ஒரு ஜோதிடர் சாதகத்தில் உள்ள கிரகநிலைகளை எவ்வாறு ஆய்வு செய்து பார்ப்பது.
+++++++++++++++ #கிரகங்கள் படுத்தும் பாடு
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
ஒரு சாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பின்வருமாறு கவனிக்கப்பட வேண்டும்.
1) ஒரு கிரகம் உச்சம் பெற்று இருந்தால் அந்த கிரகத்தின் பாகை நிலை அறிந்து உச்ச எல்லைக்குள் அக்கிரகம் உள்ளதா என கவனிக்க வேண்டும்.அக்கிரகம் உச்ச எல்லையை தாண்டி இருக்கும் போது சராசரியான நிலையையே பெற்றிருக்கும்.எனவே உச்சநிலைக்குரிய பலனைத்தருவதில்லை.எனவே உச்சம் பெற்றிருப்பதால் ஆஹா,ஒகோ புகழ்ந்த நிலையில் எதிர்பார்த்த அளவு பலன் தராததற்கு இவை ஒரு காரணம் ஆகும்.
2) வக்ரம்
சில சமயங்களில் கிரகங்கள் பின்னோக்கி சென்றவாறு காணப்படும்.அப்பொழுது அக்கிரகங்களுக்கு பலம் அதிகம்.அவைகளின் தன்மையே மாறிவிடும்.ஒற்றை கிரகங்கள் மகாபலவான்கள்
சந்திரன்,ராகு,கேது வக்கிர கதி கிடையாது.
சூரியனுக்கு 5,6 ல் கிரகங்கள் இருப்பது வக்கிரகதி
சூரியனுக்கு 7,8 ல் இருப்பதி அதிவக்கிரகதி
சூரியனுக்கு 8,9 ல் இருப்பது வக்கிரநிவர்த்தி
சூரியனுக்கு 7,8 ல் இருப்பதி அதிவக்கிரகதி
சூரியனுக்கு 8,9 ல் இருப்பது வக்கிரநிவர்த்தி
ஒரு கிரகம் ஆட்சி,உச்சம் பெற்றிருந்தும் வக்கிரம் பெற்றிருந்தால் அக்கிரகம் நீசத்திற்கு சமமான பலனையையே கொடுக்கும்.(மாறாக
நீசம் பெற்ற கிரகம் வக்கிரம் பெறின் உச்ச.நிலையை தரும்)
நீசம் பெற்ற கிரகம் வக்கிரம் பெறின் உச்ச.நிலையை தரும்)
3)ராசியில் ஒரு கிரகம் நீசம் பெற்று அம்சத்தில் உச்சம் பெற்றிருந்தாலோ அல்லது நீசம் பெற்ற வீட்டின் அதிபதி உச்சம் பெற்றாலோ அல்லது அவ்வீட்டின் அதிபதி சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தால் நீச பங்க ராஜ யோகம் பெற்று நன்மையைத்தரும்.
4) வர்க்கோத்தமம்
ராசியிலும் ,அம்சத்திலும் ஒரு கிரகம் ஒரே ராசியில் இருப்பின் வரக்கோத்தம பலன் பெற்று நன்மையைச் செய்யும்.
5) கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதற்கிணங்க கெட்ட ஸ்தானங்களான (3,6,8,12) மூன்றுக்கு உடையவன் ஆறிலும்,ஆறுக்குடையவன் எட்டிலும் மற்றும் எட்டுக்குடையவன் பணிரெண்டிலும் இதுபோல் இருப்பின் நன்மையைச் செய்யும்.
6) ஒரு சாதகத்தில் 2,7,8 ம் இடங்கள் சுத்தமாக இருந்தால் திருமண வாழ்க்கைக்கு நல்லது.
7 )அஸ்தங்கம்:-
சூரியனுடன் பத்து பாகைக்குள் இணைந்த கிரகங்கள் சூரியனால் எரிக்கப்படும் கிரகங்கள் அவை அஸ்தமனம் அடைந்த கிரகங்கள்
சூரியனுடன் இணைந்த நிலையில்(பத்து பாகைக்குள்) உள்ள கிரகங்களை பார்க்கும்போது அஸ்தமனம் அடையாமல் உள்ளதா என கவனிக்கவேண்டும்.அஸ்தமனம் அடைந்த கிரகங்கள் நன்மையைச்செய்யாது.
8) சுபர்கள் கோணங்களிலோ அல்லது மறைவு ஸ்தானங்களிலும்,பாவர்கள் கேந்திரத்தில் உள்ளதா என.கவனித்தல்
9)ஒவ்வொறு கிரகங்களின் நட்சத்திர சாரம் மற்றும் பார்வை,சேர்க்கைகளை கவனிக்க வேண்டும்.
10) பரிவர்த்தனை;
ஓரு கிரகத்தின் வீட்டில் மற்றொரு கிரகம் வீடு மாறி நிற்பது.இதுவும் கிரகத்திற்கு வலிமை தரும்.
11) கிரக யுத்தம்;-
ஒரு ராசியில் செவ்வாய்க்கு பின் கூடியிருக்கும் கிரகங்கள் யுத்தத்தில் தோற்ற கிரகங்கள் .இவைகள் நல்ல பலனை தராது.
12) பாதகாதிபதி
சர ராசி -11-ம் அதிபதி
ஸ்திர ராசி-9-ம் அதிபதி
உபய ராசி-7-ம் அதிபதி
ஸ்திர ராசி-9-ம் அதிபதி
உபய ராசி-7-ம் அதிபதி
மேற்கண்ட அதிபதிகளின் தசை நன்மையைச்செய்யாது
12) ஷஷ்டாஷ்டம்
ஒரு கிரகம் மற்றொரு கிரகத்திற்கு 6 அல்லது 8 இடத்தில் இருப்பது இக்கிரகங்களின் தசா புத்தி நன்மையை செய்யாது(தோஷம்)
மேஷம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பமாகில் ஷஷ்டாஷ்டக தோஷமும் மற்ற ராசிகளில் 2,12 ம் இடத்தோஷமில்லை என்பது சிலர் கருத்து.
13) திவிர்த்வாதசம்
ஒரு கிரகம் மற்றொரு கிரகத்திற்கு 2 லோ 12 லோ நிற்பது.இந்த தசா புத்திகள் நன்மையைச் செய்யாது.
14) ஆத்மாக்காரகன்
ஒரு ராசியில் எந்த கிரகம் அதிகமாக சென்றுள்ளதோ அந்த கிரகம் ஆத்மாக்காரகம அந்த கிரகம் பலமுடைய கிரகம அதன் தசா புத்தி நன்மயைச் செய்யும்.
15) மாரகாதிபதி
சர ராசி -2,7- ன் அதபதி
ஸ்திர ராசி -3,8-ன் அதிபதி
உபய ராசி -7,11 ன் அதிபதி
ஸ்திர ராசி -3,8-ன் அதிபதி
உபய ராசி -7,11 ன் அதிபதி
மேற்கண்ட அதபதி தசைகள் மாரகத்தை தரக்கூடியவை
எனவே சோதிடர்களாகிய நாம் இதுபோல் பல விஷயங்களை கவனித்து பரம்பொருளின் துணைகொண்டு பலன் உரைக்கவேண்டும்.ஏனெனில் சோதிடம் என்பது தெய்வீக கலையாகும்.எனவே நம்மை நம்பி வந்து பலன் கேட்பவர்களுக்கு மேலோட்டமாக பதில் அளித்துவிடாமல் நன்கு ஆய்வு செய்து பலனுரைப்போம்.
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
ஆசிரியர் & சோதிடர்
சோதிட ஆராய்சியாளர்
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
ஆசிரியர் & சோதிடர்
சோதிட ஆராய்சியாளர்
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்
தொடர்பு கொள்ள
செல் : 97 151 89 647
செல்; 740 257 08 99
செல்; 740 257 08 99
வாட்ஸ்அப்; 97 151 89 647
(நேரில் சாதகம் பார்க்க வாய்ப்பில்லாதவர்கள் செல்லில் தொடர்பு கொள்ளலாம் கட்டணம் உண்டு.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த மாவட்டம் போன்ற தககவல்களை எனது வாட்ஸ்அப்பில் மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)
No comments:
Post a Comment