Friday, 27 April 2018

கிரகங்கள் மனித வாழ்வில் நடத்தும் அரசியல்

கிரகங்கள் மனித வாழ்வில் நடத்தும் அரசியல்


                               
கிரகங்கள் படுத்தும் பாடு -(48)

ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்...

             தமிழகத்தில் இந்நேரம் தேர்தல்நேரம்  என்பதால் அரசியலில் பல கட்சிகள் இருந்து ஆட்சி பிடிக்க நினைப்பது போல மனித வாழ்வை வழிநடத்தும் கிரகங்களிடம் இரண்டு அணி இருப்பது பற்றி சிந்தித்ததன் விளைவாக ஏன் இதை நாம் இன்றைய பதிவாக மக்களிடம் பகிர்ந்து கொண்டால் என்ன? என என்னுள் எழுந்து கேள்வியின் விளைவாக அதனை பதிவாக்கலாம் என எண்ணி இப்பதிவை பகிர்கிறேன்.

               ஆம் கிரகங்களிலும் இரண்டு அணி உள்ளது .அதில் தேவர்களின் தலைவனான குரு பகவான் ஆவார்.இவர் மக்களுக்கு தனது வலிமையான ஆளுமையால் சாதகரை பேரின்ப வாழ்வுக்கு அழைத்து செல்பவர்.இவருடைய அணியை வலுசேர்க்க கூடியவர்கள் சூரியன்,சந்திரன்,செவ்வாய் மற்றும் கேது பகவான்கள் ஆகும்.

                       அதேபோல மற்றொரு அணியின் தலைவனான அசுரர்களின் குருவான சுக்கிர பகவான்.இவர் தமது வலிமையான ஆளுமையினால் மக்களுக்கு சிற்றின்ப வாழ்வினை அளிப்பதில் வல்லவர்.இவர் அணியில் இவருக்கு உறுதுனையாக இருந்து வழிநடத்தக்கூடியவர் புதன்,சனி மற்றும் ராகு பகவான்கள் ஆகும்.

                        குரு பகவான் ,சுக்கிர பகவான் ஆகிய இருவரும் மனித வாழ்வினை வழிநடத்தி செல்லக்கூடிய இருபெரும் தலைவர்கள்.
குரு பகவானோடு நட்புக்கரம் நீட்டக்கூடிய கிரகங்கள் சந்திர பகவான்,செவ்வாய் பகவான் மற்றும் சூரிய பகவான் ஆவார்.எதிர் அணியில் இருப்பவர்கள் சுக்கிர பகவான்,சனி பகவான்,புதன் பகவான் மற்றும் ராகுபகவான் ஆவார்.

                       குரு பகவானோடு ராகு பகவான்,சனி பகவான்  இணையும்போது குருவானவர் தனது வலிமையை இழக்கவே செய்வார்.மாறாக ராகு ,சனி பலப்பட்டு "சண்டாள யோகத்தை"வழங்குவார்.இது சாதகரை ஆன்மீக நாட்டத்தில் ஈடுபாட்டை குறைத்து பகுத்தறிவாதியாக சாதகரை மாற்றிவிடுவார்.

                  குருவோடு ராகு பகவான் ஆனவர் எட்டு பாகைக்குள் இணைவதோ அல்லது சூரியனோடு சேர்ந்து அஸ்தங்கம் அடைவதோ கூடாது.இது குருவால் யோகம் முழுவதும் வலிமை இழக்க செய்யும்.

         .   குருவோடு ராகு பகவானை தவிர மற்ற கிரகங்கள் இணைவதும்,சேர்வதும் வலிமை பெற வைக்கும்.
கிரகங்களிலே குரு பகவானுக்கும்,புதன் பகவானுக்கும் (இரண்டும் உபய ராசிக்கு உரியவராதலால்) அதிக கேந்திராதிபத்திய தோஷத்தை கொடுக்கும்.ஆனால் சுக்கிர பகவான் அதிக கேந்திராதிபத்திய தோஷத்தை(சர,ஸ்திர ராசியாக வரும் ஆதலால் ஒன்று மட்டும் கேந்திரமாக வரும்) உண்டுபண்ண மாட்டார்.

                   சுக்கிர பகவானுடன் அதன் எதிர்தன்மை கொண்ட கிரகங்களான குரு ,சந்திரன்,செவ்வாய் மற்றும் கேது பகவான் இணைவானது சுக்கிர பகவானை பலமிழக்க வைக்கிறது.மேலும் அசயர்களான  ராகு,கேது
இணைவு செய்யாமலோ அல்லது வேறு எவ்வித இல்லாமல் இருந்தால் சுக்கிரன் பலம்பெறுவார்.எனவே இவை போன்ற தொடர்புபெறாமல் உச்சம்,ஆட்சி பெற்றிருந்தால்தான் சுக்கிரன் பலப்பட்டு அதன் காரக மற்றும் ஸ்தான பலத்தை தருவார்.

                     இதேபோல புதன் பகவான் என்னதான் உச்சம்,ஆட்சி மற்றும் மூலதிரிகோணம் என வலிமை பெற்றிருந்தாலும் அதன் எதிர்தன்மை பெற்ற குரு,சந்திரன்,செவ்வாய் மற்றும் கேது பகவான் பார்க்காமலோ அல்லது சேராமலோ இருந்தால்தான் அதிக பலன் உண்டாகும்.

குறிப்பு;-சென்ற பதிவை படித்த சிலர் நீங்கள் பதிவிட்டது புதன் உச்சம் ,சுக்கிரன் ,குரு ஆட்சி இருந்தும் தாங்கள் குறிப்பிட்டதுபோல எனது சாதகத்தில்  இருந்தாலும் நீங்கள் கூறிய பலன் இல்லையே என கேட்டவருக்கு இப்பதிவு பதிலாக அமையும்.ஒரு கிரகம் உச்சம் ,ஆட்சி பெற்றிருந்ததாலே அது பலமுடையது என முடிவு செய்யமுடியாது)

நன்றி!

(தங்களுக்கும் தங்களது பிள்ளைகளுக்கும் சாதக பலனை போன் வழியாக பெறலாம்.கட்டணம் உண்டு.எனது செல்,வாட்ஸ்அப்,மெஸ்ஸேன்சர் மற்றும் இமெயில் தொடர்புகொள்ளவும்)

Email : masterastroravi@gmail.com.

my web: AstroRavichandransevvai.blogspot.com
 AstroRavichandran. blogspot. com

                                 
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்ச்சி மற்றும் வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
ஓம்சக்தி சோதிட ஆராய்சி நிலையம்.
புதுக்கோட்டை மாவட்டம்.
எனது செல் மற்றும் வாட்ஸ்அப் நம்பர்; 97 151 89 647
செல்: 740 257 08 99

No comments: