சந்திர பகவான் தரும் சக்திமிகு செயல்கள்!
செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!
கிரகங்கள் படுத்தும் பாடு--( 201 )
சந்திரபகவான் இருக்கும் இடத்தை கொண்டே ஒருவரது ஜென்ம ராசியானது கணக்கிடப்படுகிறது.சந்திர பகவான் இருக்கக்கூடிய இடத்தினை ஜென்ம நட்சத்திரமானது முடிவு செய்கிறது.
ஒருவர் ஜெனிக்கும்போது பால் வீதியின் (milky way ) தொடுவானில் ஜொலிக்கக்கூடிய நட்சத்திரமே ஜென்ம நட்சத்திரமாக கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
உதாரணமாக அசுபதி,பரணி முழுபாதமும்,கார்த்திகை முதல் பாதத்தில் பிறந்தவர் எனில் அவர் மேஷ ராசிக்காரர் ஆவார்.
மேஷ ராசிக்காரர் எனில் செவ்வாய் ராசி அதிபதி ஆவார்.செவ்வாய்பகவானுக்கு உரிய குணநலன்களை சாதகர் பிரதிபலிப்பார் .
சந்திரபகவான் கடக வீட்டினை தனது சொந்த வீடாக கொண்டவர்.
ரிஷப வீட்டில் உச்சம் பெறும் சந்திரபகவான் அதன் நேர்எதிர் வீடான விருச்சிகம் வீட்டில் நீசம் பெறுகிறார்.
ரிஷப வீட்டில் உச்சம் பெறும் சந்திரபகவான் அதன் நேர்எதிர் வீடான விருச்சிகம் வீட்டில் நீசம் பெறுகிறார்.
சந்திரபகவான்
சூரியனையும்,புதனையும் நட்பு கிரகமாக கொண்டுள்ளது.அரவுகளான ராகு,கேது நிழற் கிரகங்களை பகையாக கொண்டுள்ளது.குரு ,செவ்வாய், சுக்கிரன் மற்றும் சனி உடன் சமமான தன்மையை கொண்டுள்ளது.
சந்திரபகவானின் மகன் புதன் பகவான் ஆவார்.மனநிலைக்காரகனான சந்திரபகவானை பலமாக கொண்டவர்கள் புதனின் காரக பலனான பேச்சு,கதை,கவிதை,கட்டுரை,பாடல் புனைதல்,இசையில் புலமை ,வேடிக்கை விநோதமாக பேசுதல் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்.
புதன் பகவானோடு சந்திரபகவான் தொடர்பு கொண்டவர்கள் நல்ல வேடிக்கை விநோதமாக பேசக்கூடியவர்களாக இருப்பர்.இவ்வாறு பேசுவதற்கு நல்ல மனநிலை அவசியமானதாக கருதப்படுகிறது.இந்த நல்ல மனநிலை தருபவர் சந்திரபகவான் ஆவார்.
ஒருவர் நல்ல படைப்புகளை இந்த உலகிற்கு தந்து புகழ்பெற அவர்களது சாதகத்தில் சந்திரபகவான் பலமடைந்து இருக்கவேண்டும்.
"மனம் இருந்தால் மார்க்கம் உண்டு"
இங்கு மார்க்கம் என்பது வழி ஆகும்.இவ்வுலகில் அரிய பல கண்டுபிடிப்புகள் நிகழ்வதற்கும்,பிரபஞ்ச ரகசியங்கள்,மறைபொருள் உண்மைகள் வெளிப்படுத்தவும் மனநிலைக்காரகனான சந்திரபகவான் அருளாசி அவசியம் ஆகும்.
இங்கு மார்க்கம் என்பது வழி ஆகும்.இவ்வுலகில் அரிய பல கண்டுபிடிப்புகள் நிகழ்வதற்கும்,பிரபஞ்ச ரகசியங்கள்,மறைபொருள் உண்மைகள் வெளிப்படுத்தவும் மனநிலைக்காரகனான சந்திரபகவான் அருளாசி அவசியம் ஆகும்.
ஒரு சிலர் மதியிழந்தவர்களாகவும்,அடிக்கடி தனக்குள் பேசிக்கொள்பவர்களாகவும்,உறுதியான மனநிலை அற்றவர்களாக திடமான முடிவு எடுக்க தயங்குபவர்களாக இருப்பதற்கும் சந்திர பகவானே காரணம் ஆகும்.
சந்திரபகவானுக்கு கேந்திரத்தில் அமைந்த குருபகவான்" கஜகெசரி யோகத்தினை" தருகிறது.
சந்திரனுடன் இணைந்த குருவானவானவர் "குருசந்திர யோகத்தினையும்," சந்திரனோடு இணைந்த செவ்வாய் பகவான் "சசிமங்கள யோகத்தினையும்" அளிக்கிறார்.
குரு-சந்திர யோக பலன்கள்
புலிப்பாணி சோதிடம்
"கூரப்பா யின்னமொரு புதுமைசொல்வேன்
குமரனுக்கு குருசந்திர பலனைக்கேளு
சீரப்பா செம்பொன்னும் மனையுங்கிட்டும்
ஜெனித்ததொரு மனைதனிலே தெய்வங்காக்கும்
கூரப்பா கோதையரால் பொருளுஞ்சேரும்
குவலயத்தில் போர் விளங்கோன் கடாட்ச முள்ளோன்
ஆரப்பா அத்தலத்தோன் மறைந்தானானால் அப்பலனை யரையாதே புவியுளோர்க்கே "
குமரனுக்கு குருசந்திர பலனைக்கேளு
சீரப்பா செம்பொன்னும் மனையுங்கிட்டும்
ஜெனித்ததொரு மனைதனிலே தெய்வங்காக்கும்
கூரப்பா கோதையரால் பொருளுஞ்சேரும்
குவலயத்தில் போர் விளங்கோன் கடாட்ச முள்ளோன்
ஆரப்பா அத்தலத்தோன் மறைந்தானானால் அப்பலனை யரையாதே புவியுளோர்க்கே "
பாடல் விளக்கம்
குருசந்திர யோகத்துடன் பிறந்த ஜென்மனுக்கு சிறப்பு கிட்டும்.செம்பொன்னும்,நன்மனையும் அவனுக்கு வாய்க்கும்.அவன் பிறந்த மனையில் தெய்வம் நின்று காவல் காக்கும்.பெண்களால் நிறைந்த தனலாபம் கிடைக்கும்.சாதகர் பேரும் புகழும் பெற்று புவியில் வாழ்வான்.ஆனால் அதேநேரத்தில் குருசந்திரன் இணைந்த வீட்டு அதிபதி மறைந்துவிட்டால் குருசந்திர யோகம் இப்பலனை தராது.
குருசந்திர யோகம் நற்பலனை தர வேண்டுமாயின் இரண்டில் ஒன்று கூட பாதிக்கப்படகூடாது. குரு அல்லது சந்திரன் மறைவிட அதிபதியாகவோ அல்லது மறைவிடங்களில் அமர்ந்திருந்தாலோ அல்லது பாதக ஸ்தானாதிபதியாக இருப்பின் குருசந்திர யோகம் பலன் தராது.
குரு சந்திர யோகம் குரு அல்லது சந்திர திசை அல்லது புத்தி காலங்களில் மட்டுமே யோக பலனை தரும்.
சகடையோகம்.
"யாரடா தம்பி கேளாய்
ஆசானுக்கு ஈராறு எட்டில்
பாரடா நிலவு நிற்க
பயனிலா சகடையோகம்
கூறடா அழியும் செல்வம்
குலப்புகழ் உற்றோர் பெற்றோர் வேறடா வெறுப்பர் துன்பம்
வேறூன்றும் வாழ்நாள் எல்லாம்"
ஆசானுக்கு ஈராறு எட்டில்
பாரடா நிலவு நிற்க
பயனிலா சகடையோகம்
கூறடா அழியும் செல்வம்
குலப்புகழ் உற்றோர் பெற்றோர் வேறடா வெறுப்பர் துன்பம்
வேறூன்றும் வாழ்நாள் எல்லாம்"
குருவுக்கு அல்லது சந்திரனுக்கு 6,8,12 இல் சந்திரன் அல்லது குரு நிற்க சகடையோகம் ஆகும்.இதன் பலனை மேற்பங்ட "ஜோதிட சிந்தாமணி " பாடல் விளக்குகிறது.
சந்திரனுக்கு அஸ்தங்க தோஷமில்லை.
புனர்பூதோஷம்
சந்திரனும்,சனியும் சேரும்பொழுது புன்பூதோஷம் உருவாகிறது.
களத்திரதோஷம்
சந்திரனுடன் இணைந்த ராகு,கேது களத்திர தோஷத்தினை தந்து திருமண தடையை உருவாக்குகிறார்.
சந்திரனுடன் இணைந்த கேது ஆன்மீக ஞானத்தை அள்ளி தருகிறார்.
சந்திரனின் மகன் புதன் ஆவார்.சந்திரன் புதனை நட்பாக கொண்டாலும் ,மகனான புதன்பகவான் தனது தாயான சந்திரனை பகையாக கொள்கிறார்.
சந்திரனின் மகன் புதன் ஆவார்.சந்திரன் புதனை நட்பாக கொண்டாலும் ,மகனான புதன்பகவான் தனது தாயான சந்திரனை பகையாக கொள்கிறார்.
நன்றி
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
வாட்ஸ் ஆ ப்
97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 647
97 151 89 647
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd
சோதிட ஆராய்ச்சியாளர்
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
சோதிட ஆராய்ச்சியாளர்
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
My blog
AstroRavichandran. blogspot. Com
AstroRavichandran. blogspot. Com
AstroRavichandransevvai.blogspot. com
..............
...........
No comments:
Post a Comment