ஜாதக கட்டத்தில் கிரகங்கள் எப்படி இருந்தால் நல்ல பலனை தரும்?
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒரு கிரகம் தனித்து நின்று ஒரு மாதிரியான பலனையும், மற்ற கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை நிலையினை பெறும் பொழுது வேறு மாதிரியான பலனையும் ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.
ஒரு கிரகம் தனித்து நின்று நீசம் பெற்று இருந்தால் கூட ஒரளவு நல்ல பலனை ஜாதகருக்கு கொடுத்து விடும்.ஆனால் அதே நேரத்தில் பாவ கிரகங்கள் ஆன சனி , செவ்வாய், ராகு மற்றும் கேது போன்ற கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை நிலையினை பெற்றால் கடுமையான கஷ்டங்களை ஜாதகருக்கு கொடுத்து விடுகிறது.
உதாரணமாக சுக்கிரன் நீசம் பெற்று இருந்தால் கூட ஒரு மனைவி ஆனால் அந்த நீசம் பெற்ற கிரகத்துடன் ராகு சேர்ந்து சனி, செவ்வாய் பார்வையை பெற்ற நிலையில் அவர் விதவைப் பெண், அழுக்கான பெண் மற்றும் சொல்லிக் கொள்ள வெட்கப்படக் கூடிய நிலையில் உள்ள பெண்ணுடன் தவறான தொடர்பு நிலையினை வைத்திருப்பார். சுபர் பார்வை பெற்றால் பலனில் மாற்றம் ஏற்படும்.
இதேபோல குரு பகவான் நீசம் பெற்று இருந்தால் கூட ஒரு பெண் குழந்தையை கொடுத்து விடுவார். ஆனால் அதே நேரத்தில் குரு பகவான் உடன் சனி அல்லது ராகு நெருக்கமாக இணைந்த நிலையில் அல்லது சனி மற்றும் செவ்வாய் இருவரின் பார்வையைப் பெற்றுள்ள நிலையில் புத்திர பாக்கியம் தர இயலாத நிலையினை ஜாதகர் பெறுவார் .இவை ஐந்தாம் இடம் மற்றும் அதன் அதிபதியை பொறுத்து பலனில் மாற்றம் ஏற்படலாம்.
பாவ கிரகங்கள் ஆன சனி , செவ்வாய் தனித்த நிலையில் பலம் அடைந்து இருக்கும் பொழுது நன்மையை ஜாதகருக்கு செய்யாமல் அதன் தன்மையை ஜாதகருக்கு கொடுக்கிறது.
சில நேரங்களில் உபய லக்கனங்களான தனுசு, மீனம், மிதுனம் மற்றும் கன்னி ஆகிய லக்கனங்களுக்கு இயற்கை சுப கிரகமான குரு மற்றும் புதன் பகவான் தனித்த நிலையில் கேந்திரங்களில் நின்று இருந்தால் அவை கேந்திராதிபத்திய தோஷத்தை தந்து அந்த கிரகத்துக்குரிய ஆதிபத்திய மற்றும் காரக பலனை சாதகருக்கு ஒழுங்காக கொடுப்பதில்லை.
மிதுனம் லக்னத்தில் பிறந்து நான்காம் இடத்தில் புதன் பகவான் உச்சம், ஆட்சி,மூல திரிகோணம் போன்ற மூன்று நிலைகளில் வலு பெற்று நின்றாலும் அவை கேந்திர ஆதிபத்திய தோஷத்தை ஜாதகருக்கு தந்து புதனுக்கு உரிய காரக பலனை ஜாதகருக்கு கொடுக்க மாட்டார். பொதுவாக புதன் பலம் பெற்றால் கணித அறிவியல் மற்றும் கணிப்பொறி அழிவு மிக்கவராக திகழ வேண்டும் ஆனால் மேற்கண்ட வகையில் மேலும் மிதுனம் லக்கினத்திற்கு நான்காம் இடத்தில் புதன் இருக்கும் பொழுது பள்ளிக்கூடம் என்றால் என்ன என்று மழைக்கு கூட பள்ளிக்கூடத்தில் ஒதுங்காதவராக இருப்பார்.
சில நேரங்களில் பாவ கிரகங்கள் நேரடியாக உச்சம் மற்றும் ஆட்சி போன்ற ஸ்தான வலிமையை பெறக்கூடாது.மாறாக பாவ கிரகங்கள் திக் பலம் பெறும் பொழுது நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.
உதாரணமாக துலாம் லக்னத்திற்கு செவ்வாய் நான்காம் இடத்தில் உச்சம் பெற்று ஸ்தான பலம் பெற்று இருப்பதை விட பத்தாம் இடத்தில் நீசம் பெற்று திக் பலம் பெற்றிருப்பது ஜாதகருக்கு நல்ல பலன்களை அள்ளி தரக்கூடிய அமைப்பாக மாறுகிறது.
செவ்வாய் பகவான் பாவ கிரகமாக இருந்தாலும் அதன் நட்பு கிரகமான
குரு ,சந்திரன் ,சூரியன் உடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது நல்ல பலனை தரக்கூடிய அமைப்பாகவே அமைகிறது இந்த இடத்தில் பாவ தன்மையை அடைவதில்லை..
ஒரு ஜாதகத்தில் பெரும்பாலான கிரகங்கள் குரு பகவானுடைய பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில்
இருந்து குரு பகவான் பார்வையை பெற்ற கிரக தசைகள் தொடர்ந்து வரக்கூடிய ஜாதகம் நல்ல பலனை தரக்கூடிய ஜாதகமாக திகழ்கிறது.
ஒருவர் ஜாதகத்தில் வளர்பிறை சந்திரனுக்கு ஆறு ,ஏழு மற்றும் எட்டில் இயற்கை சுப கிரகங்கள் அமர்ந்து அந்த தசைகள் தொடர்ந்து வரக்கூடிய நிலையில் ஜாதகர் மிகுந்த யோகம் படைத்த சாதகமாக கருதப்படுகிறது. பௌர்ணமி அமைப்பில் பிறந்து இருப்பின் ஆளுமை மிகுந்த அமைப்பாகும்.
உங்கள் ஜாதகத்தில் நட்பு கிரகங்கள் ஒன்றுக்கொன்று கேந்திர கோணங்களில் அமர்ந்து பாவ கிரகங்கள் ஒன்றை ஒன்று தொடர்பு கொள்ளாத நிலையில் உள்ள ஜாதக அமைப்பு யோகங்கள் தரும் ஜாதகம் அமைப்பாக கருதப்படுகிறது.
நன்றி.
ஜோதிட ஆலோசனை பெற
செல் & வாட்ஸ் அப் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல் : 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment