திருமணத்திற்கு பிறகு பிரச்சினைகள் மற்றும் பிரிவுகள் வர காரணம் என்ன?
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
திருமணம் ஆன சில நாட்களில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரது ஜாதகத்திலும் ஆறுக்கு உடைய அல்லது எட்டுக் குடைய தசை நடப்பில் வந்தால் அவர்களுக்கு இடையே சரியான அன்யோன்யம் இருக்காது.
எனவே திருமணப் பொருத்தம் பார்க்கும் பெற்றோர்கள் இருவருடைய ஜாதகத்திலும் திருமணத்திற்கு பிறகு வரக்கூடிய தசா புத்திகளை அவசியம் கவனிக்க வேண்டும் . தசா புத்திகளே மனித வாழ்வியல் சம்பவங்களை சுட்டிக் காட்டக்கூடிய ஒரு வாழ்வியல் வரலாறு ஆகும்.
திருமண பொருத்தம் பார்க்கும் போது வெறும் நட்சத்திர பொருத்தங்களை மட்டும் வைத்துக்கொண்டு திருமணம் செய்யும்போது பலருடைய வாழ்வில் கஷ்டங்கள் வருவதற்கும்,
கணவன் மனைவிக்கு இடையே ஒரு ஒற்றுமை குறைவு ஏற்படுவதற்கும்,
பிரிவு மற்றும் விவாகரத்து போன்றவை ஏற்படுவதற்கு சாதக கட்ட மற்றும் தசா பொருத்தங்களை கணித்து பார்க்காநதே காரணமாகும்.
உருகி உருகி காதலித்து கல்யாணம் செய்து கொண்ட தம்பதிகளாக இருந்தாலும் இதுபோன்ற அவ யோகத் தசைகள் அல்லது ஆறு அல்லது எட்டுக்குரிய தசையில் வரும் பொழுது அவர்களுக்கு இடையே கூட கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவினையை தந்து விடுவதை நாம் பார்க்கின்றோம்.
பெண்ணிற்கு மகர லக்கனமாகி எட்டாம் இடம் சூரிய தசை நடந்து ஆணுக்கு சிம்ம லக்கனம் ஆகி ஆறுக்கு உடைய சனி தசை நடப்பில் இருப்பின் இவர்களுக்கு இடையே சரியான அன்யோன்யம் இல்லாமல் ஒரு வீட்டில் இருந்தாலும் மனதளவில் ஒன்றாக இல்லாமல் வாழும் தம்பதிகளை பார்க்க நேரிடும் போது ஜோதிட விதிகள் எந்த அளவுக்கு உண்மை என்பது புலனாகிறது.
சில நேரங்களில்
"ஒத்த ராசி உடையவர்கள் ஒத்து வாழ நியதி இல்லை" என்று கூறுவதன் நோக்கம் மேற்கூறிய உண்மைதான் காரணமாக அமைகிறது.
ஒத்த ராசியை கொண்ட தம்பதிகள் ஒரே நட்சத்திரத்தில் பிறந்து இருப்பின் அவர்களுக்கிடையே நடக்கக்கூடிய தசைகளும் ஒத்த தசைகளாகவே வரும் இந்த ஒத்த தசைகளும் ஆறு அல்லது எட்டுக்கு உடைய அவ யோகத்தை தரக்கூடிய தசையாக வந்தால் நிச்சயமாக அவருக்கு இடையே பிரிவுகள் மற்றும் பிரச்சனைகள் நடைபெற கூடும்.
சில நேரங்களில் களத்திர ஸ்தானமான ஏழாமிடத்தில் பாவ கிரகங்கள் ஆன சனி , செவ்வாய் மற்றும் ராகு போன்ற பாவ கிரகங்கள் தனித்து அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் அதன் தசைகள் அல்லது புத்தி நடப்பில் வர கூடிய கால கட்டத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே பிரிவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது.
சிலருக்கு திருமண ஆன பிறகு பிறந்த அல்லது பிறக்க இருக்கும் குழந்தைக்கு ஏழரை அல்லது அஷ்டம சனி நடப்பில் இருக்கக்கூடிய நிலையில் கணவன் மற்றும் மனைவி இடையே பிரிவுகள் அல்லது பிரச்சினைகள் வர காரணமாக அமைந்து விடுகிறது.
திருமணம் ஆன உடன் பிறந்த குழந்தை ஜாதகத்தில் ஒன்பதாம் இடத்தில் ராகு அல்லது சனி அமர்ந்து ஒன்பதாம் அதிபதி அல்லது சூரியன் உடன் பாவ கிரகங்கள் சேர்க்கை அல்லது பார்வை பெற்ற நிலையில் தந்தையை விட்டு பிரிந்து வாழும் அமைப்பு இருந்தால் இதன் காரணமாகவும் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே பிரச்சினைகள் அல்லது பிரிவினைகள் ஏற்பட காரணமாக அமைகிறது.
திருமண ஆன தம்பதியர் இருவருக்கும் ஏழரை அல்லது அஷ்டம சனி நடப்பில் இருப்பின் அவர்களுக்கிடையே அந்த குறிப்பிட்ட கால கட்டம் வரை பிரச்சினைகள் மற்றும் பிரிவுகள் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது.
நன்றி.
For online appointment
Cell & WhatsApp & Gpay
097151 89647
Another cell no 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கரம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம் .
No comments:
Post a Comment