Tuesday, 4 February 2025

குரு பகவான் தரும் யோகங்கள்

 குருபகவான் தரும் யோகங்கள்!




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   குரு பார்த்தால் கோடி நன்மை என்பார்கள். குரு பகவான் ஒரு மனிதனுக்கு தேவையான பணம், பதவி, பட்டம், புகழ், கல்வி ,ஞானம் ,செல்வம் மற்றும் குழந்தை பாக்கியம் அனைத்தையும் தரக்கூடிய கிரகமாகும்.


  குரு பகவான் தனம் பாக்கியம் மற்றும் லாபம் ஆகிய மூன்று ஸ்தானத்திற்கு உரிய ஜட காரக கிரகமாக விளங்குகிறது புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்திற்கு உயிர் காரக கிரகமாக குரு பகவான் விளக்குகிறார். 


 குரு பகவான் எந்த ஸ்தானத்தை பார்த்தாலும் அல்லது எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்து அல்லது பார்வை பெற்று இருந்தாலும் அவை யோகம் தரக்கூடிய அமைப்பாக விளங்குகிறது.


குரு பகவான் தனது நட்பு கிரகமான சந்திரனுடன் பார்வை அல்லது சேர்க்கையை பெரும்பொழுது குருசந்திர யோகத்தை தருகிறது.


 குரு பகவான் தனது நட்பு கிரகமான செவ்வாயுடன் இணைவு அல்லது பார்வையை பெறும் பொழுது குருமங்கள யோகம் தருகிறது.


 சந்திர கேந்திரத்தில் குரு பகவான் நிற்கும் பொழுது கஜகேசரி யோகத்தை தருகிறது. இது எதிரியை வெல்லக்கூடிய அமைப்பு ஆகும்.


 குரு பகவான் தனது நட்பு கிரகமான சூரியன் உடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள சிவராஜயோகம் தருகிறது.


 குரு பகவான் கேது உடன் இணைந்த நிலையில் கேளயோகம் என்னும் கோடீஸ்வர யோகத்தை ஜாதகருக்கு தருகிறார்.


 குரு பகவான் லக்னத்தில் நிற்கும் போது #திக்பலம் போன்ற அமைப்பை பெற்று வலிமை பெற்ற கிரகமாக விளங்குகிறது.


 குரு பகவான் கேந்திர ஸ்தானமான 1,4,7,10 போன்ற இடங்களில் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் வலுப்பெற்று நிற்கும் போது ஹம்சயோகம் தருகிறது.

இதன் பலன் ஜாதகர் கல்வி கேள்விகளில் வல்லவராகவும், ஆலோசனை வழங்குவதில் மந்திரியாகவும், நிறைந்த நல்ல பண்புகள் உடையவராகவும் திகழ்வார்.


குரு பகவான் கர்ம காரகன் சனி பகவான் மற்றும் ஞான காரகன் கேது பகவான் உடன் தொடர்பு கொள்ளும்போது ஆன்மீக வாதியாக மற்றும் ஆன்மீக எண்ணம் உடையவராக சாதகர் திகழ்வார்.


சந்திரனுக்கு ஆறு ,எட்டு , பன்னிரண்டாம் இடங்களில் குரு பகவான் இருக்கும் பொழுது சகடையோகம் தருகிறது .இது ஏற்ற, இறக்கம் நிறைந்த வாழ்க்கையை தருகிறது.


 குரு பகவான் சனி அல்லது ராகு உடன் நெருக்கமாக இணையும் பொழுது குருசண்டாளயோகம் தருவார். இந்த நிலையில் குரு பகவானுக்கு உரிய இயல்பான பலன்கள் மாறி பாவியாக செயல்பட்டு கெட்ட பலனை தரக்கூடிய அமைப்பை பெறுவார். இந்த நிலையில் தனுடன் இணைந்த சனி அல்லது ராகுவை சுபத்துவப்படுத்தி தான் பாவத்தன்மை அடைவார். இந்த நிலையில் ஆன்மீக எண்ணங்கள் மீது நாட்டம் ஏற்படாது. பகுத்தறிவு நாட்டமுடையவராக திகழ்வார் .


   குருபகவான் முன்னோர்கள் செய்த புண்ணியத்தை குறிக்கும் .சனி பகவான் முன்னோர்கள் செய்த கர்ம பலனை குறிக்கும். அதனால் குரு பகவான் சனி உடன் இணைந்து தரும் யோகம் #ஜீவக்கர்மயோகம் ஆகும்.


   லக்கின அல்லது சந்திர கேந்திரத்தில் குரு சனி இணைவு அமைவது மிகப்பெரிய ஜீவகர்ம யோகம் ஆகும். குருவும் , சனியும் ஐந்து பாகைக்குள் இணைந்து இருக்க வேண்டும் இதன் பலன் சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களாக திகழ்வார்கள்.


 குரு பகவான் பலம் இழந்து, சனிபகவான் பலம் பெற்றும் குரு மற்றும் சனி ஆகிய இரண்டும் ஐந்து பாகைக்குள் இணைவு அல்லது சமசப்தம பார்வை #பிரம்மஹத்தி தோஷம் ஆகும்.


    குரு பகவானின் பலம் அதிகம் இருந்து சனி ஆனவர் குரு பகவானுடன் இணையும் போது அல்லது சம சப்தம பார்வையை பெரும்போது சனியின் அசுபத்தன்மை குறைந்து சுப தன்மையை அடையும் .அதாவது சூட்சுமமாக இதனை விளக்க வேண்டுமென்றால் குரு 

( பூர்வ புண்ணியம்) பலம் அதிகமாகும்போது சனி ( கர்ம பலன்) குறையும்.


   குருபகவான் லக்னம் , ராசி மற்றும் அதன் அதிபதிகளை பார்வை செய்யும் பொழுது சாதகருக்கு மிகுந்த யோகத்தை அனுபவிக்க கூடிய தன்மையை தருகிறது. ஜாதகர் நீதி, நியாயம் போன்றவற்றிற்கு கட்டுப்பட்டவராகவும், நல்ல தேஜஸ் உடையவராகவும் திகழ்வார்.மற்றவருக்கு ஒரு முன் மாதிரியாகவும் திகழ்வார். வாழ்வில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு நியாயமான முறையில் வெற்றி பெற்று சரித்திரம் படைப்பார்.


குரு பகவான் புதன் பகவானுடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது நல்ல படைப்பாற்றல் மிக்கவராகவும், கணிப்பொறி ,கணித அறிவு மிக்கவராகவும் ,ஜோதிடம், பேச்சு, எழுத்து போன்றவற்றில் படைப்பாற்றல் மிக்கவராகவும், கண்டுபிடிப்பாளராகவும் இசையின் மீது நாட்டம் உடையவராகவும், மற்றவர்களை விட மாறுபட்டு சிந்திக்கும் எண்ணம் உடையவராகவும் திகழ்வார்.


குரு பகவான் தாம்பத்திய சுகத்தை தரும் சுக்கிரன் உடன் இணையும் பொழுது மனைவியானலள் தாம்பத்திய சுவற்றை தர மறுக்கக்கூடிய நிலையில் இருப்பார் அல்லது மனைவியை விட்டு சம்பாதிக்கக்கூடிய நிமித்தமாக வெளிநாடு வெளி மாநிலங்களில் இருக்கக்கூடிய நிலையை உருவாக்குவார்.


நன்றி.


For online appointment 

Cell & WhatsApp & Gpay 

097151 89647 

Another one cell no 7402570899

(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.Sc,M.A,BEdஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

ஜாதகர் எந்த தன்மை படைத்தவர்

 ஜாதகர் எந்த தன்மை படைத்தவர் ?




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை! 


   ஒரு பெண். ஜாதகத்தில் ஆண் கிரகங்கள் பலம் பெற்று பெண் கிரகங்கள் பலம் இழந்து 

புதன் பகவானை சனி பார்க்கக் கூடிய அமைப்பில் அந்த ஜாதகர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக தன்னை உணர்ந்து கொள்வார்கள்.


 இதே போல ஒரு ஆண் ஜாதகத்தில் பெண் கிரகங்கள் பலம் பெற்று ஆண் கிரகங்கள் பலம் இழந்து புதன் பகவானை சனி பார்க்க கூடிய அமைப்பில் உள்ள அந்த சாதகர் பெண்ணாக இருந்தாலும் தன்னை ஆணாக பாவித்து கொள்வார்கள்.


  ஒரு சிலர் ஆணாகவே இருந்தாலும் அவர்கள் பெண் தன்மை படைத்தவர்களாக இருப்பதற்கும், பெண்ணாக இருந்தாலும் ஆணை போல் வீரதீர பராக்கிரமுடையவர்களாக இருப்பதற்கும் அவர்கள் ஜாதக கட்டத்தில் உள்ள அந்த கிரக அமைப்புகளை காரணம் ஆகும்.


ஒரு பெண்ணின் ஜாதகர் ராசி மற்றும் லக்னம் ஆண் ராசியாக இருந்து மற்றும் ஆண் கிரகங்கள் வலுப்பெற்று இருந்தால் அவர்கள் ஒரு ஆடவருக்கு நிகரான உடல் மற்றும் மன பலம் பெற்றவர்களாக இருப்பார்கள்.


ஒரு ஆணின் ஜாதகத்தில் ராசி மற்றும் லக்கனம் பெண் ராசியாக இருந்து அதில் உள்ள பெண் கிரக வலிமை பெற்று ஆண் கிரகங்கள் பலமிழந்த நிலையில் அந்த சாதகர் பெண்ணுக்கு உரிய உடல் மற்றும் மன பலம் பெற்று காணப்படுவார்கள்.


 ஒருவருடைய ஜாதகத்தில் ஜாதகத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் ஆண் கிரகமாக செயல்படுகிறது சந்திரன் சுக்கிரன் பெண் கிரகமாக செயல்படுகிறது. சனியும் புதனும் அலி கிரகங்கள் ஆகும். ராகு மற்றும் கேது பகவான் நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது.


    வேறு ஏதேனும் வகையில் சனி பகவானுக்கு சுபத் தன்மை கிடைக்காத வரையில் சனியும் புதனும் ஒன்றை ஒன்று தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் ஜாதகர் அலித்தன்மை படைத்தவராக காணப்படுவார்.


சனி பகவான் எந்த வகையிலும் சுப தன்மை அடையாமல் தனது மூன்று,ஏழு மற்றும் பத்தாம் பார்வை மூலமாக புதன் பகவானை பார்வை செய்வதால் ஜாதகர் திருநங்கை அமைப்பை பெற்று இருப்பார்கள்.


நன்றி.


For Online appointment 


Cell & WhatsApp & gpay 

  097151 89647 


Another cell no 7402570809


(தங்களது ஜாதக பலன் திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

       M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

கோடிக்கணக்கான பணத்தை சம்பாதிக்க...

 கோடிக்கணக்கான பணத்தை சம்பாதிக்க....




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை! 


  ஒருவர் கோடிக்கணக்கான பணத்தை சம்பாதிக்க இயலுமா ? என வினா எழுப்பினால் நிச்சயமாக முடியும்.

 சில நேரங்களில் சாதாரண நிலையில் அடிமட்ட நிலையில் பிறந்து வளர்ந்த மனிதன் கூட ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் யோகமான தசை அமைப்புகள் வரக்கூடிய காலங்களில் யாரும் எதிர்பாராத வகையில் கோடிக்கணக்கான பணத்தை சம்பாதிக்கும் நிலை உருவாகிவிடும்.


 கோடிக்கணக்கான பணத்தை சம்பாதிக்க ஒருவர் மிகுந்த கல்வி அறிவு தான் வேண்டுமென்றோ ! அல்லது பணக்கார வீட்டில் தான் பிறந்திருக்க வேண்டும் என்றோ ! கிடையாது.

     சாதாரண குடும்பத்தில் பிறந்து சராசரி மனிதன் கூட நல்ல யோக ஜாதக அமைப்பு இருக்கக்கூடிய நபர் யாரும் எதிர்பாராத வகையில் கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்து விடுவார்கள்.


  கோடிக்கணக்கான பணத்தை சம்பாதிக்க கூடிய ஜாதக அமைப்பை நாம் பார்க்கும் பொழுது பளிச்சென்று அவருடைய ஜாதக கட்டத்தில் கிரக நிலைகள் அமைந்திருக்கும்.


இவருடைய ஜாதகத்தில் லக்னத்தை சுப கிரகங்கள் பார்த்து அல்லது லக்கனத்தில் சுபக் கிரகங்கள் இருந்து லக்கனாதிபதியும் வலிமை பெற்ற நிலையில் சுப தன்மை அடைந்திருக்கும்.


  கோடிக்கணக்கான பணத்தை சம்பாதிக்க கூடிய ஜாதக கட்டத்தில் தன ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய இரண்டாம் இடம் அதன் அதிபதி,

 பாக்கிய ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய ஒன்பதாம் இடம் அதன் அதிபதி மற்றும் லாப ஸ்தானம் என அழைக்க கூடிய 11-ம் இடம் அதன் அதிபதி இவை தவிர தன காரகன் குரு ஆகியவை எவ்வித பாவர் தொடர்பு இன்றி சுபரின் சேர்க்கை அல்லது பார்வையை பெற்றிருக்கும்.


 தன- பாக்கிய-லாப அதிபதிகள் ஒன்றுக்கொன்று பார்வை அல்லது சேர்க்கை அல்லது பரிவர்த்தனை போன்ற நிலைகளில் தொடர்பு பெற்று தன காரகன் குரு பகவான் உடைய பார்வை அல்லது சேர்க்கை நிலையினை பெற்று இருக்க வேண்டும்.


கோடிகளை சம்பாதிக்க கூடிய ஜாதகத்தில் மேற்கூறிய ஸ்தான அதிபதிகள் தசைகள் தொடர்ந்து வந்து அவை லக்கினத்துடன் தொடர்பு பெற்ற நிலையில் அமர்ந்து இருந்தால் எதிர்பாராத வகையில் அவர்கள் செய்யும் தொழில் மூலமாக மிக பெரிய அளவில் பணத்தை சாம்பதிக்கும் சூழ்நிலை உருவாகி விடும்.


இதற்கு தான் நமது முன்னோர்கள் "எல்லாவற்றிற்கும் கால நேரம் வேண்டும்" என்றார்கள்.


இதனையே நம் ஒளவை மூதாட்டி கூட "மடை. தலையில் ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு"என்றாள்.


வான் புகழ் கொண்ட வள்ளுவர் கூட 

"கொக்கக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து " என்றார். காலம் கைகூடும் வரும் வரை கொக்கு போல் பொறுமையாக காத்திருந்து இந்த உரிய தசை வர கூடிய காலங்களில் "காற்றுள்ள போது தூற்றிக் கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப பெரும் செல்வம் ஈட்டி விடவேண்டும்.


    என்னதான் மகா தனம் தரும் யோக அமைப்பு இருந்தாலும் லக்கனாதிபதி வலிமை பெறாத வகையிலும் ,

உரிய யோகத்தை தரக்கூடிய தசைநடக்காத காலங்களிலும் எவ்வளவு முயற்சி செய்தாலும் உங்களால் அந்த எல்லையை தொட்டுவிட முடியாது.


கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்த அவருடைய ஜாதகத்தை நீங்கள் எடுத்து ஆராய்ந்து பாருங்கள் அவருடைய ஜாதகத்தில் லக்கனாதிபதி லக்னத்தில் இருந்து ஆட்சி பெற்ற நிலையில் சுபருடைய தொடர்பு பெற்ற நிலையில் இருக்கும். தனம், பாக்கிய ,லாப ஸ்தானங்கள் அதன் அதிபதிகளும் வலிமை பெற்று தன காரகன் குரு பகவானுடைய பார்வை அல்லது சேர்க்கை நிலையினை அடைந்து தொடர்ந்து யோகம் தரக்கூடிய தசா புத்திகள் அவருடைய வாழ்வில் வரும் தொழில் செய்யக்கூடிய அமைப்பும் அவருடைய ஜாதகத்தில் பளிச்சென்று ஜொலிக்கும்.


கோடிக்கணக்கான பணத்தை சம்பாதிக்க பின் வரும் சில அமைப்புகள் உங்கள் ஜாதகத்தில் இருக்க வேண்டும்.


    1) தன- லாப அதிபதிகள் பாக்கிய ஸ்தானத்தில் சேர்ந்து நின்று குரு பகவானின் பார்வையை பெற்று இருக்கும்.


  2) தன- பாக்கிய அதிபதிகள் லாப ஸ்தானம் ஏறி குரு பகவான் சேர்க்கை அல்லது பார்வை நிலையை பெற்று இருக்க வேண்டும்.


3) பாக்கிய - லாப அதிபதிகள் தன ஸ்தானத்தில் நின்று குரு பகவான் தொடர்பை பெற்ற நிலையில் இருக்க வேண்டும்.


 4) தன- பாக்கிய - லாப அதிபதிகள் லக்கனத்தில் அல்லது லக்னாதிபதி உடன் தொடர்பு பெற்று குரு பகவான் பார்வையை பெற்ற நிலையில் இருக்க வேண்டும்.


5) தன- பாக்கிய -லாப அதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்று இயற்கை சுபக் கிரகங்களுடைய பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் தொடர்ந்து யோக தசைகள் நடப்பில் வந்தால் மிகப்பெரிய கோடீஸ்வர யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கும்.


நன்றி.


For Online appointment 


Cell & WhatsApp & Gpay

 097151 89647 


Another one cell : 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது 

 பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம் .




அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

   M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

பலன் எடுப்பதில் சிக்கலைத் தரும் ராகு மற்றும் கேது பகவான்

 பலன் எடுப்பதில் சிக்கலைத் தரும் ராகு மற்றும் கேது பகவான்.




  செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை! 


  நிழல் கிரகங்கள் என்று அழைக்க கூடிய ராகு மற்றும் கேது பகவான் ஆகிய இரண்டு கிரகங்களுக்கும் பருப்பொருள் இல்லாத நிழல் கிரகங்கள் ஆகும்.


 இந்த இரண்டு கிரகங்களுக்கும் சொந்த வீடு கிடையாது என்பதால் இவற்றிற்கு என்று தனிப்பட்ட ஆதிபத்தியம் கிடையாது. ஆனால் அதே நேரத்தில் அதனுடைய காரக பலன்கள் என்பது மட்டும் உண்டு. தனிப்பட்ட ஆதிபத்தியம் இல்லை என்பதால் இதற்கு பலன்கள் பிடிப்பதிலும் மிகுந்த சிக்கலை ஜோதிடருக்கு உருவாக்கும்.


பெரும்பாலும் இந்த நிழல் கிரகங்கள் எந்த வீட்டில் இடம் பெறுகின்றதோ அந்த லக்கினத்திற்கு ஏற்றார் போல யோகர்/அவ யோகர் என்பதை முடிவு செய்ய முடியும்.


 மேஷம், விருச்சகம், தனுசு, மீனம் ,கடகம் மற்றும் சிம்மம் ஆகிய ஆறு லக்கனங்களில் பிறந்த குரு அணியை சேர்ந்தவர்களுக்கு குரு அணியை சேர்ந்த அதே வீட்டில் இடம்பெறும் போது மிகுந்த யோக தன்மை தரக்கூடிய கிரகமாக உருவெடுக்கிறது.


 ரிஷபம் ,துலாம், மிதுனம், கன்னி மகரம் மற்றும் கும்பம் ஆகிய ஆறு சுக்கிரன் அணியை சேர்ந்த லக்கனங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிர அணியைச் சேர்ந்த அதே வீட்டில் இடம்பெறும் போது மிகுந்த யோகம் தரக்கூடிய கிரகமாக வலம் வருகிறது.


 பொதுவாக ராகு பகவான் மற்றும் கேது பகவான் தரக்கூடிய பலனை கணிக்க முற்படும் போது கீழ் கண்ட சில விதிகளையும் கவனிக்க பட வேண்டியதாக உள்ளது.


    நிழல் கிரகங்கள் இருக்கும் வீட்டையே சொந்த வீடாக கருதுவதால் அவை இடம்பெற்றுள்ள வீட்டின் அதிபதியின் தன்மையைப் பொருத்தும் மற்றும் இந்த நிழல் கிரகங்கள் உடன் பார்வை மற்றும் சேர்க்கை பெறும் கிரகங்களுடைய நிலையைப் பொருத்தும் பலன் ஆனது அமைகிறது.


 ராகு பகவானுடன் சனி இணைந்து செவ்வாய் பார்வை செய்யும் பொழுது அல்லது ராகு பகவானுடன் செவ்வாய் இணைந்து சனி பார்வை செய்யக்கூடிய நிலைகளிலும் அதன் தசை நடக்கக்கூடிய காலங்களில் கடுமையான கஷ்டங்களை, நஷ்டங்களை ஜாதகர் அனுபவிக்கக்கூடும். 


ராகு பகவான் சில நேரங்களில் செவ்வாயினுடைய வீட்டில் அமர்ந்து சனியால் பார்க்கப்படும் பொழுது அல்லது ராகு பகவான் சனியினுடைய வீடுகளில் அமர்ந்து செவ்வாயினுடைய பார்வை பெற்ற நிலைகளிலும் அதன் தசை நடக்கக்கூடிய காலங்களில் கடுமையான கஷ்டங்களை, நஷ்டங்களை ஜாதகர் சந்திக்க கூடும். 


ராகு பகவான் உப ஜெய ஸ்தானமான 

 3, 6, 10 11 ஆம் இடத்தில் நின்று இயற்கை சுப கிரகமான குரு பகவானுடைய பார்வை பெற்ற நிலையில் தசை நடக்கக்கூடிய காலங்களில் மிகுந்த யோகங்களை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


கேது பகவான் சிம்மம், விருச்சகம் மற்றும் கும்ப வீடுகளில் நின்று அதன் தசை நடக்கக்கூடிய காலங்களில் மிகுந்த யோகங்களை கொடுக்கிறது .அதேபோல ராகு பகவான் மேஷம், ரிஷபம், மகரம் கடகம் மற்றும் கன்னி ஆகிய ஐந்து வீடுகளில் நின்று தசை நடத்தக்கூடிய காலங்களிலும் நல்ல யோகங்களை ஜாதகருக்கு கொடுக்கிறது.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & gpay 


097151 89647 


Another cell 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

நிழல் கிரகங்கள் தரும் உண்மைகள்

 நிழல் கிரகங்கள் தரும் உண்மைகள் .




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    கிரகங்களில் நிழல் கிரகமான ராகு கேதுவை தவிர ஏனைய கிரகங்கள் அனைத்தும் முன்னோக்கி நகர்கின்றன. ஏற்கனவே நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவான் பின்னோக்கி நகரும் தன்மை கொண்டதால் அவர்களுக்கு வக்கிர கதி கிடையாது.


நிழல் கிரகமான ராகு மற்றும் கேது பகவான் சூரியன் அல்லது சந்திரன் உடன் நெருங்கும் போது அவை அஸ்தமனம் அடையாமல் கிரகண தோஷத்தை உண்டுபடுகிறது.


ஒளி கிரகங்களான சூரிய சந்திரர்களை முழுவதும் மறைக்கும் ஆற்றல் நிழல் கிரகங்களான ராகு கேதுகளுக்கு கிடையாது ஆனால் அவற்றின் ஒளியை அந்த காலகட்டத்தில் புவியின் மீது விழ விடாமல் தடுக்கிறது.


உதாரணமாக பௌர்ணமி காலத்தில் சந்திர கிரகணமும் மற்றும் அமாவாசை காலங்களில் சூரிய கிரகணமும் உண்டாக்குகிறது


   நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது சொந்த வீடு கிடையாது இருக்கும் வீட்டை சொந்த வீடாக கருதி பலன் தருகிறது.


    நிழல் கிரகங்கள் தான் இருக்கும் வீட்டை போலவும் தன்னை பார்த்த அல்லது சேர்ந்த கிரகங்களின் தன்மையை சார்ந்து பலன் அமைகிறது.


நிழல் கிரகமான ராகு மற்றும் கேது பகவான் இயற்கை சுப கிரக பார்வை அல்லது சேர்க்கை பெற்றால் அதன் தசை காலங்களில் மிகுந்த நல்ல யோக பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


அதே நேரத்தில் பாவ கிரகமான சனி, செவ்வாய் மற்றும் தேய்பிறைச்சந்திரன் பார்வை அல்லது சேர்க்கை தொடர்பு கொள்ளும் பொழுது அது தன்னுடைய இயல்பான பலனை இழக்கிறது.கடுமையான‌ கெட்ட பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.


   நிழல் கிரகங்கள் ஆன ராகு பகவான் தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலனை குறைக்கிறது. ஆனால் கேது பகவான் தன்னோடு இணைந்த கிரகத்தின் பலனை அதிகரிக்க செய்கிறார்.ஆதலால் கேது பகவானை முழுமையான பாவ கிரகமாக கருதிவிட முடியாது.

.

நிழல் கிரகங்கள் ஆன ராகு கேது பருப்பொருள் இல்லாத கிரகமாக கருதப்படுகிறது .எனவே இவற்றிற்கு பார்வை கிடையாது. உச்சம் ஆட்சி போன்ற ஸ்தான வலிமை கிடையாது. திக்பலம் கிடையாது . ஓரையில் இடம் கிடையாது .வாரத்தில் ஏழு நாட்களில் இவற்றிற்கு பங்கு கிடையாது.


     உலகம் தோன்றிய இத்தனை காலங்களில் இது போன்ற அதிசயம் நடந்தது கிடையாது. அதாவது ராகு கேதுக்கள் இணைந்தது கிடையாது. ராகு இருக்கக்கூடிய வீட்டிற்கு ஏழாவது வீட்டில் கேது பகவான் இருப்பார். 


ராகு பகவான் தன்னுடைய இணைந்த பிறகு உங்களுடன் சூட்சும வலுவை தந்தது கிடையாது.ஆனால் கேது பகவான் பாவ கிரகமான சனி மற்றும் செவ்வாயுடன் தனி தனியாக இணையும் போது சூட்சும வலுவை ஜாதகருக்கு கொடுக்கிறது. 


கேதுவுடன் இணைந்த சனி அல்லது செவ்வாய் தனது பார்வையில் பார்த்த இடங்கள் மற்றும் கிரகங்களை கெடுப்பது கிடையாது.மேலும் இருக்கும் இடத்தையும் பாவ தன்மையை அடைய விடாது.


 ராகு பகவான் மேஷம் ரிஷபம் மிதுனம் , கடகம் மற்றும் கன்னி ஆகிய இடங்களில் நின்று அவையே லக்கினத்திற்கு உப ஜெய ஸ்தானமான 3, ,6, 10, 11- ஆம் இடங்களில் நின்றால் யோக பலனை ஜாதகருக்கு அதன் தசை காலங்களில் தருகிறது.


கேது பகவான் சிம்மம், விருச்சகம் மற்றும் கும்ப வீடுகளில் நின்று அதன் தசை நடத்தக்கூடிய காலங்களில் ஜாதகருக்கு யோக பலனை கொடுக்கிறது.


நன்றி.


For online appointment 

Cell & WhatsApp & Gpay 


097151 89647 


Another cell: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

நன்கு படித்தும் உயரிய பதவிகளில் அமர முடியாமல் போனதற்கான ஜோதிட அமைப்புக்கள்.

 நன்கு படித்தும் உயரிய பதவிகளில் அமர முடியாமல் போனதற்கான ஜோதிட அமைப்புக்கள்.




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒரு சில ஜாதகத்தில் ஒரு குறிப்பிட்ட துறையில் சிறப்பாக படித்திருந்தும் அந்த துறைக்குரிய உயரிய பதவிகளின் அமர முடியாமல் போவதற்கான காரண காரியத்தை இந்த பதிவில் அலசி ஆராய்ந்து பார்ப்போம். 


  சில நேரங்களில் இவரை விட படிக்கக் கூடிய காலங்களில் மிகக்குறைவான கற்றல் திறனோடு படித்திருக்கக்கூடிய மாணவச் செல்வங்கள் சமகாலத்தில் தம்மை விட உயரிய பதவிகளில் அமர்ந்து இருக்க இவர் அநதே துறையில் அவரை விட ஏறக்குறைய மிகக் குறைவான பணியில் அமர்வதற்கான காரண காரியங்களையும் இதே பதிவில் அலசி ஆராய்ந்து பார்ப்போம்.


 இது போன்ற காரணத்திற்கான உதாரண விதிமுறைகளை உங்களோடு விளக்குவதில் ஜோதிடராகிய நான் மிக்க பெருமை கொள்கிறேன்.


உன்னுடைய ஜாதகத்தில் கல்விக்குரிய ஸ்தானமான இரண்டாம் இடம் நான்காம் இடம் ஐந்தாமிடம் மற்றும் ஒன்பதாம் இடமாகும். 


இரண்டாம் இடம் வாக்கு ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய ஆரம்பக் கல்வி ஸ்தானம் ஆகும் .நான்காம் இடம் உயர்நிலைக் கல்வியை குறிக்கும். இது ஒருவர் கல்வியால் பெறக்கூடிய சுகத்தை சுட்டிக் காட்டக் கூடிய ஸ்தானம் ஆகும். ஐந்தாம் இடம் ஒரு மனிதனுடைய புத்தி ஸ்தானம் ஆகும் ஒன்பதாம் இடம் மேல் நிலைக் கல்வியை குறிக்கக்கூடிய இடமாகும். ஒருவர் தன் வாழ்வில் பெறக்கூடிய அனைத்து பாக்கியங்களையும் குறிப்பிடக்கூடிய ஸ்தானம் என்பதால் ஒன்பதாம் இடத்தை பாக்கிய தானம் என்றும் பிறருக்கு உதவி செய்யக்கூடிய கல்வி கேள்வி சிறந்து விளங்கக்கூடிய ஸ்தானம் என்பதால் இதனை தர்ம ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.


    கல்விக்கு முக்கிய காரக கிரகமாக விளங்குவது குரு பகவானும், புதன் பகவானும் ஆகும். கற்ற கல்வியால் தரக்கூடிய அறிவை குரு பகவானும்,பட்டறிவால் பெறக்கூடிய ஞானத்தை புதன் பகவானும் மனிதனுக்கு தருகிறது. அதாவது குரு பகவான் அறிவையும் மற்றும் புதன் பகவான் படைப்பாற்றலையும் தருகிறது.


  உங்களுடைய ஜாதகத்தில் வாக்கு இரண்டாம் இடத்தில் எந்த விதமான பாவ கிரகங்கள் இடம் பெறாமல் அந்த வீட்டு அதிபதி இயற்கை சுப கிரகங்கள் உடைய தொடர்பை பெற்ற நிலையில் இரண்டாம் இடத்தை குரு பார்க்க அவர் இளமையிலேயே கல்வி கேள்விகளில் வல்லவராக திகழ்வார்.


   இதே போல நான்காம் இடத்தில் எவ்வித பாவ கிரகங்கள் இடம் பெறாமல் அல்லது பார்வை செய்யாமல் சுக அதிபதியான நான்காம் இடம் அதிபதி கேந்திர கோணங்களில் உச்சம் ,ஆட்சி போன்ற நிலைக்கு வலுப்பெற்று இயற்கை சுப கிரவங்களுடைய பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் நான்காம் இடத்தோடு குறிப்பாக புதன் பகவான் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் நல்ல நுண்ணறிவு படைத்த சாதகராக அவர் வாழ்வில் திகழ்வார்.


    பொதுவாக நான்காம் இடத்தில் சனி, செவ்வாய், ராகு ,கேது ,தேய்பிறை சந்திரன் மற்றும் பாலி உடன் சேர்ந்த புதன் போன்ற பாவ கிரகங்கள் இடம் பெறாமல் அல்லது தொடர்பு வராமல் நான்காம் இடத்தில் இயற்கை சுப கிரகங்களான குரு பகவான் , வளர்பிறை சந்திரன் , தனித்த புதன் மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்கள் தொடர்பு பெற்ற நிலையில் இருந்து அவற்றை சுப கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் உயர்கல்வியில் சிறந்து விளங்க கூடிய மாணவனாக விளங்குவார்.


   ஒருவர் ஜாதகத்தில் தனது புத்தியால் உலகை வெல்ல அதாவது அறிவால் அகிலத்தை ஆள ஒருவர் ஜாதகத்தில் புத்தி ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் இடம் பெறாமல் , ஐந்தாம் இடத்தை சுப கிரகங்கள் பார்வை செய்து அந்த வீட்டு அதிபதியும் சுப கிரக தொடர்பு பெற்ற நிலையில் இருக்க வேண்டும்.


    ஒருவர் எல்லா பாக்கியங்களையும் அடைய அவருடைய ஜாதகத்தில் ஒன்பதாம் இடம் அதன் அதிபதி பலம் பெற்று சுப கிரக தொடர்பை பெற்று இருக்க வேண்டும். அவ்வாறு பெற்று இருந்தால் கல்வியால் அடையக்கூடிய அனைத்து பாக்கியங்களையும் அனுபவிக்க கூடிய யோகத்தை அந்த ஜாதகர் பெறுவார். ஒன்பதாம் இடம் மிகவும் வலுப்பெற்ற நிலையில் மிக உயரிய ஆராய்ச்சிக்குரிய படிப்புகளை படித்து அந்த துறையில் வித்தகனாக திகழ்வார். 


  மேலே குறிப்பிட்ட இந்த ஸ்தானங்களும் அந்த அதிபதி களையும் தவிர ஒருவர் ஜாதகத்தில் கல்விக்கு காரக கிரகமாக விளங்கும் குரு பகவான் மற்றும் புதன் பகவான் எவ்வித பாவ கிரகங்களுடைய பார்வை அல்லது சேர்க்கை பெறாமல் கேந்திர கோணங்களில் உச்சம் ,ஆட்சி பெற்ற நிலையில் வலுப்பெற்று மேற்கண்ட 2,4,5,9 ஆம் இடங்களில் தொடர்பு பெற்று இருக்கும் பொழுது அவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க கூடிய ஞானத்தை பெற்றிருப்பார்கள்.


சில நேரங்களில் படிக்கக் கூடிய காலங்களில் ஒருவருக்கு நல்ல தசா அமைப்புகளும் கோச்சார பலன்களும் ஒத்துழைத்து அவர் உயரிய படிப்பை படித்திருந்தாலும் அந்தக் கற்ற கல்விக்குரிய பணியை அமர்வதற்குரிய நேரங்களில் அல்லது உயரிய பணிகளில் அமர நடத்தப்படக்கூடிய தேர்வுகளை எழுதக்கூடிய வயதில் உகந்த தசை அமைப்புகளும் மற்றும் கோச்சார பலன்களும் அமையாமல் அவ யோக தசைகள் மற்றும் கோச்சர் அடிப்படையில் ஏழரை அஷ்டம சனி போன்றவை நடப்பில் இருக்கக்கூடிய நிலையில் கற்ற கல்விக்கு நிகரான உயரிய பதவியில் அவரால் அமைய முடியாமல் அமர முடியாமல் போய்விடுகிறது.


சிலருக்கு படிக்கக்கூடிய காலங்களிலும் மற்றும் உயரிய பதவிகளில் அமர நல்ல சந்தர்ப்பம் உள்ள காலங்களிலும் நல்ல தச அமைப்புகளும் கோச்சார பலன்களும் அமைந்து லக்கனாதிபதியும் நன்கு வலுப்பெற்ற நிலையில் இள வயதிலேயே தான் படித்த படிப்புக்கு ஏற்ற உயரிய பதவிகளில் அமரக்கூடிய அதிர்ஷ்டத்தை பெற்று விடுகிறார்கள்.


 ஒருவர் எந்தத் துறையை தேர்ந்தெடுத்து சாதனை செய்வார் என்பது அவருடைய ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத் தன்மை படைத்து ராசி மற்றும் லக்கினத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடங்களோடு தொடர்பு பெற்ற நிலையில் அந்த கிரகம் தொடர்புடைய எண்ணங்களும், செயல்களும் அந்த மனிதனுக்கு உருவாகி அந்த கிரக தொடர்பு பெற்ற துறையில் அவர் படிப்பில் அதிக ஆர்வத்தை காட்டுவார்.


 ஒரு சிலர் படிக்கக்கூடிய காலங்களில் நல்ல தச அமைப்புகள் வந்து பிறகு அவருக்கு வேலை வாங்கக்கூடிய காலகட்டத்தில் அவயோக தசைகளான ஆறாம் இடம் மற்றும் எட்டாம் இட அதிபதி தசை நடக்கும் பொழுது அவரால் அந்த உயரிய நிலையை அடைய முடியாமல் போய்விடுகிறார்.


     உதாரணமாக மீன லக்னம் மற்றும் மீன ராசியில் பிறந்த ஒருவருக்கு குறிப்பாக ஒரு 20 வயதில் சுக்கிரன் மற்றும் சூரிய தசைகள் தொடர்ந்து வரக்கூடிய நிலையில் அந்த இரண்டு திசைகளும் ஆறு அல்லது ஆறு மற்றும் எட்டாம் அதிபதியுடைய தசை என்பதால் அந்த 26 ஆண்டுகளும் அதாவது அவருடைய 46 வயது வரை அந்த உயரிய பதவியில் அவரால் அமர முடியாமல் போய்விடுகிறது அவரால் அந்த உயரிய எல்லையை அவர் நினைத்த எல்லையை அடைய இயலாமல் அல்லது அதை குறைவான அடிப்படை பதவிகளில் அமர்ந்து விடும் சந்தர்ப்பம் வந்து விடுகிறது.


    எல்லாம் விதி வசம் ஆனால் 

"இந்த நிலையும் மாறும் "என்ற மனநிலையோடு அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் அவர் நடை போட்டால் அதற்குப் பிறகு நல்ல தசை அமைப்பு வரும் பொழுது அந்த கற்ற மற்றும் பெற்ற ஞானத்தால் அவரால் தன் வாழ்க்கை நிலைமையை உயர்த்திக் கொள்ள முடியும்.


நன்றி.


For Online appointment 


Cell & WhatsApp & gpay no 


 097151 89647 


Another cell no 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

மகிழ்ச்சியான மண வாழ்க்கை அமைய...

 மகிழ்ச்சியான மண வாழ்க்கை அமைய...




 செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     ஒருவர் ஜாதகத்தில் தனக்கு வரக்கூடிய மனைவி அல்லது கணவன் எப்படிப்பட்டவ(ர்)ள் என்பதை தெரிந்து கொள்ள உங்களுடைய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் என்று அழைக்க கூடிய ஏழாம் இடம் அதன் அதிபதி மற்றும் களத்திர காரகர் சுக்கிரன் ஆகிய மூன்றையும் பொறுத்து தான் உங்கள் மணவாழ்க்கை எப்படிப்பட்ட மணவாழ்க்கை என்பதை எளிதில் புரிந்து கொள்ள இயலும்.


   மகிழ்ச்சி நிறைந்த மணவாழ்க்கை அமைய உங்கள் ஜாதகத்தில் ஏழாம் இடத்தை பாவக் கிரகங்களான சனி, செவ்வாய் தேய்பிறைச்சந்திரன் பார்வை செய்யாமலும் அல்லது ஏழாம் இடத்துடன் அல்லது அதன் அதிபதியுடன் சனி, செவ்வாய், தேய்பிறை சந்திரன் ,ராகு மற்றும் கேது போன்ற கிரகங்கள் சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டு இருக்கக் கூடாது.


ஏழாமிடத்தில் இயற்கை சுப கிரகமான குரு வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் பார்வை அல்லது 

சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டு ஏழாம் இடத்து அதிபதியும் கேந்திர கோணங்களில் நின்று இயற்கை சுப கிரக தொடர்பை பெற்றிருக்க வேண்டும்.


தாம்பத்திய சுக்கத்தை தரக்கூடிய ஏழாம் இடத்துக்கு காரக கிரமான சுக்கிர பகவான் இருக்கும் இட,ம் பார்வை அல்லது சேர்க்கை சேர்க்க முறையில் சுப கிரக தொடர்பு கொண்ட கிரகங்கள் பொறுத்து இல்லற சுகம் அமைகிறது.


ஏழாமிடத்தின் அதிபதியும் மற்றும் சுக்கிர பகவானும் கேந்திர கோணங்களில் நின்று உச்சம் ,ஆட்சி போன்ற நிலைகளில் வலுப்பெற்று இயற்கை சுபக் கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள நிச்சயமாக அவர்களுக்கு அமையக்கூடிய மண வாழ்க்கை நடக்கக்கூடிய தசாபுத்திகளுக்கு ஏற்ப மகிழ்ச்சியான வாழ்க்கை அமைகிறது.


மேற்கண்ட அமைப்புகள் நல்ல முறையில் அமைந்து லக்கனமும் , அதன் அதிபதியும் இயற்கை சுப கிரக பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டு நல்ல யோக தசாபுத்திகள் தொடர்ந்து வந்தால் அவர்களுக்கு அமையக்கூடிய மண வாழ்க்கையானது மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கையாக அமையும்.


இவை தவிர குடும்ப ஸ்தானம் என்று அழைக்க கூடிய இரண்டாம் இடம், அதன் அதிபதி மற்றும் மாங்கல்ய ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய எட்டாம் இடம் அதன் அதிபதி பாவ கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கை பெறாமல் இயற்கை சுப கிரக பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் இருக்க வேண்டும்.இவையும் மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கை அமைய மிக முக்கியமான காரணியாக அமைகின்றது.


 ஒருவேளை லக்கினத்திற்கு ஏழாம் இடம் பாவத்தன்மை அடைந்திருந்தாலும் ராசிக்கு ஏழாம் இடம் அதன் அதிபதி மற்றும் களத்திரக்காரர்கள் சுபத்தன்மை அடைந்திருந்தாலும் ஓரளவு அளவான மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.


லக்கினம் மற்றும் ராசி ஆகிய இரண்டிற்கும் ஏழாம் இடம் அதனுடைய அதிபதி மற்றும் களத்திரக்காரர்கள் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ஸ்தான வலிமை பெற்று நிற்பதோடு மட்டுமல்லாமல் சுப தன்மையை அடைந்து திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து யோக தசைகள் நடப்பில் இருப்பின் அவருடைய மணவாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கையாக அமையும்.


உங்களது வாழ்க்கைத் துணை சாதகத்திலும் இதே போல் லக்கினம் மற்றும் ராசிக்கு ஏழாம் இடம் அதன் அதிபதி மற்றும் களத்திரகாரன் சுக்கிரன் ஆகியவை சுபருடன் சேர்ந்து சுப கிரக பார்வை பெற்று வீடு கொடுத்தவன் வலிமை பெற்று அவர்களுக்கும் தொடர்ந்து வரக்கூடிய தசா புத்திகள் யோகத்தை தரக்கூடிய தசா புத்திகளாக இருந்தால் மணவாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையாக கூடுதலாக அமையும்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & gpay 

  097151 89647 


Another cell: 7402570899


My website.click here 


https://astro-ravichandran.netlify.app/?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR1QCwsmEcUvkjRISeRcv3Dw5NoY0uPNBDVbcjEXPdfF_bFtsOcDatrfBhY_aem_7-3lf7MsYKY1abOPfLG2iQ


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

ராகு பகவான் தரும் பலன்கள்

 ராகு பகவான் தரும் பலன்கள்.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவர் ஜாதகத்தில் உள்ள ராகு பகவான் ஆனவர் கேது பகவானை விட கூடுதலாக பாவ தன்மை படைத்த கிரகம் ஆகும்.


 ராகு பகவான் உடன் சனி மற்றும் செவ்வாய் சேர்வதால் அல்லது பார்வை செய்வதால் கடுமையான கெட்ட பலனை ஜாதகருக்கு கொடுக்கும்.


ராகு பகவான் உடன் சனி சேர்க்கை பெற்று செவ்வாய் பார்வை செய்தாலோ அல்லது ராகு பகவான் உடன் செவ்வாய் சேர்க்கை பெற்று சனி பார்வை செய்தாலோ கடுமையான கெட்ட பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


 இது போன்ற அமைப்பு பெற்று சுபர் பார்வை பெற்றால் பலனில் கொஞ்சம் மாற்றம் ஏற்படும்.முதலில் கடுமையான கெடுதலை தந்தாலும் முடிவாக ஒரளவு நல்ல பலனை தரக்கூடிய வகையில் அமைகிறது.


வேறு ஏதேனும் சுபர் பார்வை அல்லது சேர்க்கை பெறாத நிலையில் கடுமையான கஷ்டங்களை குறிப்பிட்ட கிரகங்களின் தசை காலங்களில் ஜாதகருக்கு கொடுக்கும்.


சில நேரங்களில் ராகு பகவான் சனியின் வீடுகளான மகரம் மற்றும் கும்பம் வீட்டில் நின்று செவ்வாய் பகவானுடைய பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் தசை காலங்களில் கடுமையான கஷ்டங்களை கொடுக்கிறது.


ராகு பகவான் செவ்வாயின் வீடுகளான மேஷம் மற்றும் விருச்சகம் ஆகிய இரண்டு வீடுகளில் ராகு பகவான் அமர்ந்து சனியால் பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையை பெற்றால் அதன் தசை காலங்களில் மிகுந்த கஷ்டங்களை ஜாதகருக்கு கொடுக்கும்.


ராகு பகவான் தேய்பிறை சந்திரன் நெருக்கமாக இணைந்த நிலையில் மனநிலையில் சற்று பாதிப்பை கொடுக்கும் .மனதளவில் திருப்தி அற்ற நிலையை தரும். தாய் வழி உறவுகளில் பாதிப்பு ஏற்படும்.


சூரிய பகவானுடன் ராகு நெருக்கமாக இணைந்த நிலையில் தந்தை வழி உறவுகளில் பாதிப்பை உண்டாக்கும். ஒன்பதாம் இடம் அதன் அதிபதியை பொறுத்து பலனில் மாற்றம் ஏற்படும்.


செவ்வாயுடன் ராகு இணைந்த நிலையில் சற்று கோழைத்தனம் காணப்படும். மிகுந்த காம எண்ணம் உடையவராக இருப்பார். 


தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய சுக்கிரனுடன் ராகு இணையும் பொழுது களத்திர தடை கொடுக்கும். மாறுபட்ட காம எண்ணங்களை கொடுக்கும் அதிலும் குறிப்பாக நீசம் பெற்ற சுக்கிரன் உடன் இணையும் பொழுது விதவைப் பெண் தொடர்பு உண்டாகும் வேறு வகையில் சுபத்துவம் அல்லது சுபருடைய பார்வை பலனில் மாற்றல் ஏற்படும்.


ராகு பகவான் பொதுவாக மேஷம், ரிஷபம், மிதுனம் கடகம் சிம்மம் ஆகிய இந்தப் வீடுகளில் நின்று அந்த வீடுகள் உப ஜெய ஸ்தானமான 3,6,10,11,12 ஆம் வீடுகளாக இருந்து இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய சுப கரங்களுடைய பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் ராகு தசை வரக்கூடிய காலகட்டத்தில் மிகப்பெரிய யோகங்களை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கும்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & gpay no 

  097151 89647 


Another cell no 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

Monday, 3 February 2025

மனித வாழ்வை வழிநடத்தும் கோள்கள் தரும் சுவராஸ்யமான தகவல்கள்.

 மனித வாழ்வை வழி நடத்தும் கோள்கள் தரும் சுவராஸ்யமான தகவல்கள்.




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை! 


  ஒருவர் ஜாதகத்தில் கோச்சார பலன்களை ராசியை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுகிறது. 


     கோச்சார பலன் என்பது வான வீதியில் கிரகங்கள் தற்போது நின்ற நிலையை குறிப்பிடுவதாகும். குரு பெயர்ச்சி பலன்கள் ,சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் போன்றவை கோச்சார அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.


  சந்திரன் பகவான் ஒரு ராசியில் இரண்டு கால் நாள் தங்குவார். இதனை நாள் கோள் என்று அழைக்கப்படுகிறது.

சூரியன் புதன் சுக்கிரன் போன்ற கிரகங்கள் ஒரு ராசியில் ஒரு மாத காலம் சஞ்சாரம செய்கிறது. செவ்வாய் பகவான் ஒரு ராசியில் 45 நாட்கள் தங்குவார். இந்த நான்கு கோள்களும் மாத கோள்கள் என்று அழைக்கப்படுகிறது. 


 சூரியனுடன் அல்லது சூரியனுக்கு முன்பின் ஒரு ராசிகளில் புதன் பகவான் மற்றும் சூரியன் உடன் சூரியனுக்கு முன்பின் இரண்டு ராசிகளுக்குள் சுக்கிரன் பகவானும் தொடர்ந்து நகர்ந்து கொண்டு வருவார்கள். இதனால் இவ்விரு கிரகங்களும்" உள் வட்ட கிரகங்கள்" என்று அழைக்கப்படுகிறது.


குரு பகவான் ஒரு ராசியில் ஓராண்டு காலம் தங்குவார், ராகு -கேது ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டுகள் தங்குவார் மற்றும் சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் தங்குவார்., இந்த கோள்களை வருட கோள்கள் என்று அழைக்கப்படுகிறது.


     கோள்களிலே சனி பகவான் மட்டும் ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய கிரகமாகும் மற்றும் மெதுவாக நகரக்கூடிய கோளும் ஆகும் . இதனால் இதனை மந்த கோள் என்றும், மெதுவாக நகரும் கோள் என்றும் அழைக்கப்படுகிறது.


 குரு பகவான் ஒரு ராசியை கடக்க ஒரு ஓராண்டு எடுத்துக் கொள்ளும் .புதிய ராசியில் இணைந்த குரு நல்லது கெட்ட பலன்களை இரண்டு மாதம் கழித்து தான் தருவார். ஒரு நாளைக்கு ஆறு கலை தூரம் கடப்பார். ஒரு நட்சத்திர பாதத்தை ஒரு மாதம் பத்து நாள் ஒரு மணி 33 நிமிடம் 20 வினாடி நகர்வார்.


தசா புக்தி பலன்களை லக்னத்தை அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படுகிறது . கோச்சார பலன்கள் ராசியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகிறது 


தசா புத்தி பலன்கள் மனித வாழ்வை வழிநடத்திச் செல்லக்கூடிய மனித வாழ்வை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள உதவுகிறது. 


லக்கன முதலாக 12 ஆம் வீடு வரை ஒவ்வொரு ஸ்தானம் பெற்றுள்ள பலன்களை ஆதிபத்திய பலன்கள் என்று அழைக்கப்படுகிறது ஒவ்வொரு கிரகமும் பெற்றிருக்கக் கூடிய பலன்களை தாரகத்துவம் என்று அழைக்கப்படுகிறது..


ஆதிபத்திய பலன்களை அதன் தசை வரக்கூடிய காலங்களிலும் மற்றும் காரகத்துவ பலன்களை ஆண்டு முழுவதும் பெறலாம்.


சூர்யா தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசம் செய்வதால் மகர ஜோதி தரிசனம் அதாவது மகர சங்கராந்தி பொங்கல் என்று அழைக்கப்படுகிறது . பூமியின் சுழற்சியானது தட்சிணாயத்திலிருந்து உத்திராயணத்திற்கு செல்கிறது.


வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர ஆடி மாதம்.ஆரம்பிப்பார்.இதனை தட்சிணாயனம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது கடக ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்வார் இந்த காலம் விதை விதைக்க உகந்த காலம் ஆகும் .எனவேதான் நமது முன்னோர்கள் "ஆடி பட்டம் தேடி விதை "என்றார்கள்.


    ஆடியில் விதைத்த 

பயிர்களை தை மாதம் அறுவடை செய்வார்கள். எனவே தான் 

" தை பிறந்தால் வழி பிறக்கும் "என்று நமது முன்னோர்கள் கூறினார்கள்.

தை மாதம் தனது சுழற்சியினை வடக்கு நோக்கி தை, மாசி ,பங்குனி, சித்திரை வைகாசி மற்றும் ஆனி ஆகிய காலங்கள் வரை வடக்கு நோக்கி நகரும்.


நமது முன்னோர்களுக்கு பிடிக்கக்கூடிய அமாவாசையை கூட வருடம் முழுவதும் பிடிக்க முடியாதவர்கள் ஆடி மற்றும் தை அமாவாசை வெகு சிறப்பாக பிடிப்பதற்கு இந்த இரண்டு சுழற்சி மாற்றங்கள் முக்கிய காரணமாகும்.


 ஒரு ராசியில் இரண்டு நாள் தங்கி பெயர்ச்சி செய்யும் சந்திரனை அடிப்படையாக வைத்தும் வளர்பிறை தேய்பிறை என்ற காலமாற்றம் உருவாக்கப்படுகிறது.


    சந்திர பகவான் சூரியனை 8 பாகைக்குள் நெருங்கும் பொழுது அமாவாசை உருவாகிறது சூரியனை விட்டு ஏழாவது வீட்டுக்கு அதாவது சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து 

180 பாகையில் சந்திரன் வரும் பொழுது பௌர்ணமி உருவாகிறது.


எனவே சூரியன் இருக்கும் வீட்டிற்கு இரண்டாம் வீட்டில் இருந்து ஏழாம் வீடு வரை வளர்பிறை சுக்கில பட்சம் அல்லது பூர்வ பட்சம் என்று அழைக்கப்படுகிறது. எட்டாம் வீட்டில் இருந்து 12ஆம் வீடு வரை சந்திரன் இருக்கும் காலத்தை தேய்பிறைக்காலம் அதாவது அமரபட்சம் அல்லது கிருஷ்ண பட்சம் என்று அழைக்கப்படுகிறது.


சூரிய பகவான் சித்திரை மாதத்தில் மேஷ ராசிக்கும் ,வைகாசி மாதம் ரிஷப ராசிக்கும் ....இவ்வாறாக பங்குனி மாதம் மீனம் வீட்டிற்கு வருகிறார்.


நிழல் கிரகங்களில் ராகு கேது எப்பொழுதும் ஒன்றாக ஒரு வீட்டில் இருப்பதற்கு வாய்ப்பில்லை .

ராகு இருக்கக்கூடிய வீட்டிற்கு ஏழாவது வீட்டில் கேது பகவான் வாசம் செய்வார். ராகு மற்றும் கேது ஒரு பருப்பொருள் இல்லாத நிழல் கிரகமாகும்.


ராகு மற்றும் கேது பகவானுக்கு சொந்த வீடு என்பதையும் கிடையாது இவர்களுக்கு பார்வை கிடையாது. உச்சம் ஆட்சி போன்ற ஸ்தான வலிமை கிடையாது. 


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay 


  097151 89647 


Another cell no: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

எந்த தொழில் செய்தால் லாபம் தரும்?

 எந்தத் தொழில் செய்தால் லாபம் வரும்?




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்பார்கள். இன்றைய காலகட்டத்தில் லெளகீக வாழ்க்கையில் ஈடுபடக்கூடிய மனிதனுக்கு பணம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். இதைத்தான் வான்புகழ் கொண்ட வள்ளுவர் கூட

 "அருளளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு " என்றார்.


 ஒரு மனிதன் பொருள் படைத்து காணப்பட்டால் தான் இந்த உலகத்தில் வாழ இயலும்..


"படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா ,

பொருள் படைத்தவன் கருத்தானால் 

சபை மீறுமா"


"பணம் பத்தும் செய்யும் "-என்பார்கள்.


 ஒரு காலகட்டத்தில் சம்பாதித்தல் என்பது புருஷ லட்சணமாக மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஆணுக்கு நிகராக பெண்ணும் சரி நிகர் சமமாக தொழில் செய்து பொருளீட்டலில் ஈடுபடுகிறார்கள்.


 ஒருவர் தொழில் செய்ய வேண்டுமானால் அவரோட ஜாதகத்தில் தொழிற் ஸ்தானம் என்று அழைக்க கூடிய பத்தாம் இடத்தை மட்டும் வைத்துக்கொண்டு ( அதாவது பத்தாமிடம் மற்ற அதிபதியை ) தொழிலை தேர்ந்தெடுத்தால் அது தவறாக போய்விடுகிறது. 


   உங்கள் சாதகத்தில் பத்தாம் இடம் தொழில் ஸ்தானமாக இருந்தாலும் அதன் அதிபதி தொழிற்ஸ்தானாதிபதியாக இருந்தாலும் பத்தாமிட அதிபதியை தொழில் காரகிரகமாக எடுத்துக் கொண்டு அதனுடைய காரக தொழிலை செய்யும் பொழுது நீங்கள் கட்டாயம் தோல்வியை சந்தித்து விடுவீர்கள்.


    உங்கள் ஜாதகத்தில் நீங்கள் எந்த தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதற்கு முதலில் லக்கனாதிபதியுடைய வலிமையை கணக்கிட்டு பிறகு உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் அதிகப்படியான சுபத்துவத்தை பெற்றுள்ளது என்பதை கண்டறிய வேண்டும். சுபத்துவமான ஒரு கிரகத்தை கண்டறிவதற்கு தான் உங்களுக்கு நீண்ட நெடிய அனுபவ அறிவு தேவைப்படுகிறது. ஒரு சில நேரங்களில் நீங்கள் தவறாக ஒரு கிரகத்தை தேர்ந்தெடுத்து விட்டு அதற்கேற்றார்கள் தொழிலை செய்தால் நிச்சயம் நீங்கள் தோல்வியில் முடிந்து விடுவீர்கள். 


 அவ்வாறு சுபத்துவமான ஒரு கிரகத்தை கண்டறிந்த பின் அந்த கிரகம் ராசி மற்றும் லக்கினத்திற்கு தனஸ்தானமான இரண்டாம் இடம் மற்றும் தொழில் ஸ்தானமான 10-ஆம் இடத்துடன் தொடர்பை கொண்டு இருக்க வேண்டும் பிறகு அந்த கிரகத்துக்குரிய யோக தசா புத்திகள் நடப்பில் இருக்க வேண்டும்.


இந்த சுபத் தன்மை படைத்த ஒரு கிரகத்தை தேர்வு செய்வதற்கு உங்களுக்கு கீழ்கண்ட அறிவு தேவைப்படுகிறது. 


  அதாவது எந்த ஒரு கிரகத்தையும் பாவ கிரகமான சனி,, செவ்வாய், ராகு, தேய்பிறை சந்திரன் மற்றும் பாவியோடு சேர்ந்த புதன் போன்றவை பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டுவிட கூடாது.


   எந்த ஒரு கிரகத்தை வளர்பிறைச் சந்திரன் , சுக்கிரன், குரு பகவான் மற்றும் பாவி உடன் சேராமல் உள்ள புதன் பகவான் போன்ற கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டு உள்ள ஒரு கிரகமே அதிக சுபத் தன்மை படைத்த கிரகமாகும்.


எந்த ஒரு கிரகத்தை குருபகவான் மற்றும் வளர்பிறை சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டு இருக்கக்கூடிய நிலையில் அந்த கிரகம் அதிக சுபத்தன்மை படைத்த கிரகமாக கருதப்படுகிறது.


இவ்வாறு டபுள் டெபாசிட்டர் முறையில் அதிக சுபத்துவம் பெற்ற ஒரு கிரகம் அவை தொழிற் ஸ்தானமான 10-ஆம் இடத்துடன் தொடர்பு கொண்டு உள்ள நிலையில் மட்டுமே அந்த கிரகத்துக்குரிய காரக தொழிலை சாதகருக்கு கொடுக்கும்.


   சில நேரங்களில் ஒரு கிரகம் கம் அதிக சுபத் தன்மையை பெற்று தொழில் ஸ்தானத்தோடு தொடர்பு கொண்டு இருந்தாலும் அதற்கு உரிய உகந்த தச அமைப்பு வராத கால கட்டங்களில் அந்த தொழிலை தேர்வு செய்து செய்யும் பொழுது சில நேரங்களில் அந்த குறிப்பிட்ட காலகட்டம் வரை அந்த தொழில் மூலமாக பெரிய அளவுக்கு பொருளாதாரத்தை ஈட்ட முடியாமல் தோல்வி அடைய வைத்து நஷ்டத்தை சந்தித்து பிறகு உரிய காலம் வரும் பொழுது அந்த தொழிலில் இருந்து பெருமளவு பணத்தை சம்பாதிக்க கூடிய வாய்ப்பை பெறுவார்கள் 


  சில நேரங்களில் அவயோக தசை நடக்கக்கூடிய காலகட்டங்களில் உங்கள் ஜாதகப்படி முற்றிலும். தொடர்பு இல்லாத தவறான ஒரு தொழிலை தேர்வு செய்து அதன் மூலமாகவும் பெரிய நஷ்டத்திற்கு உள்ளாவார்கள்.


     என்னிடம் பலன் பார்க்க வருபவர்களின் ஜாதகத்தை பார்க்கும் போது அவர்கள் சரியான தொழிலை தேர்ந்து எடுத்தும் தோல்வியை தழுவி விட காரணம் என்னவாக இருக்கும் என்று ஆய்வு செய்து பார்க்கும் போது மேற்கண்ட உண்மை புலப்படும்.


  பிறகு அந்த அவயோகத்தை தரும் கால கட்டம் வரை அந்த தொழிலில் பெரிய அளவுக்கு முதலீடு செய்யாமல் உங்களுக்கு உரிய உகந்த தசை வர கூடிய அந்த குறிப்பிட்ட தேதியை கூறி அதற்குப் பிறகு அதே தொழில் நீங்கள் பெரும் செல்வம் ஈட்டுவீர்கள் என்று சொல்லி அனுப்பி வைப்பேன் அதேபோல சில வருடங்கள் கழித்து பெரிய அளவுக்கு பொருளீட்டி சம்பாதித்து நான் குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் பெரு பணக்காரராக ஆகி அதன் பிறகு வரக்கூடிய பல நபரை நான் பார்த்திருக்கிறேன்.


ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொழிலில் பெரிய அளவுக்கு முதலீடு செய்து கோடிக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான பணத்தை ஈட்டுவதற்கு அவருடைய ஜாதகத்தில் லக்கனாதிபதி வலிமையாக இருந்து அதிக சுபத்தன்மையான கிரகம் ராசி மற்றும் லக்னத்திற்கு இரண்டு பத்தாம் இடங்கள் உடன் தொடர்பு கொண்டு உகந்த யோக தசை நடப்பில் உள்ள காலகட்டத்தில் பெரும் செல்வந்தராக ஆகி விடுவார்கள்.. அவ்வாறு செல்வந்தரான பிறகு என்னை வந்து சந்திக்கும் போது அவர்கள் சொல்லும் போது தான் எல்லாம் வல்ல இறைவனுக்கே நன்றி கூற தோன்றும் 


சில நேரங்களில் ஒரு ஜாதகத்தில் அதிக சுபத்ன்மையான கிரகம் இருந்து அதற்குரிய யோக தசைகளும் நடப்பில் வரக்கூடிய காலகட்டத்தில் சாதகரிடம் பெரிய அளவுக்கு அனுபவ ஞானம் இல்லை என்றாலும் அதிர்ஷ்டவசத்தால் மிகப்பெரிய செல்வந்தராக மாறி விடுவார்கள்.


   ஒரு சிலர் ஜாதகத்தில் அதிக சுபத்ன்மையான கிரகம் இரண்டு இருந்து அந்த இரண்டில் எந்த கிரகத்துக்குரிய தொழிலை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்யும் போது அந்த இரண்டு கிரகத்தில் எந்த கிரகம் தொழிற் ஸ்தானமான பத்தாம் இடத்தோடு தொடர்பு கொண்டு உள்ளது என்பதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும் அவ்வாறு ஆய்வு செய்து பார்க்கும் போது எந்த கிரகம் தொடர்பு கொண்டுள்ளதோ அதற்குரிய தொழிலை செய்தால் மட்டும் போதும் . தொழிலில் முன்னேற்றம் அடைந்து விட முடியும்.


    சில நேரங்களில் அவ்வாறு தொழிற் ஸ்தானத்தோடு தொடர்பு வராத கிரகத்தை தேர்வு செய்யும் பொழுது அவ்வாறு செய்யும் தொழிலும் தோல்வியில் முடிந்து விடும். 


   ஒரு சிலர் இரண்டு அல்லது மூன்று தொழில் செய்வதற்கு உரிய காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது அவரது ஜாதகத்தில் இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் அதிக சுபத்தன்மையோடு தொழில் ஸ்தானத்தோடு மற்றும் தொடர்பு கொண்டுள்ள நிலையில் இருக்கும். நடப்பு தசையும் லக்கின யோக தசையாக தொடர்ந்து வரும்.


 எந்த கிரகத்திற்கு எந்த தொழிலை மேற்கொள்ளலாம் என்று தெரிந்து கொண்டால் மட்டுமே சரியான தொழிலை தேர்வு செய்ய முடியும். அல்லது சரியான படிப்பை தேர்வு செய்து படித்து அந்தத் துறையில் சிறந்து விளங்க முடியும். 


  உதாரணமாக ஆசிரியராக வேண்டுதலில் உங்கள் ஜாதகத்தில் குரு பகவான் அதிக சுபத் தன்மையுடன் ராகி மற்றும் லக்னத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும்.


  கம்யூட்டர் துறையில் அல்லது இணைய உலகில் அல்லது கணித துறையில் மிகப்பெரிய சாதனை புரிய வேண்டுமெனில் உங்கள் ஜாதகத்தில் புதன் பகவான் வளர்பிறை சந்திர கேந்திரத்தில் நின்று தொழிற் ஸ்தானமான பத்தாம் இடத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும். ஜோதிடர், இசையமைப்பாளர் ,ஆடிட்டர், டைரக்டர் கதாசிரியர் ,பாடலாசிரியர் ,கவிஞர் மேடை ஏறி பேசக்கூடிய பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் விஞ்ஞானி போன்ற அனைவருக்கும் மேற்கண்ட அமைப்பே ஜாதகத்தில் இருக்க வேண்டும்.


உங்கள் ஜாதகத்தில் சனி பகவான் அதிக சுபத் தன்மையுடன் ராசி மற்றும் லக்கினத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடங்களுடன் தொடர்பு கொள்ள கூடிய நிலையில் வழக்கறிஞராக தொழில் பிரிவார். அதே நேரத்தில் குரு பகவானும் அதிக சுபத்துவமாக இருந்தார் நீதிபதியாக திகழ்வார். 


உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பகவான் அதிக சுப தன்மையை பெற்று ராசி மற்றும் லக்னத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் MBBS படிப்பார். சுபத்துவ படிநிலை சற்று குறைய எம்பிபிஎஸ் க்கு அடுத்த நிலையான வெட்னரி டாக்டர் , சித்தா, கண் ,காது ,மூக்கு மற்றும் தொண்டை நிபுணர், பார்மசி போன்ற படிப்பை படிப்பார் இன்னும் அடுத்த படிநிலை கீழ இறங்க போலீஸ் ,ராணுவம் ,அக்ரி ,ரியல் எஸ்டேட் மற்றும் சிவில் இன்ஜினியர் போன்ற படிப்புகளை படிக்க வைப்பார்.


  தொடரும்......


For online appointment 


Cell & WhatsApp & Gpay 


  097151 89647 


Another cell: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.