ராகுபகவான் கெடுத்து கொடுப்பாரா ?
கிரகங்கள் படுத்தும் பாடு-(175 )
செவ்வாய்பட்டிஅருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!
மறைவிட ஸ்தானங்களான மூன்று,ஆறு,எட்டு மற்றும் பணிரெண்டு ஆகிய ஸ்தானங்களிலும் ,தனஸ்தானமான இரண்டாமிடத்திலும் கரும்பாம்பு என அழைக்கப்படும் ராகு பகவான் இருந்து அதன் திசை நடைபெறும் காலங்களில் பலவித இன்னல்களை தந்து கஷ்டப்படுத்தி கடன்காரர் ஆக்கி கஷ்டப்படவைக்கும்.
ஒருவித போக எண்ணம் மேலோங்கி அதன் விளைவாக கடன்களையும்,எதிரிகளையும் மற்றும் பிரச்சினைகளையும் உருவாக்கி கொண்டு ஒரு சிலர் பல லட்ச கடன்காரர் ஆக்கி வீட்டைவிட்டே ஓடவிட்டு அதாவது பலர் வெளி ஊர்,மாநிலம் மற்றும் நாடு சென்று அடிப்படையான வசதிகளுக்கே கஷ்டப்பட்டு பிறரிடம் அடிமை வேலை பார்க்கவைத்து பிறகு பணத்தின் அருமையும்,உறவுகளின் நிலைகளையும் புரியவைத்து இறுதியாக திசையின் முடிவை நோக்கி செல்லக்கூடிய காலகட்டத்தில் இழந்ததை மீட்பதோடு மட்டுமல்லாமல் பல லட்ச சொத்துகளுக்கு அதிபதியாக்கிவிடுவதை அனுபவத்தில் பார்த்த பின்புதான் ராகு பகவான் "கெடுத்து கொடுப்பார்" சொல்லோடையை நம்ப வேண்டியதாயிற்று.
வெளிநாடு செல்பவர்களில் பெரும்பாலனோரின் சாதகத்தில் ராகு பகவான் திசையோ அல்லது புத்தியோ நடப்பில் இருப்பதை பார்க்கலாம்.குடும்ப ஸ்தானத்தில் ராகு பகவான் குடியேறியிருப்போர் குடும்பத்தை விட்டு பிரியவேண்டிய கிரக நிர்பந்தத்தாலும் வெளிநாடு செல்வதை பார்க்கலாம்.
இதேபோல வெளிநாடு ஸ்தானமான பணிரெண்டாமிடத்தில் ராகுபகவான் குடியேறி இருப்போரில் பெரும்பாலோனோர் கடல் கடந்து செல்லும் அமைப்பை தந்துவிடுகிறது.
ராகுபகவான் கெடுத்து கொடுப்பார் என ஏன் சொல்கிறார்கள் எனில் வெளிநாடு சென்றாலும் ,பணம் ஈட்டினாலும் குடும்பத்தை விட்டு பிரியும் சூழலே ஒருவித மனகஷ்டம்தான்..
பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் ராகுபகவான் பலமடைந்து நிற்பின் நவீன தொழில் நுட்பத்தில் தலைசிறந்து விளங்குவான்.இனையதள வியபாரம்,கனிப்பொறி அடிப்படையாக software line ல் நிபுணத்துவம் பெற்று பணம் ஈட்டுவார்.பங்குசந்தை,அரசியல் மற்றும் மாந்திரீகம் போன்றவற்றில் தலைசிறந்து விளங்குவான்.
ஆறாமிடத்தில் உள்ள ராகுபகவான் எதிரியை வெல்வார்.சிங்கத்தை கண்ட எருதுபோல எதிரி பயந்து ஓடுவார்கள்.ஒருவித துணிச்சலான மனநிலை அவர்களிடையே காணப்படும்.எதிரிகளாலும்,
எதிர்ப்புகளாலும் பலன் பெறுவார்கள்.மறைமுக வருமானம் வரும்.
எதிர்ப்புகளாலும் பலன் பெறுவார்கள்.மறைமுக வருமானம் வரும்.
எட்டாமிட ராகுபகவான அதன் திசை அல்லது புத்தி காலங்களில் மறைமுக உண்மைகள் புலப்படவைக்கும்..மேலும் சோதிடம்,ஆன்மீகம்,தத்துவம் மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளில் ஆராய்ச்சியில் ஈடுபடவைத்து அவர்களுக்கு மறைமுக உண்மைகள் புலப்படவைத்து புகழின் உச்சிக்கு ஒருவரை கொண்டு செல்லும். வம்பு,வழக்கு ,
சிறைசெல்லல் மற்றும் கடன் தொல்லைகளை தந்து வாழ்வின் உண்மைநிலைகளை புரியவைக்கும்.
சிறைசெல்லல் மற்றும் கடன் தொல்லைகளை தந்து வாழ்வின் உண்மைநிலைகளை புரியவைக்கும்.
பத்தாமிட தொடர்புடைய ராகுபகவான் திசை காலங்களில் செவ்வாய் பகவானும் பலம்பெற்ற சூழலில் ஒருவரை மருத்துவத்தில் தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணராகவும்,சிலர் கணிப்பொறி வல்லுநணராகவும் மற்றும் ஒரு சிலர் மக்கள் போற்றும் அரசியல் ஆலோசகராகவும் மாற்றி அழகு பார்க்கிறது.
வாக்குஸ்தானத்தில் உள்ள ராகுபகவான் சிறந்த அரசியல் ராஜதந்திரியாகவும்,சிறந்த பேச்சுவன்மை மிக்கவராகவும் இருப்பர்.
ஒருவருக்கு ராகுபகவான் வாழ்வின் எல்லாவித கஷடங்களையும் தந்து இறுதியில் வாழ்வின் உண்மைநிலையினை அறியவைத்து திசையின் இறுதி காலத்தில் நன்மைதனை தந்துவிட்டு செல்வார் என்பது அனுபவ உண்மையாகும்.
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)
வாட்ஸ்அப்
97 151 89 647
97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 647
740 257 08 99
97 151 89 647
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்
ஓம்சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ ஆலோசனை மையம்.
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
சோதிடர் ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்
ஓம்சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ ஆலோசனை மையம்.
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail. com
masterastroravi@gmail. com
My website
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandransevvai.blogspot.com
No comments:
Post a Comment