திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது ஜாதக கட்டம் சொல்வதே சட்டம்
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை!
"திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் ". என்பார்கள். தன் பிள்ளைகளுக்கு திருமண வரன் தேடக்கூடிய பெற்றோர்கள் வெறும் நட்சத்திரப் பொருத்தங்களை மட்டும் நம்பி திருமணம் செய்து வைத்து விடாதீர்கள். இவ்வாறு நட்சத்திர பொருத்தங்களை மட்டும் நம்பி செய்யக்கூடிய திருமணங்கள் தான் பிரச்சனைகளில் போய் முடிந்து விடுகிறது .எனவே திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது முதலில் இருவருடைய ஜாதகங்களிலும் திருமணம் செய்யக்கூடிய காலகட்டம் இருவருக்கும் வந்து உள்ளதா ? என்பதை முதலில் கவனிக்க வேண்டும். பிறகு இருவருடைய ஜாதகத்திலும் திருமண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய லக்கனம் என்ற ஒன்றாம் இடம் ,
குடும்ப ஸ்தானம் என்ற இரண்டாம் இடம், களத்திர ஸ்தானம் என்ற ஏழாமிடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் என்ற எட்டாம் இடம் அதன் அதிபதிகள் மேலும் திருமண காரகன் அல்லது களத்திர காரகன் என்று அழைக்கக்கூடிய சுக்கிர பகவான் மற்றும் புத்திர காரகன் என்று அழைக்கக்கூடிய குரு பகவான் ஆகியவற்றை ஆய்வு செய்து பார்த்து திருமணம் செய்ய வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள நான்கு ஸ்தானங்களையும் அதன் அதிபதிகளையும் நன்றாக ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும் அந்த நான்கு ஸ்தானங்களுடன் அல்லது அதன் அதிபதிகளுடன் பாவ கிரகங்களான சனி, செவ்வாய் ,ராகு, கேது போன்ற பாவ கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு பெற்று இருக்கிறதா? என்று கவனிக்க வேண்டும் அவ்வாறு தொடர்பு பெற்ற நிலையில் அவர்களுக்கு திருமணம் செய்யும் பொழுது இன்னும் நன்றாக ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு பாவ கிரகங்கள் தொடர்பு பெற்ற நிலையில் வேறு ஏதேனும் வகையில் சுபத் தன்மை அடைந்துள்ளதா என்பதை கவனிக்க வேண்டும் அதாவது இயற்கை சுப கிரகங்களான குரு பகவான் , வளர்பிறை சந்திரன் தனித்த புதல் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு பெற்றுள்ளதா ? என்பதையும் கவனிக்க வேண்டும் .அவ்வாறு பெற்று இருப்பின் அந்தப் பாவ கிரகங்களும் தனது பாவத்தன்மை இழந்து சுபத் தன்மை அடைந்து நல்ல பலனை தர வைத்து விடுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள அந்த நான்கு ஸ்தானங்களுடன் இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு பகவான் வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவை பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளக் கூடிய நிலையில் அவை எவ்வித பாதிப்பும் இல்லாமல் இள வயதில் மனதுக்குப் பிடித்த மனைவி அல்லது கணவன் அமைந்து விடுகிறான்..
1,27,8 ஆகிய ஸ்தானங்களுடன் பாவ கிரகங்கள் உடைய தொடர்பு பெற்றுள்ள நிலையில் நடக்கக்கூடிய தசா புத்திகளில் கவனிக்க வேண்டும். தற்சமயம் நடக்கக்கூடிய தசா புத்திகள் நன்றாக உள்ளதா ? திருமணத்திற்கு பிறகு உகந்த தசா புத்திகளா என்பதை கவனிக்க வேண்டும் . சில நேரங்களில் திருமணம் செய்யக்கூடிய காலகட்டத்தில் நல்ல தசா புத்தி நடந்து அதனை அடுத்து வரக்கூடிய தசா புத்திகள் அவயோக தசை அல்லது ஆறு எட்டுக்குடைய தசா புத்திகளாக இருப்பின் அவர்களுக்கிடையே திருமணம் செய்வதை தவிர்க்கப்பட வேண்டும்.
லக்கினத்தை குரு பார்த்த ஜாதகத்தை, லக்கினத்தை சனி பார்த்த சாதகங்களுடன் இணைக்க கூடாது. லக்னத்தை குரு பார்த்த சாதகம் நீதி ,நேர்மைக்கு கட்டுப்பட்டவராக நல்ல தேஜஸ் உடையவராக , நல்ல தன்மை படைத்தவராக இருப்பார். ஆனால் லக்னத்தை சரிபார்த்த ஜாதகத்தை இணைக்கும் போது அவர் பொறாமைப்படும் குணம், சோம்பேறித்தனம் ,சுறுசுறுப்பு இல்லா தனம் குள்ளத்தன்மை உடையவராக இருப்பார் .இவர்கள் இவருக்கு இடையே இல்லற வாழ்வு சிறக்காது.
எனவே திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது இருவருடைய ஜாதகத்தையும் லக்கனம் ,லக்னாதிபதி , ராசி ,ராசி அதிபதி தாம்பத்ய சுகத்தை தரக்கூடிய சுக்கிரன் புத்ர பாக்கியம் தரக்கூடிய குருபகவான் ஆகியோருடைய நிலைமைகளை நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
குழந்தை பாக்கியத்தைப் பொறுத்தவரை ஐந்தாம் இடம் அதன் அதிபதி மற்றும் காரக கிரகம் குரு பகவான் ஆகியவற்றை லக்கனம் மற்றும் ராசி ஆகிய இருவழிகளில் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
திருமண பந்தத்தில் ஈடுபட இருக்கும் இருவரது ஜாதகத்திலும் ஏழாம் இடம் அதன் அதிபதியை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கெட்டு பதினோராம் இடம் அதிபதி வலுத்திருந்தால் அவர்களுக்கு தார யோகம் உண்டு இது போன்ற விஷயங்களையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
தம்பதிகள் இருவருடைய ஜாதகத்திலும் காமஸ்தானம் என்று அழைக்க கூடிய 3, 7 மற்றும் 12ஆம் இடங்களையும் அதில் இடம் பெறக்கூடிய கிரக அமைப்புகளையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
ஒருவர் ஜாதகத்தில் மூன்றாம் இடம் காம வீரியம் எந்த அளவில் உள்ளது என்பதை அறிய பயன்படுகிறது ஏழாம் இடம் கணவன் மனைவி இருவருக்கும் இடையேயான காமநிலை , உடல் இன்ப நிலை பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது. 12ஆம் இடம் படுக்கை சுகம் பற்றி அறியப்படுகிறது.
சுக்கிரன் ,சனி ,செவ்வாய் ,ராகு மற்றும் தேய்பிறை சந்திரன் போன்ற பாவ கிரக சேர்க்கைகள் மற்றும் பார்வைகள் தொடர்புகள் இருந்தால் வேறு வகையில் சுபத்தும் இல்லாத நிலையில் மிகுந்த காம எண்ணம் உடையவராக முரனுக்கு மாறான காம எண்ணம் படைத்தவராக பலரது மஞ்சத்தில் காம இன்பம் சுவைக்க விரும்புவராக இருப்பார்.
எனவே வரன் தேடக்கூடிய பெற்றோர்கள் இது போன்ற விஷயங்களையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
திருமண காலத்தில் கோச்சார அடிப்படையில் ஏழரை அஷ்டம சனி
,ராகு கேது,குரு பெயர்ச்சி பலன்கள் போன்றவைகள் எந்த அளவிற்கு உகந்ததாக உள்ளது என்பதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
12 ராசிகளில் நவக்கிரகங்கள் தொடர்பை பெறக்கூடிய நிலையில் அதில் குறிப்பாக லக்கனம் , இரண்டு, ஏழு. எட்டாம் இடத்தில் பார்வை அல்லது சேர்க்கை முறையில் பாவ கிரகங்கள் இடம் பெற்றால் அவைகளுக்கு இடையேயான கிரக கலப்பை பொறுத்து நடக்க கூடிய தசா புத்திகள் உடன் ஒப்பிட்டு ஆய்வு செய்து பலன் அறியப்பட வேண்டும்.
நன்றி
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல் 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்
No comments:
Post a Comment