Monday, 3 February 2025

நவ கிரகங்களின் காரக பலன்கள்

 நவ கிரகங்களின் காரக பலன்கள் .




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் 

துணை!


   கிரகங்களின் தலைமை கிரகம் சூரியன் பகவான் ஆவார். இதனைக் "கோள் அரசன்" என்று அழைக்கப்படுகிறது. இவை முழு முதல் ஒளி கிரகமாகும். இதை ஒரு குடும்பத்திற்கு எவ்வாறு தலைவனாக தந்தை விளங்குகிறாரோ அதேபோல கோள்களில் தலைவனாக விளங்குகிறார் சூரிய பகவானே தந்தைக்கு காரகராக விளங்குகிறார். சூரிய பகவானை லக்கினத்திற்க்கும் காரகன் ஆவார்.இவர் ஆத்மா காரகன் என்றும் அழைக்கப்படுகிறது.


  

   

    இதனை அடுத்த ஒளி  கிரகமாக சந்திரன் பகவான் கருதப்படுகிறது. இவை சூரியனிடம் இருந்து ஒளியை வாங்கி தனது ஒளியை பிரதிபலிக்கிறது இவை குடும்பத்திற்கு தலைவருக்கு அடுத்த தலைவி வரிசையில் சேர்க்கப்படுகிறது .இவரே மாதுர்காரகன் ஆவார் .அதாவது தாய்க்கு காரகர் ஆவார் இவை மட்டுமல்லாது மனநிலைக்கும் காரகர் ஆவார். ஒரு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தையே ஜென்ம ராசியாக கருதப்படுகிறது .சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறாரோ அதுவே #ஜென்மநட்சத்திரம் ஆகவும் அழைக்கப்படுகிறது.


எந்த ஒரு மனிதனைப் பார்த்தாலும் அவரது தலையைப் பார்த்து நாம் பேசுகிறோம் அதேபோல ஒரு ஜாதகத்தில் லக்னத்தை பார்த்து தான்  நாம் பதில் சொல்ல ஆரம்பிக்க வேண்டும் .

எனவே ஒரு ஜாதகத்தில் லக்கின பாவகம் மற்றும் அதன் அதிபதி பலம் பெற்ற நிலையில் அவர் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறக்கூடிய திராணி உள்ளவராக இருப்பார். மாறாக பலம் இழந்த நிலையில் அவரே சாதாரண கஷ்டத்திற்கும் துவண்டுவிடக்கூடிய மனநிலை படைத்தவராக இருப்பார்.


ஒரு ஜாதகத்தில் லக்னமே உயிர் என்று அழைக்கப்படுகிறது இதனை விதி என்றும் அழைப்பார்கள். ஒரு ஜாதகத்தில் லக்கின பாவங்கள் கெட்டுப் போயிருந்தால்  அவரது  ஜென்ம ராசியை வைத்து பலன் சொல்ல வேண்டும்.

 இதையே மதி என்று அழைக்கப்படுகிறது.


       சில நேரங்களில் ராசி மற்றும் லக்னம் இரண்டும் கெட்டுப் போன நிலையில் அதாவது விதி கெட்டால் மதியை பார்க்க வேண்டும் .மதி கெட்டால் கதியை பார்க்க வேண்டும். விதி- மதி ஆகிய இரண்டும்  கெட்டுப் போனால் கதி என்று அழைக்கக்கூடிய சூரியன் இருக்கும் இடத்தை மையமாகக் கொண்டு பலன் பார்க்க வேண்டும்.


       மேலை நாடுகளில் சூரியன் இருக்கும் இடத்தையே லக்னமாக வைத்து பலன் பார்க்கப்படுகிறது. 


    ஒளி கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டு இருக்கும் ஒரே வீட்டையே கொண்டுள்ளது சந்திரனுக்கு கடக வீடு ஆட்சி வீடாகவும்.சூரியனுக்கு சிம்ம வீடு ஆட்சி வீடாகவும்  திகழ்கிறது.


