Saturday, 21 October 2017

காதலில் வெற்றி பெறுபவர் யார் ?_சோதிட அடிப்படையில் ஓர் ஆய்வு

காதலில்  வெற்றி  பெறுபவர் யார் ?

                           

                       
கிரகங்கள் படுத்தும் பாடு--( 124 )

செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

                 கா-காண்பது
            ஒருவர் எத்தனையே பெண்களை பார்த்தாலும் மற்றும் பழகினாலும் அவர்கள் அனைவரிடம் காதல் உருவாவதில்லை.யாரோ ஒருவரை பார்த்தவுடன் தன்னையறியாமலே அவனது மனதில் ஒரு தவிப்பு ஏற்படும்.மின்னல் மின்னி மறைவதுபோல மனதிற்குள் ஒரு யுத்தம் உண்டாகும்.இதைபோல இருவருக்கும் உருவாவது.கம்பர் கூறியது "அன்னளும் நோக்கினாள் ,அவனும் நோக்கினான் "என்பது போல இது இரு ஆத்மாக்களின் சங்கீதம் ஆகும்.

        த-தவிப்பது

              பிறகு அவனை பார்க்க முடியாவிட்டாலும் அவனும் மற்றும் அவளை பார்க்காவிட்டால் அவனும் தவிப்பது.

        ல்-இனி அவர்களுகளுக்கு இடையே காதல் இல்லாமல் செய்ய எவர் தடுத்தாலும் எதிர்த்தாலும் எதிர்த்துநிற்றல்.இல்லாமல் போக செய்தால் உயிரே போனாலும் எதிர்த்து போராடல்.

                         

           எல்லோருக்கும் காதல் என்ற உணர்வும் மற்றும் ஆசையும் இருந்தாலும் அனைவரும் காதலித்துவிடுவதில்லை.ஆனால் வெகு சிலரோ இந்த உணர்வுக்கு ஆட்பட்டு விடுகிறார்கள்.ஏன் அவர்களுக்கு மட்டும் இவ்வித உணர்வு உருவாகிறது ?

         அவ்வாறு  உருவாவதற்கு அவர்களது  சாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளே காரணமாகும்.எனவேதான் காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் ஒரு பாடலில்
"காதலிக்க நேரமில்லை காதலிக்க நேரமில்லை !
வாலிபத்தில் காதலிக்க சாதகத்தில் யோகமில்லை !
என வரும் ஒரு பாடலை நினைவுபடுத்துகிறேன்.

         ஒருவருக்கு காதல் உணர்வை தருவதில் களஸ்திரகாரகன்  சுக்கிரபகவானுக்கும் மற்றும் காம உணர்வை தருவதில் மங்களகாரகன் செவ்வாய்பகவானுக்கும் முக்கிய பங்கு உண்டு.

ஒரு மனிதன் காம உணர்வு மிகுந்து தவறுகள் மிக செய்வதற்கும் மற்றும் காதல் உணர்வு மிகுந்து கஷ்டப்பட்டு வளர்த்த பெற்றோர்களை விட்டு ஓடுவதற்கும் இவ்விரு கிரகங்களின் கலப்பும் மற்றும் இவ்விரு கிரகங்களோடு அசயர்களான சனி,ராகு மற்றும் கேது போன்ற கிரகங்களின் சேர்கையாகுமே ஆகும்.

                                    

        "இருபது வயதுவரை என் பெற்றோர் வசமிருந்தேன் இருபது நிமிடத்திலே உன்வசம் வந்தேனடா?

           என்ற சினிமா பாடலில் அழகாக சிறுவயதிலிருந்து பாலூட்டி சோறு போட்டு வளர்த்த பெற்றோரையே சற்று முன் வந்த நீ ஓடி வரசெய்து விட்டியடா ?என அழகான தனது பாடல் வரிகளில் படம் போட்டு காட்டியிருப்பார்.

              ஆமாம்.ஒருவரது சாதகத்தில் களஸ்திரஸ்தான ஏழாம் அதிபதி மறைவுஸ்தான இடமான ஆறு மற்றும் எட்டாமிடத்தில் நின்று பாபர் சேர்க்கை (சனி,ராகு,செவ்வாய் ,கேது) பெற்றிருந்தால் ஜாதகர் தனது பிள்ளையை படிக்க வைத்து சான்றோனாக்கி/சான்றோளாக்கி ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கட்டிவைக்கவேண்டும் என கலர் கலராய் கற்பனை செய்துகொண்டிருக்கும் பெற்றோரை எதிர்த்தோ அல்லது அவர்களுக்கு தெரியாமல் வீட்டைவிட்டு ஓடியோ தன்னைவிட கல்வியிலும் மற்றும் பொருளாதர வசதியிலும் தாழ்ந்த சமூகத்தில் திருமணம் செய்துகொள்வாள்(ன்)..

         இதேபோல களஸ்திரகாரகன் சுக்கிரபகவான் ஆறு அல்லது எட்டில் இருந்து இரண்டு அல்லது பாவகிரகங்கள் பார்த்தாலோ அல்லது சேர்ந்திருந்தாலோ சாதகர் பெற்றோரை மட்டுமல்ல ஊரே தங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலுமே போராடி வெற்றி பெறுவார்.

                             

         சிலர் கலப்புமணம் புரிவதற்கான காரணத்தை ஆய்ந்தோமானால் அவரது சாதகத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் இருவரும் கேந்திரஸ்தான  இணைவு பெறுவது  ஆகும். மேலும்  கலப்புமணம் தருவதற்கு களஸ்திரஸ்தான  ஏழாமிட அதிபதி மற்றும் அட்டமாதிபதி இணைந்து மறைவுஸ்தானமான ஆறு,எட்டு மற்றும் பணிரெண்டாமிடங்களில் மறைந்து அதனை சனி பார்ப்பதும் கலப்பு திருமணம் நடைபெற வாய்ப்பாக அமைகிறது.

         எல்லாம் கர்மபலன் ஆகும்.
ஒருவருக்கு காதல் வருவதற்கு அவரது சாதகத்தில் ஐந்தாமிடம் மறறும் ஏழாமிட தொடர்பு பெறுவதே காரணமாகும். இவ்விரண்டு வீட்டு கிரகங்களும் சுப கிரகங்களாக பாவர் சாரம் பெறாமல் இருப்பது.ஒருவருக்கு காதல் திருமணம் உறுதியாகும்.இவை மட்டுமல்லாமல் களஸ்திரகாரகன் சுக்கிரபகவான பாவர் சேர்க்கையற்று சுபஸ்தானமேற அவ்வித காதல் ,  காமம் மட்டுமே தேடும் காதலாக இல்லாமல் எவ்வித எதிர்ப்பு வந்தாலும் வெற்றி பெறும் காதலாக அவை அமையும்.

            "காதல் மட்டுமே போதும் என்றால் ஒரு செல்ல பிராணியிடம் கூட அதை பெற்றுவிடலாம்.
காமம் மட்டுமே போதும் எனில் ஒரு விலைமகளிரிடம் பெற்றுவிடலாம்-எங்கு
காதலும் காமமும் ஒன்றுடன் ஒன்று சரிபாதியாக இணைகிறதோ அதுவே உண்மையான காதல்".

  பொதுவாக ஒருவர் காதலில் வெற்றி பெற ஐந்தாமிடம் மற்றும் ஏழாமிட தொடர்பு எவ்வகையிலாவது இருக்கவேண்டும்.

-------------------------------------
(தங்களது குடும்ப உறுப்பினரின் சாதகத்தை விரிவாக ஆராய்ச்சி செய்து தெளிவாக பலனை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெறலாம்.கட்டணம் செலுத்தும் விவரங்களை பெற தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற விவரங்களை எனது பின்வரும் வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து விவரங்களை பெறவும்.)

எனது வாட்ஸ்அப் எண்
97 151 89 647

செல்
97 151 89 647
740 257 08 99

                         
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
Email
masterastroravi@gmail.com

No comments: