Tuesday, 3 June 2025

கோள்களின் கோளாட்டம் -(மன நிலை கார்கள் சந்திரன்)

 கோள்களின் கோளாட்டம்

(மன நிலை காரகன் சந்திரன்)



செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை! 


     சந்திர பகவான் மனநிலை காரகன் என்றும் ,மாதுர் காரகன் என்றும் அழைக்கப்படுகிறது. 


   மனிதனுடைய மனநிலைக்கும் ஜாதக கட்டத்தில் உள்ள சந்திர பகவானுக்கும் நிச்சயமாக தொடர்பு உண்டு.மன நிலை காரகன் சந்திரன் உடன் பாவ கிரகங்கள் ஆன சனி, ராகு எட்டு பாகைக்குள்ளாக நெருக்கமாக பார்வை அல்லது சேர்க்கை முறையில் சேரும் போது சந்திரன் மிகவும் பலவீனம் அடைகிறார்.


  சந்திரனின் சுப அல்லது பாவத்துவ படி நிலை தன்மைக்கு ஏற்ப ஒருவரது மன நிலையானது அமைகிறது. 


சந்திர பகவான் தேய்பிறை சந்திரனாக இருந்து அத்துடன் ராகு, சனி சேர்க்கை பெற்றிருந்தாலும் அல்லது சந்திரன் ராகு சேர்ந்து சனி மற்றும் செவ்வாய் பார்வை பெற்ற நிலையில் இருந்தாலும் ,

சனி , செவ்வாய் மற்றும் ராகு ஆகிய மூவரும் தேய்பிறை சந்திரன் உடன் இணைந்திருந்தாலும் சாதகர் மனவளர்ச்சி குன்றிய நிலையில் காணப்படுவார். லக்கனாதிபதியின் வலிமையை பொறுத்தும் பலனில் மாற்றம் ஏற்படும்


   கோள்களில் வளர்ந்து தேயும் ஒரே கிரகம் சந்திர பகவான் ஆவார். அமாவாசையிலிருந்து பௌர்ணமி நோக்கி செல்லும் சந்திரனை வளர்பிறை சந்திரன் என்றும் , பௌர்ணமியிலிருந்து அமாவாசை நோக்கி செல்லக்கூடிய சந்திரனை தேய்பிறை சந்திரன் என்றும் அழைக்கின்றோம்.இதனையே நாம் சுக்ல பட்சம் மற்றும் அமர பட்சம் என்று அழைக்கின்றோம்.


சந்திரன் ஒரு ராசியில் இரண்டே கால் நாள் தங்குவார். எனவே இதனை நாள். கோள் என்று அழைக்கப்படுகிறது.

ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தை ஜென்ம ராசியாகவும் சந்திரன் எந்த நட்சத்திர காலில் நிற்கின்றாரோ அதனை ஜென்ம நட்சத்திரமாக கருதப்படுகிறது.


சில நேரங்களில் விதி கெட்டால் மதி என்ற வகையில் ராசியினை அடிப்படையாக கொண்டும் ஜாதக பலன் அறியப்படுகிறது.


   திருமணம் மற்றும் புத்திர பாக்கியம் போன்ற‌ விஷயங்களில் பலன் அறிய லக்கனத்தை அடிப்படையாகக் கொண்டும் மற்றும் ராசியை அடிப்படையாகக் கொண்டும் ஆகிய இரு வகைகளிலும் ஆய்வு செய்து பலன் அறியப்படுகிறது.


   தேய்பிறைச்சந்திரன் வீட்டில் இருக்கக்கூடிய கிரகங்கள் தனது தசையில் நல்ல பலனை தருவதில்லை.ஆனால் வளர் பிறை சந்திரன் வீட்டில் இருக்கும் கிரகங்களின் தசை ஜாதகருக்கு நல்ல பலனை தருகிறது.


    வளர்பிறைச்சந்திரன் இயற்கை சுப கிரகமாக கருதப்படுகிறது எனவே வளர்பிறை சந்திரன் சேர்க்கை பெற்ற கிரகங்கள் சுப தன்மையை அடைந்து சாதகருக்கு நல்ல பலனை தரக்கூடிய நிலையில் அமைகிறது.


   வளர்பிறை சந்திரன் இருக்கும் இடத்திற்கு ஆறு ,ஏழு மற்றும் எட்டாம் இடங்களில் இயற்கை சுப கிரகங்களான சுக்கிரன், புதன் மற்றும் குரு பகவான் நிற்கும் பொழுது சந்திராதி யோகத்தை தருகிறது. இது குரு ,புதன் மற்றும் சுக்கிரன் தசைகளில் ஜாதகருக்கு மிகுந்த யோகத்தை தரக்கூடிய தசையாக அமைகிறது. வளர்பிறை சந்திரனுக்கு ஆறு, ஏழு எட்டாம் இடங்களில் பாவ கிரகங்கள் நின்றால் சந்திர அதி யோகம் வேலை செய்யாது.

தேய்பிறை சந்திரனுக்கு சந்திர அதி யோகம் கிடையாது.


   வளர்பிறை சந்திரனுக்கு இருபுறமும் இயற்கை சுப கிரகங்கள் நின்றால் சாமரை யோகம் என்று பெயர். இது மன்னருக்கு நிகரான புகழ் உடையவராக ஜாதகர் திகழ்வார்.


   அதே நேரத்தில் சந்திரனுக்கு இருபுறமும் பாவ கிரகங்கள் நின்றால் பாவகர்த்தாரி யோகம் என்று பெயர். இந்த அமைப்பு ஜாதகருக்கு நல்ல பலன்களை தருவதில்லை. சந்திரன் தேய்பிறை சந்திரனாக இருந்தால் மிகவும் கெட்ட பலனை தரக்கூடிய அமைப்பாக விளங்குகிறது.


    சந்திர பகவானுக்கு நட்பு கிரகமாக சூரியன், சந்திரன், செவ்வாய் மற்றும் குரு பகவான் விளக்குகிறார்.சந்திர பகவான் குரு அணியை சேர்ந்த கிரகம் ஆகும்.


    சந்திர பகவான் ஒளி கிரகமாக திகழ்கிறது கடக வீட்டை ஆட்சி வீடாகவும் , ரிஷபத்தில் உச்சம் மற்றும் விருச்சிகத்தில் நீசம் போன்ற ஸ்தான வலிமை பெற்று வருகிறது.


  சந்திரன் நான்காம் இடத்தில் திக்பலம் பெற்றும் மற்றும் பத்தாம் இடத்தில் நிஷ் பலம் பெற்றும் விளங்குகிறது.


   சந்திரன் பகவான் குருவுடன் இணையும் போது குரு சந்திர யோகத்தை தருகிறது. சந்திர பகவான் செவ்வாயுடன் இணையும் போது சசி மங்கள யோகத்தையும் தருகிறது.


        சந்திர பகவானுக்கு இரண்டு மற்றும் பன்னிரண்டாம் இடங்களில் சுப கிரகங்கள் இருப்பது சுனபாயோகம் மற்றும் அனபாயோகம் என்று அழைக்கப்படுகிறது.


      சந்திர பகவான் மகர மற்றும் கும்ப லக்னத்திற்கு அவ யோகத்தை தரக்கூடிய தசையாக அமைகிறது. சந்திர பகவான் எல்லா கிரகங்களுடன் நட்புடன் விளங்குகிறது.சந்திர பகவான் புதனை நட்பாக கருதினாலும் புதன் பகவான் ஆனவர் சந்திரனை பகை கிரகமாக கருதுகிறது.


   ஒருவர் ஜாதகத்தில் நான்காம் இடம் தாய் ஸ்தானம் என்றாலும்,தாய் ஸ்தானத்திற்கு காரக கிரகமாக சந்திரன் பகவான் விளங்குகிறார்.


 ரோகிணி ,அஸ்தம், திருவோணம் ஆகிய மூன்று நட்சத்திர நாதனாக சந்திர பகவான் விளங்குகிறார் .சந்திர பகவான் 10 ஆண்டுகள் அதன் மொத்த தசைக் காலம் ஆகிறது.


சந்திர பகவான் சூரியன் உடன் எட்டு பாகைக்குள் நெருங்கும் போது அமாவாசை அமைப்பை தருகிறது.சூரியன் இருக்கும் இடத்திற்கு ஏழாம் இடத்தில் அதாவது 180 பாகையை நெருங்கும் போது பொளர்னமி யோகம் தருகிறது.


   சந்திரனை அடிப்படையாகக் கொண்டே கோச்சார பலன்கள் ஆன குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி ,ராகு கேது பெயர்ச்சி போன்ற பெயர்ச்சி பலன்கள் அறியப்படுகிறது.


தின பலன், மாத பலன் மற்றும் ஆண்டு பலன் போன்ற பலன்கள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டு அதாவது ராசியை கொண்டு கணக்கிடப்படுகிறது.


 ஒரு ஜாதகத்தில் சந்திர பகவான் வளர் பிறைச் சந்திரனாக இருந்து சுப கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் தொழிற் ஸ்தானமான 10-ஆம் இடத்துடன் தொடர்பு கொண்டு உள்ள நிலையில் சந்திரனுக்குரிய தொழிலை ஜாதகர் ஈடுபடுவார். 


      குளிக்க இயலக்கூடிய திரவமான கூல்டிரிங்ஸ், ஐஸ்கிரீம் , பால் போன்ற தொழிலில் ஈடுபட வைப்பார் . நீர் வாழ் உயிர்களான இரால், மீன், நண்டு வளர்ப்பு போன்ற தொழிலில் ஆர்வம் உண்டாகும்.விவசாய தொழில் மேற்கொள்வார்.


நன்றி.


தொடரும்...


For online appointment 


ஹேசெல் & வாட்ஸ் அப் & கூகுள் பே 


097151 89647 


மற்றொரு செல் : 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)





அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: