கிரகங்கள் படுத்தும் பாடு -( 27 )
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
இன்றைய *கிரகங்கள் படுத்தும் பாடு* எனும் தொடர் பதிவில்" வக்ர நிலை " என்றால் என்ன ? எந்தந்த கிரகங்கள் வக்ர நிலை உண்டு ,எந்த கிரகங்களுக்கு வக்ரகதி இல்லை எனவும் ,அவ்வாறு வக்ரம் அடைந்த கிரகங்களின் பலம் பற்றியும் இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.
சில சமயங்களில் கிரகங்கள் தாம் செல்லும் பாதையிலிருந்து பின்னோக்கி வருவதுபோல தோற்றமளிக்கும். இதனைத்தான் "வக்கிர நிலை "என அழைக்கிறோம்.கிரகங்கள் எல்லாம் தத்தம்பாதையில் முன்னோக்கிதான் சென்றுகொண்டிருக்கும் அவை பின்னோக்கி வருவதில்லை.
எப்படி பூமியின் சுழற்சியினால் சூரியன் உதிப்பதும் ,மறைவதும்போல காட்சியளிக்கிறதோ அதுபோலவே வக்கிரகதியும் ஆகும்.உண்மையாக அறிவியல் அடிப்படையில் சொல்லவேண்டுமென்றால் சூரியன் உதிப்பதும் மற்றும் மறைவதும் இல்லை.
வக்கிரம் பெறும்பொழுது அக்கிரகங்களுக்கு பலம் அதிகம் உண்டாகிறது.மேலும் அந்த கிரகங்களின் தன்மை கூட மாறி விடுகிறது.நல்லது செய்யக்கூடிய சுப கிரகங்கள் கூட நல்லது செய்வதற்கு பதிலாக கெடு பலனை தந்து விடுகிறது அல்லது எவ்வித மாற்றத்தையும் உண்டாக்கமால் செய்துவிடுகிறது. ஒற்றை கிரகங்கள் மகாபலவான்கள் ஆகும்.
இதில் ராகு,கேதுக்களுக்கு வக்ர கதியைதத்தவிர நேர்கதியே கிடையாது.
இதில் ராகு,கேதுக்களுக்கு வக்ர கதியைதத்தவிர நேர்கதியே கிடையாது.
குரு,செவ்வாய்,சனி ஆகிய கிரகங்களுக்கு ஐந்தாமிடத்தில் சூரியன் வரும்பொழுது வக்ரகதி ஏற்படுகிறது.ஏழில் வரும்போது அதிவக்ரமும்,ஒன்பதாமிடத்தில் வரும்போது வக்ரகதி முடிவடைந்து நேர்கதி ஏற்படுகிறது.இதனைப்பற்றி விரிவாகவும் மற்றும் விளக்கமாகவும் பின்வருமாறு பார்ப்போம்.
1) சூரியனோடு கிரகங்கள் இணைந்திருப்பது "அஸ்தங்க கதி"
2)அஸ்தங்க கதியிலிருந்து விலகி வருவது "உதயகதி"
3)சூரியனுக்கு 2-ல் கிரகங்கள் இருப்பது "சீக்கிரகதி"
4)சூரியனுக்கு 3-ல் கிரகங்கள் இருப்பது "சமகதி"
5)சூரியனுக்கு 4-ல் கிரகங்கள் இருப்பது "மந்தகதி"
6)சூரியனுக்கு 5,6 -ல் கிரகங்கள் வரும்போது" வக்கிரகதி"
7)சூரியனுக்கு 7,8-ல் கிரகங்கள் வரும்போது "அதிவக்கிரகதி"
8)சூரியனுக்கு 9,10 -ல் வரும்போது "வக்கிரநிவர்த்தி கதி"
9)சூரியனுக்கு 11-ல் கிரகங்கள் வரும்போது" சீக்கிரகதி"
அஸ்தங்கம் என்பது
கிரகங்கள் சூரியன் பகவான் உடன் ஒரு ராசியில் இணைகின்றபோது ஒரு குறிப்பிட்ட பாகையில் சூரியன் உடன் நெருங்கி செல்லும்போது இணைகின்ற கிரகம் தனது காரக மற்றும் ஸ்தான பலன்களை இழந்து நிற்கும். இதனை தான் நாம் "அஸ்தங்கம்" என்கிறோம்.
செவ்வாய் பகவான் சூரியனிடமிருந்து முன்பின்னாக 17 பாகைக்குள் அஸ்தங்கம் அடைகிறது.
புதன் பகவான் - 11 பாகை
குருபகவான்- 15 பாகை
சுக்கிரன் பகவான்-9 பாகை
சனி பகவான்- 17 பாகை
குருபகவான்- 15 பாகை
சுக்கிரன் பகவான்-9 பாகை
சனி பகவான்- 17 பாகை
புதன்,சுக்கிரன், சந்திரன் ஆகிய மூன்று கிரகங்கள் மட்டும் அஸ்தங்கம் அடையும்போது அவை தனது சொந்த காரகத்துவங்களை இழப்பதில்லை.
புதன், சுக்கிரன் ஆகிய இரண்டு மட்டும் சூரியனுக்கு முன்,பின் என இருந்தபடியே இரு வகையான அஸ்தங்கம் அடைகிறது. முன்புறமாக அஸ்தங்கம் அடையும்போது சுய காரகத்துவ பலனை இழக்காது.ஆனால் ஸ்தானதிபத்திய பலனை இழக்கிறது.
கிரகங்களில் சுக்கிரன், புதன் ஆகிய இரு கிரகங்களும் சூரியனின் உள்வட்ட பாதையில் சுற்றி வரும் கிரகங்கள் ஆகும்.இவ்விரு கிரகங்கள் மட்டுமே அஸ்தமனம் அடையும்போதே வக்கிரமும் அடைகிறது.இக்கிரகஙகள் அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் ஆகிய இரண்டையும் தனித்தனியாகவும், அல்லது இரண்டும் இணைந்தும் நடக்கிறது.இவ்விரு கிரகங்கள் மட்டும் சூரியனுக்கும்,பூமிக்கும் இடையில் வருகிறது.
கிரகங்களில் சுக்கிரன், புதன் ஆகிய இரு கிரகங்களும் சூரியனின் உள்வட்ட பாதையில் சுற்றி வரும் கிரகங்கள் ஆகும்.இவ்விரு கிரகங்கள் மட்டுமே அஸ்தமனம் அடையும்போதே வக்கிரமும் அடைகிறது.இக்கிரகஙகள் அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் ஆகிய இரண்டையும் தனித்தனியாகவும், அல்லது இரண்டும் இணைந்தும் நடக்கிறது.இவ்விரு கிரகங்கள் மட்டும் சூரியனுக்கும்,பூமிக்கும் இடையில் வருகிறது.
ஆனால் மற்ற கிரகங்கள் அனைத்தும் அஸ்தங்கம் மற்றும் வக்ரகதி இரண்டையும் ஒரே நேரத்தில் அடைவது கிடையாது.செவ்வாய், குரு,சனி ஆகிய மூன்று கிரகங்களும் சூரியனை மையப்பொருளாக கொண்டு பூமியின் வட்ட பாதைக்கு அடுத்தாற்போல வெளிவட்ட பாதை அமைத்துக் கொண்டு சுற்றி வருகிறது.இக்கிரகங்கள் பூமிக்கும்,சூரியனுக்கும் இடையே வருவதில்லை.
சந்திரனும் பூமியை சுற்றி வருவதால் பதினைந்து தினத்திற்கு ஒரு முறை பூமிக்கும்,சூரியனுக்கும் இடையில் வந்து வளர்பிறை மற்றும் தேய்பிறை உண்டாகிறது.
செவ்வாய், குரு,சனி இவை சூரியனுக்கு பின்னால் அஸ்தங்கமடைகிறது.புதன் அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கும் என்பதால் சூரியனுக்கு முன் நிற்கிறது.
புதனும்,சுக்கிரனும் சூரியனுடையே சுற்றுவதால் சூரியனுக்கு 13- பாகைக்குள்ளே வரின் புதனுக்கும்,8-பாகைக்குள் வரின் சுக்கிரனுக்கும் வக்ரகதி உண்டாகிறது.
எல்லா கிரகங்களை விட புதனும் ,சுக்கிரனும் மாறுபட்டு நிற்கிறது.அதாவது எல்லா கிரகங்களும் கிழக்கில் உதயமாகி மேற்கில் அஸ்தங்கம் ஆகிறது.ஆனால் புதன்,சுக்கிரன் மட்டுமே மேற்கில் உதயமாகி கிழக்கில் அஸ்தங்கம் அடைகிறது.
உதயகதி என்பது
அஸ்தங்கத்தில் இருக்கும் கிரகமானது அஸ்தங்கம் எல்லையை விட்டு விலகுவதை "உதயகதி " என்கிறோம்.
ஒரு கிரகம் அஸ்தங்கம் அடைந்தவுன் அக்கிரகத்திற்குரிய காரக மற்றும் ஸ்தான பலன்களை இழந்து நிற்கும்.இவ்வாறு இழந்த காரக மற்றும் ஸ்தான பலன்களை உதயகதியின்போது மீண்டும் சாதகர் பெறுவார்.
வக்ரம் அடைந்த நிலையில் கிரகங்களின் பலனில் ஏற்படும் மாற்றங்களாவன : -
1) உச்சம் அடைந்த நிலையில் ஒரு கிரகம் வக்ரம் அடைந்திருந்தால் அக்கிரகம் உச்ச பலனை தராமல் நீச பலனை கொடுக்கிறது.
2) பாவ கிரகங்கள் உச்சம் அடைந்து வக்ரம் அடையுமானால் அவர்களின் தசையில் யோக பலனை தருகிறது.
3) ஒரு கிரகம் வக்ரம் அடைந்த நிலையில் அக்கிரகம் உச்சம் அடைந்த கிரகங்களால் பார்க்கப்பட்டால் அக்கிரகம் வக்ரபலன் நீங்கி உச்ச பலனை தந்துவிடுகிறது.
4) வக்ரம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்றால் வக்ரபலன் நீங்கிவிடுகிறது.
5) வக்ரம் பெற்ற கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெறுவதும்,பிறகு வக்கரம் பெற்ற கிரகம் இருந்த வீட்டின் அதிபதி எந்த வீட்டில் உச்சம் பெறுகிறதோ அந்த வீட்டின் அதிபதியும் உச்சம் பெற்றால் டபுள் டெபாஸிட்டர் முறையில் வக்ரபலன் நீங்கி நன்மையை செய்துவிடுகிறது.
6)வக்கிரம் பெற்ற கிரகம் உச்ச வர்க்கோத்தம் பெறுமானால் அவர் இருக்கும் இடத்தினை பாதிப்பதில்லை (வர்க்கோத்தமம் என்பது ராசி மற்றும் அம்சம் இரண்டிலும் ஒரே ராசியில் ஒரு கிரகம் இருப்பது )
கிரகங்களின் வக்கிரகதி காலம்
குருபகவான் -மூன்று மாதத்திற்கு அதிகமாகவும் ,
சனிபகவான் -நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை
செவ்வாய்பகவான் -இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சுமாராக இரண்டு மாதகாலம்
சுக்கிரபகவான் -ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐம்பது நாட்கள்
மேற்கண்ட காலங்களில் கிரகங்கள் வக்கிரநிலை அடைகிறது.
இதில் செவ்வாய்பகவான் மட்டும் சிலநேரங்களில் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் ஆனாலும் ஒரே இடத்தில் அசைவற்று நிற்பதுபோல தோற்றமளிக்கும்.எனவே செவ்வாய் கிரகத்திற்கு மட்டும் "ஸ்தம்பன்கதி "என்ற சிறப்பு பெயரும் உண்டு.
சனிபகவான் -நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை
செவ்வாய்பகவான் -இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சுமாராக இரண்டு மாதகாலம்
சுக்கிரபகவான் -ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐம்பது நாட்கள்
மேற்கண்ட காலங்களில் கிரகங்கள் வக்கிரநிலை அடைகிறது.
இதில் செவ்வாய்பகவான் மட்டும் சிலநேரங்களில் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் ஆனாலும் ஒரே இடத்தில் அசைவற்று நிற்பதுபோல தோற்றமளிக்கும்.எனவே செவ்வாய் கிரகத்திற்கு மட்டும் "ஸ்தம்பன்கதி "என்ற சிறப்பு பெயரும் உண்டு.
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
சோதிட ஆய்வாளர்,
ஓம் சக்தி ஜோதிட நிலையம்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
சோதிட ஆய்வாளர்,
ஓம் சக்தி ஜோதிட நிலையம்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.
செல் ; 97 151 89 647
740 257 08 99
740 257 08 99
வாட்ஸ்அப் எண்
97 151 89 647
97 151 89 647
(தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சாதக பலனை வீட்டிலிருந்த படியே போன் வழி மூலம் தகவல் பெறலாம்.கட்டணம் உண்டு.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம் )
My website.Click hear
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandran. blogspot. com
********************************
My email
masterastroravi@gmail.com
.......................................................................
My email
masterastroravi@gmail.com
.......................................................................
No comments:
Post a Comment