மகிழ்ச்சியான மண வாழ்க்கை அமைய...
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவர் ஜாதகத்தில் தனக்கு வரக்கூடிய மனைவி அல்லது கணவன் எப்படிப்பட்டவ(ர்)ள் என்பதை தெரிந்து கொள்ள உங்களுடைய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் என்று அழைக்க கூடிய ஏழாம் இடம் அதன் அதிபதி மற்றும் களத்திர காரகர் சுக்கிரன் ஆகிய மூன்றையும் பொறுத்து தான் உங்கள் மணவாழ்க்கை எப்படிப்பட்ட மணவாழ்க்கை என்பதை எளிதில் புரிந்து கொள்ள இயலும்.
மகிழ்ச்சி நிறைந்த மணவாழ்க்கை அமைய உங்கள் ஜாதகத்தில் ஏழாம் இடத்தை பாவக் கிரகங்களான சனி, செவ்வாய் தேய்பிறைச்சந்திரன் பார்வை செய்யாமலும் அல்லது ஏழாம் இடத்துடன் அல்லது அதன் அதிபதியுடன் சனி, செவ்வாய், தேய்பிறை சந்திரன் ,ராகு மற்றும் கேது போன்ற கிரகங்கள் சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டு இருக்கக் கூடாது.
ஏழாமிடத்தில் இயற்கை சுப கிரகமான குரு வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் பார்வை அல்லது
சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டு ஏழாம் இடத்து அதிபதியும் கேந்திர கோணங்களில் நின்று இயற்கை சுப கிரக தொடர்பை பெற்றிருக்க வேண்டும்.
தாம்பத்திய சுக்கத்தை தரக்கூடிய ஏழாம் இடத்துக்கு காரக கிரமான சுக்கிர பகவான் இருக்கும் இட,ம் பார்வை அல்லது சேர்க்கை சேர்க்க முறையில் சுப கிரக தொடர்பு கொண்ட கிரகங்கள் பொறுத்து இல்லற சுகம் அமைகிறது.
ஏழாமிடத்தின் அதிபதியும் மற்றும் சுக்கிர பகவானும் கேந்திர கோணங்களில் நின்று உச்சம் ,ஆட்சி போன்ற நிலைகளில் வலுப்பெற்று இயற்கை சுபக் கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள நிச்சயமாக அவர்களுக்கு அமையக்கூடிய மண வாழ்க்கை நடக்கக்கூடிய தசாபுத்திகளுக்கு ஏற்ப மகிழ்ச்சியான வாழ்க்கை அமைகிறது.
மேற்கண்ட அமைப்புகள் நல்ல முறையில் அமைந்து லக்கனமும் , அதன் அதிபதியும் இயற்கை சுப கிரக பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டு நல்ல யோக தசாபுத்திகள் தொடர்ந்து வந்தால் அவர்களுக்கு அமையக்கூடிய மண வாழ்க்கையானது மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கையாக அமையும்.
இவை தவிர குடும்ப ஸ்தானம் என்று அழைக்க கூடிய இரண்டாம் இடம், அதன் அதிபதி மற்றும் மாங்கல்ய ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய எட்டாம் இடம் அதன் அதிபதி பாவ கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கை பெறாமல் இயற்கை சுப கிரக பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் இருக்க வேண்டும்.இவையும் மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கை அமைய மிக முக்கியமான காரணியாக அமைகின்றது.
ஒருவேளை லக்கினத்திற்கு ஏழாம் இடம் பாவத்தன்மை அடைந்திருந்தாலும் ராசிக்கு ஏழாம் இடம் அதன் அதிபதி மற்றும் களத்திரக்காரர்கள் சுபத்தன்மை அடைந்திருந்தாலும் ஓரளவு அளவான மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
லக்கினம் மற்றும் ராசி ஆகிய இரண்டிற்கும் ஏழாம் இடம் அதனுடைய அதிபதி மற்றும் களத்திரக்காரர்கள் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ஸ்தான வலிமை பெற்று நிற்பதோடு மட்டுமல்லாமல் சுப தன்மையை அடைந்து திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து யோக தசைகள் நடப்பில் இருப்பின் அவருடைய மணவாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கையாக அமையும்.
உங்களது வாழ்க்கைத் துணை சாதகத்திலும் இதே போல் லக்கினம் மற்றும் ராசிக்கு ஏழாம் இடம் அதன் அதிபதி மற்றும் களத்திரகாரன் சுக்கிரன் ஆகியவை சுபருடன் சேர்ந்து சுப கிரக பார்வை பெற்று வீடு கொடுத்தவன் வலிமை பெற்று அவர்களுக்கும் தொடர்ந்து வரக்கூடிய தசா புத்திகள் யோகத்தை தரக்கூடிய தசா புத்திகளாக இருந்தால் மணவாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையாக கூடுதலாக அமையும்.
நன்றி.
For online appointment
Cell & WhatsApp & gpay
097151 89647
Another cell: 7402570899
My website.click here
https://astro-ravichandran.netlify.app/?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR1QCwsmEcUvkjRISeRcv3Dw5NoY0uPNBDVbcjEXPdfF_bFtsOcDatrfBhY_aem_7-3lf7MsYKY1abOPfLG2iQ
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment