எந்தத் தொழில் செய்தால் லாபம் வரும்?
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்பார்கள். இன்றைய காலகட்டத்தில் லெளகீக வாழ்க்கையில் ஈடுபடக்கூடிய மனிதனுக்கு பணம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். இதைத்தான் வான்புகழ் கொண்ட வள்ளுவர் கூட
"அருளளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு " என்றார்.
ஒரு மனிதன் பொருள் படைத்து காணப்பட்டால் தான் இந்த உலகத்தில் வாழ இயலும்..
"படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா ,
பொருள் படைத்தவன் கருத்தானால்
சபை மீறுமா"
"பணம் பத்தும் செய்யும் "-என்பார்கள்.
ஒரு காலகட்டத்தில் சம்பாதித்தல் என்பது புருஷ லட்சணமாக மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஆணுக்கு நிகராக பெண்ணும் சரி நிகர் சமமாக தொழில் செய்து பொருளீட்டலில் ஈடுபடுகிறார்கள்.
ஒருவர் தொழில் செய்ய வேண்டுமானால் அவரோட ஜாதகத்தில் தொழிற் ஸ்தானம் என்று அழைக்க கூடிய பத்தாம் இடத்தை மட்டும் வைத்துக்கொண்டு ( அதாவது பத்தாமிடம் மற்ற அதிபதியை ) தொழிலை தேர்ந்தெடுத்தால் அது தவறாக போய்விடுகிறது.
உங்கள் சாதகத்தில் பத்தாம் இடம் தொழில் ஸ்தானமாக இருந்தாலும் அதன் அதிபதி தொழிற்ஸ்தானாதிபதியாக இருந்தாலும் பத்தாமிட அதிபதியை தொழில் காரகிரகமாக எடுத்துக் கொண்டு அதனுடைய காரக தொழிலை செய்யும் பொழுது நீங்கள் கட்டாயம் தோல்வியை சந்தித்து விடுவீர்கள்.
உங்கள் ஜாதகத்தில் நீங்கள் எந்த தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதற்கு முதலில் லக்கனாதிபதியுடைய வலிமையை கணக்கிட்டு பிறகு உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் அதிகப்படியான சுபத்துவத்தை பெற்றுள்ளது என்பதை கண்டறிய வேண்டும். சுபத்துவமான ஒரு கிரகத்தை கண்டறிவதற்கு தான் உங்களுக்கு நீண்ட நெடிய அனுபவ அறிவு தேவைப்படுகிறது. ஒரு சில நேரங்களில் நீங்கள் தவறாக ஒரு கிரகத்தை தேர்ந்தெடுத்து விட்டு அதற்கேற்றார்கள் தொழிலை செய்தால் நிச்சயம் நீங்கள் தோல்வியில் முடிந்து விடுவீர்கள்.
அவ்வாறு சுபத்துவமான ஒரு கிரகத்தை கண்டறிந்த பின் அந்த கிரகம் ராசி மற்றும் லக்கினத்திற்கு தனஸ்தானமான இரண்டாம் இடம் மற்றும் தொழில் ஸ்தானமான 10-ஆம் இடத்துடன் தொடர்பை கொண்டு இருக்க வேண்டும் பிறகு அந்த கிரகத்துக்குரிய யோக தசா புத்திகள் நடப்பில் இருக்க வேண்டும்.
இந்த சுபத் தன்மை படைத்த ஒரு கிரகத்தை தேர்வு செய்வதற்கு உங்களுக்கு கீழ்கண்ட அறிவு தேவைப்படுகிறது.
அதாவது எந்த ஒரு கிரகத்தையும் பாவ கிரகமான சனி,, செவ்வாய், ராகு, தேய்பிறை சந்திரன் மற்றும் பாவியோடு சேர்ந்த புதன் போன்றவை பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டுவிட கூடாது.
எந்த ஒரு கிரகத்தை வளர்பிறைச் சந்திரன் , சுக்கிரன், குரு பகவான் மற்றும் பாவி உடன் சேராமல் உள்ள புதன் பகவான் போன்ற கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டு உள்ள ஒரு கிரகமே அதிக சுபத் தன்மை படைத்த கிரகமாகும்.
எந்த ஒரு கிரகத்தை குருபகவான் மற்றும் வளர்பிறை சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டு இருக்கக்கூடிய நிலையில் அந்த கிரகம் அதிக சுபத்தன்மை படைத்த கிரகமாக கருதப்படுகிறது.
இவ்வாறு டபுள் டெபாசிட்டர் முறையில் அதிக சுபத்துவம் பெற்ற ஒரு கிரகம் அவை தொழிற் ஸ்தானமான 10-ஆம் இடத்துடன் தொடர்பு கொண்டு உள்ள நிலையில் மட்டுமே அந்த கிரகத்துக்குரிய காரக தொழிலை சாதகருக்கு கொடுக்கும்.
சில நேரங்களில் ஒரு கிரகம் கம் அதிக சுபத் தன்மையை பெற்று தொழில் ஸ்தானத்தோடு தொடர்பு கொண்டு இருந்தாலும் அதற்கு உரிய உகந்த தச அமைப்பு வராத கால கட்டங்களில் அந்த தொழிலை தேர்வு செய்து செய்யும் பொழுது சில நேரங்களில் அந்த குறிப்பிட்ட காலகட்டம் வரை அந்த தொழில் மூலமாக பெரிய அளவுக்கு பொருளாதாரத்தை ஈட்ட முடியாமல் தோல்வி அடைய வைத்து நஷ்டத்தை சந்தித்து பிறகு உரிய காலம் வரும் பொழுது அந்த தொழிலில் இருந்து பெருமளவு பணத்தை சம்பாதிக்க கூடிய வாய்ப்பை பெறுவார்கள்
சில நேரங்களில் அவயோக தசை நடக்கக்கூடிய காலகட்டங்களில் உங்கள் ஜாதகப்படி முற்றிலும். தொடர்பு இல்லாத தவறான ஒரு தொழிலை தேர்வு செய்து அதன் மூலமாகவும் பெரிய நஷ்டத்திற்கு உள்ளாவார்கள்.
என்னிடம் பலன் பார்க்க வருபவர்களின் ஜாதகத்தை பார்க்கும் போது அவர்கள் சரியான தொழிலை தேர்ந்து எடுத்தும் தோல்வியை தழுவி விட காரணம் என்னவாக இருக்கும் என்று ஆய்வு செய்து பார்க்கும் போது மேற்கண்ட உண்மை புலப்படும்.
பிறகு அந்த அவயோகத்தை தரும் கால கட்டம் வரை அந்த தொழிலில் பெரிய அளவுக்கு முதலீடு செய்யாமல் உங்களுக்கு உரிய உகந்த தசை வர கூடிய அந்த குறிப்பிட்ட தேதியை கூறி அதற்குப் பிறகு அதே தொழில் நீங்கள் பெரும் செல்வம் ஈட்டுவீர்கள் என்று சொல்லி அனுப்பி வைப்பேன் அதேபோல சில வருடங்கள் கழித்து பெரிய அளவுக்கு பொருளீட்டி சம்பாதித்து நான் குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் பெரு பணக்காரராக ஆகி அதன் பிறகு வரக்கூடிய பல நபரை நான் பார்த்திருக்கிறேன்.
ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொழிலில் பெரிய அளவுக்கு முதலீடு செய்து கோடிக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான பணத்தை ஈட்டுவதற்கு அவருடைய ஜாதகத்தில் லக்கனாதிபதி வலிமையாக இருந்து அதிக சுபத்தன்மையான கிரகம் ராசி மற்றும் லக்னத்திற்கு இரண்டு பத்தாம் இடங்கள் உடன் தொடர்பு கொண்டு உகந்த யோக தசை நடப்பில் உள்ள காலகட்டத்தில் பெரும் செல்வந்தராக ஆகி விடுவார்கள்.. அவ்வாறு செல்வந்தரான பிறகு என்னை வந்து சந்திக்கும் போது அவர்கள் சொல்லும் போது தான் எல்லாம் வல்ல இறைவனுக்கே நன்றி கூற தோன்றும்
சில நேரங்களில் ஒரு ஜாதகத்தில் அதிக சுபத்ன்மையான கிரகம் இருந்து அதற்குரிய யோக தசைகளும் நடப்பில் வரக்கூடிய காலகட்டத்தில் சாதகரிடம் பெரிய அளவுக்கு அனுபவ ஞானம் இல்லை என்றாலும் அதிர்ஷ்டவசத்தால் மிகப்பெரிய செல்வந்தராக மாறி விடுவார்கள்.
ஒரு சிலர் ஜாதகத்தில் அதிக சுபத்ன்மையான கிரகம் இரண்டு இருந்து அந்த இரண்டில் எந்த கிரகத்துக்குரிய தொழிலை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்யும் போது அந்த இரண்டு கிரகத்தில் எந்த கிரகம் தொழிற் ஸ்தானமான பத்தாம் இடத்தோடு தொடர்பு கொண்டு உள்ளது என்பதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும் அவ்வாறு ஆய்வு செய்து பார்க்கும் போது எந்த கிரகம் தொடர்பு கொண்டுள்ளதோ அதற்குரிய தொழிலை செய்தால் மட்டும் போதும் . தொழிலில் முன்னேற்றம் அடைந்து விட முடியும்.
சில நேரங்களில் அவ்வாறு தொழிற் ஸ்தானத்தோடு தொடர்பு வராத கிரகத்தை தேர்வு செய்யும் பொழுது அவ்வாறு செய்யும் தொழிலும் தோல்வியில் முடிந்து விடும்.
ஒரு சிலர் இரண்டு அல்லது மூன்று தொழில் செய்வதற்கு உரிய காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது அவரது ஜாதகத்தில் இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் அதிக சுபத்தன்மையோடு தொழில் ஸ்தானத்தோடு மற்றும் தொடர்பு கொண்டுள்ள நிலையில் இருக்கும். நடப்பு தசையும் லக்கின யோக தசையாக தொடர்ந்து வரும்.
எந்த கிரகத்திற்கு எந்த தொழிலை மேற்கொள்ளலாம் என்று தெரிந்து கொண்டால் மட்டுமே சரியான தொழிலை தேர்வு செய்ய முடியும். அல்லது சரியான படிப்பை தேர்வு செய்து படித்து அந்தத் துறையில் சிறந்து விளங்க முடியும்.
உதாரணமாக ஆசிரியராக வேண்டுதலில் உங்கள் ஜாதகத்தில் குரு பகவான் அதிக சுபத் தன்மையுடன் ராகி மற்றும் லக்னத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
கம்யூட்டர் துறையில் அல்லது இணைய உலகில் அல்லது கணித துறையில் மிகப்பெரிய சாதனை புரிய வேண்டுமெனில் உங்கள் ஜாதகத்தில் புதன் பகவான் வளர்பிறை சந்திர கேந்திரத்தில் நின்று தொழிற் ஸ்தானமான பத்தாம் இடத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும். ஜோதிடர், இசையமைப்பாளர் ,ஆடிட்டர், டைரக்டர் கதாசிரியர் ,பாடலாசிரியர் ,கவிஞர் மேடை ஏறி பேசக்கூடிய பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் விஞ்ஞானி போன்ற அனைவருக்கும் மேற்கண்ட அமைப்பே ஜாதகத்தில் இருக்க வேண்டும்.
உங்கள் ஜாதகத்தில் சனி பகவான் அதிக சுபத் தன்மையுடன் ராசி மற்றும் லக்கினத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடங்களுடன் தொடர்பு கொள்ள கூடிய நிலையில் வழக்கறிஞராக தொழில் பிரிவார். அதே நேரத்தில் குரு பகவானும் அதிக சுபத்துவமாக இருந்தார் நீதிபதியாக திகழ்வார்.
உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பகவான் அதிக சுப தன்மையை பெற்று ராசி மற்றும் லக்னத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் MBBS படிப்பார். சுபத்துவ படிநிலை சற்று குறைய எம்பிபிஎஸ் க்கு அடுத்த நிலையான வெட்னரி டாக்டர் , சித்தா, கண் ,காது ,மூக்கு மற்றும் தொண்டை நிபுணர், பார்மசி போன்ற படிப்பை படிப்பார் இன்னும் அடுத்த படிநிலை கீழ இறங்க போலீஸ் ,ராணுவம் ,அக்ரி ,ரியல் எஸ்டேட் மற்றும் சிவில் இன்ஜினியர் போன்ற படிப்புகளை படிக்க வைப்பார்.
தொடரும்......
For online appointment
Cell & WhatsApp & Gpay
097151 89647
Another cell: 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment