Tuesday, 3 June 2025

புதிய கோணத்தில் புதன் பகவான்

 புதிய கோணத்தில் புதன் பகவான் .





செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவர் ஜாதகத்தில் மனதை என்றும் இளமையாகவும் மற்றும் புதுமையாகவும் வைத்து கொள்ளவும் பெரிதும் துணை புரிவது புதன் பகவான் என்பதால் புதன் பகவானை "இளமைக்கும் மற்றும் புதுமைக்கும் காரக கிரகமாக விளங்குகிறது .


   எவர் ஒருவர் தமிழ் இலக்கண , இலக்கியங்களை விரும்பி அதிகமாக படிக்கிறார்களோ அவருக்கு மனதானது என்றும் இளமையாக இருக்கும்..அதே போல இந்த உலகிற்கு புதிய ஒன்றை படைக்கும் படைப்பாற்றல் மிக்கவராக திகழ்கிறார்களோ அவர்களது மனதும் இளமைக்கும் மற்றும் புதுமைக்கும் காரண கர்த்தாவாக விளங்குகிறது.


   புதன் பகவான் இந்த உலகிற்கு புதிய ஒன்றை படைக்கும் படைப்பாற்றல் மிக்க கிரகம் ஆகும். புதன் பகவான் படிப்பறிவுக்கும் மற்றும் பட்டறிவுக்கும் காரண கர்த்தாவாக விளங்குகிறது.

"நூல் பல கல் ' என்பது தமிழ் மூதாட்டி ஒளவையின் அமுத மொழி ஆகும்.ஒளவையின் அமுத மொழிக்கு ஏற்ப நூல்கள் பல படிக்கக்கூடிய யோகம் படைத்தவராக திகழ வைப்பது புதன் பகவான் ஆவார்.


    படிப்பறிவு மட்டும் அல்லாது பெற்ற அறிவுக்கும் மற்றும் அனுபவ அறிவுக்கும் காரக கிரகம் புதன் பகவான் என்பதால் புதன் பகவானை பலமாக பெற்றவர்கள் பல்கலை வித்தகர்களாக திகழ்வார்கள்.


  புதன் வித்தை காரகன் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் புதன் பகவான் நுண்கலை என்று அழைக்கக்கூடிய பேச்சு, ஓவியம் வரைதல், பாட்டு பாடுதல் ,சிலை சிற்பங்கள் செய்தல்,இசை ஈடுபாடு போன்ற வித்தைகளில் ஏதாவது ஒன்றில் சிறந்து விளங்க வைக்கும் கிரகம் ஆகும் . புதன் பகவானை பலமாக பெற்றவர்கள் எந்த ஒரு கலையையும் பார்த்தவுடன் எளிதாக கற்றுக் கொள்ளக்கூடிய ஈடுபாடுகள் அவர்களுக்கு இருக்கும்.


    வளர்பிறை சந்திர கேந்திரத்தில் புதன் பகவானை பலமாக பெற்றவர்கள் கணினி,ஜோதிடம் ,கதை எழுதுதல் , கவிதை புனைதல்,கணித அறிவு , வங்கி,நிதி துறை , தலையங்கம் எழுதுதல்,செய்திகளை சேகரித்தல், புள்ளி விவரங்களை சேகரித்தல் , புள்ளியியல் அறிவு , மற்றும் ஆலோசகராக செயல்படுதல் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய தன்மை படைத்தவராக மாற்றக்கூடிய தன்மை புதன் பகவானுக்கு உண்டு.


  எல்லோரும் ஒரு கோணத்தில் சிந்தனை செய்ய புதன் பகவானை வலிமையாக பெற்றவர்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து செயல்படும் ( different angle) ஆளுமை படைத்தவரகளாக திகழ்வார்கள்.கதை , கவிதை, கட்டுரை, தலையங்கம் எழுதுதல், பாடல் எழுதுதல் போன்ற வகையில் தனது கற்பனை திறனை பயன்படுத்தி புகழ் அடையும் தன்மை ஆனது புதன் பகவானை இருக்கும் இடத்தைபொறுத்து அமைகிறது.


 புதியன படைத்தல், கண்டுபிடிப்பாளர், மற்றும் விஞ்ஞானி போன்ற துறைகளில் சிறந்து விளங்க புதன் பகவான் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.


  ஒரு தகவலை புள்ளி விவரங்கள் உடன் தருதல், நிகழ்ச்சி தொகுப்பாளர்,, நல்ல கல்வியறிவு படைத்தவர், படிக்காத மேதை , நகைச்சுவை ததும்ப பேச கூடியவர் மற்றும் செய்திகளை சேகரித்து சுவை பட தருபவர் போன்ற அனைத்திற்கும் புதன் பகவான் மிக முக்கியமான கிரகமாக விளங்குகிறது.


   புதன் பகவான் ஒரு பச்சோந்தி கிரகம் ஆகும் .நல்லவரோடு சேரும் போது நல்லவராகவும் ,கெட்டவர் உடன் சேரும் போது கெட்டவராகவும் விளங்கக்கூடியவர் எனவேதான் இவர் பாவி உடன் சேர்ந்த புதன் பாவ கிரகம் என்று அழைக்கப்படுகிறது.


   லக்கினத்தில் புதன் பகவான் திக் பலம் அடைந்து ஏழாம் இடத்தில் நிஷ் பலம் அடைகிறார்.ஆயில்யம்,கேட்டை மற்றும் ரேவதி ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கு புதன் தசா நாதனாக செயல்படுகிறது.

புதன் பகவான் 17 ஆண்டு தனது தசா காலம் ஆகும்..


புதன் பகவான் வளர்பிறை சந்திர கேந்திரத்தில் அல்லது குரு பகவான் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள நல்ல பலனை அதன் ஆதிபத்தியம் மற்றும் காரக அடிப்படையில் ஜாதகருக்கு நல்ல பலன்களை அளிக்கிறது.


 ஒருவர் சிறந்த கணித அறிவு, இசை அறிவு ,எழுத்து, சிறந்த ஜோதிட நிபுணர் மற்றும் கணினி வல்லுநர் போன்றவற்றில் தலைசிறந்த புகழ் படைத்த நபராக திகழ புதன் பகவான் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் பயன்படக் கூடியவர் ஆவார்.


புதன் பகவான் கல்வி நிலையங்களை வைத்து நடத்துபவராகவும் மற்றும் அதில் பணிபுரிவர்களாகவும் இருப்பவர்கள். புதன் பகவான் வலுப்பெற்றுள்ளீர் அரசியலை அலசுவதவதற்கும் மற்றும் விமர்சனங்களை தீர்க்கமான முறையில் சிந்தித்து தொலைநோக்கிய பார்வையில் பதில் தருவதற்கும் புதன் பகவானுடைய பங்கு மிகவும் அளப்பரியது.


    புதன் பகவான் மிகச் சிறந்த வியாபாரிகளை உருவாக்கக் கூடியவர். அறிவு ,ஞானம், புத்தி கூர்மை போன்ற அனைத்திற்கும் புதன் பகவானே காரணமாக விளங்குகிறது 

இதுவரை கண்டுபிடித்த மற்றும் இனி கண்டுபிடிக்க போகக்கூடிய அனைத்திற்கும் புதன் பகவானே காரக கிரகம் ஆகும்.


 புதன் பகவான் அதிக சுபத்துவ நிலையினை அடைந்து ராசி மற்றும் லக்கினத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடங்களோடு தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் புதன் பகவான் தொடர்பு கொள்ளும் தொழிலில் ஈடுபட்டு புகழ் அடைவார்கள். இதற்கு லக்கனாதிபதியும் மற்றும் நடக்கும் தசா புக்திகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்.


நன்றி.


For online appointment 


வாட்ஸ் அப் & கூகுள் பே & செல் 


097151 89647 


மற்றோரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A, BEd 

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: