Wednesday, 30 May 2018

பூர்வீக சொத்து-சாதக அடிப்படையில் ஓர் பார்வை

பூர்வீக சொத்து-சாதக அடிப்படையில் ஓர் பார்வை.


                                   
கிரகங்கள் படுத்தும் பாடு--( 215 )

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!

                 என்னிடம்  சாதகம் பார்க்க வரும் வெகு சிலர் பூர்வீக இடத்தில் வீடு கட்டி வசிக்கலாமா ? என்றும்,பூர்வீக சொத்தால் பலன் உண்டா ? என்றும்,ஒரு சிலர் எனது பூர்வீக சொத்து வழக்கில் உள்ளது வெற்றி பெறுவேனா ? என்றும்,பூர்வீக சொத்து என்பது தந்தை தேடிய சொத்தா அல்லது தாத்தா தேடிய சொத்தா ? என விதவிதமாக பூர்வீகம் சார்ந்த வினாக்கள் அதிகமாக உள்ளதால் இதுபோன்ற வினா எழுப்பியவர்கள் மட்டும் அல்லாது அனைவருக்கும் பயன்படும் வகையிலே இப்பதிவினை கொண்டு செல்கிறேம்.

                       முதலில் பூர்வீக சொத்து என்பது யார் தேடிய சொத்து ? என்பதை தெளிவாக விளக்குகிறேன்.

                       ஒருவருக்கு பூர்வீக சொத்து என்பது அவரது பாட்டனால்  சாம்பாரிக்கப்பட்ட  சொத்து ஆகும். இதேபோல பாட்டன்  வாழ்ந்த ஊரினையே பூர்வீக இடமாக கருதவேண்டும்.

                    ஒருவரது சாதக கட்டத்தில் பூர்வீகம் பற்றி ஆராய்ச்சிக்கு அவரது சாதக கட்டத்தில் ஐந்தாம் இடத்தினை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

             இதேபோல பூர்வீக ஸ்தானமான ஐந்தாம் இடத்திற்கு ஐந்தாம் இடமான ஒன்பதாம் இடத்தினையும் ஆய்ந்து பார்க்க வேண்டும் .

                           

                            யாருடைய சாதகத்தில் ஐந்தாம் இடமும் ,அதன்அதிபதிகளும் பலமடைந்து  பாவர் நட்சத்திர சாரமின்றி இயற்கை சுபரால் சேர்க்கை மற்றும் பார்வை பெற சாதகர் தனது பாட்டன் தேடிய மனையில் வசிக்கின்ற யோகமும்,அவர் தேடிய சொத்தால் பலன் அடையும் யோகமும் ஒருவருக்கு கிட்டும்.

                   ஒருவரது சாதகத்தில் ஐந்தாம் இடத்தில் அரவுகளான ராகு,கேது இடம்பெற்று ஐந்தாம் அதிபதி நீசம், அஸ்தங்கம் மற்றும் பகை போன்ற அமைப்பினை பெற்றவர்கள் பாட்டானால் தேடிய சொத்து சிறிதளவு கூட இருக்காது.பூர்வீக இடத்தில் வசிக்கும் யோகம் இருக்காது.

                     "  ஒரு சிலருக்கு பூர்வீக சொத்து இருந்தும் பயனில்லாமல் இருப்பதற்கான காரணம் என்ன ?  " என ஆராய்ந்து பார்த்தால் ஐந்தாம் அதிபதி பலம் பெற்று இருப்பினும் ஐந்தாம் அதிபதி உடன் அரவுகளான ராகு,கேது சேர்க்கை அல்லது நட்சத்திர சாரம் பெற்றிரு்ப்பதே காரணம் ஆகும்.

                          "  ஒரு சிலருக்கு பூர்வீக சொத்து இருந்தும் வம்பு,வழக்குகளுக்கு உட்பட்டு பல காலங்கள் நீதிமன்ற வாசலை நாடி செல்லவேண்டிய காரணம் என்னவாக இருக்கும் ? "என ஆய்ந்து நோக்கினால் ஐந்தாம் அதிபதி பலமடைந்து இருந்தாலும் எதிரி மற்றும் வம்பு,வழக்கு ஸ்தானமான ஆறு மற்றும் எட்டாம் இட அதிபதிகள் ஐந்தாம் இடம் மற்றும் அதன் அதிபதிகளுடன் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு கொண்டிருக்கவேண்டும்.

        இதுபோன்ற மேற்கண்ட  அமைப்பினை கொண்டவர்களுக்கு ருண,ரோக மற்றும் கடன்கார அதிபதியான ஆறாம் அதிபதியும் பலம் பெற்று நிற்க அதாவது சத்ரு ஸ்தானம் பலமடைந்து நிற்க தனது பூர்வீக சொத்து தனது எதிரிக்கு சென்றடையும்.அதேநேரத்தில் சத்ரு ஸ்தானம் பலமிழந்து நிற்பின் சாதகருக்கு சாதகமாக தீர்ப்பு வந்து பூர்வீக சொத்தை பெறுவார்.

                      

                         பொதுவாக வம்பு,வழக்கு என வந்து விட்டால் யாருடைய சாதகத்தில் ஆறுக்குடையவன் இரண்டாம் இடம் சேர எதிரியை வெல்லலாம்.இரண்டாம் அதிபதி சத்ரு ஸ்தானமான ஆறாம் இடம் அடைந்தால் தனது பூர்வீக சொத்து முழுவதும் எதிரியை சென்றடையும்.
  பூர்வீக ஸ்தான அதிபதி ஐந்துக்கு ஐந்தாம் இடமான பாக்கிய ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடம் ஏறி நிற்க தனது பாட்டான் தேடிய சொத்தால் தனது வாழ்நாள் முழுவதும் பலன் பெற்று திகழ்வரார்.

நன்றி !

  வாட்ஸ் அப்
  97 151 89 647
       செல்
    740 257 08 99
      97 151 89 ,647


(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

                                                                                

  அன்புடன்
  சோதிடர்ரவிச்சந்திரன்
      M.Sc,MA,BEd,
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


My email
  masterastroravi@gmail.com

My blogspot
AstroRavichandran. blogspot. com
AstroRavichandransevvai.blogspot. com
...................

1 comment:

Unknown said...

பூர்வீக சொத்தில் பிரச்சினை பரிகாரம் செய்ய எவ்வளவு கட்டணம் ஐயா நாங்கள் கோவை மாவட்டம்