Wednesday, 11 October 2017

புதன் பகவான் வழங்கும் புனித பணிகள் -( 2 )

புதன்பகவான் வழங்கும் புனித பணிகள்-2

                         
கிரகஙகள் படுத்தும் பாடு- ( 121 )

            ஸ்ரீபுதன் பகவான் தனது கதிர்வீச்சால் மனித வாழ்வில நிகழ்த்தும் மகத்துவம் வாய்ந்த புனித பணிகளை செவ்வாய்பட்டியில் எழுந்து அருள்பாலிக்கும் ஸ்ரீபத்ரகாளியின் அருளால் தொடர்ந்து இரண்டாம் பதிவை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி.
தொடர்ந்து பார்ப்போம்.

அரசியல் விமர்சகர்


                        அரசியல் சம்பந்தமான கருத்துக்களையும்,பேட்டிகளையும் , நிகழ்வுகளையும் மற்றும்  முக்கிய சம்பவங்களையும் அலசி ஆராய்ந்து நடுநிலையாக விமர்சனம் செய்யும் ஒரு நல்ல விமர்சகரை உண்டாக்குவதில் புதன் பகவானின் பங்கு அளப்பறியது.
"இடிப்பாறை இல்லா ஏமாறா மன்னன் கெடுப்பார் இல்லாமல் கெடும் " எனும் வள்ளுவ பெருந்தகையின் கருத்துப்படி அதாவது "ஒரு நாட்டின் மன்னன் செய்யும் தவறுகளை எதிர்த்து கேட்க ஆளிள்ளாத (எதிர்கட்சி தலைவர்) நபரை கொண்ட நாடு கெடுப்பவர் இல்லாமல் கெடும் " என்றார்.

            ஒரு அரசு செய்யும் குறைகளை சுட்டி காட்டியும் ,நிறைகளை பாராட்டியும் மக்களுக்கு எடுத்துகாட்டுவதில் எதிர்கட்சியைப்போல ,ஊடகங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.எனவே இந்த ஊடகங்களில் (பத்திரிக்கை,தொலைக்காட்சி..)திறம்பட புள்ளி விவரங்களுடன் கால வரிசை அடிப்படையில் கருத்துவிவாதம் மற்றும் நேர்படபேசு போன்ற நிகழ்வுகளை நடத்தும் மற்றும் அரசியல் விமர்சனங்களை எழுதும் பணிகளை செய்யும் நபர்களை உருவாக்குவதில் புதன் பகவானுக்கு பெரும் பங்கு உண்டு.

கல்வி நிறுவனங்களை நடத்தும் உரிமையாளர்கள் மற்றும் பணிபுரியவர்கள்;-


            சிலர் பொறியியல்,மருத்துவம் ,கலைகல்லூரி மற்றும் பள்ளிகூடங்கள் போன்ற கல்வி நிறுவனங்களை நிகழ்த்தும் கல்வி புரவலர்கள் ஆவதற்கும் மற்றும் கல்லூரி மற்றும் பள்ளிகளை வழிநடத்தும் முதல்வர்,தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆவதற்கும் பாவியோட சேராமல் பலமடைந்த புதன் பகவானே காரணமாகும்..

                                

நவீன தொழில் நுட்பங்கள்;-


              இனைய வளர்ச்சியால் ( internet ) அலைபேசி மற்றும் கணிப்பொறி போன்ற நவீன தொழில்நுட்ப பொருட்கள் இன்று எல்லோருடைய கைகளிலும் எளிமையாக தவழ்ந்தாலும் இவற்றை எல்லோரும் திறம்பட  பயன்படுத்துகிறார்களா ? என்றால் இல்லை என்று சொல்ல வேண்டும்.இவற்றை மிகச்சிலரே திறம்பட பயன்படுத்தியும் அதன் மூலம் பொருள் ஈட்டும் புலமை பெற்றவர்களாக உள்ளார்கள்.இவற்றை பிரித்து பார்க்கும் software and hardware தெரிந்தவர்களாகவும் இருப்பார்கள்.இவர்களது சாதகங்களை பார்த்தால் புதன் ஆதிக்கம் பெற்றவர்களாக இருப்பார்கள்.

கணிதம் தொடர்புடைய துறைகள்;-


                "ஒருவன் கணிதத்தில் சிறந்து விளங்கினான்  என்றால் அவனால் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க முடியும் " என்றார் தத்துவமேதை அரிஸ்டாட்டில்
எனவே ஒருவனுக்கு கணித அறிவு மட்டும் இருந்தால் மட்டும் போதும் அவனால் எல்லா துறைகளிலும் திறமையும் மற்றும் சாதுர்யமும் மிக்க பண்டிதனாக திகழ முடியும்..ஆதலால் கணித அறிவினை தந்து அவன் தொட்ட எந்த துறையாக இருந்தாலும் சாதிக்க வைத்து அவனது திறமை மூலமாகவே அவனுக்கு தலைமை பண்பை (leadership) தரக்கூடிய புனித பணியை புதன் பகவான் செய்கிறது.

         பாவியோடு சேராத பலமடைந்த புதன் ஒருவனை கணிதம் சம்பந்தபட்ட பல்வேறு துறைகளில் புகழ் பெற வைக்கிறது.ஒரு பெரிய நிறுவனத்தின் வரவு-செலவு கணக்குகளை கண்கானிக்கும் ஆடிட்டராகவோ , அரசின் புள்ளிவிவர ஆய்வுகளை கணக்கிடும் புள்ளியியல் துறையில் பணிபுரியும் Statistic ஆகவோ மற்றும் கணித பேராசிரியராகவோ ஒருவரை உருவாக்கும் புனித பணியை புதன் பகவான் செய்கிறது.

                            

விஞ்ஞான அறிவு:-


            எதையும் ஏன் ? எதற்கு ? எப்படி ? என மூன்று வினாக்கள் எழுப்பி அதன் அடிப்படையில் அறிவியல் முறையில் ஆய்ந்து விடை காணும் தன்மையையே விஞ்ஞான அறிவு ஆகும்.இந்த விஞ்ஞான அறிவினை ஒருவருக்கு தந்து சிறந்த கண்டுபிடிப்பாளராக மாற்றும் பணியை புதன் பகவானே செய்கிறது..

    இவ்வுலகில் இதுவரை கண்டறிந்தற்கும் இனிமேல் கண்டறியப்படக்கூடிய அனைத்து விஞ்ஞான அறிவிற்கும் புதன் பகவானே காரணமாக அமைகிறது.

  தொடரும் .......

  (தாங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை கீழ்கண்ட எனது வாட்ஸ்அப்பில் மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரங்களை பெறவும்.மேலும் எனது வங்கி கணக்கில் பணம் கட்டியவுடன் விவரம் தெரிவித்து போனில் தொடர்பு கொண்ட சாதகபலன் பெறலாம் )

  தொடர்பு கொள்ள

   செல்
97 151 89 647
740 257 08 99

வாட்ஸ்அப் எண்
97 151 89 647

               
அன்புடன்,
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
My website.click hear
AstroRavichandransevvai.blogspot.com
-'''--------''--'----------'----------------

No comments: