Tuesday, 4 February 2025

பலன் எடுப்பதில் சிக்கலைத் தரும் ராகு மற்றும் கேது பகவான்

 பலன் எடுப்பதில் சிக்கலைத் தரும் ராகு மற்றும் கேது பகவான்.




  செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை! 


  நிழல் கிரகங்கள் என்று அழைக்க கூடிய ராகு மற்றும் கேது பகவான் ஆகிய இரண்டு கிரகங்களுக்கும் பருப்பொருள் இல்லாத நிழல் கிரகங்கள் ஆகும்.


 இந்த இரண்டு கிரகங்களுக்கும் சொந்த வீடு கிடையாது என்பதால் இவற்றிற்கு என்று தனிப்பட்ட ஆதிபத்தியம் கிடையாது. ஆனால் அதே நேரத்தில் அதனுடைய காரக பலன்கள் என்பது மட்டும் உண்டு. தனிப்பட்ட ஆதிபத்தியம் இல்லை என்பதால் இதற்கு பலன்கள் பிடிப்பதிலும் மிகுந்த சிக்கலை ஜோதிடருக்கு உருவாக்கும்.


பெரும்பாலும் இந்த நிழல் கிரகங்கள் எந்த வீட்டில் இடம் பெறுகின்றதோ அந்த லக்கினத்திற்கு ஏற்றார் போல யோகர்/அவ யோகர் என்பதை முடிவு செய்ய முடியும்.


 மேஷம், விருச்சகம், தனுசு, மீனம் ,கடகம் மற்றும் சிம்மம் ஆகிய ஆறு லக்கனங்களில் பிறந்த குரு அணியை சேர்ந்தவர்களுக்கு குரு அணியை சேர்ந்த அதே வீட்டில் இடம்பெறும் போது மிகுந்த யோக தன்மை தரக்கூடிய கிரகமாக உருவெடுக்கிறது.


 ரிஷபம் ,துலாம், மிதுனம், கன்னி மகரம் மற்றும் கும்பம் ஆகிய ஆறு சுக்கிரன் அணியை சேர்ந்த லக்கனங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிர அணியைச் சேர்ந்த அதே வீட்டில் இடம்பெறும் போது மிகுந்த யோகம் தரக்கூடிய கிரகமாக வலம் வருகிறது.


 பொதுவாக ராகு பகவான் மற்றும் கேது பகவான் தரக்கூடிய பலனை கணிக்க முற்படும் போது கீழ் கண்ட சில விதிகளையும் கவனிக்க பட வேண்டியதாக உள்ளது.


    நிழல் கிரகங்கள் இருக்கும் வீட்டையே சொந்த வீடாக கருதுவதால் அவை இடம்பெற்றுள்ள வீட்டின் அதிபதியின் தன்மையைப் பொருத்தும் மற்றும் இந்த நிழல் கிரகங்கள் உடன் பார்வை மற்றும் சேர்க்கை பெறும் கிரகங்களுடைய நிலையைப் பொருத்தும் பலன் ஆனது அமைகிறது.


 ராகு பகவானுடன் சனி இணைந்து செவ்வாய் பார்வை செய்யும் பொழுது அல்லது ராகு பகவானுடன் செவ்வாய் இணைந்து சனி பார்வை செய்யக்கூடிய நிலைகளிலும் அதன் தசை நடக்கக்கூடிய காலங்களில் கடுமையான கஷ்டங்களை, நஷ்டங்களை ஜாதகர் அனுபவிக்கக்கூடும். 


ராகு பகவான் சில நேரங்களில் செவ்வாயினுடைய வீட்டில் அமர்ந்து சனியால் பார்க்கப்படும் பொழுது அல்லது ராகு பகவான் சனியினுடைய வீடுகளில் அமர்ந்து செவ்வாயினுடைய பார்வை பெற்ற நிலைகளிலும் அதன் தசை நடக்கக்கூடிய காலங்களில் கடுமையான கஷ்டங்களை, நஷ்டங்களை ஜாதகர் சந்திக்க கூடும். 


ராகு பகவான் உப ஜெய ஸ்தானமான 

 3, 6, 10 11 ஆம் இடத்தில் நின்று இயற்கை சுப கிரகமான குரு பகவானுடைய பார்வை பெற்ற நிலையில் தசை நடக்கக்கூடிய காலங்களில் மிகுந்த யோகங்களை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


கேது பகவான் சிம்மம், விருச்சகம் மற்றும் கும்ப வீடுகளில் நின்று அதன் தசை நடக்கக்கூடிய காலங்களில் மிகுந்த யோகங்களை கொடுக்கிறது .அதேபோல ராகு பகவான் மேஷம், ரிஷபம், மகரம் கடகம் மற்றும் கன்னி ஆகிய ஐந்து வீடுகளில் நின்று தசை நடத்தக்கூடிய காலங்களிலும் நல்ல யோகங்களை ஜாதகருக்கு கொடுக்கிறது.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & gpay 


097151 89647 


Another cell 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: