ராகு பகவான் தரும் பலன்கள்.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவர் ஜாதகத்தில் உள்ள ராகு பகவான் ஆனவர் கேது பகவானை விட கூடுதலாக பாவ தன்மை படைத்த கிரகம் ஆகும்.
ராகு பகவான் உடன் சனி மற்றும் செவ்வாய் சேர்வதால் அல்லது பார்வை செய்வதால் கடுமையான கெட்ட பலனை ஜாதகருக்கு கொடுக்கும்.
ராகு பகவான் உடன் சனி சேர்க்கை பெற்று செவ்வாய் பார்வை செய்தாலோ அல்லது ராகு பகவான் உடன் செவ்வாய் சேர்க்கை பெற்று சனி பார்வை செய்தாலோ கடுமையான கெட்ட பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.
இது போன்ற அமைப்பு பெற்று சுபர் பார்வை பெற்றால் பலனில் கொஞ்சம் மாற்றம் ஏற்படும்.முதலில் கடுமையான கெடுதலை தந்தாலும் முடிவாக ஒரளவு நல்ல பலனை தரக்கூடிய வகையில் அமைகிறது.
வேறு ஏதேனும் சுபர் பார்வை அல்லது சேர்க்கை பெறாத நிலையில் கடுமையான கஷ்டங்களை குறிப்பிட்ட கிரகங்களின் தசை காலங்களில் ஜாதகருக்கு கொடுக்கும்.
சில நேரங்களில் ராகு பகவான் சனியின் வீடுகளான மகரம் மற்றும் கும்பம் வீட்டில் நின்று செவ்வாய் பகவானுடைய பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் தசை காலங்களில் கடுமையான கஷ்டங்களை கொடுக்கிறது.
ராகு பகவான் செவ்வாயின் வீடுகளான மேஷம் மற்றும் விருச்சகம் ஆகிய இரண்டு வீடுகளில் ராகு பகவான் அமர்ந்து சனியால் பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையை பெற்றால் அதன் தசை காலங்களில் மிகுந்த கஷ்டங்களை ஜாதகருக்கு கொடுக்கும்.
ராகு பகவான் தேய்பிறை சந்திரன் நெருக்கமாக இணைந்த நிலையில் மனநிலையில் சற்று பாதிப்பை கொடுக்கும் .மனதளவில் திருப்தி அற்ற நிலையை தரும். தாய் வழி உறவுகளில் பாதிப்பு ஏற்படும்.
சூரிய பகவானுடன் ராகு நெருக்கமாக இணைந்த நிலையில் தந்தை வழி உறவுகளில் பாதிப்பை உண்டாக்கும். ஒன்பதாம் இடம் அதன் அதிபதியை பொறுத்து பலனில் மாற்றம் ஏற்படும்.
செவ்வாயுடன் ராகு இணைந்த நிலையில் சற்று கோழைத்தனம் காணப்படும். மிகுந்த காம எண்ணம் உடையவராக இருப்பார்.
தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய சுக்கிரனுடன் ராகு இணையும் பொழுது களத்திர தடை கொடுக்கும். மாறுபட்ட காம எண்ணங்களை கொடுக்கும் அதிலும் குறிப்பாக நீசம் பெற்ற சுக்கிரன் உடன் இணையும் பொழுது விதவைப் பெண் தொடர்பு உண்டாகும் வேறு வகையில் சுபத்துவம் அல்லது சுபருடைய பார்வை பலனில் மாற்றல் ஏற்படும்.
ராகு பகவான் பொதுவாக மேஷம், ரிஷபம், மிதுனம் கடகம் சிம்மம் ஆகிய இந்தப் வீடுகளில் நின்று அந்த வீடுகள் உப ஜெய ஸ்தானமான 3,6,10,11,12 ஆம் வீடுகளாக இருந்து இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய சுப கரங்களுடைய பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் ராகு தசை வரக்கூடிய காலகட்டத்தில் மிகப்பெரிய யோகங்களை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கும்.
நன்றி.
For online appointment
Cell & WhatsApp & gpay no
097151 89647
Another cell no 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment