Tuesday, 3 June 2025

கோள்களின் கோளாட்டம் -(குரு பகவான்/

 கோள்களின் கோளாட்டம் (குரு பகவான்)




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  கோள்கள் மனித வாழ்வை வழிநடத்திச் செல்கிறது என்பதை தொடர் பதிவாக எழுதி வருகிறேன் . அந்த வகையில் இயற்கை சுப கிரகமாக திகழும் குரு பகவான் பற்றிய அடிப்படை தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம்.


 குரு பகவான் தன காரகன் என்றும், புத்திர காரகன் என்றும் அழைக்கப்படுகிறது.


    குரு பகவான்  தனம - பாக்கியம் - லாபம் என்று அழைக்கக்கூடிய இரண்டு,ஒன்பது மற்றும் பதினொன்றாம் இடத்திற்கு 

ஜட காரக கிரகமாக விளங்குகிறது.புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்திற்கு உயிர் காரக கிரகமாக விளங்குகிறார்.


   "குரு பகவான் பார்த்தால் கோடி நன்மையை தரும்" என்பார்கள்.ஆதலால் குரு பகவான் இருக்கும் இடம் மற்றும் பார்வை செய்யும் இடம் சுப தன்மையை அடைந்து நல்ல பலனை தரக்கூடிய அமைப்பாக மாறுகிறது.


 எல்லா கிரகங்களுக்கும் ஏழாம் பார்வை உண்டு என்றாலும் குரு பகவானுக்கு ஐந்து மற்றும் ஒன்பதாம் சிறப்பு பார்வை உண்டு.


  குரு பகவான் எந்த ஸ்தானத்தை பார்த்தாலும் அல்லது எந்த கிரகத்தை பார்த்தாலும் அந்த கிரகம் முழுமையான சுப தன்மையை அடைகிறது.


 பாவ கிரகங்கள் ஆன சனி , செவ்வாய், ராகு மற்றும் கேது பகவான் ஆனவர் 

குரு பகவானின் பார்வையை பெற்றவுடன் அவை அதன் தீய சக்தி வடிகட்டப்பட்டு கெட்ட பலனை தர விடாமல் செய்து விடுகிறது.அதே நேரத்தில் அவை நல்ல பலனையும் தருவதில்லை.


     குரு பகவான் உடன் எட்டு பாகைக்குள்ளாக இணைந்த சனி மற்றும் ராகு போன்ற பாவ கிரகங்கள் தனது பாவ தன்மையை இழந்து விடுகிறது அதே நேரத்தில் குரு பகவான் பாவ தன்மையை அடைந்து விடுகிறார்.இது போன்ற அமைப்பில் குருவுடன் இணைந்த பாவ கிரகங்கள் தசை நல்ல பலனை தந்து விடுகிறது.ஆனால் குரு பகவான் தசை கெட்ட பலனை தரும் நிலைக்கு மாறி விடுகிறது.


 குரு பகவான் உடன் சனி அல்லது ராகு இணைவது "குரு சண்டாள யோகத்தை தருகிறது.குரு மற்றும் சனி இணைவானது பிரம்மஹத்தி தோஷம் தருகிறது.


  சூரியன் பகவான் அரை பாவர் மற்றும் செவ்வாய் பகவான் முக்கால் பாவர் என்ற பொழுதிலும் குரு பகவான் உடன் இணையும் பொழுதோ அல்லது பார்வை செய்யும் பொழுதும் அவை நல்ல பலனை தரக்கூடிய அமைப்பாகவே உள்ளது . ஏனெனில் குரு பகவானுக்கு சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் நட்பு கிரகங்கள் ஆகும்.


 குரு பகவானுக்கு சுக்கிரன் மற்றும் புதன் பகை கிரகமாக விளங்குகிறது.


 குரு பகவான் பணம், பதவி, பட்டம், புகழ், கல்வி ,ஞானம் ,செல்வம் மற்றும் குழந்தை பாக்கியம் அனைத்திற்கும் காரக கிரகமாக விளங்குகிறது.


     குரு பகவான் சூரியன் இருக்கும் இடத்திற்கு ஐந்தாம் இடத்தில் வக்கிரம் அடைகிறது.ஏழாம் இடத்தில் அதி வக்கிரம் அடைந்து ஒன்பதாம் இடத்தில் வக்கிரம் நிவர்த்தி அடைகிறார்.


  குரு பகவான் லக்னத்தில் பிற்பலம் அடைகிறார் .ஏழாம் இடத்திற்கு  வரும்போது நிஷ் பலம் அடைகிறார்.


    குரு பகவான் ஒரு ராசியில் ஓராண்டு காலம் வாசம் செய்வார். தனுசு மற்றும் மீனம் ஆகிய இரண்டு வீடுகளுக்கு அதிபதியாக குரு பகவான் விளக்குகிறார். கடகத்தில் உச்சம் மற்றும் மகரத்தில் நீசம் அடைகிறார் .குரு பகவானுடைய மூலத் திரிகோண வீடு தனுசு ஆகும்.


    புனர்பூசம் ,விசாகம் , பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திர நாதனாக குரு பகவான் விளங்குகிறார் மொத்த தசைக்காலம் 16 ஆண்டுகள் ஆகும்.


    குரு பகவான் சந்திரன் உடன் இணையும் போது குரு சந்திர யோகம் தருகிறது.

,குரு பகவான் செவ்வாய் உடன் இணையும் போது குரு மங்கள யோகம் தருகிறது .


    ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் அதிக சுபத்துவ நிலையில் தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுது ஆசிரியர்,நீதிபதி, பட்டிமன்றம் கவியரங்கம்,மேடை பேச்சாளர், பேராசிரியர் போன்ற ஒயிட் கலர் ஷாப்பில் அமையக்கூடிய யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கும் .சுபத்துவ படிநிலைக்கு ஏற்ப நகைக்கடை வைத்து நடத்தும் முதலாளியாக மாற்றுவார்.


குரு பகவான் கேந்திரத்தில் உச்சம், ஆட்சி போன்ற நிலையில் பலம் பெற்று இருக்கும் பொழுது பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்றான ஹம்ச யோகம் என்ற பஞ்ச மகா புருஷ யோகத்தை தருகிறது.


   "கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும் "-என்ற பழமொழிக்கேற்ப குருபகவான் கெட்டுப்போன்ற நிலையிலும் ஜாதகருக்கு நல்ல பலன்களை தரக்கூடிய அமைப்பில் இருக்கிறது.


   குரு பகவான் புத்திர யோகத்தை தரக்கூடிய கிரகமாக விளங்குகிறது.ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் வலுப்பெற்ற நிலையில் குழந்தைகளால் பலன் பெறக்கூடிய யோகத்தை தருகிறது.


   குரு பகவான் லக்னம், ராசி மற்றும் அதன் அதிபதி ஆகியவற்றை பார்வை செய்த நிலையில் அந்த ஜாதகர் நீதி , நியாயம் மற்றும் நேர்மைக்கு கட்டுப்பட்டவராக திகழ்வார்.மிகுந்த யோகம் உடையவராக விளங்குவார்.


    குரு பகவான் லக்கனத்தில் இருந்தாலும் அல்லது லக்கினத்தை பார்த்தாலும் நல்ல தேஜஸ் உடையவராக திகழ்வார்.நல்ல குணம் படைத்தவராக, அடுத்தவர்களின் வளர்ச்சியை கண்டு பொறாமை படாதவராக விளங்குவார்.


    வாக்கு ஸ்தானத்தை குரு பார்வை செய்வதால் நல்ல வாக்கு வன்மை உடையவராக இருப்பார்.இதே போல எந்த ஸ்தானத்தை பார்த்தாலும் அல்லது இருந்தாலும் அந்த ஸ்தான பலனை சிறப்பாக செய்வார்.


  மூன்றாம் இடத்தில் குரு  பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டால் நல்ல புகழ் ,சகோதர ஆதரவு போன்றவை கிடைக்கும்.


நான்காம் இடத்தில் குரு பகவான் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது தன் சுகம், தாய் சுகம் ,கல்வியால் சுகம் ஃவண்டி வாகன சுகம் மற்றும் வீடு கட்டும் யோகம் போன்றவை உண்டாகும்.வெளி நாட்டு பயணம் உண்டாகும்.


   ஐந்தாம் இடத்திற்கு குரு பகவான் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டால் நல்ல புத்திர பாக்கியம், பூர்வ புண்ணிய யோகம் போன்றவை உண்டாகும்.


   ஆறாம் இடத்தில் குரு பகவான் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது நல்ல கடன்,பிணி மற்றும் எதிர்ப்பில் இருந்து விடுபடலாம்.


     ஏழாம் இடத்தில் குரு பகவான் தொடர்பு கொள்ளும் பொழுது நல்ல வாழ்க்கை துணை மற்றும் நல்ல நட்பு கிடைக்கும்.


    எட்டாம் இடத்தில் குரு பகவான் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது மறைபொருள் உண்மை வெளிப்படும், நீண்ட ஆயுள் மற்றும் வெளிநாட்டு பயணம் ஏற்படும்.


    ஒன்பதாம் இடத்தில் குரு பகவான் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது புகழுடைய தந்தை,எல்லாவித பாக்கியங்களும் கிடைக்கும்.


   பத்தாம் இடத்தில் குரு பகவான் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது நல்ல தொழில் நிலை உருவாகும்.ஜாதகர் போதகராக திகழ்வார்.


    பதினொன்றாம் இடத்தில் குரு பகவான் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது நல்ல லாபம், மூத்த சகோதரர் ஆதரவு மற்றும் இளைய மனைவி உதவி போன்றவை கிடைக்கும்.


    பன்னிரெண்டாம் இடத்தில் குரு பகவான் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது நல்ல நித்திரை சுகம், படுக்கை சுகம் , வெளிநாட்டு பயணம், மற்றும் முக்தி நிலை போன்றவை உண்டாகும்.


   குரு பகவான் சூரியன் பகவான் உடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது சிவராஜ யோகத்தை தருகிறது.


    குரு பகவான் ஆனவர் புதன் உடனான தொடர்பு நல்ல கல்வி நிலையை மற்றும் கலை உணர்வு, கணிப்பொறி மற்றும் கணித அறிவு உண்டாகும்.


  குரு பகவான் களத்திர காரகன் சுக்கிரன் உடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது தாம்பத்திய சுகம் மறுக்கப்படும் இவை குரு தசையில் சுக்கிர புத்தியில் உண்டாகும்.


   குரு பகவான் உடன் கேது பகவான் இணைவு கேளயோகம் என்னும் கோடீஸ்வர யோகத்தை தருகிறது.


    குரு பகவானுக்கு கேந்திரத்தில் சந்திரன் அமர்வது கஜகேசரி யோகத்தை தருகிறது.இவை எதிரியை வெல்லக்கூடிய அமைப்பு ஆகும்.


 குரு பகவான் இருக்கும் இடத்திற்கு ஆறு, எட்டு மற்றும் பன்னிரண்டாம் இடங்களில் சந்திரன் இருந்தால் சகடை யோகத்தை ஜாதகருக்கு தருகிறார்.இது ஏற்றம், இறக்கம் நிறைந்த வாழ்க்கையை ஜாதகருக்கு கொடுக்கும்.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & gpay 


 097151 89647 


Another cell no 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,) 

ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்

No comments: