Friday, 6 June 2025

மனதுக்கு பிடித்த மனைவி

 மனதுக்கு பிடித்த மனைவி அமைய..



.

செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை! 


    "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் " என்பார்கள். ஒரு ஆடவருடைய வெற்றிக்கு தாய்க்கு பின் தாரம் தான் மிக முக்கியமான நபர் ஆகும்.


  ஒருவருடைய ஜாதகத்தில் தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணை பற்றி அறிந்து கொள்ள உதவும் ஸ்தானம் ஏழாம் இடமாகும் இந்த ஏழாம் இடத்தை "களத்திர ஸ்தானம்" என்று அழைக்கிறோம்..


 ஏழாம் இடத்தில் பாவ கிரகங்கள் இடம் பெறாமல் ஏழாம் இடத்தை சுப கிரகங்கள் பார்வை செய்து ஏழாம் அதிபதியும் இயற்கை சுப கிரகங்களாக இருந்து கேந்திர கோணங்களில் நின்று பாவ கிரகங்கள் ஆன சனி, செவ்வாய் ராகு மற்றும் கேது, தேய்பிறை சந்திரன் மற்றும் பாவி உடன் சேர்ந்த புதன் தொடர்பு இன்றி இருக்க வேண்டும்.


  இதே போல ஏழாம் அதிபதியும் மற்றும் களத்திர காரகன் சுக்கிரன் பகவானும் பாவர் சேர்க்கை அல்லது பார்வை போன்ற வகையில் தொடர்பு இன்றி இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு பகவான், வளர்பிறை சந்திரன் மற்றும் தனித்த புதன் போன்ற கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு பெற்று இருக்க வேண்டும்.


 லக்கனாதிபதி வலிமை பெற்று சுப தன்மை அடைந்து இருக்க வேண்டும்.திருமண கால கட்டத்திற்கு பிறகு வரக்கூடிய தசைகளும் தொடர்ந்து யோக தசைகளாக இருக்க வேண்டும்.


    இவை மட்டுமல்லாமல் ஒருவருடைய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடம் ஆகிய இந்த இடங்கள் மற்றும் அதன் அதிபதிகளோடு பாவ கிரக தொடர்பில்லாமல் இயற்கை சுப கிரகங்கள் உடைய தொடர்பையும் பெற்றிருக்க வேண்டும்.


 திருமண காலகட்டத்தில் கோச்சார அடிப்படையிலே ஏழரை மற்றும் அஷ்டமச் சனி போன்றவை நடப்பில் இருக்கக் கூடாது.


 உபய லக்கனங்களை பொறுத்தவரை ஏழாம் அதிபதியான குரு மற்றும் புதன் பகவான் இயற்கை சுப கிரகங்களாக இருந்தாலும் ஏழாம் இடத்திலே ஆட்சி பெற்ற நிலையில் இருக்கக் கூடாது. ஏனெனில் உபய லக்னங்களை பொருத்தவரை ஏழாம் அதிபதி பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதியாக வருவதால் ஏழாம் இடத்தில் ஆட்சி பெற்று இருக்கக் கூடாது மேலும் கேந்திராதிபத்திய தோஷத்தையும் அவை தரக்கூடிய நிலையில் உள்ளதால் மறைவிடங்களில் இருப்பது நல்ல மனைவியை அமைத்துக் கொடுக்கும்.


இதே போல கடக மற்றும் சிம்ம லக்கனங்களுக்கு ஏழாம் இடத்தில் சனி பகவான் ஆட்சி பெற்று நிற்பதும் , ரிஷப மற்றும் துலாம் லக்னங்களுக்கு ஏழாம் இடத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று நிற்பதும் நல்ல மனைவியை தர இயலாத நிலையை குறிக்கும். மாறாக அவை மறைவிடங்களில் நின்று வலுப்பெற்று இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்படும் பொழுது மட்டுமே நல்ல மனைவியை ஜாதகருக்கு கொடுக்கும்.


 சில நேரங்களில் லக்கனாதிபதியும் ஏழாம் அதிபதியும் ஒன்றுக்கொன்று ஆட்சி பெற்ற நிலையில் இருப்பது கூட ஒருவருக்கொருவர் ஈகோ மனப்பான்மை கொண்ட ஐ எம் ரைட் பாலிசி என்று அமைப்பில் உள்ள மனைவி அமையும் என்பதால் அவர்களுக்கு இடையே ஒரு விதமான பனிப்போர் உண்டாகும்.


  எனது நண்பர் ஒருவருக்கு ரிஷப லக்னம் அவருக்கு லக்னத்தில் சுக்கிரன் ஆட்சி, ஏழாம் இடத்தில் செவ்வாய் ஆட்சி இதுபோன்ற நிலையில் கடைசி வரை ரயில் தண்டவாளம் போல் அவர்களுடைய இல்லற வாழ்க்கையும் பட்டும் படாமலே கடைசி வரை போய் சேர்ந்துவிட்டது.


நன்றி.


For online appointment 


Cell & WhatsApp & Gpay 


097151 89647 


Another cell no: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: