல்லும் தந்திரத்தை தந்து பிறப்பெடுக்க வைக்கிறான்.

            விதியை  எவ்வித முயற்சியுமில்லாமல் எல்லோராலும் வென்று விட முடியுமா ?
என்றால் முடியாது.
விதியை வெல்லும் மார்க்கங்கள்தான் பரிகாரங்கள்,இறை வழிபாடு,மந்திர உச்சாடணங்கள்,தியாணம் மனப்பயிற்சிகள்,தூய்மையான எண்ணம்,ஜீவகாருண்யம் மற்றும் தான தர்மங்கள் போன்றவை விதியை வெல்ல பயன்படுத்தும் கருவிகள் ஆகும்.

       விதியை மதியால்  இறை வழிபாட்டால்
வெல்லவாம்.தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விடும்.எனவே இறைவழிபாட்டுக்கு தேவை நம்முடைய மனம்தான் அவசியம் ஆகும்.


            மேலும் விதியை மதியால் வெல்ல மதியாகி சந்திரனும் ,அறிவுக்காரனான குருவும் ,நுண்ணறிவை தரும் புதனையையும் பலமாக பெற்றவர்களும் விதியை வென்று விடுகிறார்கள்.

             ஒரு ரோட்டில் இரவில் பயணம் செய்யும்போது பள்ளத்தை வைத்து விபத்தை தருவது விதி எனில்
பள்ளம் இருக்கு என காட்டி கொடுப்பது மதி .விதியை மதியால் வெல்லலாம் என்ற யோகம் இருப்பவர்கள் வென்றுவிடுகிறார்கள்.


                 ஒரு மனிதனின் பிறப்பு என்பது ஆணின் விந்தனுவும் பெண்ணின் அண்ட அணுவும் இணைந்து சைகோட் எனும் கருமுட்டை உருவாகும்போது
தாய் மற்றும் தாய் வழி உறவுகளின் பண்புகள் , தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளின் பண்பு நலன்கள்(நிறம்,வடிவம்,குணம்,அறிவு) அவ்விரு செல்களின் உட்கருவில் உள்ள குரோமோசோமில் உள்ள ஜீன்களின் வழியாக கடத்தப்படுகிறது என்கிறது .


          உயிரியியலின் ஒரு பிரிவான "மரபும் பரிணாமமும்" என்ற துறை.
சோதிடத்தில் உள்ள பணிரெண்டு ராசிகளில் ஒன்றான ஐந்தாமிடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பது இந்தஸ்தானம் நமது தந்தையும் அவர் வழி உறவுகளும்,தாயும் அவர் வழி உறவுகளும் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்பவே ஒருவர் இப்பிறப்பு எடுக்கிறார்.அதன் பாவ புண்ணியங்களுக்கு அவர்களுக்கு புத்திரர்களும் விதியெடுத்து பிறப்பெடுக்கிறார்கள் என்பதால்தான் புத்திரஸ்தனமும்,பூர்வ புண்ணிய ஸ்தானமும் ஒரே ஸ்தானமாக வைத்திருக்கிறார்கள் பரம்பொருள் எனக்கருளிய ஞானத்தால் விளக்குகிறேன்.

                    இதேபோல் லக்கனத்தில்
ஒரு மனிதனின் குணநலன்களையும்,உடல் அழகும்,வடிவமும்,வயிறு,தலை,உடலில் உள்ள இதர அங்கங்களையும்,எண்ணம்,கவலை,புகழும்,உடலில் ஏற்படும் தழும்பும்,மகிழ்வும் ,ஆயுளையும் காணலாம்.


                     இரண்டாம் இடத்தில் தனம்,நேத்திரம்,வாக்கு,குடும்பம் மற்றும் கல்விநிலைகளையும்,வலது கண்,சாத்திரம்,நடை,மனம்,மறுத்து பேசுதல்,பொன்,அதிர்ஷ்டம் மற்றும் நவரத்தினம் போன்றவை அறியலாம்.

                 மூன்றாம் பாவத்தில் வெற்றி, ஆளடிமை,எண்வகைபோகம்,சங்கீதம்,தேகபலம்,இளைய சகோதரம்,காதில் ஏற்படும்நோய்,காதில் அணியும் அணிகலன்கள்,உண்ணும் பாத்திரம்,பராக்கிரமம்,தொழிலில் மேன்மை,ஊக்கமுடைமை,பூமி பலம் போன்றவை ஆகும்
நான்காம் பாகத்தில் மூலம்
கல்வி,வாகனம்,மங்கள காரியமும்,வியாபாரமும்,வீடும்,தாய்,வெற்றியால் அடையும் புகழ்,உறவினர்கள் நலமும்,பால் தரும் பசுக்களும்,திருக்கோயில் பணி மற்றும் வழிபாடுமநட்பு வட்டம்,ஒப்பனை பொருட்கள்,அவமானம்,மாய மந்திரங்கள்,நீர்,பால் ,உணவு,குதிரைகள்,எருமைகள்,பயக மற்றும் தோட்டங்கள் முதலியன அறியலாம்.
ஐந்தாம் இடத்தில் மேலும் தந்தையை பெற்ற பாட்டனையும்,முற்பிறவியில் உண்டான ஊழின் பயனும்,நற்றமிழ் புலவர்களால் பாடல் இயற்றலும்,மந்திரங்களும்,வேதங்கள் கற்றலும்,ஆழ்ந்து சிந்திக்கும் அறிவு
ஆறாம்பாவம் மூலம்
பிணி,பீடை,கடன்,எதிரியால் உண்டாகும் துன்பம்,ஆயுதங்களால் ஏற்மடும் ரணமும்,தண்ணீரால் ஏற்படும் கண்டம்,பால்வினை நோய் முதலியவை அறியலாம்
ஏழாம் பாவகம்
திருமணத்தை பற்றி சொல்லுதலும்,ஆடவர்,மகளிர் இருவருககும் உணட்டாகும் நல் இன்பமும்,உறவினர்களுடன் சேர்ந்து இருத்தல் மற்றும் அதன் தொடர்பான விவகாரங்களும்,வறியவர்க்கு ஈனும் தானமும்,அளவறிந்து செலவு செய்யும் வரவு-செலவ் விவரங்களும்,வியாபாரமும்,திருமணம் நடைபெறும் காலமும்,மனைவியின் ஆயுளும்,கூட்டு பற்றியைம்,மானம் முதலியவை அறியலாம்.
எட்டாம் பாகம்
ஆயுதங்களால் உண்டாகும் தீங்கும்,மலையிலிருந்து கீழே விழுதலும்,சண்டையிட்டு கொண்டிருப்பதையும்,மனிதனின் ஆயுளும்,நீடித்த நோயால் வரும் துன்பமும்,மனக்கவலை,நீடித்த பல வகையான துன்பங்களும்,அதனால் உருவாகும் வருத்தங்களும்,ரணத்தினால் உண்டான நோயும்,வீண் செலவு செய்தலும்,நீங்காத பகையோடு இருத்தலும் அறியலாம்.
ஒன்பதாம் பாவகம்
தன்னை ஈன்ற தந்தையைப்பற்றியும்,தந்தை வர்க்கத்தின் மேன்மையையும் அவர்களால் உண்டாகும் செல்வம் பற்றியும்,தான தர்மம் செய்தலும்,ஊருணி,தண்ணீர் பந்தல் அமைத்தல்,துறவிகள் மறறும் அறவோர்கள் தங்க மாடலாயம் அமைத்தல்,தான்விரும்பிய செல்வத்தை சம்பாரித்தல் முதலியவை..
பத்தாம் பாவகம்
ஒருவர் செய்யும் தொழில் மற்றும் அதனால் உண்டாகும் வருமணம்,,தந்தை செய்த தீ வினைப்பயனை போக்க இறை வழிபாடும்,மெய்ஞானமும் வசிப்பதற்கும் வழிபடுவதற்குமா ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட வீடும்,புகழை அடைவதற்காக செய்யும் காரியமும்,சாத்திரங்களில் கூறியபடி பல்வேறு தர்மங்கள் செய்தலும்,நகரங்களை அமத்தல் முதலியவை.
பதினொன்றாம் பாவகம்
இளைய மனைவி, மூத்த சகோதரம்,தான் கற்ற கல்வியாலும்,பெற்ற பொன் மற்றும் பொருளாலும் மதிப்பு பெறல்.ஊதியம் பெறல்,பயிரிட்டு வேளாண்மை செய்தல்,குதிரை ,யானை ,தெளிந்ந அறிவும்,பல்லாக்கும,ஆடையும் மனிதன் மனதில் ஏற்படும் துவக்க நிவரத்தி.
பணிரெண்டாம் பாவகம
வெளி நாட்டிலா தொழில் செய்தல்,தீய காரியங்களுக்கும்,பாவ காரியஙாகளுக்கு செலவு செய்தாலும்,மறுமையில் சிறப்பை எய்தலுமா,படுக்கை சுகம்,விவாதம் செய்தல் ,பிறருக்குக்கு தானம்,புண்ணியம்,மறுமையில் சிறப்பு எயதலும்,பிறருக்கு தானமபுண்ணியம் ,தருமம்,பிறருக்ககு தானம்,அன்பளிப்பு  முதலிய சுப காரியங்களும்,யாகம் செய்தல்
முதலிய பணிரெண்டு வகையான ராசிகளின் வழியாக ஒவ்வொறு குழந்தைகளுக்கும் பண்பினை அழகாக விளக்குகிறார்.
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
   M.Sc,MA,BEd.
ஆசிரியர் ,ஜோதிடர்
ஓம் சக்தி சோதிட  ஆன்லைன் ஆலோசனை நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.
  தொடர்புக்கு
வாட்ஸ்அப்
  97 151 89 647
செல் :
   97 151 89 647
      740 257 08 99

No comments: