இரண்டாவது திருமணம் மற்றும் அடுத்த குழந்தை எப்பொழுது?
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவருடைய ஜாதகத்துல திருமணம் பற்றிய விவரங்களை அறிவதற்கு உரிய ஸ்தானங்களையும் மற்றும் அதற்குரிய காரக கிரகங்களையும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு தெரிந்து கொண்ட பிறகு உங்கள் வாழ்வில் நடக்கக்கூடிய நடக்கக்கூடிய தசா புத்தி மற்றும் கோச்சார பலன்களுக்கு ஏற்றவாறு திருமண பந்தத்தை முடிவு செய்ய வேண்டும். திருமண பொருத்தம் பார்க்கப்படும் பொழுது ராசி லக்னம் ஆகிய இரண்டு வழிகளிலும் கீழே குறிப்பிட்ட திருமண ஸ்தானங்களை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
திருமண ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய ஸ்தானங்களாவன ;-
1) லக்கனம் என்ற ஒன்றாம் இடம் மற்றும் அதன் அதிபதியாகிய லக்கனாதிபதி.
2) குடும்ப ஸ்தானம் என்ற இரண்டாம் இடம் மற்றும் அதன். அதிபதியாகிய குடும்பாதிபதி
3) களத்திர ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய ஏழாம் இடம் மற்றும் அதன் அதிபதியாகிய களத்திர ஸ்தானாதிபதி.
4) மாங்கல்ய ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய எட்டாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானாதிபதி.
களத்திர காரகன் என்று அழைக்கக்கூடிய சுக்கிர பகவான் ஆவார் .
புத்திர காரகன் என்று அழைக்கக்கூடிய குரு பகவான் ஆவார்.
ஒரு ஜாதகத்தில் குழந்தை பாக்கியம் பற்றி அறிந்து கொள்ள ஐந்தாம் இடம் அதன் அதிபதியாகிய புத்திர ஸ்தான அதிபதி மற்றும் புத்திர காரகன் குருபகவான் ஆகிய மூன்றையும் ராசி மற்றும் லக்னத்திற்கு ஆகிய இரண்டு வகையிலும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
ஒரு சிலருக்கு முதல் மனைவி விவாகரத்தாகி இரண்டாவது திருமணம் நடப்பதற்குரிய காரண காரியங்களை ஆய்வு செய்து பார்க்கப்படும் பொழுது ஒருவர் ஜாதகத்தில் திருமண ஸ்தானமானங்களும் அதன் அதிபதிகளும் மற்றும் காரக கிரகங்களும் பாவ கிரகமான சனி, செவ்வாய், ராகு ,தேய்பிறைச்சந்திரன் போன்றவருடைய பார்வை அல்லது சேர்க்கை முறையை பெற்று அவயோக தசை அல்லது ஆறு அல்லது எட்டுக்கு உடைய தசைகள் மற்றும் கோச்சார பலன்கள் ஏழரை அஷ்டம சனி போன்ற நடப்பில் இருக்கக்கூடிய காலங்களில் அதிலும் குறிப்பாக ஒரு ஜாதகத்தை ஏழாம் அதிபதி கெட்டுப் போய் லாபஸ்தானம் என்று அழைக்கக்கூடிய பதினொன்றாம் இட அதிபதி வலுத்து இருக்கக்கூடிய ஒரு ஜாதகத்தில் மறு திருமண அமைப்பை தந்து விடுகிறது.
லக்கினத்திற்கு ஏழாம் இடத்தில் சனி, செவ்வாய் மற்றும் ராகு போன்ற பாவக்கிரகங்கள் தொடவை பெறக்கூடிய ஜாதக அமைப்பிலும் மறு திருமண அமைப்பை தந்துவிடுகிறது.
பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் இடம் மட்டும் கெட்டு இருந்தால் அதற்குரிய பரிகார பூஜைகளை செய்து மறு திருமணம் செய்ய வேண்டும்.
பெரும்பாலான திருமணங்கள் தோல்வியில் முடிந்து மறு திருமணத்தை தருவதற்கு காரணம் இருவரது ஜாதக கட்டங்களை ஆய்வு செய்து பார்க்காமல் நட்சத்திர பொருத்தங்களை மட்டும் அதாவது 10 பொருத்தங்களை மட்டும் வைத்துக் கொண்டு திருமணம் செய்வதால் சில நேரங்களில் முதல் திருமணமானது தோல்வியில் முடிந்து விடுவது உண்டு.
எனவே இரண்டாவது திருமணம் செய்யும் பொழுதாவது திருமணம் செய்து கொள்ள இருக்கும் ஜாதகர் இருவருடைய ஜாதகங்களிலும் லக்கனாதிபதி மற்றும் ஏனைய பிற அமைப்புகளை முழுவதும் ஆய்வு செய்து பார்த்து நடக்கும் தசா புத்திகளோடு ஒப்பிட்டு பார்க்கப்பட வேண்டும்.
திருமணத்திற்கு பிறகு வரக்கூடிய தசாபுத்திகள் அவயோக திசைகளாவோ அல்லது ஆறு, எட்டுக்குடைய தசைகளாகவோ இருக்கக்கூடிய நேரத்திலும் அவர்களை திருமண பந்தத்தில் பொருத்தம் போட்டு விடக்கூடாது.
ஒருவர் ஜாதகத்தில் புத்திர தோஷம் கடுமையாக இருந்து புத்திர பாக்கியம் காலதாமதம் ஆகும் என்று இருந்தால் அவர்களுக்கு திருமணமும் காலதாமதமாக தான் ஆகிக் கொண்டிருக்கும் . எனவே இதை முதலில் ஆய்ந்து அறிய வேண்டும்.
உங்களுடைய ஜாதகத்தில் குழந்தை பாக்கியம் எப்பொழுது உருவாகும் என கண்டறிந்தால் அவர்களுக்கு திருமணம் எப்பொழுது நடக்கும் என்ற விஷயத்தையும் கண்டுபிடிக்க முடியும்.
சிலர் இதுபோன்று ஆய்வு செய்து பார்க்காமல் வெறும் தசாவித பத்து பொருத்தங்களை மட்டும் வைத்துக் கொண்டு திருமணம் செய்யும் பொழுது தான் அவர்கள் வாழ்வில் கணவன் மனைவிகளுக்கு இடையே ஒரு விதமான கசப்புணர்வை வளர்த்து ஒரே வீட்டில் வாழக்கூடிய நிலையையோ அல்லது பிரிந்து வாழக்கூடிய அல்லது விவாகரத்து தரக்கூடிய நிலையையோ உருவாக்கி விடுகிறது.
எனவே ஒரு ஜாதகத்தில் ஏழாம் இடம், அதன் அதிபதி மற்றும் சுக்கிர பகவான் இதை போலவே புத்திர ஸ்தானமாக ஐந்தாமிடம் , ஐந்தாமிட அதிபதி மற்றும் குரு பகவான் ஆகியவற்றை தெளிவாக நடக்கக்கூடிய தசா புத்திகளோடு இணைத்து பலன அறிய வேண்டும். மேற்கண்ட இந்த இரண்டு நிலைகளிலும் ஆய்வு செய்து பார்த்து திருமணம் செய்யக்கூடிய உகந்த காலம் வந்துவிட்டதா ? என்பதை ஆய்வு செய்து திருமண பந்தத்தில் ஈடுபட வைக்க வேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் தம்பதிகள் இருவருக்கும் தெளிவான பொருத்தம் இல்லாத சூழலில் அவர்கள் இருவருக்கும் பரிகாரம் செய்து திருமணம் செய்து வைக்கலாம் என்ற சோதிடருடைய கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. முழுமையான பொருத்தம் இல்லாத பட்சத்தில் அவர்களுக்கிடையே திருமணம் செய்து வைக்காமல் இருப்பதே சாலச் சிறந்ததாகும்.
நன்றி.
For Online appointment
Cell & WhatsApp & gpay
097151 89647
Another cell
7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.Sc,M.A,BEd,ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment