சாதக கட்டத்தில் இரண்டாம் பாவகம் -ஒரு விளக்கம்.
செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!
கிரகங்கள் படுத்தும் பாடு--( 202 )
ஒருவரது சாதக கட்டத்தில் இரண்டாம் இடம் ஒருவரது தனம்,வாக்கு,கல்வி,குடும்பம் மற்றும் நேத்திரம் ஆகியவற்றை அறிய பயன்படுகிறது.
இரண்டாம் வீட்டு அதிபதியைதான் நாம் வாக்காதிபதி,தனாதிபதி, மற்றும் குடும்பாதிபதி என பெயர் சொல்லி அழைக்கிறோம்.
நேத்திரம் என்பது கண் ஆகும்.ஆதலால் கண் பார்வை பற்றி அறிய உதவும் இடமாக உள்ளது.
இரண்டாம் அதிபதி பலம் பெற்று கேந்திர,திரிகோணங்களில் அமர்ந்து சுபரால் பார்க்கப்பட எந்நாளும் தனத்திற்கு குறைவன்றி வாழ்வர்.
இரண்டாம் அதிபதியானது இலக்கினத்தில் அமர கல்வி,கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு தனயோகம் பெற்றவராய் இருப்பர்.
இரண்டாம் அதிபதி இரண்டாம் இடத்தில் ஆட்சி பெற்று விளங்கினால் தனது வாக்கு சுத்தம் உடையவராக இருப்பர்,தனது ஆரம்ப கல்வி ஒருவருக்கு சிறப்பாக அமைய இவ்விடம் பலமடைந்த திகழவேண்டும்.
இரண்டாம் அதிபதி மறைவிட ஸ்தானமான் மூன்றாம் இடத்தில் அமர்வது மறைவிட ஸ்தானமாக இருந்தாலும் அவை கீர்த்தி,புகழ் தரக்கூடிய இடம் என்பதால் தனது கல்வியால் புகழ்பெறும் யோகம் உண்டு.
இரண்டாம் அதிபதியானது சுக ஸ்தானமான நான்காம் இடத்தில் அமர தான் பெற்ற தனம்,வாக்கு மற்றும் கல்வியால் சுகம் அடையும் யோகம் உண்டு. தனாதிபதி,சுகாதிபதி தொடர்பு உயர்கல்வியை ஒருவர் பெற்று அதனால் சுகம் பெற இயலும்.
இரண்டாம் அதிபதி திரிகோண ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் இடம்பெறுவது சிறப்பான யோகத்தினை தனது திசையில் தரும். இரண்டாம் இடத்தின் பலனான தனம்,வாக்கு,குடும்பம் அனைத்திலும் சிறந்து விளங்க இயலும்.தனது கற்பனை திறனை வெளிப்படுத்தி கதை,கவிதை மற்றும் பாடல்கள் புனையும் ஆற்றல் பெறுவார்.படைப்பாற்றல் பெருகும்.
இரண்டாம் அதிபதி ஆறாம் இடத்தில் மறைவது நல்லதல்ல.தனது சொத்து முழுவது தனாதிபதி திசையில் இழக்க நேரிடும்.தனயோகம் அற்றவராக இருப்பர்.திருமண வாழ்வு தாமதப்படும்.
இரண்டாம் அதிபதி ஏழாம் இடத்தில் இடம்பெறுவது நல்லது.நல்ல குடும்ப நிர்வாகம் செய்யக்கூடிய வாழ்க்கை அமைவார்கள்.தனலாபம் பெறலாம்.தான் சம்பாரித்த பணத்தை வாழ்க்கைதுணையிடம் ஒப்படைக்க அவை பலநூறாக பெருகும்.நல்ல கல்வி அமையும்.மனம் விரும்பிய துணை அமையலாம்.
இரண்டாம் இட அதிபதி எட்டாம் இடத்தில் மறைவது நல்லதல்ல.தனயோகம் அற்றவர்.சாம்பாரித்த பணம் அனைத்தையும் வம்பு,சண்டை வழக்குகளுக்கு பயன்படுத்துவார்.கால தாமத திருமணம் அமையும்.ஆரம்ப கல்வி தடைபடலாம்.
இரண்டாம் அதிபதி திரிகோண ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் இடம்பெறுவது சிறப்பான யோகத்தினை தர வாய்ப்பு உண்டு. தான் சம்பாரித்த பணத்தினை தான் மட்டுமே வைத்துக்கொள்ளாமல் கஞ்சத்தனமின்றி மற்றவர்களுக்கு தான தர்மம் செய்வதில் வல்லவர்.இவர் வாக்கு வன்மை மிக்கவர்.உயர்கல்வி யோகம் உடையவராக இருப்பர்.
இரண்டாம் அதிபதி பத்தாம் இடத்தில் நின்றால் தான் கற்ற கல்வியாலும்,வாக்கு சுத்தத்தாலும் பெரும்தனம் ஈட்டுவார்.
இரண்டாம் அதிபதி லாப ஸ்தானமான பதினொறாம் இடத்தில் அமர்வதால் தனலாபம் உண்டு.
இரண்டாம் அதிபதி பணிரெண்டாம் இடத்தில் அமர்வதால் படிப்பு நிமித்தமாப சில காலம் வீட்டைவிட்டு வெளியில் தங்குவார்.பிறகு சம்பாரிக்கும் நோக்கில் கடல் கடந்து செல்வார்.தனவிரயம் உண்டு.
இரண்டாம் வீடு என்பது தனக்கு வரும் கணவன்/மனைவிக்கு எட்டாம் இடமான ஆயுள் ஸ்தானத்தையும் காட்டுகிறது.எனவே ஒருவர் தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணையின் ஆயுளை அறிய உதவும் ஸ்தானமாகவும் உள்ளது.
இரண்டாம் வீடு என்பது தனக்கு வரும் கணவன்/மனைவிக்கு எட்டாம் இடமான ஆயுள் ஸ்தானத்தையும் காட்டுகிறது.எனவே ஒருவர் தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணையின் ஆயுளை அறிய உதவும் ஸ்தானமாகவும் உள்ளது.
பொதுவாக தன ஸ்தானமான இரண்டாம் இடத்தில் எவ்வித கிரகங்களும் இடம்பெறாமல் இருத்தல் உத்தமம்.
இரண்டாம் இடத்தில் உச்சம்,ஆட்சி பெற்ற கிரகங்கள் இருந்து அத்திசையானது நடப்பில் இருப்பின் தனக்கு வரும் கணவன்/மனைவியின் ஆயுளுக்கு பங்கம் உண்டாக வாய்ப்புகள் உண்டு என்ற வகையில் இரண்டாம் இடத்தில் பலம் பெறாமல் இருத்தல் நல்லது.
இரண்டாம் இடத்தில் குருபகவான் அமர்வது காரகபாவ நாஸ்தியை தரும்.அதாவது தன காரகனான குரு தன ஸ்தானத்தில் அமர்வதால் ஏற்படுகிறது.குருபகவான் தனகாரகன் என்ற வகையில் இரண்டாம் இடத்தில் குரு அமர்வது தன ஸ்தானத்தினை மட்டுமே பாதிக்கும்.மற்றபடி கல்வி,வாக்கு,குடும்பம் மற்றும் நேத்திரம் இவைகளை பாதிப்படைய செய்வதில்லை.
இரண்டாம் இடத்தில் புதன் பகவான் அமர்வது சோதிடம்,கணித,கணிப்பொறி ஆகியவற்றில் ஈடுபாடு உருவாகும்.எழுத்து,பேச்சில் சிறந்து விளங்குவார்.
இரண்டாம் இடத்தில் சனிபகவான் அமர்ந்தால் ஒருவர் நல்லதே சொன்னாலும் அது கெடுதலில் போய் முடியும்.கோபக்காரராக இருப்பர்.
இரண்டாம் இடத்தில் செவ்வாய் அமர்வது அனல் பறக்கும் பேச்சுக்கு சொந்தகாரர்.தனது பேச்சால் மற்றவரிடம் கெட்ட பெயர் எடுக்க வைக்கும்.
இரண்டாம் இடத்தில் சந்திரன் அமர்வது குளிர்ந்த பேச்சிற்கு சொந்தக்காரர்.
இரண்டாம் இடத்தில் கேது பகவான் அமர்வது வாக்குபலிதம் உடையராக இருப்பர்.ஆன்மீக வாழ்வு,திருமண தடை போன்றவை உருவாகும்.
இரண்டாம் இடத்தில் ராகு பகவான் அமர்வதால் தந்திரமான பேச்சுகளை உடையவர்,ராஜதந்திரி,பேச்சாற்றல் மிக்கவர்.வாக்கு சுத்தம் இருக்காது.காலதாமத திருமணம்,தனயோகம் அற்றவர்.
இரண்டாம் இடத்தில் சூரியபகவான் அமர்வது கண்பார்வை பாதிக்கப்படும்.கோபக்காரர்.
இரண்டாம் இடத்தில் சுக்கிரன் பகவான் அமர்வது கற்பனையாக பேசக்கூடிய வல்லமை படைத்தவர்.
ஆக இரண்டாம் இடத்தின்மூலம்
1,அதிர்ஷ்டம், 2, தனவிருத்தி
1,அதிர்ஷ்டம், 2, தனவிருத்தி
3, குடும்பம் , 4,வலதுகண்
5,கல்வி, 6,செல்வம்,
7, வாக்கு, 8,சாத்திரம்
9,நடை, 10,மனம்
11) மறுத்துபேசுதல்
12) பொன், 13) நவரத்தினம்
போன்றவற்றை ஆராய்ந்து ஆராயப்படவேண்டும்.
இரண்டாம் இடத்தினை பலன்களை கூற முனையும்போது இரண்டாம் இட அதிபதி இயற்கை சுபரா ? பாவரா ? என கவனிக்கப்படவேண்டும்.இரண்டாம் அதிபதியின் நட்சத்திர சாரம் கண்டறிந்து அதன் அதிபதி இரண்டாம் அதிபதிக்கு நட்பா ? பகையா ? என அறியப்படவேண்டும்.
இரண்டாம் இடத்தில் அமர்ந்துள்ள கிரகம் ,பார்க்கின்ற கிரகங்களை கவனிக்கப்படவேண்டும்.இவை இரண்டாம் இடத்தின் வலுவினை எவ்வகையில் பாதிக்கிறது என ஆராயப்படவேண்டும்.
இரண்டாம் அதிபதி எந்த ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளது .இதனை பார்க்கின்ற அல்லது சேர்ந்துள்ள கிரகங்களின் தன்மையினை அதன் சார அடிப்படையிலும் ஆராயப்படவேண்டும்.
இரண்டாம் அதிபதி அம்சத்தில் அதன் வலிமையினை கணிக்கப்படவேண்டும்.ஒருவேளை ராசியில் பலமிழந்து இருந்தாலும் அம்சத்தில் பலமடைந்த இருப்பின் இரண்டாம் இடம் வலுப்பெற்று திகழும்.
இரண்டாம் அதிபதி இரு ஸ்தான ஆதிபத்தியம் பெற்றிருப்பின் மற்றொரு ஸ்தானம் என்ம என்பதையும்,அதன் நிலைக்கேற்ப பலனளிக்கப்படவேண்டும்.
இரண்டாம் அதிபதி இலக்கின அதிபதிக்கு நட்பா ? பகையா எனவும்,இரண்டாம் அதிபதி அமரும் வீடு நட்பு வீடா ? அல்லது பகை வீடா ? என ஆராயப்படவேண்டும்.
இதுபோல பலவகையில் ஒரு பாவகத்தினை ஒரு நொடிக்குள் மனதிற்குள் ஆராய்ந்து இறைபிராப்தத்தோடு பலனளிக்கப்படவேண்டும்.
நன்றி
சோதிட அடிப்படை அறிவினை அனைவரும் பெறும் நோக்கினில் இப்பதிவினை பதிவிட்டு உள்ளேன்.பலர் அறிய பகிர்வது எனக்கு செலுத்தும் நன்றிகடன் ஆகும்.
வாட்ஸ் அப்
97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 647
97 151 89 647
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc,MA ,BEd.
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
M.Sc,MA ,BEd.
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
Email
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
My blogspot
AstroRavichandran. blogspot. com
AstroRavichandransevvai.blogspot. com
................
..............
No comments:
Post a Comment