நிழல் கிரகங்கள் தரும் உண்மைகள் .
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
கிரகங்களில் நிழல் கிரகமான ராகு கேதுவை தவிர ஏனைய கிரகங்கள் அனைத்தும் முன்னோக்கி நகர்கின்றன. ஏற்கனவே நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவான் பின்னோக்கி நகரும் தன்மை கொண்டதால் அவர்களுக்கு வக்கிர கதி கிடையாது.
நிழல் கிரகமான ராகு மற்றும் கேது பகவான் சூரியன் அல்லது சந்திரன் உடன் நெருங்கும் போது அவை அஸ்தமனம் அடையாமல் கிரகண தோஷத்தை உண்டுபடுகிறது.
ஒளி கிரகங்களான சூரிய சந்திரர்களை முழுவதும் மறைக்கும் ஆற்றல் நிழல் கிரகங்களான ராகு கேதுகளுக்கு கிடையாது ஆனால் அவற்றின் ஒளியை அந்த காலகட்டத்தில் புவியின் மீது விழ விடாமல் தடுக்கிறது.
உதாரணமாக பௌர்ணமி காலத்தில் சந்திர கிரகணமும் மற்றும் அமாவாசை காலங்களில் சூரிய கிரகணமும் உண்டாக்குகிறது
நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது சொந்த வீடு கிடையாது இருக்கும் வீட்டை சொந்த வீடாக கருதி பலன் தருகிறது.
நிழல் கிரகங்கள் தான் இருக்கும் வீட்டை போலவும் தன்னை பார்த்த அல்லது சேர்ந்த கிரகங்களின் தன்மையை சார்ந்து பலன் அமைகிறது.
நிழல் கிரகமான ராகு மற்றும் கேது பகவான் இயற்கை சுப கிரக பார்வை அல்லது சேர்க்கை பெற்றால் அதன் தசை காலங்களில் மிகுந்த நல்ல யோக பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.
அதே நேரத்தில் பாவ கிரகமான சனி, செவ்வாய் மற்றும் தேய்பிறைச்சந்திரன் பார்வை அல்லது சேர்க்கை தொடர்பு கொள்ளும் பொழுது அது தன்னுடைய இயல்பான பலனை இழக்கிறது.கடுமையான கெட்ட பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.
நிழல் கிரகங்கள் ஆன ராகு பகவான் தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலனை குறைக்கிறது. ஆனால் கேது பகவான் தன்னோடு இணைந்த கிரகத்தின் பலனை அதிகரிக்க செய்கிறார்.ஆதலால் கேது பகவானை முழுமையான பாவ கிரகமாக கருதிவிட முடியாது.
.
நிழல் கிரகங்கள் ஆன ராகு கேது பருப்பொருள் இல்லாத கிரகமாக கருதப்படுகிறது .எனவே இவற்றிற்கு பார்வை கிடையாது. உச்சம் ஆட்சி போன்ற ஸ்தான வலிமை கிடையாது. திக்பலம் கிடையாது . ஓரையில் இடம் கிடையாது .வாரத்தில் ஏழு நாட்களில் இவற்றிற்கு பங்கு கிடையாது.
உலகம் தோன்றிய இத்தனை காலங்களில் இது போன்ற அதிசயம் நடந்தது கிடையாது. அதாவது ராகு கேதுக்கள் இணைந்தது கிடையாது. ராகு இருக்கக்கூடிய வீட்டிற்கு ஏழாவது வீட்டில் கேது பகவான் இருப்பார்.
ராகு பகவான் தன்னுடைய இணைந்த பிறகு உங்களுடன் சூட்சும வலுவை தந்தது கிடையாது.ஆனால் கேது பகவான் பாவ கிரகமான சனி மற்றும் செவ்வாயுடன் தனி தனியாக இணையும் போது சூட்சும வலுவை ஜாதகருக்கு கொடுக்கிறது.
கேதுவுடன் இணைந்த சனி அல்லது செவ்வாய் தனது பார்வையில் பார்த்த இடங்கள் மற்றும் கிரகங்களை கெடுப்பது கிடையாது.மேலும் இருக்கும் இடத்தையும் பாவ தன்மையை அடைய விடாது.
ராகு பகவான் மேஷம் ரிஷபம் மிதுனம் , கடகம் மற்றும் கன்னி ஆகிய இடங்களில் நின்று அவையே லக்கினத்திற்கு உப ஜெய ஸ்தானமான 3, ,6, 10, 11- ஆம் இடங்களில் நின்றால் யோக பலனை ஜாதகருக்கு அதன் தசை காலங்களில் தருகிறது.
கேது பகவான் சிம்மம், விருச்சகம் மற்றும் கும்ப வீடுகளில் நின்று அதன் தசை நடத்தக்கூடிய காலங்களில் ஜாதகருக்கு யோக பலனை கொடுக்கிறது.
நன்றி.
For online appointment
Cell & WhatsApp & Gpay
097151 89647
Another cell: 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment