Tuesday, 4 February 2025

கோடிக்கணக்கான பணத்தை சம்பாதிக்க...

 கோடிக்கணக்கான பணத்தை சம்பாதிக்க....




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை! 


  ஒருவர் கோடிக்கணக்கான பணத்தை சம்பாதிக்க இயலுமா ? என வினா எழுப்பினால் நிச்சயமாக முடியும்.

 சில நேரங்களில் சாதாரண நிலையில் அடிமட்ட நிலையில் பிறந்து வளர்ந்த மனிதன் கூட ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் யோகமான தசை அமைப்புகள் வரக்கூடிய காலங்களில் யாரும் எதிர்பாராத வகையில் கோடிக்கணக்கான பணத்தை சம்பாதிக்கும் நிலை உருவாகிவிடும்.


 கோடிக்கணக்கான பணத்தை சம்பாதிக்க ஒருவர் மிகுந்த கல்வி அறிவு தான் வேண்டுமென்றோ ! அல்லது பணக்கார வீட்டில் தான் பிறந்திருக்க வேண்டும் என்றோ ! கிடையாது.

     சாதாரண குடும்பத்தில் பிறந்து சராசரி மனிதன் கூட நல்ல யோக ஜாதக அமைப்பு இருக்கக்கூடிய நபர் யாரும் எதிர்பாராத வகையில் கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்து விடுவார்கள்.


  கோடிக்கணக்கான பணத்தை சம்பாதிக்க கூடிய ஜாதக அமைப்பை நாம் பார்க்கும் பொழுது பளிச்சென்று அவருடைய ஜாதக கட்டத்தில் கிரக நிலைகள் அமைந்திருக்கும்.


இவருடைய ஜாதகத்தில் லக்னத்தை சுப கிரகங்கள் பார்த்து அல்லது லக்கனத்தில் சுபக் கிரகங்கள் இருந்து லக்கனாதிபதியும் வலிமை பெற்ற நிலையில் சுப தன்மை அடைந்திருக்கும்.


  கோடிக்கணக்கான பணத்தை சம்பாதிக்க கூடிய ஜாதக கட்டத்தில் தன ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய இரண்டாம் இடம் அதன் அதிபதி,

 பாக்கிய ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய ஒன்பதாம் இடம் அதன் அதிபதி மற்றும் லாப ஸ்தானம் என அழைக்க கூடிய 11-ம் இடம் அதன் அதிபதி இவை தவிர தன காரகன் குரு ஆகியவை எவ்வித பாவர் தொடர்பு இன்றி சுபரின் சேர்க்கை அல்லது பார்வையை பெற்றிருக்கும்.


 தன- பாக்கிய-லாப அதிபதிகள் ஒன்றுக்கொன்று பார்வை அல்லது சேர்க்கை அல்லது பரிவர்த்தனை போன்ற நிலைகளில் தொடர்பு பெற்று தன காரகன் குரு பகவான் உடைய பார்வை அல்லது சேர்க்கை நிலையினை பெற்று இருக்க வேண்டும்.


கோடிகளை சம்பாதிக்க கூடிய ஜாதகத்தில் மேற்கூறிய ஸ்தான அதிபதிகள் தசைகள் தொடர்ந்து வந்து அவை லக்கினத்துடன் தொடர்பு பெற்ற நிலையில் அமர்ந்து இருந்தால் எதிர்பாராத வகையில் அவர்கள் செய்யும் தொழில் மூலமாக மிக பெரிய அளவில் பணத்தை சாம்பதிக்கும் சூழ்நிலை உருவாகி விடும்.


இதற்கு தான் நமது முன்னோர்கள் "எல்லாவற்றிற்கும் கால நேரம் வேண்டும்" என்றார்கள்.


இதனையே நம் ஒளவை மூதாட்டி கூட "மடை. தலையில் ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு"என்றாள்.


வான் புகழ் கொண்ட வள்ளுவர் கூட 

"கொக்கக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து " என்றார். காலம் கைகூடும் வரும் வரை கொக்கு போல் பொறுமையாக காத்திருந்து இந்த உரிய தசை வர கூடிய காலங்களில் "காற்றுள்ள போது தூற்றிக் கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப பெரும் செல்வம் ஈட்டி விடவேண்டும்.


    என்னதான் மகா தனம் தரும் யோக அமைப்பு இருந்தாலும் லக்கனாதிபதி வலிமை பெறாத வகையிலும் ,

உரிய யோகத்தை தரக்கூடிய தசைநடக்காத காலங்களிலும் எவ்வளவு முயற்சி செய்தாலும் உங்களால் அந்த எல்லையை தொட்டுவிட முடியாது.


கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்த அவருடைய ஜாதகத்தை நீங்கள் எடுத்து ஆராய்ந்து பாருங்கள் அவருடைய ஜாதகத்தில் லக்கனாதிபதி லக்னத்தில் இருந்து ஆட்சி பெற்ற நிலையில் சுபருடைய தொடர்பு பெற்ற நிலையில் இருக்கும். தனம், பாக்கிய ,லாப ஸ்தானங்கள் அதன் அதிபதிகளும் வலிமை பெற்று தன காரகன் குரு பகவானுடைய பார்வை அல்லது சேர்க்கை நிலையினை அடைந்து தொடர்ந்து யோகம் தரக்கூடிய தசா புத்திகள் அவருடைய வாழ்வில் வரும் தொழில் செய்யக்கூடிய அமைப்பும் அவருடைய ஜாதகத்தில் பளிச்சென்று ஜொலிக்கும்.


கோடிக்கணக்கான பணத்தை சம்பாதிக்க பின் வரும் சில அமைப்புகள் உங்கள் ஜாதகத்தில் இருக்க வேண்டும்.


    1) தன- லாப அதிபதிகள் பாக்கிய ஸ்தானத்தில் சேர்ந்து நின்று குரு பகவானின் பார்வையை பெற்று இருக்கும்.


  2) தன- பாக்கிய அதிபதிகள் லாப ஸ்தானம் ஏறி குரு பகவான் சேர்க்கை அல்லது பார்வை நிலையை பெற்று இருக்க வேண்டும்.


3) பாக்கிய - லாப அதிபதிகள் தன ஸ்தானத்தில் நின்று குரு பகவான் தொடர்பை பெற்ற நிலையில் இருக்க வேண்டும்.


 4) தன- பாக்கிய - லாப அதிபதிகள் லக்கனத்தில் அல்லது லக்னாதிபதி உடன் தொடர்பு பெற்று குரு பகவான் பார்வையை பெற்ற நிலையில் இருக்க வேண்டும்.


5) தன- பாக்கிய -லாப அதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்று இயற்கை சுபக் கிரகங்களுடைய பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் தொடர்ந்து யோக தசைகள் நடப்பில் வந்தால் மிகப்பெரிய கோடீஸ்வர யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கும்.


நன்றி.


For Online appointment 


Cell & WhatsApp & Gpay

 097151 89647 


Another one cell : 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது 

 பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம் .




அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

   M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: