Saturday, 7 June 2025

My Astro book "Jothida puthaiyal.

 My Astro book "jothida puthaiyal"




      இறை அருளால் என்னால் எழுதப்பட்ட "ஜோதிட புதையல்" புத்தகம் . 

ஜோதிடம் கற்க விரும்புவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு கையேடு ஆகும் . தொழில் முறை ஜோதிடர்களும் வாங்கி படித்து ஜோதிட துறையில் ஆழ்ந்த புலமையை பெறலாம்.


புத்தக விலை ரூ 965
கொரியர் கட்டணம் ரூ 80
மொத்த பக்கங்கள் 869


My Cell & WhatsApp & Gpay & Phone pay 
(All in one cell )
   9715189647


புத்தகம் வாங்க விருப்பப்படுவோர் gpay மூலமாக பணத்தை செலுத்தி வாட்ஸ் அப் மூலமாக முகவரி தந்தால் கொரியர் மூலமாக உங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.


நன்றி.

அன்புடன் 

சோ.ப . ரவிச்சந்திரன் M.Sc,M.A,BEd
Teacher and astrologer 
Om sakthi online Astro consulting centre,
Karambakkudi, Pudukkottai District,Tamilnadu.Pin 622302.


Friday, 6 June 2025

கூட்டு கிரகங்கள் தரும் பலன்கள்

 கூட்டு கிரகங்கள் தரும் பலன்கள். 




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


 ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் தனித்து நின்று ஒரு விதமான பலனையும் அதே கிரகம் மற்ற கிரகங்களோடு சேரும்போது வேறு விதமான பலன்களையும் தருகிறது என்பதை அடிக்கடி பல பதிவுகளில் உங்களுக்கு விளக்கி வந்துள்ளேன். 


 ஒரு ஜாதக கட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்து ஒரு ராசியில் இருக்கும் பொழுது அந்த கூட்டு கிரகங்கள் தரும் பலனை கணிப்பது மிகுந்த ஞானமும் மற்றும் சோதிட அனுபவமும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.


      கூட்டு கிரகங்கள் தரும் பலனை நிர்ணயிக்கும் பொழுது கீழ்க்கண்ட விஷயங்களில் மிகுந்த ஆழமான சிந்தனை தேவைப்படுகிறது.


      ஒரு ஜாதக கட்டத்தில் இடம் பெறும் பல கிரகங்களுடைய ஸ்தான வலிமை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.


     பிறகு அந்த கிரகங்களுக்கு இடையே உள்ள உறவு நிலைகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் 


      அடுத்தபடியாக ஒவ்வொரு கிரகமும் எத்தனை பாகை அளவில் நிற்கின்றது என்ற விஷயத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.


  பிறகு அந்த கூட்டு கிரகங்களை பார்வை செய்யும் கிரகங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.


 ஜாதக கட்டத்தில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் உடைய நட்பு பகை நிலைமைகளை தெரிந்து கொள்ள வேண்டும். 


 ஒரு ஜாதக கட்டத்தில் சுப கிரகங்கள் மற்றும் பாவ கிரகங்கள் இரண்டும் இணைந்து இருக்கக்கூடிய நிலைகளில் அவை தரும் பலன்களை கணிப்பதில் மிகுந்த ஆய்வு தேவைப்படுகிறது.


ஒரு ராசி கட்டத்தில் சனி மற்றும் ராகு ஆகிய இரண்டு பாவ கிரகங்கள் மூன்று சுபக்கிரகங்களோடு இணைந்து இருக்கக்கூடிய நிலையில் சனி மற்றும் ராகு எந்த கிரகங்கள் உடன் நெருக்கமாக இணைந்த நிலையில் உள்ளது.எந்த கிரகத்துடன் எவ்வளவு தூரம் விலகிய நிலையில் உள்ளது என்பது போன்ற விவரங்களை கணக்கிடும் போது தான் கூட்டு கிரகங்கள் தரும் பலனை எளிதாக கணிக்க இயலும்.


இரண்டு கிரகங்களுக்கு இடையே எட்டு பாகைக்குள்ளாக இருக்கும் பொழுது 100% தன்னோடு இணைந்த கிரகத்தை பாதிக்கிறது.. பதிமூன்று பாகை வித்தியாசத்தில் இருக்கும் பொழுது ஐம்பது சதவீதம் தன்னுடன் இணைந்த கிரகத்தை பாதிப்படைய செய்கிறது. இருபத்தியிரண்டு பாகைக்கு மேலாக இருக்கும்போது ஒன்றை யொன்று பாதிப்பதில்லை


பாவக்கிரகங்களுடைய பார்வையானது ஒரு ராசியில் உள்ள கிரகங்களின் மீது பெற்றால் கூடுதலான கெட்ட பவனை ஜாதகருக்கு கொடுக்கும் 


ஒரு ராசியில் பாவர் மற்றும் சுபர் ஆகிய இருவரும் எட்டு பாகைக்குள்ளாக நெருக்கமாக இணைந்து பாவத்தன்மை அடைந்திருக்கும் பொழுது ஒரு இயற்கை சுப கிரகம் அந்த ஒட்டுமொத்த சுப கிரகத்தையும் பார்வை செய்யும் பொழுது சுப தன்மையை அடைந்து மிகுந்த நல்ல பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


   உதாரணமாக விருச்சிகம் வீட்டில் சூரியன் ,புதன் ,சுக்கிரன், சனி மற்றும் ராகு ஆகிய கிரகங்கள் இணைந்து இருக்கும் பொழுது மீனத்தில் உள்ள குரு பகவான் ஒட்டுமொத்த கிரகத்தையும் பார்வை செய்யும் பொழுது அந்த ஸ்தானத்தில் உள்ள கிரகங்கள் அனைத்தும் சுபத்தன்மை அடைய வைத்து நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கும்.


 அதே நேரத்தில் ஒரு ராசியில் நான்கு அல்லது ஐந்து கிரகங்கள் இணைந்து இருக்கும் பொழுது ஒற்றை பாவ கிரக பார்வையானது ஒட்டுமொத்த அமைப்பையும் பாவ தன்மை அடைய வைத்து கெட்ட பலனை ஜாதகருக்கு தர வைத்து விடுகிறது 


உதாரணமாக விருச்சிக வீட்டில் சூரியன், சந்திரன், புதன் , சுக்கிரன் மற்றும் ராகு இணைந்து இருக்கக்கூடிய நிலையில் கும்பம் வீட்டில் உள்ள சனி பகவான் தனது பத்தாவது பார்வையால் ஒட்டுமொத்த கிரகத்தையும் பார்வை பாவ தன்மையை அடைய வைத்து விடுகிறது.


சில நேரங்களில் இந்தப் பார்வையை முடிவு செய்யும் பொழுது டிகிரி அடிப்படையாகக் கொண்டும் பார்வையின் நிலையை முடிவு செய்ய வேண்டும்.


    சில நேரங்களில் ஒரு வீட்டின் கடைசி எல்லையில் உள்ள ஒரு பாவ கிரகம் தனது பார்வை செய்யும் வீட்டில் உள்ள தொடக்க எல்லையில் உள்ள ஒரு கிரகத்தை பார்வை செய்து விட முடியாது என்ற உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.


மேற்கண்ட இது பல விவரங்களை தெரிந்து கொண்டாலும் நீங்கள் எந்த லக்கனம் என்பதை பொறுத்தும் மற்றும் நடக்கக்கூடிய தசா புக்திகளை பொறுத்தும் கூட்டு கிரகங்கள் தரும் பலனில் மாற்றம் ஏற்படுகிறது. ஏனேனில் லக்கனம் மாறுபடும் பொழுது ஆதிபத்தியங்கள் மாறுபடுகிறது.


நன்றி!


ஜோதிட ஆலோசனை பெற 


செல் & வாட்ஸ் அப் & கூகுள் பே 


  097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

ஜாதக கட்டத்தில் கிரகங்கள் எப்படி இருந்தால் நல்ல பலனை தரும்?

 ஜாதக கட்டத்தில் கிரகங்கள் எப்படி இருந்தால் நல்ல பலனை தரும்? 




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒரு கிரகம் தனித்து நின்று ஒரு மாதிரியான பலனையும், மற்ற கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை நிலையினை பெறும் பொழுது வேறு மாதிரியான பலனையும் ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


 ஒரு கிரகம் தனித்து நின்று நீசம் பெற்று இருந்தால் கூட ஒரளவு நல்ல பலனை ஜாதகருக்கு கொடுத்து விடும்.ஆனால் அதே நேரத்தில் பாவ கிரகங்கள் ஆன சனி , செவ்வாய், ராகு மற்றும் கேது போன்ற கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை நிலையினை பெற்றால் கடுமையான கஷ்டங்களை ஜாதகருக்கு கொடுத்து விடுகிறது.


உதாரணமாக சுக்கிரன் நீசம் பெற்று இருந்தால் கூட ஒரு மனைவி ஆனால் அந்த நீசம் பெற்ற கிரகத்துடன் ராகு சேர்ந்து சனி, செவ்வாய் பார்வையை பெற்ற நிலையில் அவர் விதவைப் பெண், அழுக்கான பெண் மற்றும் சொல்லிக் கொள்ள வெட்கப்படக் கூடிய நிலையில் உள்ள பெண்ணுடன் தவறான தொடர்பு நிலையினை வைத்திருப்பார். சுபர் பார்வை பெற்றால் பலனில் மாற்றம் ஏற்படும்.


இதேபோல குரு பகவான் நீசம் பெற்று இருந்தால் கூட ஒரு பெண் குழந்தையை கொடுத்து விடுவார். ஆனால் அதே நேரத்தில் குரு பகவான் உடன் சனி அல்லது ராகு நெருக்கமாக இணைந்த நிலையில் அல்லது சனி மற்றும் செவ்வாய் இருவரின் பார்வையைப் பெற்றுள்ள நிலையில் புத்திர பாக்கியம் தர இயலாத நிலையினை ஜாதகர் பெறுவார் .இவை ஐந்தாம் இடம் மற்றும் அதன் அதிபதியை பொறுத்து பலனில் மாற்றம் ஏற்படலாம்.


பாவ கிரகங்கள் ஆன சனி , செவ்வாய் தனித்த நிலையில் பலம் அடைந்து இருக்கும் பொழுது நன்மையை ஜாதகருக்கு செய்யாமல் அதன் தன்மையை ஜாதகருக்கு கொடுக்கிறது.


 சில நேரங்களில் உபய லக்கனங்களான தனுசு, மீனம், மிதுனம் மற்றும் கன்னி ஆகிய லக்கனங்களுக்கு இயற்கை சுப கிரகமான குரு மற்றும் புதன் பகவான் தனித்த நிலையில் கேந்திரங்களில் நின்று இருந்தால் அவை கேந்திராதிபத்திய தோஷத்தை தந்து அந்த கிரகத்துக்குரிய ஆதிபத்திய மற்றும் காரக பலனை சாதகருக்கு ஒழுங்காக கொடுப்பதில்லை.


மிதுனம் லக்னத்தில் பிறந்து நான்காம் இடத்தில் புதன் பகவான் உச்சம், ஆட்சி,மூல திரிகோணம் போன்ற மூன்று நிலைகளில் வலு பெற்று நின்றாலும் அவை கேந்திர ஆதிபத்திய தோஷத்தை ஜாதகருக்கு தந்து புதனுக்கு உரிய காரக பலனை ஜாதகருக்கு கொடுக்க மாட்டார். பொதுவாக புதன் பலம் பெற்றால் கணித அறிவியல் மற்றும் கணிப்பொறி அழிவு மிக்கவராக திகழ வேண்டும் ஆனால் மேற்கண்ட வகையில் மேலும் மிதுனம் லக்கினத்திற்கு நான்காம் இடத்தில் புதன் இருக்கும் பொழுது பள்ளிக்கூடம் என்றால் என்ன என்று மழைக்கு கூட பள்ளிக்கூடத்தில் ஒதுங்காதவராக இருப்பார்.


சில நேரங்களில் பாவ கிரகங்கள் நேரடியாக உச்சம் மற்றும் ஆட்சி போன்ற ஸ்தான வலிமையை பெறக்கூடாது.மாறாக பாவ கிரகங்கள் திக் பலம் பெறும் பொழுது நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.


    உதாரணமாக துலாம் லக்னத்திற்கு செவ்வாய் நான்காம் இடத்தில் உச்சம் பெற்று ஸ்தான பலம் பெற்று இருப்பதை விட பத்தாம் இடத்தில் நீசம் பெற்று திக் பலம் பெற்றிருப்பது ஜாதகருக்கு நல்ல பலன்களை அள்ளி தரக்கூடிய அமைப்பாக மாறுகிறது.


 செவ்வாய் பகவான் பாவ கிரகமாக இருந்தாலும் அதன் நட்பு கிரகமான 

 குரு ,சந்திரன் ,சூரியன் உடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது நல்ல பலனை தரக்கூடிய அமைப்பாகவே அமைகிறது இந்த இடத்தில் பாவ தன்மையை அடைவதில்லை..


 ஒரு ஜாதகத்தில் பெரும்பாலான கிரகங்கள் குரு பகவானுடைய பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் 

இருந்து குரு பகவான் பார்வையை பெற்ற கிரக தசைகள் தொடர்ந்து வரக்கூடிய ஜாதகம் நல்ல பலனை தரக்கூடிய ஜாதகமாக திகழ்கிறது.


   ஒருவர் ஜாதகத்தில் வளர்பிறை சந்திரனுக்கு ஆறு ,ஏழு மற்றும் எட்டில் இயற்கை சுப கிரகங்கள் அமர்ந்து அந்த தசைகள் தொடர்ந்து வரக்கூடிய நிலையில் ஜாதகர் மிகுந்த யோகம் படைத்த சாதகமாக கருதப்படுகிறது. பௌர்ணமி அமைப்பில் பிறந்து இருப்பின் ஆளுமை மிகுந்த அமைப்பாகும்.


     உங்கள் ஜாதகத்தில் நட்பு கிரகங்கள் ஒன்றுக்கொன்று கேந்திர கோணங்களில் அமர்ந்து பாவ கிரகங்கள் ஒன்றை ஒன்று தொடர்பு கொள்ளாத நிலையில் உள்ள ஜாதக அமைப்பு யோகங்கள் தரும் ஜாதகம் அமைப்பாக கருதப்படுகிறது.


நன்றி.


ஜோதிட ஆலோசனை பெற 


செல் & வாட்ஸ் அப் & கூகுள் பே 


097151 89647 


மற்றொரு செல் : 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

10' th and +2 முடித்த பிறகு உங்கள் ஜாதகப்படி என்ன படிப்பு படிக்கலாம் நீங்கள்?

 10 'th and +2 முடித்த பிறகு உங்கள் ஜாதகப்படி என்ன படிப்பு படிக்கலாம் நீங்கள்?


 


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை! 


   தனது பிள்ளைகள் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் என்ன படிப்பு படிக்க வைக்கலாம் ? .எந்த கல்லூரியை தேர்ந்தெடுக்கலாம் ? இது போன்ற குழப்பங்கள் உங்களை வருத்தத்தில் ஆழ்த்தி கொண்டிருக்கும் .


      உங்கள் பிள்ளைகளுக்குரிய படிப்பு துறையை தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக அவர்களுடைய ஜாதகத்தை தனிப்பட்ட முறையில் ஒரு நல்ல ஜோதிடம் பார்ப்பவரிடம் சென்று அலசி ஆராய்ந்து பார்ப்பது என்பது சாலச் சிறந்த ஒன்றாகும். 


    மாணவர்களுடைய படிப்பை முடிவு செய்வது என்பது பெற்றோர்களுடைய விருப்பத்தை அதில் திணிப்பது அல்ல. பிள்ளைகளுக்கு எந்த துறையில் படிக்க ஆசை என்பதை முதலில் தெரிந்து கொண்டு அவை சார்ந்த விஷயங்களில் படிக்க வைக்கும் பொழுது தான் அவன் பிற்காலத்தில் ஒரு சாதனை மிக்க மாணவனாக திகழ்வார் .இதனை தவிர்த்து தனது சுய வெறுப்பு வெறுப்புகளை பிள்ளைகள் மீது திணிக்க கூடாது.


கவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள் தான் விளையாட்டாக கூறுவார் .

" புத்தகங்களே பிள்ளைகளை கிழித்து விடாதீர்கள் ''என்பார். .


    எனவே தங்களது பிள்ளைகளை அவர்கள் விருப்பப்படி படிக்க வையுங்கள் அவர்கள் விருப்பப்படி என்பது ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்தன்மையோடு ராசி மற்றும் லக்னத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடத்தோடு தொடர்பு கொள்கிறதோ, அந்த கிரகம் சார்ந்த துறைகளில் எண்ணங்களும் செயல்களும் உருவாகி அவை சார்ந்த விஷயங்களை நிச்சயமாக மாணவனுக்கு படிப்பதில் ஆர்வம் இருக்கும் என்பதை உறுதிப்பட உங்களுக்கு கூறுகிறேன்.


 ஆகவே ஜாதக கட்டத்தில் எந்த கிரகம் அதிக சுப தன்மையோடு இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.


    ஆதலால் முதலில் உங்கள் பிள்ளைகளை எந்த துறையில் படிக்க வைக்கலாம் என்பதை முடிவு செய்து அதற்கு முன்பாக அவர்களுடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டு சென்று அவர்கள் ஜாதகத்தில் லக்கனாதிபதி வலிமை அடுத்து லக்கனத்துடன் எந்த கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் அதிகமாக தொடர்பு கொள்கிறதா ? போன்ற விஷயங்களை ஆய்வு செய்து பார்த்து அவரது ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுப தன்மையோடு இருக்கிறது என்பது போன்ற விஷயங்களை ஆய்வு செய்து பார்க்க வேண்டும் அவ்வாறு ஒரு ஜாதகத்தில் சில நேரங்களில் இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் அதிக சுபத் தன்மையோடு இருக்கும் பொழுது அதில் எந்த கிரகம் தொழிற் ஸ்தானத்தோடு தொடர்பு கொள்கிறதோ அந்த கிரகம் சார்ந்த படிப்பை மாணவன் தேர்ந்தெடுக்கும் போது நிச்சயமாக அதில் வெற்றி பெறக்கூடிய தன்மையை உங்கள் பிள்ளைகளுக்கு உண்டாக்கும்.


  இரண்டு மூன்று கிரகங்கள் சுபத்தன்மையோடு இருக்கும் பொழுது அதில் எந்த கிரகம் ஸ்தான வலிமை பெற்று இருக்கிறது என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்


     எந்தக் கிரகம் ஜாதக கட்டத்தில் அதிக சுப தன்மையோடு இருக்கிறது ? என்பதை கண்டுபிடிப்பது எல்லோருக்கும் எளிய விஷயம் அன்று. இதற்கு மேம்பட்ட ஜோதிட ஞானமும் மற்றும் நிறைய ஜாதகங்களை ஆய்வு செய்து பார்த்த சோதிட அனுபவமும் மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது.


   உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்தன்மையுடன் இருக்கிறது ? என்பதை கண்டுபிடிப்பதற்கு முன்பாக முதலில் 

சுப தன்மை என்றால் என்ன ? மற்றும் 

 பாவத்தன்மை என்றால் என்ன ? 

 போன்ற விஷயங்களை ஜோதிடர்கள் ஆகிய நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.


      சுப தன்மை என்றால் உங்கள் ஜாதகத்தில் ஒரு கிரகம் இயற்கை சுப கிரகமான குரு பகவான் , வளர்பிறை சந்திரன் ,,பாவி உடன் சேராத தனித்த புதன் மற்றும், சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.


    பாவத்தன்மை என்பது உங்கள் ஜாதகத்தில் எந்த ஒரு கிரகமும் 

சனி, செவ்வாய், ராகு, கேது தேய்பிறை சந்திரன் மற்றும் பாவியுடன் சேர்ந்த புதன் போன்ற கிரகங்களுடன் பார்வை அல்லது எனது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது அவை ஜாதக கட்டத்தில் பாவத்தன்மை அடைகிறது என்று அர்த்தமாகும்.


   மேற்கண்ட இரண்டையும் தெரிந்து கொள்வது என்பது சாதாரண நடைமுறையாகும் .ஆனால் ஒருவர் ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுப தன்மையுடன் இருக்கிறது என்பதை கண்டறிவதற்கு இன்னும் சற்று கூடுதலான சோதிட அனுபவம் தேவைப்படுகிறது.


     உங்களுடைய சாதகத்தில் எந்த கிரகம் இரண்டு மூன்று சுப கிரகங்களுடன் பார்வை அல்லது சேர்க்கை முறையான தொடர்பை பெற்றிருக்கிறது என்பதையும் அதிகமாக கவனிக்கப்பட வேண்டும். அவ்வாறு எந்தக் கிரகம் தொடர்பு கொள்கிறதோ அந்த கிரகத்தை முதன்மையான சுபத்துவம் பெற்ற கிரகமாக கருதப்பட வேண்டும்.


இவ்வாறு முதன்மையான சுபத் தன்மையை பெற்ற கிரகத்தை கண்டறிந்து அந்த கிரகம் உங்களுடைய ஜாதக கட்டத்தில் தொழிற் ஸ்தானமான பத்தாம் இடத்துடனும் மற்றும் தன ஸ்தானமான இரண்டாம் இடத்துடனும் தொடர்பு கொண்டு உள்ளதா ? என்பதையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


 இவ்வாறு கண்டறிந்த பிறகு அந்த காலகட்டத்தில் நடக்கக்கூடிய தசா புக்திகளை ஆய்வு செய்து பார்க்க வேண்டும். 


     முதன்மையான சுபத் தன்மை பெற்ற கிரகத்தின் கல்வித்துறையை தேர்ந்தெடுக்கும் போது உகந்த தசா புத்திகள் ஒத்துழைக்கும் போது தான் அந்த துறையில் படித்து உங்கள் பிள்ளை வெற்றி பெற முடியும். எனவே தசா புத்தி ஆய்வு செய்து அவ்வாறு தசாபுத்தி உகந்த யோகத்தை தரக்கூடிய தசா புக்திகளாக இருக்கக்கூடிய பட்சத்தில் அந்த துறையை தேர்ந்தெடுத்து உங்கள் பிள்ளையை படிக்க வைக்கும் பொழுது எதிர்காலத்தில் அந்த கல்வித் துறையின் மூலமாக உயர்ந்த புகழையும் மற்றும் பணத்தையும் சம்பாதிக்கக்கூடிய சூழலை சாதகருக்கு உருவாக்கிக் கொடுக்கும்.


    உதாரணமாக உங்கள் ஜாதகத்தில் உள்ள சுபத்துவ படி நிலைக்கு ஏற்ப அந்த துறையில் உயரிய நிலை, நடுத்தர நிலை மற்றும் கீழ்மட்ட நிலை ஆகியவை அமையும்.


    செவ்வாய் உங்கள் ஜாதகத்தில் அதிக சுப தன்மையுடன் இருந்து அவை தொழில் ஸ்தானமான பத்தாமிடத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் எம்பிபிஎஸ் படிப்பு படிப்பார். சற்று சுப தன்மை குறையும் பொழுது மருத்துவம் சார்ந்த இதர துறையில் படிப்பார். அதனை அடுத்து விவசாயத் துறை படிப்பார் .அதற்கு அடுத்த நிலையில் போலீஸ், ராணுவம் போன்ற துறைகளில் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். இன்னும் குறைவான சுபத்துவ படிநிலை கொண்டுள்ள போது டீ பார்ம், நர்சிங் மற்றும் பிளட் டெஸ்ட் சென்டர் போன்ற துறைகளில் ஈடுபட வைக்கும்.


   குருபகவான் அதிக சுப தன்மையுடன் இரண்டு மற்றும் 10-ஆம் இடத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுது ஆசிரியர் துறையில் ஈடுபட வைப்பார். 


 ஸ புதன் பகவான் அதிக சுப தன்மையுடன் இரண்டு மற்றும் பத்தாமிடத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுது கணிதம், , கம்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பம்(ID field ) இசையில் ஈடுபாடு போன்ற துறை வழியாக படிக்க வைப்பார்.


   சுக்கிரன் பகவான் அதிக சுபத்தன்மையுடன் இரண்டு மற்றும் பத்தாம் இடத்தில் தொடர்பு கொள்ளும் பொழுது கேட்டரிங், பியூட்டி பார்லர், டிரான்ஸ்போர்ட் ,விசுவல் கம்யூனிகேஷன் மற்றும் நடனம் இது போன்ற துறைகளில் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.


சனி பகவான் அதிக சுபத் தன்மையுடன் இருக்கும் பொழுது அரசு அலுவலகங்களில் கீழ்மட்ட வேலை, குடிக்க இயலாது திரவம் சம்பந்தமாக படிப்பதில் ஆர்வம் ,மெக்கானிக் கனரக வாகனங்களை இயக்குதல், சுரங்கம் தொடர்பான படிப்பு போன்ற வகையில் ஈடுபட வைப்பார்.


   ஒளிக்கிரமான சூரியன் மற்றும் சந்திரன் வலிமை பெற்று பௌர்ணமி அமைப்பில் பிறந்திருக்கும் பொழுது அரசின் உயரிய பதவிகளில் அமரக்கூடிய யோகத்தை ஜாதக பெறுவார் .


    சூரிய பகவான் அதிக சுபத்துடன் இருக்கும்பொழுது எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், மின்சாரம் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவர் போன்ற துறைகளில் படிக்க அதிக ஆர்வம் உண்டாகும்.


 சந்திரன் பகவான் அதிக சுபத்துவ நிலையில் இரண்டு மற்றும் பத்தாம் இடத்துடன் தொடர்பு கொள்ள கூடிய நிலையில் கடல் வாழ் உயிரினங்களைப் பற்றிய ஆராய்ச்சி படிப்பு படிப்பதற்கு ஆர்வம் ஏற்படும். 


 இதே போல ஒவ்வொரு கிரகத்திற்கும் ஆயிரக்கணக்கான துறைகள் விரிந்து கிடக்கிறது .அதில் ஒன்று இரண்டை மட்டும் மேலே கோடிட்டு காட்டு உள்ளேன். முழுவதையும் இந்த ஒரே பதிவில் பெற முடியாது. உங்கள் பிள்ளைகளுக்கு என்ன படிக்க வேண்டும் என்பதை உங்கள் பிள்ளைகளுடைய ஜாதகத்தை பொறுத்து அமைகிறது என்பதை இந்த பதிவில் விளக்குவதே எனது நோக்கமாக அமைந்தது. முழு விவரங்களையும் ஜோதிடரிடம் நேரடியாக ஆலோசனை பெற்று தெரிந்து கொள்ள வேண்டும்..


நன்றி.


ஜோதிட ஆலோசனைக்கு


செல் & வாட்ஸ் அப் & கூகுள் பே 


 097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

நீசம் பெற்ற கிரகங்கள் தரும் பலன்கள்

 நீசம் பெற்ற கிரகங்கள் தரும் பலன்கள்.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

 

   ஒருவர் ஜாதகத்தில் எந்த ஒரு கிரகம் நீசம் அடைந்திருந்தாலும் கூட  கெட்ட பலனை தந்து விடுவதில்லை.ஆனால் அவை பாவ தன்மையை அடைந்துவிட்டால்  மட்டும் கடுமையான கெட்ட பலன்களை தந்து விடுகிறது . 


    நீசம் அடைந்த கிரகம் பாவ கிரகங்கள் ஆன சனி , செவ்வாய், ராகு , கேது  மற்றும் தேய்பிறை சந்திரன் போன்ற கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் கடுமையான கெட்ட பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.


  மேஷத்தில் சனி பகவான், கடகத்தில் செவ்வாய் பகவான்,கன்னியில் சுக்கிரன் பகவான், துலாத்தில் சூரிய பகவான் , மகரத்தில் குரு பகவான் மற்றும்   மீனத்தில் புதன் பகவான் நீசம் அடைந்து விடுகிறது.


   நீசம் அடைந்த கிரகம் பரிவர்த்தனை பெற்றால் இழந்த வலிமையை மீண்டும் பெறுகிறது.


    நீசம் அடைந்த கிரகம் ராசியிலும் மற்றும் அம்சத்திலும் ஒரே வீட்டில் இருந்தால் வர்க்கோத்தமம் என்று பெயர் . இவை இழந்த வலிமையை மீண்டும் பெறுகிறது.

  

      நீசம் பெற்ற கிரகங்கள் ஒருவரையொருவர் பார்த்து கொண்டால் அவை இழந்த வலிமையை மீண்டும் பெறுகிறது.


      நீசம் பெற்ற கிரகம் இருக்கும் ஒரே வீட்டில் உச்சம் பெற்ற கிரகம் இருந்தாலும் நீசம் பங்கம் அடைகிறது.


      நீசம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்றாலும் நீச பங்கம் அடைகிறது.


  நீசம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் அடைந்து இருப்பின் அவை சந்திர கேந்திரத்தில் நின்றால் நீசம்பஙக ராஜயோகம் அடைகிறது.


 ஒரு கிரகம் நீசம் அடைந்து இருந்தாலும் அவை குறைந்த அளவு பலனை நந்து விடுகிறது.சுக்கிரன் நீசம் அடைந்து இருந்தால் கட்டாயம் ஒரு பெண்ணையாவது இன்ப சுகம் அடைய வைத்து விடுகிறது.சுக்கிரன் உச்சம் பெற்றால் பல பெண்ணுடனாவது தொடர்பு ஏற்பட்டு விடுகிறது.


 குரு பகவான் நீசம் அடைந்து இருந்தால் குறைந்த பட்சம் ஒரு பெண் குழந்தையாவது கொடுத்து விடுகிறது.பொருளாதரத்தில் குறைந்த பட்ச அளவு வருமானத்தை கொடுத்து விடுகிறது.


   பாவ கிரகங்கள் நீசம் அடைவது அவை ஜாதகருக்கு நல்ல பலன்களை தந்து விடுகிறது.இயற்கை சுப கிரகங்கள் நீசம் 

அடைந்தால் அதற்கு உரிய காரக பலனை குறைந்த பட்ச அளவு தந்து விடுகிறது.


 நிழல் கிரகங்கள் ஆன ராகு மற்றும் கேது பகவான் பருப்பொருள் இல்லாத நிழல் கிரகங்கள் ஆகும்.எனவே அவற்றிற்கு உச்சம், ஆட்சி மற்றும் நீசம் போன்ற ஸ்தான வலிமை கிடையாது.


  பொதுவாக நீசம் பெற்ற கிரகங்கள் வக்கிரம் பெறும் பொழுது அவை உச்சத்திற்கு நிகரான பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.

எனவே பாவ கிரகங்கள் நீசம் பெற்று வக்கிரம் பெறாமல் இருப்பது நல்லது.இயற்கை சுப கிரகங்கள் நீசம் பெற்று வக்கிரம் பெறுவது  நல்லது.


  இயற்கை சுப கிரகங்கள் நீசம் பெற்றால் அதற்கு உரிய காரக மற்றும் ஆதிபத்தியம் 

பலன்களை குறைக்கிறது. நீசம் பெற்ற இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு, சுக்கிரன் மற்றும் புதன் பகவான் சந்திர அதி யோகத்தால் நீசம் பெற்ற கிரகங்கள் ஆக இருந்தாலும் இழந்த பலனை மீண்டும் பெற்று நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.


     ஒளி கிரகங்களான சூரியன்  மற்றும் சந்திரன் நீசம் அடைந்து இருந்தாலும் பொளர்ணமி அல்லது பொளர்ணமியை நெருங்கும் அல்லது விட்டு விலகும் சந்திரனாக இருந்தாலும் சூரியன் மற்றும் சந்திரன் ஆனவர் பலம் பெற்ற கிரகமாக ஆகி விடுகிறது.


 நீசம் பெற்ற சூரியன் தனது ஆளுமை தன்மையை இழக்கிறது.தந்தை நிலை ,அரசு வேலை போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.


நீசம் பெற்ற சந்திரன் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.தாய் நிலையை பாதிப்பு அடைய செய்கிறது.


நீசம் பெற்ற செவ்வாய் சகோதர தோஷத்தை உண்டாக்குகிறது.பூமி யோகத்தை மட்டுப்படுத்துகிறது.


நீசம் பெற்ற புதன் வித்தை சாதுர்யத்தை குறைக்கிறது.மாமன் வர்க்கத்தை பாதிப்பு அடைய செய்கிறது.


நீசம் பெற்ற சுக்கிரன் திருமண தடை,  வண்டி வாகனம் , மற்றும் வீடு அமைவதில் யோகம் அற்ற நிலையை தருகிறது.


நீசம் பெற்ற சனி பகவான் ஆயுள் பங்கத்தை தவிர வேறு எந்த கெடுதலையும் தந்து விடுவதில்லை.


நன்றி.


For online appointment 


செல் & வாட்ஸ் அப் & கூகுள் பே 


  097151 89647 


Another cell no: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

   M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

மகிழ்ச்சியும்,மன நிறைவும் நிரம்பிய மண் வாழ்க்கை அமைய

 மகிழ்ச்சியும்,மன நிறைவும் தரும் வாழ்க்கை அமைய....




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   இல்லறம் அல்லாது நல்லறம் அன்று.

மகிழ்ச்சியான மண வாழ்க்கை அமைய நல்ல வாழ்க்கைத் துணை அமைய வேண்டும். 


உள்ளதைக் கொண்டு நிறைவு பெறக்கூடிய உன்னத அன்பு இருக்க வேண்டும்.


வான் புகழ் கொண்ட வள்ளுவர் கூட  "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" என்று கூறினார்.


 உள்ளத்தை கொள்ளை கொள்ளக்கூடிய வாழ்க்கை  துணையாக இருக்க வேண்டும்.


   குடும்பத்திற்கு இவள் வந்த பிறகு அந்த குடும்பமே 

    "குத்து விளக்காக  குல மகளாக நீ வந்த நேரம் "


    என்று புகழ் பாடும் அளவிற்கு உயர்வான  மனைவி /கணவன்  அமைய அவருடைய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய ஏழாம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் இதனால் தான் நம் முன்னோர்கள் 


   "ஏழாம் இடம் சுத்தமானால் எல்லோருக்கும் நல்லவள்" என்றார்கள். ஏழாம் இடத்தில் எந்த கிரகங்கள் இல்லாமல் இருப்பது சிறப்பு என்றாலும் அந்த ஏழாம் இடத்தையும் எந்தவிதமான பாவ கிரகங்கள் பார்க்காமல் இருப்பது என்பதும் சால சிறந்தது ஆகும். அதே நேரத்தில் ஏழாம் இடத்தை சுப கிரகங்கள் பார்வை செய்தால் நல்லது.


 ஏழாம் அதிபதி ஆட்சி பெற்று நின்றாலும் நல்லது. ஏழாம் அதிபதி கேந்திர கோணங்களில் நின்றாலும் நல்ல பலனை தரும் என்றாலும் விதி விலக்காக 

ஏழாம் அதிபதி பாவ கிரகங்களாக இருந்தால் ஏழாம் இடத்திலே ஆட்சி பெற்று இருப்பது நல்லதல்ல.


   உதாரணமாக ரிஷப மற்றும் துலாம் லக்னத்திற்கு ஏழாமிடத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பதும்,

 கடகம் மற்றும் சிம்ம லக்னங்களுக்கு ஏழாம் இடத்தில் சனி ஆட்சி பெற்று இருப்பதும்  உகந்தது அல்ல..


   இதேபோல கடக லக்கினத்திற்கு ஏழாம் இடத்தில் செவ்வாய் உச்சம் பெற்று நிற்பதும், மேஷ லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் சனி உச்சம் பெற்று நிற்பதும் நல்ல வாழ்க்கை துணை அமைவது சிரமம் ஆகும்.இதில் விதிவிலக்காக அந்த கிரகத்தை சுபர் பார்வை செய்வது பலன்களை மாற்றி அமைக்கும்.


ஏழாம் அதிபதி இயற்கை சுப கிரகங்களாக இருந்து ஆட்சி பெற்று அல்லது உச்சம் பெற்று நிற்பது நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கும் என்றாலும் இதிலும் சில விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கிறது உபய லக்கனங்களுக்கு ஏழாம் அதிபதி பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதி என்பதாலும் மேலும்  கேந்திரத்தில் உச்ச ,ஆட்சி போன்ற நிலையில் வலுப்பெற்று நிற்க்கும் பொழுது கேந்திர ஆதிபத்திய தோஷத்தை தரும் என்றாலும் அவர்கள் ஏழாம் இடத்திலே இல்லாமல் இருப்பது நல்லது ஆகும்.


 அதாவது தனுசு மற்றும் மீனம் போன்ற உபய லக்கனங்களுக்கு குரு மற்றும் புதன் களத்திர ஸ்தானமான ஏழாம்  இடத்தில் வலுப்பெற்று நிற்பது நல்ல பலனை தராது.


அதிலும் குறிப்பாக ஏழாம் இடத்தில் ஆட்சி பெற்ற குரு அல்லது புதன் நின்று தசை நடப்பில் அல்லது அடுத்த தசையாக இருப்பின் கட்டாயம் அவருக்கு மணம் முடிக்க கூடாது.


  சில நேரங்களில் லக்கனாதிபதி மற்றும் ஏழாம் அதிபதி ஆகிய இருவரும் ஆட்சி

பெற்று நிற்பதும் ஈகோ நிறைந்த மண் வாழ்க்கை அமைந்து விடும்.


  எனவே மகிழ்ச்சியான மண வாழ்க்கை அமைய ஏழாம் இடத்தில் எந்த கிரகங்கள் இடம் பெறாமல் சுத்தமாக இருப்பது தான் நல்லது.ஆனால் அதே நேரத்தில் ஏழாம் இடத்தையும் அதன் அதிபதி மற்றும் களத்திரகாரன் சுக்கிரன் ஆகிய மூவரையும் இயற்கை சுப கிரகங்கள் என்று அழைக்கப்படக்கூடிய குரு பகவான், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள வேண்டும் .


இவை ஒருவருக்கு மட்டுமல்லாமல் தம்பதியர்கள் இருவருடைய ஜாதகத்திலும் இதே போன்ற அமைப்பு இருக்க வேண்டும்.


நடப்பில் இருக்கும் தசையும் தொடர்ந்து நடக்கக் கூடிய தசையும் யோகத்தை தரக்கூடிய வகையில் அமைந்திருக்க வேண்டும்.


எனவே மகிழ்ச்சியான மன நிறைவான ஒரு வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொள்வதற்கு ,

வெறும் நட்சத்திர பொருத்தங்களை மட்டும் பார்க்காமல் ஜாதக கட்டத்தை கொண்டு  லக்கனம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தாளமான எட்டாம் இடம் அதன் அதிபதி, தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய சுக்கிரன் மற்றும் புத்ர பாக்கியம் தரக்கூடிய குருபகவான் ஆகிய அனைத்தையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும் .அவ்வாறு ஆய்வு செய்து நடக்கும் தசா புத்தி மற்றும் கோச்சார பலன் கொண்டு ஒப்பிட்டு  பார்த்து பொருத்தம் பார்க்கும் பொழுது தான் மகிழ்ச்சியும் மன நிறைவும்  உடைய வாழ்க்கைத் துணை அமையும்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay 


 097151 89647 


My another cell no: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

திருமணத்திற்கு பிறகு பிரச்சினைகள் மற்றும் பிரிவுகள் வர காரணம்.

 திருமணத்திற்கு பிறகு பிரச்சினைகள் மற்றும் பிரிவுகள் வர காரணம் என்ன?




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  திருமணம் ஆன சில நாட்களில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரது ஜாதகத்திலும் ஆறுக்கு உடைய அல்லது எட்டுக் குடைய தசை நடப்பில் வந்தால் அவர்களுக்கு இடையே சரியான அன்யோன்யம் இருக்காது.


 எனவே திருமணப் பொருத்தம் பார்க்கும் பெற்றோர்கள் இருவருடைய ஜாதகத்திலும் திருமணத்திற்கு பிறகு வரக்கூடிய தசா புத்திகளை அவசியம் கவனிக்க வேண்டும் . தசா புத்திகளே மனித வாழ்வியல் சம்பவங்களை சுட்டிக் காட்டக்கூடிய ஒரு வாழ்வியல் வரலாறு ஆகும்.


திருமண பொருத்தம் பார்க்கும் போது வெறும் நட்சத்திர பொருத்தங்களை மட்டும் வைத்துக்கொண்டு திருமணம் செய்யும்போது பலருடைய வாழ்வில் கஷ்டங்கள் வருவதற்கும், 

 கணவன் மனைவிக்கு இடையே ஒரு ஒற்றுமை குறைவு ஏற்படுவதற்கும், 

பிரிவு மற்றும் விவாகரத்து போன்றவை ஏற்படுவதற்கு சாதக கட்ட மற்றும் தசா பொருத்தங்களை கணித்து பார்க்காநதே காரணமாகும்.


   உருகி உருகி காதலித்து கல்யாணம் செய்து கொண்ட தம்பதிகளாக இருந்தாலும் இதுபோன்ற அவ யோகத் தசைகள் அல்லது ஆறு அல்லது எட்டுக்குரிய தசையில் வரும் பொழுது அவர்களுக்கு இடையே கூட கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவினையை தந்து விடுவதை நாம் பார்க்கின்றோம்.


 பெண்ணிற்கு மகர லக்கனமாகி எட்டாம் இடம் சூரிய தசை நடந்து ஆணுக்கு சிம்ம லக்கனம் ஆகி ஆறுக்கு உடைய சனி தசை நடப்பில் இருப்பின் இவர்களுக்கு இடையே சரியான அன்யோன்யம் இல்லாமல் ஒரு வீட்டில் இருந்தாலும் மனதளவில் ஒன்றாக இல்லாமல் வாழும் தம்பதிகளை பார்க்க நேரிடும் போது ஜோதிட விதிகள் எந்த அளவுக்கு உண்மை என்பது புலனாகிறது.


சில நேரங்களில் 

"ஒத்த ராசி உடையவர்கள் ஒத்து வாழ நியதி இல்லை" என்று கூறுவதன் நோக்கம் மேற்கூறிய உண்மைதான் காரணமாக அமைகிறது.


 ஒத்த ராசியை கொண்ட தம்பதிகள் ஒரே நட்சத்திரத்தில் பிறந்து இருப்பின் அவர்களுக்கிடையே நடக்கக்கூடிய தசைகளும் ஒத்த தசைகளாகவே வரும் இந்த ஒத்த தசைகளும் ஆறு அல்லது எட்டுக்கு உடைய அவ யோகத்தை தரக்கூடிய தசையாக வந்தால் நிச்சயமாக அவருக்கு இடையே பிரிவுகள் மற்றும் பிரச்சனைகள் நடைபெற கூடும்.


 சில நேரங்களில் களத்திர ஸ்தானமான ஏழாமிடத்தில் பாவ கிரகங்கள் ஆன சனி , செவ்வாய் மற்றும் ராகு போன்ற பாவ கிரகங்கள் தனித்து அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் அதன் தசைகள் அல்லது புத்தி நடப்பில் வர கூடிய கால கட்டத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே பிரிவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது.


சிலருக்கு திருமண ஆன பிறகு பிறந்த அல்லது பிறக்க இருக்கும் குழந்தைக்கு ஏழரை அல்லது அஷ்டம சனி நடப்பில் இருக்கக்கூடிய நிலையில் கணவன் மற்றும் மனைவி இடையே பிரிவுகள் அல்லது பிரச்சினைகள் வர காரணமாக அமைந்து விடுகிறது.


 திருமணம் ஆன உடன் பிறந்த குழந்தை ஜாதகத்தில் ஒன்பதாம் இடத்தில் ராகு அல்லது சனி அமர்ந்து ஒன்பதாம் அதிபதி அல்லது சூரியன் உடன் பாவ கிரகங்கள் சேர்க்கை அல்லது பார்வை பெற்ற நிலையில் தந்தையை விட்டு பிரிந்து வாழும் அமைப்பு இருந்தால் இதன் காரணமாகவும் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே பிரச்சினைகள் அல்லது பிரிவினைகள் ஏற்பட காரணமாக அமைகிறது.


திருமண ஆன தம்பதியர் இருவருக்கும் ஏழரை அல்லது அஷ்டம சனி நடப்பில் இருப்பின் அவர்களுக்கிடையே அந்த குறிப்பிட்ட கால கட்டம் வரை பிரச்சினைகள் மற்றும் பிரிவுகள் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay 


097151 89647 


Another cell no 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,

ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,

 கரம்பக்குடி

 புதுக்கோட்டை மாவட்டம் .

மனதுக்கு பிடித்த மனைவி

 மனதுக்கு பிடித்த மனைவி அமைய..



.

செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை! 


    "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் " என்பார்கள். ஒரு ஆடவருடைய வெற்றிக்கு தாய்க்கு பின் தாரம் தான் மிக முக்கியமான நபர் ஆகும்.


  ஒருவருடைய ஜாதகத்தில் தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணை பற்றி அறிந்து கொள்ள உதவும் ஸ்தானம் ஏழாம் இடமாகும் இந்த ஏழாம் இடத்தை "களத்திர ஸ்தானம்" என்று அழைக்கிறோம்..


 ஏழாம் இடத்தில் பாவ கிரகங்கள் இடம் பெறாமல் ஏழாம் இடத்தை சுப கிரகங்கள் பார்வை செய்து ஏழாம் அதிபதியும் இயற்கை சுப கிரகங்களாக இருந்து கேந்திர கோணங்களில் நின்று பாவ கிரகங்கள் ஆன சனி, செவ்வாய் ராகு மற்றும் கேது, தேய்பிறை சந்திரன் மற்றும் பாவி உடன் சேர்ந்த புதன் தொடர்பு இன்றி இருக்க வேண்டும்.


  இதே போல ஏழாம் அதிபதியும் மற்றும் களத்திர காரகன் சுக்கிரன் பகவானும் பாவர் சேர்க்கை அல்லது பார்வை போன்ற வகையில் தொடர்பு இன்றி இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு பகவான், வளர்பிறை சந்திரன் மற்றும் தனித்த புதன் போன்ற கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு பெற்று இருக்க வேண்டும்.


 லக்கனாதிபதி வலிமை பெற்று சுப தன்மை அடைந்து இருக்க வேண்டும்.திருமண கால கட்டத்திற்கு பிறகு வரக்கூடிய தசைகளும் தொடர்ந்து யோக தசைகளாக இருக்க வேண்டும்.


    இவை மட்டுமல்லாமல் ஒருவருடைய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய இந்த இடங்கள் மற்றும் அதன் அதிபதிகளோடு பாவ கிரக தொடர்பில்லாமல் இயற்கை சுப கிரகங்கள் உடைய தொடர்பையும் பெற்றிருக்க வேண்டும்.


 திருமண காலகட்டத்தில் கோச்சார அடிப்படையிலே ஏழரை மற்றும் அஷ்டமச் சனி போன்றவை நடப்பில் இருக்கக் கூடாது.


 உபய லக்கனங்களை பொறுத்தவரை ஏழாம் அதிபதியான குரு மற்றும் புதன் பகவான் இயற்கை சுப கிரகங்களாக இருந்தாலும் ஏழாம் இடத்திலே ஆட்சி பெற்ற நிலையில் இருக்கக் கூடாது. ஏனெனில் உபய லக்னங்களை பொருத்தவரை ஏழாம் அதிபதி பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதியாக வருவதால் ஏழாம் இடத்தில் ஆட்சி பெற்று இருக்கக் கூடாது மேலும் கேந்திராதிபத்திய தோஷத்தையும் அவை தரக்கூடிய நிலையில் உள்ளதால் மறைவிடங்களில் இருப்பது நல்ல மனைவியை அமைத்துக் கொடுக்கும்.


இதே போல கடக மற்றும் சிம்ம லக்கனங்களுக்கு ஏழாம் இடத்தில் சனி பகவான் ஆட்சி பெற்று நிற்பதும் , ரிஷப மற்றும் துலாம் லக்னங்களுக்கு ஏழாம் இடத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று நிற்பதும் நல்ல மனைவியை தர இயலாத நிலையை குறிக்கும். மாறாக அவை மறைவிடங்களில் நின்று வலுப்பெற்று இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்படும் பொழுது மட்டுமே நல்ல மனைவியை ஜாதகருக்கு கொடுக்கும்.


 சில நேரங்களில் லக்கனாதிபதியும் ஏழாம் அதிபதியும் ஒன்றுக்கொன்று ஆட்சி பெற்ற நிலையில் இருப்பது கூட ஒருவருக்கொருவர் ஈகோ மனப்பான்மை கொண்ட ஐ எம் ரைட் பாலிசி என்று அமைப்பில் உள்ள மனைவி அமையும் என்பதால் அவர்களுக்கு இடையே ஒரு விதமான பனிப்போர் உண்டாகும்.


  எனது நண்பர் ஒருவருக்கு ரிஷப லக்னம் அவருக்கு லக்னத்தில் சுக்கிரன் ஆட்சி, ஏழாம் இடத்தில் செவ்வாய் ஆட்சி இதுபோன்ற நிலையில் கடைசி வரை ரயில் தண்டவாளம் போல் அவர்களுடைய இல்லற வாழ்க்கையும் பட்டும் படாமலே கடைசி வரை போய் சேர்ந்துவிட்டது.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay 


097151 89647 


Another cell no: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Tuesday, 3 June 2025

புதிய கோணத்தில் புதன் பகவான்

 புதிய கோணத்தில் புதன் பகவான் .





செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவர் ஜாதகத்தில் மனதை என்றும் இளமையாகவும் மற்றும் புதுமையாகவும் வைத்து கொள்ளவும் பெரிதும் துணை புரிவது புதன் பகவான் என்பதால் புதன் பகவானை "இளமைக்கும் மற்றும் புதுமைக்கும் காரக கிரகமாக விளங்குகிறது .


   எவர் ஒருவர் தமிழ் இலக்கண , இலக்கியங்களை விரும்பி அதிகமாக படிக்கிறார்களோ அவருக்கு மனதானது என்றும் இளமையாக இருக்கும்..அதே போல இந்த உலகிற்கு புதிய ஒன்றை படைக்கும் படைப்பாற்றல் மிக்கவராக திகழ்கிறார்களோ அவர்களது மனதும் இளமைக்கும் மற்றும் புதுமைக்கும் காரண கர்த்தாவாக விளங்குகிறது.


   புதன் பகவான் இந்த உலகிற்கு புதிய ஒன்றை படைக்கும் படைப்பாற்றல் மிக்க கிரகம் ஆகும். புதன் பகவான் படிப்பறிவுக்கும் மற்றும் பட்டறிவுக்கும் காரண கர்த்தாவாக விளங்குகிறது.

"நூல் பல கல் ' என்பது தமிழ் மூதாட்டி ஒளவையின் அமுத மொழி ஆகும்.ஒளவையின் அமுத மொழிக்கு ஏற்ப நூல்கள் பல படிக்கக்கூடிய யோகம் படைத்தவராக திகழ வைப்பது புதன் பகவான் ஆவார்.


    படிப்பறிவு மட்டும் அல்லாது பெற்ற அறிவுக்கும் மற்றும் அனுபவ அறிவுக்கும் காரக கிரகம் புதன் பகவான் என்பதால் புதன் பகவானை பலமாக பெற்றவர்கள் பல்கலை வித்தகர்களாக திகழ்வார்கள்.


  புதன் வித்தை காரகன் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் புதன் பகவான் நுண்கலை என்று அழைக்கக்கூடிய பேச்சு, ஓவியம் வரைதல், பாட்டு பாடுதல் ,சிலை சிற்பங்கள் செய்தல்,இசை ஈடுபாடு போன்ற வித்தைகளில் ஏதாவது ஒன்றில் சிறந்து விளங்க வைக்கும் கிரகம் ஆகும் . புதன் பகவானை பலமாக பெற்றவர்கள் எந்த ஒரு கலையையும் பார்த்தவுடன் எளிதாக கற்றுக் கொள்ளக்கூடிய ஈடுபாடுகள் அவர்களுக்கு இருக்கும்.


    வளர்பிறை சந்திர கேந்திரத்தில் புதன் பகவானை பலமாக பெற்றவர்கள் கணினி,ஜோதிடம் ,கதை எழுதுதல் , கவிதை புனைதல்,கணித அறிவு , வங்கி,நிதி துறை , தலையங்கம் எழுதுதல்,செய்திகளை சேகரித்தல், புள்ளி விவரங்களை சேகரித்தல் , புள்ளியியல் அறிவு , மற்றும் ஆலோசகராக செயல்படுதல் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய தன்மை படைத்தவராக மாற்றக்கூடிய தன்மை புதன் பகவானுக்கு உண்டு.


  எல்லோரும் ஒரு கோணத்தில் சிந்தனை செய்ய புதன் பகவானை வலிமையாக பெற்றவர்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து செயல்படும் ( different angle) ஆளுமை படைத்தவரகளாக திகழ்வார்கள்.கதை , கவிதை, கட்டுரை, தலையங்கம் எழுதுதல், பாடல் எழுதுதல் போன்ற வகையில் தனது கற்பனை திறனை பயன்படுத்தி புகழ் அடையும் தன்மை ஆனது புதன் பகவானை இருக்கும் இடத்தைபொறுத்து அமைகிறது.


 புதியன படைத்தல், கண்டுபிடிப்பாளர், மற்றும் விஞ்ஞானி போன்ற துறைகளில் சிறந்து விளங்க புதன் பகவான் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.


  ஒரு தகவலை புள்ளி விவரங்கள் உடன் தருதல், நிகழ்ச்சி தொகுப்பாளர்,, நல்ல கல்வியறிவு படைத்தவர், படிக்காத மேதை , நகைச்சுவை ததும்ப பேச கூடியவர் மற்றும் செய்திகளை சேகரித்து சுவை பட தருபவர் போன்ற அனைத்திற்கும் புதன் பகவான் மிக முக்கியமான கிரகமாக விளங்குகிறது.


   புதன் பகவான் ஒரு பச்சோந்தி கிரகம் ஆகும் .நல்லவரோடு சேரும் போது நல்லவராகவும் ,கெட்டவர் உடன் சேரும் போது கெட்டவராகவும் விளங்கக்கூடியவர் எனவேதான் இவர் பாவி உடன் சேர்ந்த புதன் பாவ கிரகம் என்று அழைக்கப்படுகிறது.


   லக்கினத்தில் புதன் பகவான் திக் பலம் அடைந்து ஏழாம் இடத்தில் நிஷ் பலம் அடைகிறார்.ஆயில்யம்,கேட்டை மற்றும் ரேவதி ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கு புதன் தசா நாதனாக செயல்படுகிறது.

புதன் பகவான் 17 ஆண்டு தனது தசா காலம் ஆகும்..


புதன் பகவான் வளர்பிறை சந்திர கேந்திரத்தில் அல்லது குரு பகவான் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள நல்ல பலனை அதன் ஆதிபத்தியம் மற்றும் காரக அடிப்படையில் ஜாதகருக்கு நல்ல பலன்களை அளிக்கிறது.


 ஒருவர் சிறந்த கணித அறிவு, இசை அறிவு ,எழுத்து, சிறந்த ஜோதிட நிபுணர் மற்றும் கணினி வல்லுநர் போன்றவற்றில் தலைசிறந்த புகழ் படைத்த நபராக திகழ புதன் பகவான் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் பயன்படக் கூடியவர் ஆவார்.


புதன் பகவான் கல்வி நிலையங்களை வைத்து நடத்துபவராகவும் மற்றும் அதில் பணிபுரிவர்களாகவும் இருப்பவர்கள். புதன் பகவான் வலுப்பெற்றுள்ளீர் அரசியலை அலசுவதவதற்கும் மற்றும் விமர்சனங்களை தீர்க்கமான முறையில் சிந்தித்து தொலைநோக்கிய பார்வையில் பதில் தருவதற்கும் புதன் பகவானுடைய பங்கு மிகவும் அளப்பரியது.


    புதன் பகவான் மிகச் சிறந்த வியாபாரிகளை உருவாக்கக் கூடியவர். அறிவு ,ஞானம், புத்தி கூர்மை போன்ற அனைத்திற்கும் புதன் பகவானே காரணமாக விளங்குகிறது 

இதுவரை கண்டுபிடித்த மற்றும் இனி கண்டுபிடிக்க போகக்கூடிய அனைத்திற்கும் புதன் பகவானே காரக கிரகம் ஆகும்.


 புதன் பகவான் அதிக சுபத்துவ நிலையினை அடைந்து ராசி மற்றும் லக்கினத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடங்களோடு தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் புதன் பகவான் தொடர்பு கொள்ளும் தொழிலில் ஈடுபட்டு புகழ் அடைவார்கள். இதற்கு லக்கனாதிபதியும் மற்றும் நடக்கும் தசா புக்திகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்.


நன்றி.


For online appointment 


வாட்ஸ் அப் & கூகுள் பே & செல் 


097151 89647 


மற்றோரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A, BEd 

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

அறிவும், திறமையும் இருந்தும் உயரிய நிலையை அடைய முடியாமல் போக காரணம்

 அறிவும், திறமையும் இருந்தும் உயரிய நிலையை அடைய முடியாமல் போக காரணம் ?




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை! 


  ஒரு சிலர் சிறந்த அறிவாளிகளாக மேதைகளாக மற்றும் திறமைசாலிகளாக இருப்பார்கள் ஆனால் அவர்களுடைய அறிவும், மேதாவி தன்மையும் மற்றும் திறமையான செயல்களும் தக்க தருணத்தில் உதவாமல் கைவிடப்பட்டு அவருக்கு கீழான அறிவும் ,திறமையும் மற்றும் மேதாவித்தனமும் பெற்ற நபர்கள் பதவியில் அதாவது அரசுப் பணியில் அல்லது தொழில் நிறுவனத்தில் முன்னணி நிலைக்கு வந்து விடுவார்கள். ஏன் இவர்கள் அறிவும், திறமையும் படைத்தும் மேல் வர இயலாததற்கான காரணம் என்னவென்றால் அவர்களுக்கு உரிய அறிவு, திறமைக்குரிய கிரக அமைப்புகள் இருந்தாலும் தக்க தருணத்தில் குறிப்பாக வாலிப வயதில் அவயோக தசைகள் வந்து அவர்களுடைய அந்த அறிவையும், திறமையும் என்னதான் பயன்படுத்தினாலும் அந்த பதவிக்கு அவர்களால் அமர இயலாமல் போய் விடுவது உண்டு. 


இதற்கு உதாரணமாக மீனம் லக்கனம்,மீன ராசியில் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த ஒருவர் அவருடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் அந்த ஜாதகத்தில் லக்கனாதிபதியான குரு பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்ற நிலையில் இருந்தாலும் கல்விக்கு வித்தகளான புதன் உச்ச, ஆட்சி போன்ற நிலையில் குரு பகவானால் பார்க்கப்பட்ட நிலையில் இருந்தாலும் அவர் அறிவும் திறமையும் படைத்திருந்தும் அவர் சாதிக்கக் கூடிய அந்த காலகட்டத்தில் மீன லக்னம் மற்றும் மீன ராசிக்கு வரக்கூடாத அவயோக தசையான சுக்கிரன் மற்றும் சூரிய தசைகள் சரியாக சாதிக்கக் கூடிய காலகட்டத்தில் வந்து அந்த சாதனையின் உச்சநிலையை அவரால் அடைய முடியாமல் அவரோட கீழான அறிவு படைத்தவர்கள் அல்லது அவருக்கு பிறகு படித்தவர்கள் அந்த உயரிய பதவியில் அமர்வதைக் கண்டு மன வேதனை அடையக்கூடிய காலகட்டங்களை பார்த்திருக்கிறோம் .பிறகு அவர் எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் அந்த கால கட்டங்கள் வரை "எண்ணையை தேய்த்துக்கொண்டு மண்ணில் படுத்தாலும் அதிர்ஷ்டம் என்ற‌ மண் ஒன்றுகூட அவருக்கு ஒட்டாது .ஆனால் சந்திர தசை வந்த பிறகு அந்த இழந்த ஒன்றை அல்லது அந்த பதவியை கட்டாயம் அடைந்தே தீருவார்கள்.


ஜாதக கட்டத்தில் உள்ள நல்ல கிரகங்களின் கலப்பினால் ஜாதகர் நல்ல அறிவாளியாக திறமையாக இருந்தாலும் தக்க தருணத்தில் தக்க தசை வராத காலத்தால் கடுமையாக கஷ்டப்படக் கூடிய பல நபரை நாம் சாதக அடிப்படையில் ஆய்வு செய்து பார்த்ததுண்டு.


அதே நேரத்தில் மீன லக்னம், ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரத்தில் ஒருவர் பிறந்திருப்பார் எனில் அவருக்கு இளம் வயதிலேயே சூரிய ,சந்திர ,செவ்வாய் மற்றும் குரு தசைகள் தொடர்ந்து வந்து அவை யோகம் தரக்கூடிய தசையாக இருப்பதால் இளம் வயதிலேயே அறிவும், திறமையும் இருந்தும் இள வயதிலேயே சாதிக்க கூடிய வாய்ப்பு அவருக்கு கிட்டி விடுவது உண்டு.


 ஒருவருக்கு அறிவும் திறமையும் இருந்தாலும் ஜாதக கட்டத்தில் நல்ல கிரக நிலைகள் இருந்தாலும் அவருக்கு நடக்கக்கூடிய தசாபுத்தி உகந்ததாக இல்லாத போது என்ன தான் முயற்சி செய்தாலும் அவர்களால் அந்த குறிப்பிட்ட காலம் வரை அந்த உயரிய நிலையை அடைய முடியாமல் போய் விடுகிறார்கள். 


   தசா புத்திகளே மனிதனுடைய வாழ்வியல் சம்பவங்களை எடுத்துக்காட்டுகின்றன. எனவே என்னதான் யோகம் பெற்ற கிரக அமைப்புகள் இருந்தாலும் தசா புத்தியை சார்ந்து மனித வாழ்வியல் அமைகிறது.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay 


  097151 89647 


Another cell 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.