   ராஜ்ஜியம்  பரிபாலனை அடிப்படையில் சூரியனுடைய ஆதிபத்திய வீடான சிம்மவீடு முதல் வீடாகவும் அதற்கு அடுத்தபடியாக சந்திரனே இரண்டாம் வீடு ஆகவும் கருதப்பட வேண்டும்.


     அடுத்து  ஜாதகர் ராஜ்ஜிய  பரிபாலனையில் அறிவுக்கும்  மற்றும் ஆலோசனை வழங்குவதற்கும் காரக கிரகமாக விளங்குவது புதன் பகவான் ஆவார். புதன் பகவானே மதியுகி மந்திரியாவார்.


 ஒருவர் ஜாதகத்தில் புதன் பகவான் வித்தைக்கு கரகர் ஆவார். புதன் ஒருவர் ஜாதகத்தில் வலுப்பெற்ற நிலையில் புள்ளி விவரங்களை சரியாக தரக்கூடியவராகவும் ஆலோசனை வழங்குவதில் மந்திரியாகவும், கணித அறிவு ,இணைய அறிவு படைத்தவராகவும், இலக்கிய, இலக்கண அறிவு படைத்தவராகவும், சிறந்த படைப்பாளராகவும், புதியன கண்டுபிடிக்க கூடிய விஞ்ஞானி ஆகவும் , நல்ல  காலத்தைக் கணிக்கும் கனியனாகவும் , மற்றும் கதை கவிதை, கட்டுரை மற்றும் தலையங்கம் போன்றவற்றை படைக்கக்கூடிய சிந்தனையாளராகவும் திகழக்கூடியவர் ஆவார். இந்த புதன் பகவான் ராஜ்ஜிய பரிபாலையில் ராஜா ராணிக்கு அடுத்தபடியாக மிதுனம் மற்றும் கன்னி ஆகிய இரு வீட்டை சொந்த வீடாக கொண்டு திகழக்கூடியவர் ஆவார்.


அதனை அடுத்து  ஜாதகர் ராஜ்ஜிய பரிபாலனை நிலையில் நடன மங்கை என்று அழைக்கக்கூடிய சுக்கிர பகவான் திகழ்கிறார் .


   சுக்கிரன் என்றாலே ஆடல் அரசிகள் அபிநய சுந்தரிகள் என்று அழைக்கக்கூடிய பெண்களை கருதக்கூடிய சுக்கிர பகவான் ரிஷபம்,   துலாம் ஆகிய இரண்டு வீட்டை தனது ஆட்சி வீடாக கொண்டு விளங்குகிறது.


சுக்கிர பகவான் கலைக்கு காரக கிரகம் ஆகும்.தன்னை அழகு படுத்தி கொள்வதில்  முக அலங்காரம் ,சிகை அலங்காரம், உடை அலங்காரம்  போன்றவற்றை காரகராக விளங்க கூடியவர்  சுக்கிரன் ஆவார்.


    இல்லற இன்ப சுகத்தை தரக்கூடிய பெண்கள் சுக்கிரன் என்பதால் களத்திர காரகராகவும் இவர் விளங்குகிறார். ஒருவருடைய தாம்பத்திய சுகங்களை அள்ளித் தருவதை சுக்கிரனே முழு முதல் காரக கிரகம் ஆகும் ஒருவருடைய திருமண வாழ்வை முடிவு செய்வதில் சுக்கிரன் ஏழாம் இடத்திற்கு காரகராகவும் திகழ்கிறார். 


   சுக்கிரன் பகவான் நடனம் ,சினிமா மற்றும் கலை  அறிவு ஆகிய முத்தமிழுக்கும் உரிய  தொடர்பு கொண்ட கிரகம் ஆகும்.


சுக்கிர பகவான்  வண்டி, வாகனத்திற்கும் மற்றும் வீடு கட்டுவதற்கான யோகத்தையும் தரக்கூடிய கிரகமாக விளங்குகிறது.


 சக்கிர பகவானின் நடன , நாட்டியத்திற்கும், சினிமாவில் நட்சத்திரங்களாக ஜொலிப்பதற்கும் மற்றும் சின்ன திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்கும் காரக கிரகமாக சுக்கிரன் பகவான் விளங்குகிறது.


பாவத்துவமான நிலையில் சுக்கிர பகவான் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக மாறுவதற்கும் காரண காரிய கிரகமாக அமைகிறது. 


அடுத்தபடியாக ஒரு நாட்டை காக்கும் போர்த் தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிகம் வீட்டினை ஆட்சி வீடாக கொண்டு திகழ்கிறது 


    உங்களுடைய வீர தீரத்திற்கும் ஒரு நல்ல விளையாட்டு வீரராக திகழ்வதற்கும் மிலிட்டரி,  போலீஸ் போன்ற காவல் அமைப்புகளின் பணி புரிவதற்கும் செவ்வாய் பகவானே முழு முதல் காரக கிரகமாகும். இதே செவ்வாய் பகவான் அதிக சுபத்துவமான நிலையில் எம்.பி.பி.எஸ் படிக்கக்கூடிய மாணவனாக திகழ்கிறார் .சுபத்துவ படி நிலையின் ஏற்ப சில நேரங்களில் எம்பிபிஎஸ் அல்லாத சித்தா , பல் ,காது, மூக்கு ,தொண்டை நிபுணராக   அடுத்த  சுப தன்மை படி நிலைக்கு வருகிறார் .விவசாயம், சிவில் இன்ஜினியர் சுபத்துவப்படிலைக்கு கீழ் நிலைக்கு வரும்பொழுது சமையல்காரர் ஆகவும் திகழ்வார்.


 அடுத்தபடியாக ஒரு ராஜ்ஜிய பரிபாலனைக்கு அந்தணர்கள் தேவை என்பதால் குரு பகவான் தனுசு மற்றும் மீனம் ஆகிய இரண்டு வீட்டை கொண்டுள்ளது.


குரு பகவான் பணம் பதவி பட்டம் புகழ் கல்வி ஞானம் செல்வம் குழந்தை பாக்கியம் அனைத்துக்கும் மிக முக்கிய காரணமாக விளங்குகிறது .


      தனம்-புத்திரம்-பாக்கியம் மற்றும் லாபம் ஆகிய  ஸ்தானங்களான 2,5,9,11 ஆகிய ஸ்தானங்களுக்கு காரக கிரகமாக குரு பகவான் விளக்குகிறார்.


அடுத்தபடியாக ராஜ்ய பரிபாலனையில் இட்ட வேலையை எடுத்து செய்யக்கூடிய வேலைக்காரர்களாக கீழ்மட்ட வேலை செய்யக்கூடிய  காரக கிரகமாக விளங்கும் சனி பகவான் மகர மற்றும் கும்பம் இரண்டு வீட்டை சொந்த வீடாக கொண்டுள்ளது.


 சனி பகவான் ஆயுள் காரகன் மற்றும் கர்ம காரகன் என்று அழைக்கப்படுகிறது. சனி பகவான் ஒரு மனிதனுடைய கீழ்மட்ட பணியான‌  லேபர், வாட்ச்மேன், இரவு காவலர்  மற்றும் துப்புரவாளர் போன்ற இட்ட வேலையை செய்யக்கூடிய காரக கிரகமாக சனி பகவான் விளங்குகிறார்.


 சனி பகவானை சொல்லிக்கொள்ள வெட்கப்படக்கூடிய பணியான செப்டிக் டேங்க்,பிண வண்டி, பிணத்தை எரித்தல், கழிவுநீர் சேகரிப்பு , மோட்டார் சைக்கிள் மெக்கானிக் டாஸ்மார்க் வேலை போன்ற கீழ்மட்ட பணியில் அமர வைப்பார்.


சனி பகவானை அதிக சுபவத்துவமான நிலையில் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஏரோநாட்டிக்ஸ்,  மெக்கானிக்கல் இன்ஜினியர் போன்ற உயரிய பணிகளில் அமரக்கூடிய வேலைக்கு தருவார்.


நன்றி.


For online appointments 


Cell & WhatsApp & gpay 


097151 89647 


Another cell no 

  7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 



சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: