Friday, 27 April 2018

"சாதகங்களில் யோகமான அமைப்புகள் இருந்தும் அவை சாதகருக்கு தக்க தருணத்தில் பலன் அளிக்காதது ஏன் ? "

"சாதகங்களில் யோகமான அமைப்புகள் இருந்தும் அவை சாதகருக்கு தக்க தருணத்தில் பலன் அளிக்காதது ஏன் ?


                                                        
கிரகங்கள் படுத்தும் பாடு - ( 46 -)

ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்." 

                    ஒரு  மனிதனுக்கு  யோகமான அமைப்புகள் இருந்தும் அதன் திசை நடந்தும் எவ்வித யோகங்களையும் தரவில்லை எனில் அதற்கான காரணம் பல உண்டு.இது பற்றி விரிவாக முந்தைய பதிவுகளில் விளக்கியுள்ளேன்.அதில் விரிவாக விளக்க தவறிய ஒரு காரணத்தை இப்பதிவில் பார்ப்போம்.

                       அந்த ஸ்தான அதிபதிகள் வாங்கிய நட்சத்திர சாரம் என்னவென பார்க்கவேண்டும்.

                         ஒரு சமயம் அந்த நட்சத்திர அதிபதியோ அல்லது அதன் ஸ்தானமோ தசாநாதனுக்கு பகையாகவோ அல்லது ஆறு மற்றும் எட்டாம் ஸ்தானாதிபதியாகோ இருக்கவேண்டும்.
ஒரு சமயம் தசாநாதன் ராகு,கேது போன்ற அசயர்களின் சாரம் பெற்றிருந்தாலும் தசாநாதன் யோககாரராக இருப்பினும் அதன் தசா காலங்களில் யோகத்தின் சதவீதம் குறைந்துவிட வாய்ப்புண்டு.

                     அதேநேரத்தில் சுபர் மற்றும் சுப ஸ்தானதிபதிகளின் நட்சத்திர சாரம் வாங்கிய  ஒரு கிரகம் அதன் தசா காலங்களில் அதிக யோகங்களை செய்துவிடுவதுண்டு.
ஒரு மனிதனுக்கு தனாதிபதி பாக்கியாதிபதியின் நட்சத்திர காலில் நின்று அதேபோல பாக்கியாதிபதி தனாதிபதியின் நட்சத்திர காலில் நின்று அதாவது கிரகங்கள் நட்சத்திரசார பரிவர்தனை பெற்று இருந்தால் தனாதிபதி திசையிலோ அல்லது பாக்கியாதிபதியின் திசையிலோ அதிக பொருள் ஈட்டி பெரும் தனவான் ஆக (செல்வந்தனாக) இருப்பான்.

                      தசாநாதன் வாங்கிய சாரம் பார்க்கவேண்டும்.அது சாரநாதன்  சாதகரின் வாழ்வுக்கு ஆதரவாக இருப்பின் அக்கிரகம் தசாநாதனுக்கும்,லக்கனாதிபதிக்கும் நட்பாகவோ அல்லது சுபஸ்தானதிபதியின் சாரமோ அல்லது சுபகிரக சாரமோ பெற்றிருக்க வேண்டும்.

                 ஒருவருக்கு லக்கனமோ அல்லது ராசியோ ஒன்பதாம் வீட்டு அதிபதியின் நட்சத்திர காலில் நின்றால் அது அவனுக்கு "பாக்யாதிபதி யோகம்"ஆகும்.

                   எனவே ஒரு கிரகம் தரும் பலனை விளக்கும் முன் அவை எந்த நட்சத்திர காலில் நிற்கிறது என்பதையும் அது சார்ந்த ஆராய்சிகளை மேற்கொண்டு பலனுரைத்தல் அவசியம் ஆகும்.

யோகங்களும் காலத்திற்கு ஏற்ற பலனும் ;-

                  ஒரு மனிதனுக்கு சிம்மத்தில் குரு நிற்பது "வளைய குரு "என்பர்.இப்படி இருப்பது பெரும் படைக்கு தலைமை வகிக்க வைக்கும்.மனனர் காலங்களில் படைகளுக்கு தலைவனாகவோ அல்லது படை தளபதியாக இருந்து வழி நடத்தும் யோகம் ஆகும்.ஆனால் இப்பொழுது காலத்திற்கு ஏற்றார் போல பலனுரைக்க வேண்டும் எனில் காவல் துறையில் காவலர்களை வழி நடத்தி செல்லும் தலைமை போலிஸ் அதிகரியாகவோ அல்லது ராணுவத்தில் கேப்டனாகவோ ஆவான் எனலாம்.இதற்கு செவ்வாய் பகவானும் பலம்பெற்றிருக்க வேண்டும்.

வெண்சாமரை யோகம்

                      சூரியனுக்கு இருபறமும் குரு ,சுக்கிரன்,புதன் இருப்பது வெண் சாமரை யோகம் ஆகும்.

                           மன்னராட்சியை நாம் நேரில் பார்க்கும் வாய்ப்பு நமக்கு இல்லையெனினும் படங்களிலும்,கதைகளிலும் படித்து நமக்குள் ஒருவித கற்பனை நமக்குள் உண்டு.மன்னர் அலங்காரத்தோடு அருகில் ராணி அமர அரியனையில் வீற்றிருக்க இருபுறமும் பெண்கள் நின்று வெண்சாமரை வீசுவதாக ஒருவித காட்சி நமக்குள் வருவது உண்டு.

                             எனவே ஒருவர் மன்னராக ஆவதற்கு இந்த வெண்சாமரை யோகம் ஒருவருக்கு வேண்டும் என சித்தர்கள் தனது ஞான திருஷ்டியால் இதுபோன்ற கிரக அமைப்புடையவர்கள் மன்னராவது உறுதி என கூறினார்.

                               ஆனால் தற்காலத்தில் மன்னராட்சி இல்லை என்பதால் அரசியலில் தலைவராகி ஒரு அரசியலில் வழிநடத்தி முதலமைச்சாராகவோ அல்லது அமைச்சராகவோ அல்லது கல்வி நிரம்ப பெற்று போட்டி தேர்வில் ஒரு மாவட்டத்தை ஆளும் மாவட்ட ஆட்சி தலைவராகவோ ஆகலாம்.இவர்களுக்கும் இவர்களை சுற்றி துதிபாடி நிற்கும் கூட்டம் இருக்கும்.

அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
   M.SC ,MA ,BEd.
சோதிட ஆராய்சியாளர்
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
ஓம்சக்தி சோதிட நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம்.

செல் ; 97 151 89 647
            740 257 08 99

வாட்ஸ்அப் எண்
97 151 89 647

(சாதக பலனை போன் வழியாக பெறலாம்.கட்டணம் உண்டு.விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.தங்களது குழந்தைகளுக்கு சாதகம் எழுதி பலன் பார்க்க பிறந்த தேதி,நேரம்,இடம் அவசியம்..இத்தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம்.)

No comments: