Friday, 6 June 2025

நீசம் பெற்ற கிரகங்கள் தரும் பலன்கள்

 நீசம் பெற்ற கிரகங்கள் தரும் பலன்கள்.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

 

   ஒருவர் ஜாதகத்தில் எந்த ஒரு கிரகம் நீசம் அடைந்திருந்தாலும் கூட  கெட்ட பலனை தந்து விடுவதில்லை.ஆனால் அவை பாவ தன்மையை அடைந்துவிட்டால்  மட்டும் கடுமையான கெட்ட பலன்களை தந்து விடுகிறது . 


    நீசம் அடைந்த கிரகம் பாவ கிரகங்கள் ஆன சனி , செவ்வாய், ராகு , கேது  மற்றும் தேய்பிறை சந்திரன் போன்ற கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் கடுமையான கெட்ட பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.


  மேஷத்தில் சனி பகவான், கடகத்தில் செவ்வாய் பகவான்,கன்னியில் சுக்கிரன் பகவான், துலாத்தில் சூரிய பகவான் , மகரத்தில் குரு பகவான் மற்றும்   மீனத்தில் புதன் பகவான் நீசம் அடைந்து விடுகிறது.


   நீசம் அடைந்த கிரகம் பரிவர்த்தனை பெற்றால் இழந்த வலிமையை மீண்டும் பெறுகிறது.


    நீசம் அடைந்த கிரகம் ராசியிலும் மற்றும் அம்சத்திலும் ஒரே வீட்டில் இருந்தால் வர்க்கோத்தமம் என்று பெயர் . இவை இழந்த வலிமையை மீண்டும் பெறுகிறது.

  

      நீசம் பெற்ற கிரகங்கள் ஒருவரையொருவர் பார்த்து கொண்டால் அவை இழந்த வலிமையை மீண்டும் பெறுகிறது.


      நீசம் பெற்ற கிரகம் இருக்கும் ஒரே வீட்டில் உச்சம் பெற்ற கிரகம் இருந்தாலும் நீசம் பங்கம் அடைகிறது.


      நீசம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்றாலும் நீச பங்கம் அடைகிறது.


  நீசம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் அடைந்து இருப்பின் அவை சந்திர கேந்திரத்தில் நின்றால் நீசம்பஙக ராஜயோகம் அடைகிறது.


 ஒரு கிரகம் நீசம் அடைந்து இருந்தாலும் அவை குறைந்த அளவு பலனை நந்து விடுகிறது.சுக்கிரன் நீசம் அடைந்து இருந்தால் கட்டாயம் ஒரு பெண்ணையாவது இன்ப சுகம் அடைய வைத்து விடுகிறது.சுக்கிரன் உச்சம் பெற்றால் பல பெண்ணுடனாவது தொடர்பு ஏற்பட்டு விடுகிறது.


 குரு பகவான் நீசம் அடைந்து இருந்தால் குறைந்த பட்சம் ஒரு பெண் குழந்தையாவது கொடுத்து விடுகிறது.பொருளாதரத்தில் குறைந்த பட்ச அளவு வருமானத்தை கொடுத்து விடுகிறது.


   பாவ கிரகங்கள் நீசம் அடைவது அவை ஜாதகருக்கு நல்ல பலன்களை தந்து விடுகிறது.இயற்கை சுப கிரகங்கள் நீசம் 

அடைந்தால் அதற்கு உரிய காரக பலனை குறைந்த பட்ச அளவு தந்து விடுகிறது.


 நிழல் கிரகங்கள் ஆன ராகு மற்றும் கேது பகவான் பருப்பொருள் இல்லாத நிழல் கிரகங்கள் ஆகும்.எனவே அவற்றிற்கு உச்சம், ஆட்சி மற்றும் நீசம் போன்ற ஸ்தான வலிமை கிடையாது.


  பொதுவாக நீசம் பெற்ற கிரகங்கள் வக்கிரம் பெறும் பொழுது அவை உச்சத்திற்கு நிகரான பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.

எனவே பாவ கிரகங்கள் நீசம் பெற்று வக்கிரம் பெறாமல் இருப்பது நல்லது.இயற்கை சுப கிரகங்கள் நீசம் பெற்று வக்கிரம் பெறுவது  நல்லது.


  இயற்கை சுப கிரகங்கள் நீசம் பெற்றால் அதற்கு உரிய காரக மற்றும் ஆதிபத்தியம் 

பலன்களை குறைக்கிறது. நீசம் பெற்ற இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு, சுக்கிரன் மற்றும் புதன் பகவான் சந்திர அதி யோகத்தால் நீசம் பெற்ற கிரகங்கள் ஆக இருந்தாலும் இழந்த பலனை மீண்டும் பெற்று நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.


     ஒளி கிரகங்களான சூரியன்  மற்றும் சந்திரன் நீசம் அடைந்து இருந்தாலும் பொளர்ணமி அல்லது பொளர்ணமியை நெருங்கும் அல்லது விட்டு விலகும் சந்திரனாக இருந்தாலும் சூரியன் மற்றும் சந்திரன் ஆனவர் பலம் பெற்ற கிரகமாக ஆகி விடுகிறது.


 நீசம் பெற்ற சூரியன் தனது ஆளுமை தன்மையை இழக்கிறது.தந்தை நிலை ,அரசு வேலை போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.


நீசம் பெற்ற சந்திரன் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.தாய் நிலையை பாதிப்பு அடைய செய்கிறது.


நீசம் பெற்ற செவ்வாய் சகோதர தோஷத்தை உண்டாக்குகிறது.பூமி யோகத்தை மட்டுப்படுத்துகிறது.


நீசம் பெற்ற புதன் வித்தை சாதுர்யத்தை குறைக்கிறது.மாமன் வர்க்கத்தை பாதிப்பு அடைய செய்கிறது.


நீசம் பெற்ற சுக்கிரன் திருமண தடை,  வண்டி வாகனம் , மற்றும் வீடு அமைவதில் யோகம் அற்ற நிலையை தருகிறது.


நீசம் பெற்ற சனி பகவான் ஆயுள் பங்கத்தை தவிர வேறு எந்த கெடுதலையும் தந்து விடுவதில்லை.


நன்றி.


For online appointment 


செல் & வாட்ஸ் அப் & கூகுள் பே 


  097151 89647 


Another cell no: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

   M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: