"சிறை செல்லும் அமைப்பு " -யாருக்கு உண்டு?
கிரகங்கள் படுத்தம் பாடு -( 26 )
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
ஒரு சிலர் குறுகிய காலத்திலே பொருள் ஈட்டி பெரும் பணக்காரனாக ஆகி விட வேண்டும் என்னும் தணியாத தாகமுடையவர்களாக இருப்பார்கள்.இவர்களை
போன்றவர்கள் நேர்மையைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.மனசாட்சிக்கு பயப்படமாட்டார்கள்.
போன்றவர்கள் நேர்மையைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.மனசாட்சிக்கு பயப்படமாட்டார்கள்.
"கவிஞர் பட்டுக்கோட்டையார் பாடியது போல"குறுக்கு வழியிலே வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா !
என்பதுபோல
ஒருவரது சாதகத்தில் ஆறாம் அதிபதி பாவியாக வந்து தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் சம்பந்தப்படுமானால் அரசுக்கு விரோதமான தொழில் ஈடுபட்டு குறைவான காலத்தில் பொருள் ஈட்டும் யோகமுண்டு.
பத்தாமிடத்தை சனி,செவ்வாய் சேர்ந்து பார்க்கப்படும்போது சட்ட விரோத தொழிலில் ஈடுபட்டு சனி திசை செவ்வாய் புத்தி அல்லது செவ்வாய் திசை சனி புத்தி போன்ற காலங்களில் சிறை வாசம் செய்ய வைக்கும்.சுபர் பார்வை பெறின் தண்டனை குறையலாம்.
தொழில் ஸ்தானத்துடன் ராகு பகவான் தொடர்பு பெற்று பலம்பெற்றிருக்கும் போது லாட்டரி விற்பனை ,சீட்டு விளையாடுதல் ,பைனான்ஸ் மற்றும் குதிரை ரேஸ் போன்ற அரசு விரோத தொழிலில் ஈடுபாட்டைத்தரும்.
ஒருவரது சாதகத்தில் இரண்டு ,பணிரெண்டாமிடங்களில் பாவிகள் இடம்பெறுவதும், இவர்களுடன் லக்கனாதிபதி இவ்விடங்களில் அமர்வதும் சிறை செல்லும் அமைப்பு.
தனகாரகனான குரு பகவான் ஏழு மற்றும் பத்தாம் அதிபதியாகி உச்ச வக்கிரம் பெற்று (நீசம் ) பெற்று தனஸ்தானத்தில் இருப்பதும்,இரண்டாம் பாவத்திற்கு ராகு ,கேது சம்பந்தம் சிறை செல்லும் யோகத்தை உண்டாக்கும்.
ஆறு,எட்டு மற்றும் ஜீவனஸ்தானம் போன்ற இடங்களை உச்ச வக்கிரம் பெற்ற குருபகவான் பார்வை பெறுவதும் குறுக்கு வழியில் பணம் ஈட்ட செய்யும்.
ராசிக்கு ஆறாம் அதிபதி பத்தாமிடத்தில் உச்ச வக்கிரம் பெற்ற குருவால் பார்க்கப்படும்போது இவையும் குறுக்கு வழியில் பொருள் ஈட்ட வைக்கும்.
குருவோடு ராகு அல்லது சனி பகவான் சேர்ந்து "குரு சண்டாள யோகம் பெற்றவர்களும் ஆன்மிக நாட்டம் குறைந்து காணப்படுவதோடு தவறான வழியில் ஈடுபட வைக்கும்.
எதிரி ஸ்தானம் என அழைக்கப்படும் ஆறாமிடம் பலம் பெற்று லாப ஸ்தானம் ஏறலும் பலம் ஆகும்.இதுபோன்ற அமைப்பை பெற்றவர்கள் சிறை செல்லும் வாய்ப்பை உண்டாக்கும்.
இரண்டாம் அதிபதி ஆறாம் வீடு குடியேறினால் தனது சொத்து வம்பு வழக்குகளில் ஈடுபட்டு எதிரிக்கு சென்றுவிடும்.
மாறாக ஆறாம் அதிபதி இரண்டாம் வீடு குடியேறியிருந்தால் வம்பு வழக்கு என கோர்ட்டிற்கு சென்றால் எதிரி சொத்து தனக்கு கிடைத்துவிடும்.சண்டைக்கு சென்றாலும் எதிரியின் பலம் பாதி தமக்கு கிடைத்துவிடும்.
ஒருவருக்கு சுபர் பார்வையில்லாத அட்டமாதிபதியின் திசையோ அல்லது அட்டம சனி நடைபெறும் காலங்களில் எச்சரிக்கையாக இருத்தல் நலம்.இல்லையெனில் வீண் வம்புகளிலா ஈடுபட்டு சிறை செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
பொதுவாக பத்தில் ஒரு பாவியாவது இருக்கவேண்டும் என்பார்கள்.அப்பொழுதுதான் நேரிய வழியில் உடல் உழைப்பு கொடுத்து பொருள் ஈட்ட முடியாவிட்டாலும் எப்படியாவது பிழைத்துக்கொள்வான்.ஆதலால் பத்தாம் இடத்தில் சுபர் இல்லாவிட்டாலும் ஒரு பாவியாவது இருக்கவேண்டும் என்றனர்.
பத்தாமிடத்தில் சனி,செவ்வாய் மற்றும் ராகு சேர்க்கை மற்றும் சம்பந்தபட்டவர்கள் அரசுக்கு விரோத தொழில் ஈடுபட்டு அதனால் சிறை செல்லும் வாய்ப்பு உருவாகலாம்.
நன்றி!
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
சோதிட ஆய்வாளர்
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
omsakthi jothida nillayam
pudukkottai ( District ).
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
சோதிட ஆய்வாளர்
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
omsakthi jothida nillayam
pudukkottai ( District ).
cell : 97 151 89 647
740 257 08 99
740 257 08 99
வாட்ஸ்அப் எண்
97 151 89 647
(தங்களது குழந்தைகளுக்கோ அல்லது தமக்கோ சாதகம் எழுதி போன் வழியாக பலன் பெற தொடர்பு கொள்க.கட்டணம் உண்டு .தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டண விபரம் பெறலாம்.)
Email
masterastroravi@gmail.com
My blogspot Google search
AstroRavichandran. blogspot. com
AstroRavichandransevvai.blogspot. com
............,.................................
.
No comments:
Post a Comment