அறிவும், திறமையும் இருந்தும் உயரிய நிலையை அடைய முடியாமல் போக காரணம் ?
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒரு சிலர் சிறந்த அறிவாளிகளாக மேதைகளாக மற்றும் திறமைசாலிகளாக இருப்பார்கள் ஆனால் அவர்களுடைய அறிவும், மேதாவி தன்மையும் மற்றும் திறமையான செயல்களும் தக்க தருணத்தில் உதவாமல் கைவிடப்பட்டு அவருக்கு கீழான அறிவும் ,திறமையும் மற்றும் மேதாவித்தனமும் பெற்ற நபர்கள் பதவியில் அதாவது அரசுப் பணியில் அல்லது தொழில் நிறுவனத்தில் முன்னணி நிலைக்கு வந்து விடுவார்கள். ஏன் இவர்கள் அறிவும், திறமையும் படைத்தும் மேல் வர இயலாததற்கான காரணம் என்னவென்றால் அவர்களுக்கு உரிய அறிவு, திறமைக்குரிய கிரக அமைப்புகள் இருந்தாலும் தக்க தருணத்தில் குறிப்பாக வாலிப வயதில் அவயோக தசைகள் வந்து அவர்களுடைய அந்த அறிவையும், திறமையும் என்னதான் பயன்படுத்தினாலும் அந்த பதவிக்கு அவர்களால் அமர இயலாமல் போய் விடுவது உண்டு.
இதற்கு உதாரணமாக மீனம் லக்கனம்,மீன ராசியில் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த ஒருவர் அவருடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் அந்த ஜாதகத்தில் லக்கனாதிபதியான குரு பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்ற நிலையில் இருந்தாலும் கல்விக்கு வித்தகளான புதன் உச்ச, ஆட்சி போன்ற நிலையில் குரு பகவானால் பார்க்கப்பட்ட நிலையில் இருந்தாலும் அவர் அறிவும் திறமையும் படைத்திருந்தும் அவர் சாதிக்கக் கூடிய அந்த காலகட்டத்தில் மீன லக்னம் மற்றும் மீன ராசிக்கு வரக்கூடாத அவயோக தசையான சுக்கிரன் மற்றும் சூரிய தசைகள் சரியாக சாதிக்கக் கூடிய காலகட்டத்தில் வந்து அந்த சாதனையின் உச்சநிலையை அவரால் அடைய முடியாமல் அவரோட கீழான அறிவு படைத்தவர்கள் அல்லது அவருக்கு பிறகு படித்தவர்கள் அந்த உயரிய பதவியில் அமர்வதைக் கண்டு மன வேதனை அடையக்கூடிய காலகட்டங்களை பார்த்திருக்கிறோம் .பிறகு அவர் எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் அந்த கால கட்டங்கள் வரை "எண்ணையை தேய்த்துக்கொண்டு மண்ணில் படுத்தாலும் அதிர்ஷ்டம் என்ற மண் ஒன்றுகூட அவருக்கு ஒட்டாது .ஆனால் சந்திர தசை வந்த பிறகு அந்த இழந்த ஒன்றை அல்லது அந்த பதவியை கட்டாயம் அடைந்தே தீருவார்கள்.
ஜாதக கட்டத்தில் உள்ள நல்ல கிரகங்களின் கலப்பினால் ஜாதகர் நல்ல அறிவாளியாக திறமையாக இருந்தாலும் தக்க தருணத்தில் தக்க தசை வராத காலத்தால் கடுமையாக கஷ்டப்படக் கூடிய பல நபரை நாம் சாதக அடிப்படையில் ஆய்வு செய்து பார்த்ததுண்டு.
அதே நேரத்தில் மீன லக்னம், ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரத்தில் ஒருவர் பிறந்திருப்பார் எனில் அவருக்கு இளம் வயதிலேயே சூரிய ,சந்திர ,செவ்வாய் மற்றும் குரு தசைகள் தொடர்ந்து வந்து அவை யோகம் தரக்கூடிய தசையாக இருப்பதால் இளம் வயதிலேயே அறிவும், திறமையும் இருந்தும் இள வயதிலேயே சாதிக்க கூடிய வாய்ப்பு அவருக்கு கிட்டி விடுவது உண்டு.
ஒருவருக்கு அறிவும் திறமையும் இருந்தாலும் ஜாதக கட்டத்தில் நல்ல கிரக நிலைகள் இருந்தாலும் அவருக்கு நடக்கக்கூடிய தசாபுத்தி உகந்ததாக இல்லாத போது என்ன தான் முயற்சி செய்தாலும் அவர்களால் அந்த குறிப்பிட்ட காலம் வரை அந்த உயரிய நிலையை அடைய முடியாமல் போய் விடுகிறார்கள்.
தசா புத்திகளே மனிதனுடைய வாழ்வியல் சம்பவங்களை எடுத்துக்காட்டுகின்றன. எனவே என்னதான் யோகம் பெற்ற கிரக அமைப்புகள் இருந்தாலும் தசா புத்தியை சார்ந்து மனித வாழ்வியல் அமைகிறது.
நன்றி.
For online appointment
Cell & WhatsApp & Gpay
097151 89647
Another cell 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment