Tuesday, 17 October 2017

யோகமான மனைவி அமைய ..?

       சாதகத்தில் யோகமான மனைவி அமைய ?

                       
கிரகங்கள் படுத்தும் பாடு - ( 123 )

செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
             "ஒரு பெண் அடியெடுத்து வைத்த நேரம்தான்  அந்த குடும்பம் வளர்ந்து நிற்பதற்கு காரணம். "அந்த பெண்ணை கை பிடிப்பதற்கு முன்பு வரை குடிக்க கஞ்சி கூட இல்லாமல் கஷ்டப்பட்டார்கள்.ஆனால் இன்றைக்கு ஊருக்கே சோறு போட்டாலும் குறையாத அளவிற்கு சொத்து வளர்ந்து நிற்குதுன்னா அந்த மகராசி வந்த நேரம்தான் " என ஊரே புகழும் அளவிற்கு யோகமான  மனைவி அமைய அவளது சாதகத்தில் பின்வரும் யோகமான கிரக அமைப்புகள் இருக்கவேண்டும்.

                    1) லக்கனத்தில் புதன் உச்சவீட்டிலிருந்து லாபஸ்தானத்தில்(11 ம் வீடு) குருபகவானும் இருக்க பிறந்த பெண்ணை  மனைவியாக பெற்றவன் ராஜாவைப்போல செல்வ சீமானாக வாழ்வான்.

                  2) லக்கனத்தில் சுக்ரபகவானும் ,மூன்றாம் இடத்தில் புதபகவானும் மற்றும் நான்காம் இடத்தில் பலமடைந்த குருபகவானும் உள்ள பெண்ணை மனைவியாக பெற்றவன் அரசனுக்கு சமமான பாக்கியங்கள் பல பெற்றவனாவான்.

                     

                      3) பூர்ண சந்திரன் நான்காமிடத்தில் இருந்து உச்சம் பெற்ற குருவினால் பார்க்கப்பெற்றால் இவ்வித அமைப்பை பெற்ற பெண்ணை மனைவியாக பெற்றவன் கொடுத்து வைத்து இருக்கவேண்டும்.

                    4) லக்கனத்தில் வளர்பிறை சந்திநன் இருந்து லாபஸ்தானத்தில் சூரியன் உச்சனாகவும் மற்றும் ஜீவனஸ்தானமான பத்தாம் இடத்தில் வித்தைகாரன் புதன்பகவான் இருந்த பெண்ணை மணந்தவன் அரசனுக்கு சமமானவான்.

                     5) புதன் பகவான் உச்சனாய் லக்கனத்திலிருந்து லாபஸ்தானத்தில் குருபகவானும் ,தனஸ்தானத்தில் சுக்கிரபகவானும் மற்றும் தொழில் ஸ்தானத்தில் வளர்பிறை சந்திரனும் இருக்க பிறந்தவளை மணந்தவன் உலக பிரசித்தி பெற்றவனாகவும் மற்றும் எல்லோராலும் புகழப்படுபவனாகவும் ஆவான்.

                       

                   6) ஸ்திர லக்கனத்தில் குருபகவான் இருக்க அஙகாரகன் மூன்றாம் இடத்திலோ அல்லது ஆறாம் இடத்திலோ இருந்து பலம்பெற்ற சனி லாபஸ்தானத்தில் இருக்க பிறந்த பெண்ணை மனைவியாக பெற்றவன் போக பாக்யங்களிலும் மற்றும் சகல சொளபாக்கியங்களுடனும் மகிழ்ச்சியாக நீடுழி வாழ்வான்.
(ஸ்திரலக்கனம் -ரிஷபம் ,சிம்மம்,விருட்சகம் மற்றும் கும்பம்).

                 7) ஒரு ஆடவனது சாதகத்தில் களஸ்திரஸ்தானாதிபதி  ஏழிலே நேர்வலுபெறாமல் சூட்சும வலுப்பெற்று லாபஸ்தானமேறி பலப்பட மனைவி வழியில் சொத்துக்கள் சேரும்.

---------------+-+---------+++-++++++
(தங்களது குடும்ப உறுப்பினர்களின் சாதகங்களை ஆய்வு செய்து சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகளும் மற்றும் பரிகார வழிபாடும் போன் வழியாக வழங்கப்படும்.சாதகபலன் பெற "பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்) 

தொடர்புக்கு

செல்
97 151 89 647
740 257 08 99

வாட்ஸ்அப்
97 151 89 647

                               
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

My Email
masterastroravi@gmail.com

My website.click hear
AstroRavichandransevvai.blogspot.com

************************

No comments: