Wednesday, 11 October 2017

புதன் பகவான் வழங்கும் புனித பணிகள் - ( 1 )

புதன் பகவான் வழங்கும் புனித பணிகள்- (1)

                            
கிரகங்கள் படுத்தும் பாடு -( 120 )

               நவகோள்களில் சுக்கிரன்,சனி மற்றும் ராகுபகவானை அடுத்து பதினெழு ஆண்டுகள் மகரிஷிபரராசரால் வழங்கப்பட்ட  புதன் பகவான் மனித வாழ்வில் நிகழ்த்திக்கொண்டிருக்கும் பல புனிதத்துவங்களை செவ்வாய்பட்டியில் எழுந்து அருள் பாலிக்கும் ஸ்ரீபத்ரகாளி அருளால் இப்பதிவில் பார்ப்போம்.

            கல்வி


"உலகபுகழ் பெற்ற வள்ளுவ பெருந்தகையானவர்
"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடு அல்ல மற்றவை அவை" என்கிறார்.இங்கு மாடு என்பது செல்வம் ஆகும்.ஒருவருக்கு ஏனைய செல்வங்களை விட கல்வி செல்வமே சிறந்த ஒன்றாகும்.

            எனவே பெற்றோர்கள் தமது குழந்தைகளின் சாதகத்தை பார்க்க வரும்போது அவனுக்கு படிப்பு நன்கு வருமா சார் ? திறமையுடன் புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வனா ? தலைமை பதவி கிடைக்குமா ? கற்ற வித்தையாலும் மற்றும் பெற்ற கல்வியாலும் பிழைத்து கொள்வானா ?
"சபைநடுவே நீடோழை வாசியதவன் மரம்" என்பதுபோல ஆன்றோர்கள் அடங்கிய சபையில் மரம் போல இல்லாமல் (பாடலாசிரியர் கல்லாதவனை மரத்தோடு ஒப்பிடுகிறார் ) வாதத்திறமையும் மற்றும் வாக்கு வன்மையையும் பெற்றவனாக இருப்பானா ? கணித அறிவில் சிறந்து விளங்குவானா ? இப்படி எழுப்படும் பல வினாக்களுக்கு சோதிடர்களாகிய நாங்கள் அவனது சாதக கட்டத்தில் அலசி ஆராய வேண்டிய முதன்மையான கிரகம் #புதன்பகவானே ஆகும்.

             எனவே ஒருவனை கல்வியறிவுடையவனாக மாற்றும் பெரும் பங்கு புதன் பகவானுக்கு உண்டு.ஒருவரது சாதகத்தில் லக்கனம் மற்றும் சந்திர கேந்திரத்தில் புதன்பகவான் உச்சம் ,ஆட்சி மற்றும் நட்பு பெற்று பாவியோடு சேராத புதன் ஒருவனை கல்வியறிவு பெற்றவனாக மாற்றுகிறது.

                  

                 மனவலிமை

              புதன் பகவான் சந்திரபகவானின் குழந்தை ஆவார்.இவர் நுண்ணறிவு மற்றும் மனதிற்கு பிறந்த குழந்தை ஆவார்.ஒருவர் உடல் வலிமையோடு திகழ செவ்வாய் பகவான் எவ்வளவு முக்கியமோ அதுபோல ஒருவர் மன வலிமையோடு திகழவும் புதன் பகவானின் அருளும் ஆசியும் அவசியமாகும்.

               பாவியோடு சேராத புதன் பகவான் ஒருவனை மன வலிமையுடையவனாக மாற்றுகிறது.பாவியோடு சேர்ந்த புதன் இயற்கை பாவியாக மாறி "எடுப்பார் கைப்பிள்ளை போல "அவர் யாருடன் இணைகிறாரோ அவருடைய குணத்தையே வெளிப்படுத்துவார்.

            ஒருவருடைய சாதகத்தில் மனதுக்குகாரகன் சந்திர பகவானும் மற்றும் மன வலிமைக்கு காரகனான புதன்பகவானும் கெட்டுவிட அவன் தன் வாழ்வில் பலவித மனகுழப்பங்களுக்கு உட்பட்டு மனநோயாளியாக வாழ்வான்.
ஒருவர் வயது எவ்வளவுதான் உயர்ந்தாலும் புதன்பகவான் பலமடைந்து காணப்படின் அவரால் மனதால் என்றும் இளமையாகவே இருப்பர்.
    
                   

           கலையுணர்வு


         ஒருவனை கலையுணர்வு மிக்கவனாக மாற்றும் பண்பு சுக்கிரபகவானுக்கு அடுத்தபடியாக புதன்பகவானுக்கு உண்டு.ஒருவன் நூலகம் தேடி சென்று இலக்கிய ரசனையான நூல்களை தேடி  படிக்கவும் மற்றும் அறிவு சார்ந்த ஆன்றோர் சான்றோர்களது பேச்சுகளை கேட்டு ரசிக்கவும் பலமடைந்த புதன் பகவானே காரணமாகும்.

                 பிறகு  அது தொடர்பான கருத்துக்களை உள்வாங்கி கொண்டு தனது சுய புத்தியை கொண்டு கதை எழுதும் எழுத்தாளனாகவும்,கவிதை படைக்கும் கவிஞனாகவும் மற்றும் பாடல்கள் புனையும் பாவலனாகவும் ஒருவனை மாற்றி அழகு பார்க்கும் வேலையை புதன் பகவான் செய்கிறது.
சுக்கிர பகவானோடு இணைந்த புதன் பகவான் காதல் கவி மற்றும் பாடல் எழுதும் புலவனாக மாற்றுகிறது.

                பலமடைந்த புதன் பகவான் ஒருவனை இசை ரசனை உடையவனாக மாற்றுகிறது."பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா "
கத்தும் குயிலோசை என் காதில் விழவேண்டும்"என இசை ரசனை படைத்த "பாட்டுக்கு ஒரு பாரதிபோல இசை ரசனை மற்றும் இயற்கை வர்ணனை மிக்கவனாக மாற்றி புனிதப்படுத்தும் வேலையை செய்வதும் புதன் பகவானே ஆகும்.

                   மேடையேறி பேசவும் ,ஆன்றோர்கள் மற்றும் சான்றோர்கள் அடங்கிய சபையில் கருத்துவிவாதம் செய்யவும் மற்றும் எதிரிக்கே பிடிக்கும் வகையில் உரை நிகழ்த்தவும் மற்றும் காவிய சிந்தனை பெறவும் புதன் பகவானின் ஆசி அவசியமாகும்.

                

       பத்திரிக்கை துறை

                  ஓர் இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை புள்ளி விவரங்களோடு வெளியிடவும் அத்துடன் தனது யூகத்தாலும் ,ஞானத்தாலும் மற்றும் கூரிய அறிவாலும் (ஞானம்,யூகம் மற்றும் புத்திக்கூர்மை இவை மூன்றிற்கும் புதன்பகவானே காரகர்) தனது சொந்த கருத்துக்களை புகுத்தவும் ம  ற்றும் இறந்த மற்றும் எதிர்காலத்தோடு இணைத்து மக்கள் ரசிக்கும் வகையில் தலைப்பு மற்றும் செய்திகளை வெளியிடும் ஆசிரியராகவும் மற்றும் சிறந்த நிருபராகவும் ஒருவர் மாற  புதன் பகவானின் அருள் அவசியமாகும்.


தொடரும்....
(தங்களது குடும்பத்தில் உள்ள சாதகங்களை அலசி ஆராய்ந்து கல்வி,வேலை,திருமணம்,புத்திரபாக்கியம் ,உடல்நலம் மற்றும் செல்வவளம் போன்ற ஆக்கபூர்வமான பல்வேறு வினாக்களுக்கு விடையை #போன்வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பலன் பெறலாம்.நீங்கள் பிறந்ததேதி ,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப்பிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டண செலுத்தும் விவரங்களை பெறவும்)

தொடர்புக்கு .

அலைபேசி
97 151 89 647
740 257 08 99

   Whatsup
97 151 89 647

                          
By
Astro Ravichandran
M.SC,MA,BEd,
Astro Researcher
PG chemistry teacher,
Omsakthi Astro online counsling centre,
Pudukkottai District,
Tamilnadu,India.

No comments: