Friday, 27 April 2018

எல்லா கிரகமும் நல்ல கிரகம்தான்...

எல்லா கிரகமும் நல்ல கிரகம்தான் .....

                                  
  
கிரகங்கள் படுத்தும் பாடு- ( 49 )

ஸ்ரீபத்ரகாளியம்மன் அருளாசியுடன்.

      ஒரு மனிதனுக்கு பாப கிரகங்கள் எப்பொழுதும் கெடுதலையே தந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது .பாவ கிரகமாகவே இருந்தாலும் அவை தான் பெற்ற ஸ்தான அடிப்படையில் தனது திசையில் நற்பலன்களை தந்துவிடுகிறது.

    அதேநேரத்தில்  இயற்கை சுபராக இருந்தாலும் அவைபெறும் ஸ்தானத்தினால் தனது திசையில் கெடுதலான பலன்களை  செய்யும் என்பதை தகுந்த விளக்கங்களுடன் இப்பதிவில் பார்ப்போம்.

   சோதிடத்தில் சூரியனை அரை பாவர் என்பர்.அதேபோல தேய்பிறை சந்திரனையும் பாவியாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.மேலும் புதன் பகவானோடு பாவி ஏதாவது சேரும்பட்சத்தில் அவற்றையும் பாவியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.இவைதவிர சனிபகவான்,அரவுகளான ராகு பகவான்,கேது பகவான் மற்றும் செவ்வாய் பகவான் ஆகியவற்றை இயற்கை பாவிகளாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

   இந்த பாவ கிரகங்கள் நல்லது செய்யவேண்டுமெனில் சாதக கட்டத்தில்
இந்த பாவ கிரகங்கள்3,6,10,11 போன்ற உபஜெயஸ்தானங்களில் நட்பு பெற்று அமரும்போது அவை அத்திசை காலங்களில் சாதகருக்கு நன்மையையே செய்கிறது.

           கிரகங்களில் இயற்கை பாவிகள் என அழைக்கப்பட்ட கிரகங்கள் மட்டும்தான் பாவ கிரகங்கள் அல்ல.சில நேரங்களில் இயற்கை சுபர் என அழைக்கப்படும் பாவியோடு சேராத புதன்,வளர்பிறை சந்திரன்,குரு,சுக்கிரன் மற்றும் குருபகவான் ஆகிய கிரகங்கள் இயற்கை சுபராக இருந்தாலும் அவரவர் சாதக கட்டத்தை பொறுத்து இவைகளும் பாவிகளாகிவிடுகின்றன்.அதுபோன்ற நிலைகளில் அக்கிரகங்கள் உச்சம்,ஆட்சி போன்ற பலம் மிகுந்த ஸ்தானங்களில் அவை அமரக்கூடாது.அவ்வாறு அமர்ந்தால் அதன் திசை காலங்களில் அவை சுபராக இருந்தாலும் நன்மைக்கு மாறாக தீமையையே செய்கிறது.

                                        
                                            
கீழ்கண்ட உதாரணங்களை கவனியுங்கள்.

#மேஷ லக்கனம் மற்றும் ராசி

     இதில் மூன்று மற்றும் ஆறாமாதிபதி ஸ்தானம் பெறுவதாலே  #புதன்பகவான்  பாவியாகி விடுகிறார்.எனவே புதன் பகவான் மூன்றில் ஆட்சியோ அல்லது ஆறில் உச்சம் மற்றும் ஆட்சி பெறாமல் மறைவு ஸ்தானங்களிலோ அல்லது பலவீனமடைந்து இருத்தலே நலம்.

                     ரிஷபம்

   இதில் லக்கனாதிபதி மற்றும் ரோண ரோகாதிபதிபதியாதியாக வரும் சுக்கிரன் பகவான் சுபராக இருந்தாலும் ஆறாமிடத்தில் ஆட்சி பெறாமல் லக்கனத்தில் ஆட்சி பெறுதலே நலம்.இதேபோல அஷ்டம மற்றும் லாபதிபதியான குரு பகவான் பதினொன்றில் ஆட்சி பெறலே நலம்.

                         மிதுனம்

       இங்கு ரோண ரோகாதிபதி மற்றும் லாபாதிபதியான செவ்வாய் ஆறில் ஆட்சியோ அல்லது எட்டில் உச்சமோ பெறாமல் இருத்தல் நலம்.

         இப்படியாக ஒவ்வொறு லக்கனத்திற்கும் சொல்லிக்கொண்டே போகலாம்.

              இன்னும் சொல்லப்போனால்  துலாம் லக்கனத்திற்கு மூன்று மற்றும் ஆறுக்குடைய #குருபகவான் மூன்று மற்றும் ஆறில் ஆட்சியோ அல்லது பத்தில் உச்சமோ பெற்றிருந்தால் #குருபகவான் இயற்கை சுபராக இருந்தாலும் அதன் தசை காலத்தில் கடுமையான இன்னல்களை கொடுக்கும்.


            எனவே குறிப்பாக #மேஷம் மற்றும் #துலாம் லக்கனத்திற்கு #புதன்பகவானும்,மற்றும் #குருபகவானும் இயற்கை சுபராக இருந்தாலும் அவை தான்பெறும் ஸ்தானங்களினால் பாவியாகிவிடுகிறது.எனவே இவ்விரு ராசிகாரர்களுக்கு இக்கிரகங்கள் பலம்பெறாமல் இருத்தலே சாதகருக்கு பலம் ஆகும்.

      #மீனம் ராசிக்கு சுக்கிரன் சுப கிரகமாக இருந்தாலும் பலம் பெறாமல் இருப்பது நல்லது.

        அதேநேரத்தில் #செவ்வாய்பகவான் இயற்கை பாவியாக இருந்தாலும் #கடகராசிகாரருக்கு ஐந்தாமிடத்திலோ அல்லது ஆட்சி பெறும்போது நன்மையை செய்துவிடுகிறது.ஏனைய ஸ்தானங்கள் பலம்பெறும் நிலையில் சாதகரை மருத்துவராக கூட ஆக்கிவிடுகிறது.

எனவே #எல்லா கிரகமும் நல்ல கிரகமும் நல்ல கிரகம்தான் மண்ணில் ஜெனிக்கயிலே அவர் நல்லவர் ஆவதும்,தீயவர் ஆவதும் ஸ்தான நிலையினிலே"

                                          
by
சோதிடர்ரவிச்சந்திரன்
           M.SC,MA,BEd,
             WHATSUP NO: -
                97 151 89 647
                           CELL:
                 740 257 08 99
                    97 151 89 647
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

No comments: