Friday, 6 October 2017

சோதிடத்தில் கூறப்படும் சில யோகங்களும் அவற்றின் பலன்களும்.

சோதிடத்தில் கூறப்படும் சில யோகங்களும் அவற்றின் பலன்களும்


கிரகங்கள் படுத்தும்பாடு-(120 )


               சோதிடத்தில் நமது மூலநூல்களில் பலவித யோகங்கள் புகழப்பட்டு எழுதப்பட்டுள்ளது.இவ்வித யோகங்கள் மன்னராட்சி காலத்தில் சித்தர்கள் மற்றும் சோதிடஞானிகளால் அருளப்பட்ட அவ்விதயோகங்களில் மன்னர் ஆகும் யோகம் ,நாடாளும் யோகம் , சக்கரவர்த்தியோகம்,படை
தளபதியாகும் மற்றும் சேனாதிபதியாகும் யோகம் என இதுபோன்றே பலவித யோகங்கள் அருளப்பட்டுள்ளன. அவர்கள் காலத்தில் மன்னராட்சி முறையே இருந்ததால் அவ்விதம் அருளப்பட்டு உள்ளன. 

ஆனால் தற்பொழுது மக்களாட்சி முறையில் அவ்வித யோகங்களை ஒரு கட்சி தலைவர் ஆகி நாட்டை நிர்வாகிக்கும் முதல்வராகவோ அல்லது அமைச்சர்,சட்டமன்ற மற்றும் நாடளுமன்ற உறுப்பினராகவோ அல்லது மாவட்டத்தை நிர்வாகிக்கும் மாவட்ட ஆட்சி தலைவராகவோ ஆககூடிய யோகமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

மனவிஷ்னுயோகம்




மந்தாகினியோகம்


                ஜெனன ராசிக்கு அஷ்டமஸ்தானமான எட்டாம் இடத்தில் குருவும் மற்றும் சுக்கிரனுமிருக்க , ஜெனன லக்கனத்தில் புதன்பகவானிருக்க அந்த ஜெனன லக்கினம் சரராசியாய் இருக்க மற்றும் ஜெனன ராசிக்கு ஐந்து,ஏழு மற்றும் பதினொன்று இவ்விடங்களில் சூரியன்,சந்திரன் மற்றும் சனியிருக்க இவ்வித அமைப்புடைய சாதகத்தினை பெற்றவன் "மந்தாகினியோகம்,பெற்றவன் ஆவான்.


பூபயோகம்


            ஜெனன லக்கனத்திற்கு பஞ்சமஸ்தானம் மற்றும் திரிகோண யோகஸ்தானமான ஐந்தாமிடத்தில் மனதுக்காரகன் சந்திரபகவானிருக்க அந்த வீட்டிற்குரியவன் அதாவதூ பஞ்சமாதிபதி உச்சம் பெற்றிருக்க மற்றும் பாக்கியத்தை அள்ளிதரும் ஒன்பதாம் வீட்டோன் தனஸ்தானமான இரண்டாமிடத்தில் இருக்க அமைப்பை பெற்ற சாதகர் "பூபயோகம்,'என்று பெயர்.


No comments: