தர்ம சிந்தனை மிக்கவரா ?
கிரகங்கள் படுத்தும் பாடு -( 45 )
ஸ்ரீபத்ரகாளியம்மன் அருளாசியோடு...
ஒரு சிலர் பரோபகாராரகவும்,தான தர்ம சிந்தனை மிக்கவராகவும் இருப்பதற்கு காரணமான ஸ்தானம் மூன்றாவது திரிகோணமான ஒன்பதாமிடமாகும்.
ஒருவருக்கு ஒன்பதாமிடமும் மற்றும் அதில் உள்ள கிரகமும் சுப கிரகமாக இருந்து உச்சம்,ஆட்சி போன்ற வகையான பலம் பெற்றிருப்பின் அவர் தர்ம சிந்தனை மிககவராக இருப்பர்.
ஒருவர் என்னதான் பணம் படைத்திருந்தாலும் கொடுக்கும் எண்ணம் எல்லோருக்கும் உண்டாவதில்லை.ஒரு சிலர் நிரம்ப பெற்றிருநதாலும் மனதளவில் பிச்சைக்காரர்களாகவும், கருமித்தனம் மிக்கவராக திகழ தர்மஸ்தானம் எனப்படும் ஒன்பதாமிடத்திலே பாவிகள் இருந்து அந்த ஸ்தானாதிபதி நீசம்,அஸ்தமனம் ,வக்ரம்,பகை மற்றும் மறைவு ஸ்தானமேறவாகும்.
ஒருவரது சாதகத்தில் தர்மஸ்தான அதிபதி மற்றும் ஜீவன ஸ்தானதிபதி ஆகிய இருவரும் லக்கனத்திற்கும்,ராசிக்கும் அதாவது ஒன்பது மற்றும் பத்தாமாதிபதி இணைந்தோ அல்லது சமசப்தம பார்வை மற்றும் பரிவர்தனை போன்ற அமைப்பை பெறின் அர்களுக்கு "தர்ம-கர்மாதிபதி யோகமாகும்.அதற்கு அந்த ஸ்தான அதிபதிகள் பாதகாதிபதியாகவோ அல்லது நீசம்,வக்ரம் மற்றும் அஸ்தமம் போன்ற அமைப்பு பெறக்கூடாது.
"தர்ம-கர்மாதிபதியோகம் "பெற்றதன் பலனை பின்வரும் கவிமூலம் அறியலாம்.
"சொல்லுமைய்யா பாக்கியத்தோன் பத்தோன் கூடி சுகமாக வீற்றிருக்கும் பலனைக்கேளு!
எல்லையில்லா தனம் படைத்து வாழ்வதோடு எவர்களுமே பணிவார்கள் இறைவன்போல
தொல்லையில்லான் பலபேரை காக்க வல்லான் துணையாளர் பலபேரும் உண்டுபாரு
வல்லவியா ஈஸ்வரியின் கடட்சத்தாலே வளமையாக வாழந்திருப்பான் எந்நாளுமே ."
எல்லையில்லா தனம் படைத்து வாழ்வதோடு எவர்களுமே பணிவார்கள் இறைவன்போல
தொல்லையில்லான் பலபேரை காக்க வல்லான் துணையாளர் பலபேரும் உண்டுபாரு
வல்லவியா ஈஸ்வரியின் கடட்சத்தாலே வளமையாக வாழந்திருப்பான் எந்நாளுமே ."
எனவே ஒருவருக்கு தர்ம-கர்மாதிபதியோகம் இருந்து பலவீனப்படாமல் இருந்தால் கோவில் கட்டி குடமுழுக்கு நிகழ்த்துதல்,அன்னதானமிடல் போன்ற தர்ம சிந்தனை மிகும்.மொத்தத்தில் அவரை சுற்றியுள்ள மக்கள் அவரை தெய்வம்போல எண்ணி போற்றி மகிழ்வார்கள்.இவரை சுற்றி இவர் இட்ட ஏவல்களை செய்ய மக்கள்கூட்டம் இவர் பின் இருப்பர்.பலபேரை காக்கும் வள்ளல்தன்மை உடையவராக இருப்பார்.யாருக்கும் தீங்கிழைக்ககூடிய எண்ணம் சிறிதும் அற்றவர்.இந்த யோகத்தை பெற்றவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் யோகமும்,வெளிநாடு செல்லும் யோகமும் அதன் திசை காலங்களில் கிட்டும்.
ஐந்து,ஒன்பது மற்றும் பத்தாம் அதிபதிகள் மூவரும் கூடி ஒரு ராசி சக்கரத்தில் எங்கு கூடி நின்றாலும் அதாவது சிலநேரங்களில் மறைவிட ஸ்தானமான 3,6,8,12 ஆம் இடங்களில் இருந்தாலும் அது விஷேச ராஜயோகம் ஆகும்.
இக்கருத்திற்கு ஆதரவான "சாதக அலங்காரம் " பாடல்
"குணமார் தர்ம கர்மாதி
கூறுஞ் சுபக்கோளுடன் கூடி
மனமார் தர்ம கர்மத்தின்
மருவியிருக்கின் மன்னவனாம்
உணர்வா இவர்கள் இருவரோடு
ஐந்தாமாதி உடன்கூடி
புணர்வர் ரெங்கே இருந்தாலும்
பூமி புரக்கும் புரவனனாம் "
கூறுஞ் சுபக்கோளுடன் கூடி
மனமார் தர்ம கர்மத்தின்
மருவியிருக்கின் மன்னவனாம்
உணர்வா இவர்கள் இருவரோடு
ஐந்தாமாதி உடன்கூடி
புணர்வர் ரெங்கே இருந்தாலும்
பூமி புரக்கும் புரவனனாம் "
விளக்கம்;
ஒன்பதாம் மற்றும் பத்தாம் அதிபதி தனித்தனியே சேராமல் அவரவர் ராசியில் ஆட்சி,உச்சம் பெற்று யாரேனும் ஒருவர் ஐந்தாம் அதிபதி உடன் இருக்க ராஜயோகம் ஆகும்.
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
சோதிட ஆராய்சியாளர்
ஓம் சக்தி சோதிட நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம்.
சோதிடர் ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
சோதிட ஆராய்சியாளர்
ஓம் சக்தி சோதிட நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம்.
வாட்ஸ் அப் எண் :-
97 151 89 647
97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 647
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
740 257 08 99
97 151 89 647
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
No comments:
Post a Comment