சந்திரபகவானை அடிப்படையாக கொண்டு மனித வாழ்வில் பெறப்படும் யோகபலனகள்
#கிரகங்கள் படுத்தும் பாடு- ( 119 )
செவ்வாய்பட்டி ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!!
"மனமது செம்மையானால்
மந்திரம் செபிக்கவேண்டாம் " என்பார்கள்.மனமானது எவ்வித குழப்பமின்றி செம்மையாக இருக்க சாதகத்தில் மனோகாரகன் சந்திரபகவானின் அருளாசி வேண்டும்.சந்திர பகவான் இடம்பெறும் வீட்டினையே "ராசியாக " கருதப்படுகிறது.
சந்திரபகவான் இடம்பெறும் இடத்தை அடிப்படையாக கொண்டு ஒரு சில யோகபலன்கள் கணக்கிடப்படுகிறது.
#புஷ்கலாயோகம்
மனதுக்காரகன் சந்திரபகவவான் இடம்பெறும் கட்டத்தை ராசியாக கொண்டு அந்த வீட்டு அந்த வீட்டு அதிபதியை ராசி அதிபதியாக கொள்ளப்படுகிறது.இந்த ராசி அதிபதியும் மற்றும் லக்கன அதிபதியும் கூடி சந்திர கேந்திரத்திலோ அல்லது லக்கன கேந்திரத்திலோ இருப்பது புஷ்கலாயோகமாகும்..
இந்த அமைப்பில் பிறந்தவன் ஸ்ரீமான்-பிரசித்தன்-பிரபு மற்றும் நல்ல வார்ததை பேசுபவன்.
#அதியோகம்
சந்திரன் நின்ற ராசியிலிருந்து ஆறு,ஏழு மற்றும் எட்டாம் இடங்களில் சுப கிரகங்களான குருபகவான்,புதன்பகவான் மற்றும் சுக்கிரபகவான் இருந்தால் அதியோகமாகும்.
இதில் மூன்று அல்லது இரண்டு அல்லது ஒருவர் சேர்ந்தோ அல்லது தனித்தோ இருந்தால் இவ்விதயோகமாகும்.
இதன்பலன் மந்திரியாகவோ அல்லது சேனாதிபதியாக இருப்பான்.காலத்திற்கு ஏற்றார்போல பலனளிக்க வேண்டுமாயின் தற்காலத்தில் அமைச்சர்களாகவோ அல்லது மாவட்டத்தை ஆளும் ஆட்சி தலைவர்களாகவோ ஏனைய அமைப்பும் சிறப்பாக இருப்பின் உருவாக வாய்ப்பு உண்டு.
மேற்குறிப்பிட்ட அதே இடங்களில் பாப கிரகங்களான சூரியன்-அங்காரகன்-சனிபகவான் இருப்பின் மேற்கண்ட பொறுப்புகளை வகிப்பதோடு பெரிய மனிதனாகவும் திகழ்வான்.
#வஸூமத்யோகம்
சந்திரனிலிருந்து உபஜெயஸ்தானமான 3,6,10,11 போன்ற இடங்களில் சுபகிரகங்களான குரு,சுக்கிரன் மற்றும் புதன் இருந்தால் இலட்சாதிபதி.இரு கிரகம் இருந்தால் நடுத்தரம்.ஒரு கிரகம் இருந்தால் மத்திபம்.
ஒரு சுபகிரகம் சந்திர கேந்திரத்தில் இருந்து பாபகிரகங்கள் 3,6,11 ல் இருந்தால் பெரிய அந்தஸ்து உடைய மனிதனாகவும் மேற்கண்ட அமைப்பில் குருவும் பார்த்தால் சிறந்த அரசியல்வாதியாகவும் மற்றும் சந்திரன் லக்கனகேந்திரத்திலிருந்து பரிஷ்டர்களான குரு மற்றும் சுக்கிரனால் பார்க்கப்பட்டால் மாஜிஸ்திரேட் அல்லது அதற்கு சமமான நியாயம் வழங்கும் அதிகாரியாக இருப்பார்.
#அமலயோகம்.
சந்திரனுக்கு பத்தாம் இடத்தில் சுபகிரகம் இருந்தால் இவ்விதயோகத்தை தரும்..இதில் பிறந்தவன் மரணபயமில்லாமல் நல்ல ஐஸ்வர்யத்தோடும் மற்றும் கீர்த்தியோடும் விளங்குவான்.
#கஜகேசரியோகம்
(கஜம்-யானை மற்றும் கேசரி-சிங்கம்.)
சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு இருப்பதாகும்.நல்ல வசதியுடனும் மற்றும் தீர்க்கமான ஆயுளுடனும் திகழ்வான்.
#சந்திரமங்களயோகம்.
சந்திரபகவானுக்கு கேந்திரத்தில் அங்காரகன் இருந்தால் நித்ய கால்யாணம் உள்ளவனாக இருப்பான்.
லக்கனத்தில் சந்திரனும் மற்றும் அங்காரகனும் கூடியிருந்தால் அந்த லக்கனத்தில் பிறந்தவனை ஸ்ரீமகாலட்சுமி ஒருகாலும் அவனை விட்டு விலகமாட்டாள்.
மேற்கண்ட இதுபோன்ற யோகங்கள் சந்திரபகவான் இருக்கும் இடத்திலிருந்து கணக்கிடப்படும் யோகங்களாகும்.இவை அப்படி இருப்பின் யோகங்களை சில நேரங்களில் தராமல் போகிவிடுவதுண்டு.இதற்கு காரணம் அந்த கிரகங்கள் சில நேரங்களில் நீசம் ,அஸ்தமம் ,பகை மற்றும் சில நேரங்களில் பாதக மற்றும் மாரகாதிபதியாக இருப்பின் அவ்வித யோகங்கள் சில நேரங்கள் சிறப்பாக செயல்படாமல் போகிவிடுகிறது.
இவ்வித யோக அமைப்புகள் தங்களது சாதகங்களில் இருந்தாலும் அவை பலனளிக்குமா? என்பதை சோதிடரின் உதவிகொண்டே முடிவு செய்துகொள்ளுங்கள்.நன்றி.
(தங்களது சாதகபலனை #போன்வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பலன் பெறலாம்.இவை தவிர திருமண பொருத்தம் ,திருமணம் தடைபெறுவதற்கான காரணமும் அதற்கான பரிகார பலன்கள் மற்றும் புத்திரதோஷம் போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு விடைபெறலாம்.)
பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப எண் 97 151 89 647 க்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரங்களை பெறவும்.
தொடர்புககு
செல்
97 151 89 647
740 257 08 99
WhatsUpp nl
97 151 89 647
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் ஆலோசனை நிலையம்,
புதுக்கோட்டைமாவட்டம்.
My email
masterastroravi@gmail. com
No comments:
Post a Comment