Friday, 6 June 2025

மகிழ்ச்சியும்,மன நிறைவும் நிரம்பிய மண் வாழ்க்கை அமைய

 மகிழ்ச்சியும்,மன நிறைவும் தரும் வாழ்க்கை அமைய....




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   இல்லறம் அல்லாது நல்லறம் அன்று.

மகிழ்ச்சியான மண வாழ்க்கை அமைய நல்ல வாழ்க்கைத் துணை அமைய வேண்டும். 


உள்ளதைக் கொண்டு நிறைவு பெறக்கூடிய உன்னத அன்பு இருக்க வேண்டும்.


வான் புகழ் கொண்ட வள்ளுவர் கூட  "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" என்று கூறினார்.


 உள்ளத்தை கொள்ளை கொள்ளக்கூடிய வாழ்க்கை  துணையாக இருக்க வேண்டும்.


   குடும்பத்திற்கு இவள் வந்த பிறகு அந்த குடும்பமே 

    "குத்து விளக்காக  குல மகளாக நீ வந்த நேரம் "


    என்று புகழ் பாடும் அளவிற்கு உயர்வான  மனைவி /கணவன்  அமைய அவருடைய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய ஏழாம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் இதனால் தான் நம் முன்னோர்கள் 


   "ஏழாம் இடம் சுத்தமானால் எல்லோருக்கும் நல்லவள்" என்றார்கள். ஏழாம் இடத்தில் எந்த கிரகங்கள் இல்லாமல் இருப்பது சிறப்பு என்றாலும் அந்த ஏழாம் இடத்தையும் எந்தவிதமான பாவ கிரகங்கள் பார்க்காமல் இருப்பது என்பதும் சால சிறந்தது ஆகும். அதே நேரத்தில் ஏழாம் இடத்தை சுப கிரகங்கள் பார்வை செய்தால் நல்லது.


 ஏழாம் அதிபதி ஆட்சி பெற்று நின்றாலும் நல்லது. ஏழாம் அதிபதி கேந்திர கோணங்களில் நின்றாலும் நல்ல பலனை தரும் என்றாலும் விதி விலக்காக 

ஏழாம் அதிபதி பாவ கிரகங்களாக இருந்தால் ஏழாம் இடத்திலே ஆட்சி பெற்று இருப்பது நல்லதல்ல.


   உதாரணமாக ரிஷப மற்றும் துலாம் லக்னத்திற்கு ஏழாமிடத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பதும்,

 கடகம் மற்றும் சிம்ம லக்னங்களுக்கு ஏழாம் இடத்தில் சனி ஆட்சி பெற்று இருப்பதும்  உகந்தது அல்ல..


   இதேபோல கடக லக்கினத்திற்கு ஏழாம் இடத்தில் செவ்வாய் உச்சம் பெற்று நிற்பதும், மேஷ லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் சனி உச்சம் பெற்று நிற்பதும் நல்ல வாழ்க்கை துணை அமைவது சிரமம் ஆகும்.இதில் விதிவிலக்காக அந்த கிரகத்தை சுபர் பார்வை செய்வது பலன்களை மாற்றி அமைக்கும்.


ஏழாம் அதிபதி இயற்கை சுப கிரகங்களாக இருந்து ஆட்சி பெற்று அல்லது உச்சம் பெற்று நிற்பது நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கும் என்றாலும் இதிலும் சில விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கிறது உபய லக்கனங்களுக்கு ஏழாம் அதிபதி பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதி என்பதாலும் மேலும்  கேந்திரத்தில் உச்ச ,ஆட்சி போன்ற நிலையில் வலுப்பெற்று நிற்க்கும் பொழுது கேந்திர ஆதிபத்திய தோஷத்தை தரும் என்றாலும் அவர்கள் ஏழாம் இடத்திலே இல்லாமல் இருப்பது நல்லது ஆகும்.


 அதாவது தனுசு மற்றும் மீனம் போன்ற உபய லக்கனங்களுக்கு குரு மற்றும் புதன் களத்திர ஸ்தானமான ஏழாம்  இடத்தில் வலுப்பெற்று நிற்பது நல்ல பலனை தராது.


அதிலும் குறிப்பாக ஏழாம் இடத்தில் ஆட்சி பெற்ற குரு அல்லது புதன் நின்று தசை நடப்பில் அல்லது அடுத்த தசையாக இருப்பின் கட்டாயம் அவருக்கு மணம் முடிக்க கூடாது.


  சில நேரங்களில் லக்கனாதிபதி மற்றும் ஏழாம் அதிபதி ஆகிய இருவரும் ஆட்சி

பெற்று நிற்பதும் ஈகோ நிறைந்த மண் வாழ்க்கை அமைந்து விடும்.


  எனவே மகிழ்ச்சியான மண வாழ்க்கை அமைய ஏழாம் இடத்தில் எந்த கிரகங்கள் இடம் பெறாமல் சுத்தமாக இருப்பது தான் நல்லது.ஆனால் அதே நேரத்தில் ஏழாம் இடத்தையும் அதன் அதிபதி மற்றும் களத்திரகாரன் சுக்கிரன் ஆகிய மூவரையும் இயற்கை சுப கிரகங்கள் என்று அழைக்கப்படக்கூடிய குரு பகவான், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள வேண்டும் .


இவை ஒருவருக்கு மட்டுமல்லாமல் தம்பதியர்கள் இருவருடைய ஜாதகத்திலும் இதே போன்ற அமைப்பு இருக்க வேண்டும்.


நடப்பில் இருக்கும் தசையும் தொடர்ந்து நடக்கக் கூடிய தசையும் யோகத்தை தரக்கூடிய வகையில் அமைந்திருக்க வேண்டும்.


எனவே மகிழ்ச்சியான மன நிறைவான ஒரு வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொள்வதற்கு ,

வெறும் நட்சத்திர பொருத்தங்களை மட்டும் பார்க்காமல் ஜாதக கட்டத்தை கொண்டு  லக்கனம், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தாளமான எட்டாம் இடம் அதன் அதிபதி, தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய சுக்கிரன் மற்றும் புத்ர பாக்கியம் தரக்கூடிய குருபகவான் ஆகிய அனைத்தையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும் .அவ்வாறு ஆய்வு செய்து நடக்கும் தசா புத்தி மற்றும் கோச்சார பலன் கொண்டு ஒப்பிட்டு  பார்த்து பொருத்தம் பார்க்கும் பொழுது தான் மகிழ்ச்சியும் மன நிறைவும்  உடைய வாழ்க்கைத் துணை அமையும்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay 


 097151 89647 


My another cell no: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: