Tuesday, 4 February 2025

நன்கு படித்தும் உயரிய பதவிகளில் அமர முடியாமல் போனதற்கான ஜோதிட அமைப்புக்கள்.

 நன்கு படித்தும் உயரிய பதவிகளில் அமர முடியாமல் போனதற்கான ஜோதிட அமைப்புக்கள்.




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒரு சில ஜாதகத்தில் ஒரு குறிப்பிட்ட துறையில் சிறப்பாக படித்திருந்தும் அந்த துறைக்குரிய உயரிய பதவிகளின் அமர முடியாமல் போவதற்கான காரண காரியத்தை இந்த பதிவில் அலசி ஆராய்ந்து பார்ப்போம். 


  சில நேரங்களில் இவரை விட படிக்கக் கூடிய காலங்களில் மிகக்குறைவான கற்றல் திறனோடு படித்திருக்கக்கூடிய மாணவச் செல்வங்கள் சமகாலத்தில் தம்மை விட உயரிய பதவிகளில் அமர்ந்து இருக்க இவர் அநதே துறையில் அவரை விட ஏறக்குறைய மிகக் குறைவான பணியில் அமர்வதற்கான காரண காரியங்களையும் இதே பதிவில் அலசி ஆராய்ந்து பார்ப்போம்.


 இது போன்ற காரணத்திற்கான உதாரண விதிமுறைகளை உங்களோடு விளக்குவதில் ஜோதிடராகிய நான் மிக்க பெருமை கொள்கிறேன்.


உன்னுடைய ஜாதகத்தில் கல்விக்குரிய ஸ்தானமான இரண்டாம் இடம் நான்காம் இடம் ஐந்தாமிடம் மற்றும் ஒன்பதாம் இடமாகும். 


இரண்டாம் இடம் வாக்கு ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய ஆரம்பக் கல்வி ஸ்தானம் ஆகும் .நான்காம் இடம் உயர்நிலைக் கல்வியை குறிக்கும். இது ஒருவர் கல்வியால் பெறக்கூடிய சுகத்தை சுட்டிக் காட்டக் கூடிய ஸ்தானம் ஆகும். ஐந்தாம் இடம் ஒரு மனிதனுடைய புத்தி ஸ்தானம் ஆகும் ஒன்பதாம் இடம் மேல் நிலைக் கல்வியை குறிக்கக்கூடிய இடமாகும். ஒருவர் தன் வாழ்வில் பெறக்கூடிய அனைத்து பாக்கியங்களையும் குறிப்பிடக்கூடிய ஸ்தானம் என்பதால் ஒன்பதாம் இடத்தை பாக்கிய தானம் என்றும் பிறருக்கு உதவி செய்யக்கூடிய கல்வி கேள்வி சிறந்து விளங்கக்கூடிய ஸ்தானம் என்பதால் இதனை தர்ம ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.


    கல்விக்கு முக்கிய காரக கிரகமாக விளங்குவது குரு பகவானும், புதன் பகவானும் ஆகும். கற்ற கல்வியால் தரக்கூடிய அறிவை குரு பகவானும்,பட்டறிவால் பெறக்கூடிய ஞானத்தை புதன் பகவானும் மனிதனுக்கு தருகிறது. அதாவது குரு பகவான் அறிவையும் மற்றும் புதன் பகவான் படைப்பாற்றலையும் தருகிறது.


  உங்களுடைய ஜாதகத்தில் வாக்கு இரண்டாம் இடத்தில் எந்த விதமான பாவ கிரகங்கள் இடம் பெறாமல் அந்த வீட்டு அதிபதி இயற்கை சுப கிரகங்கள் உடைய தொடர்பை பெற்ற நிலையில் இரண்டாம் இடத்தை குரு பார்க்க அவர் இளமையிலேயே கல்வி கேள்விகளில் வல்லவராக திகழ்வார்.


   இதே போல நான்காம் இடத்தில் எவ்வித பாவ கிரகங்கள் இடம் பெறாமல் அல்லது பார்வை செய்யாமல் சுக அதிபதியான நான்காம் இடம் அதிபதி கேந்திர கோணங்களில் உச்சம் ,ஆட்சி போன்ற நிலைக்கு வலுப்பெற்று இயற்கை சுப கிரவங்களுடைய பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் நான்காம் இடத்தோடு குறிப்பாக புதன் பகவான் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் நல்ல நுண்ணறிவு படைத்த சாதகராக அவர் வாழ்வில் திகழ்வார்.


    பொதுவாக நான்காம் இடத்தில் சனி, செவ்வாய், ராகு ,கேது ,தேய்பிறை சந்திரன் மற்றும் பாலி உடன் சேர்ந்த புதன் போன்ற பாவ கிரகங்கள் இடம் பெறாமல் அல்லது தொடர்பு வராமல் நான்காம் இடத்தில் இயற்கை சுப கிரகங்களான குரு பகவான் , வளர்பிறை சந்திரன் , தனித்த புதன் மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்கள் தொடர்பு பெற்ற நிலையில் இருந்து அவற்றை சுப கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் உயர்கல்வியில் சிறந்து விளங்க கூடிய மாணவனாக விளங்குவார்.


   ஒருவர் ஜாதகத்தில் தனது புத்தியால் உலகை வெல்ல அதாவது அறிவால் அகிலத்தை ஆள ஒருவர் ஜாதகத்தில் புத்தி ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் இடம் பெறாமல் , ஐந்தாம் இடத்தை சுப கிரகங்கள் பார்வை செய்து அந்த வீட்டு அதிபதியும் சுப கிரக தொடர்பு பெற்ற நிலையில் இருக்க வேண்டும்.


    ஒருவர் எல்லா பாக்கியங்களையும் அடைய அவருடைய ஜாதகத்தில் ஒன்பதாம் இடம் அதன் அதிபதி பலம் பெற்று சுப கிரக தொடர்பை பெற்று இருக்க வேண்டும். அவ்வாறு பெற்று இருந்தால் கல்வியால் அடையக்கூடிய அனைத்து பாக்கியங்களையும் அனுபவிக்க கூடிய யோகத்தை அந்த ஜாதகர் பெறுவார். ஒன்பதாம் இடம் மிகவும் வலுப்பெற்ற நிலையில் மிக உயரிய ஆராய்ச்சிக்குரிய படிப்புகளை படித்து அந்த துறையில் வித்தகனாக திகழ்வார். 


  மேலே குறிப்பிட்ட இந்த ஸ்தானங்களும் அந்த அதிபதி களையும் தவிர ஒருவர் ஜாதகத்தில் கல்விக்கு காரக கிரகமாக விளங்கும் குரு பகவான் மற்றும் புதன் பகவான் எவ்வித பாவ கிரகங்களுடைய பார்வை அல்லது சேர்க்கை பெறாமல் கேந்திர கோணங்களில் உச்சம் ,ஆட்சி பெற்ற நிலையில் வலுப்பெற்று மேற்கண்ட 2,4,5,9 ஆம் இடங்களில் தொடர்பு பெற்று இருக்கும் பொழுது அவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க கூடிய ஞானத்தை பெற்றிருப்பார்கள்.


சில நேரங்களில் படிக்கக் கூடிய காலங்களில் ஒருவருக்கு நல்ல தசா அமைப்புகளும் கோச்சார பலன்களும் ஒத்துழைத்து அவர் உயரிய படிப்பை படித்திருந்தாலும் அந்தக் கற்ற கல்விக்குரிய பணியை அமர்வதற்குரிய நேரங்களில் அல்லது உயரிய பணிகளில் அமர நடத்தப்படக்கூடிய தேர்வுகளை எழுதக்கூடிய வயதில் உகந்த தசை அமைப்புகளும் மற்றும் கோச்சார பலன்களும் அமையாமல் அவ யோக தசைகள் மற்றும் கோச்சர் அடிப்படையில் ஏழரை அஷ்டம சனி போன்றவை நடப்பில் இருக்கக்கூடிய நிலையில் கற்ற கல்விக்கு நிகரான உயரிய பதவியில் அவரால் அமைய முடியாமல் அமர முடியாமல் போய்விடுகிறது.


சிலருக்கு படிக்கக்கூடிய காலங்களிலும் மற்றும் உயரிய பதவிகளில் அமர நல்ல சந்தர்ப்பம் உள்ள காலங்களிலும் நல்ல தச அமைப்புகளும் கோச்சார பலன்களும் அமைந்து லக்கனாதிபதியும் நன்கு வலுப்பெற்ற நிலையில் இள வயதிலேயே தான் படித்த படிப்புக்கு ஏற்ற உயரிய பதவிகளில் அமரக்கூடிய அதிர்ஷ்டத்தை பெற்று விடுகிறார்கள்.


 ஒருவர் எந்தத் துறையை தேர்ந்தெடுத்து சாதனை செய்வார் என்பது அவருடைய ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத் தன்மை படைத்து ராசி மற்றும் லக்கினத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடங்களோடு தொடர்பு பெற்ற நிலையில் அந்த கிரகம் தொடர்புடைய எண்ணங்களும், செயல்களும் அந்த மனிதனுக்கு உருவாகி அந்த கிரக தொடர்பு பெற்ற துறையில் அவர் படிப்பில் அதிக ஆர்வத்தை காட்டுவார்.


 ஒரு சிலர் படிக்கக்கூடிய காலங்களில் நல்ல தச அமைப்புகள் வந்து பிறகு அவருக்கு வேலை வாங்கக்கூடிய காலகட்டத்தில் அவயோக தசைகளான ஆறாம் இடம் மற்றும் எட்டாம் இட அதிபதி தசை நடக்கும் பொழுது அவரால் அந்த உயரிய நிலையை அடைய முடியாமல் போய்விடுகிறார்.


     உதாரணமாக மீன லக்னம் மற்றும் மீன ராசியில் பிறந்த ஒருவருக்கு குறிப்பாக ஒரு 20 வயதில் சுக்கிரன் மற்றும் சூரிய தசைகள் தொடர்ந்து வரக்கூடிய நிலையில் அந்த இரண்டு திசைகளும் ஆறு அல்லது ஆறு மற்றும் எட்டாம் அதிபதியுடைய தசை என்பதால் அந்த 26 ஆண்டுகளும் அதாவது அவருடைய 46 வயது வரை அந்த உயரிய பதவியில் அவரால் அமர முடியாமல் போய்விடுகிறது அவரால் அந்த உயரிய எல்லையை அவர் நினைத்த எல்லையை அடைய இயலாமல் அல்லது அதை குறைவான அடிப்படை பதவிகளில் அமர்ந்து விடும் சந்தர்ப்பம் வந்து விடுகிறது.


    எல்லாம் விதி வசம் ஆனால் 

"இந்த நிலையும் மாறும் "என்ற மனநிலையோடு அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் அவர் நடை போட்டால் அதற்குப் பிறகு நல்ல தசை அமைப்பு வரும் பொழுது அந்த கற்ற மற்றும் பெற்ற ஞானத்தால் அவரால் தன் வாழ்க்கை நிலைமையை உயர்த்திக் கொள்ள முடியும்.


நன்றி.


For Online appointment 


Cell & WhatsApp & gpay no 


 097151 89647 


Another cell no 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: