Monday, 30 April 2018

திருமணம் ஆன தம்பதிகளுக்கு பயன்படும் சிறப்பு பதிவு

திருமணம் ஆன தம்பதிகளுக்கு பயன்படும் சிறப்பு பதிவு


.                                   
கிரகங்கள் படுத்தும் பாடு--

ஸ்ரீபத்ரகாளியமம்மன் துணை!

             இருமனம் இணையும் திருமண நிகழ்வில் இருவரும் உடல் மற்றும் உள்ளத்தாலும் இணைவு பெற்றிருக்கவேண்டும்.வெறும் உடல் இணைவு மட்டும்  நிகழ்ந்து உள்ள இணைவு நிகழாத தம்பதிகளிடையே இன்றைய காலகட்டத்தில் நிறைய பிரச்சினைகள் உருவாகுகிறது.

           "கல்லானாலும் கணவன
         ் சிறு புல் ஆனாலும் புருஷன்"என தன்னை சமரசபடுத்திக்கொணடு வாழ்ந்த பெண்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.இதற்கு காரணம் பெண்கள் நிரம்ப கல்வியறிவு பெற்று பொருளாதார விஷயங்களுக்காக ஆண்களை சார்ந்து நிற்காமல் நிறைய பணம் ஈட்டும் வாய்ப்புகள் பெண்களுக்கு திருமணத்திற்கு முன்பே கிடைத்துவிடுவதால் அவர்களால் சமூக கட்டுகோப்புக்காகவோ அல்லது பொருளாதர சார்புநிலைக்காகவோ பயந்து நிற்கவேண்டிய சூழலில் இருந்து விலகி நிற்கும் வாய்ப்பு வந்துவிட்டது.
இது பாரதிதாசன் கண்ட
"நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத
திமிர்ந்த ஞானசெறுக்கு கொண்டவளாக பெண் திகழவேண்டும்
   என விரும்பினார்.

    இதில் பெண்ணிற்கு ஞானத்தில் தனக்கு நிகர் யாரும் இல்லை.அறிவார்ந்த செறுக்குதான் வேண்டும் என்கிறார்.இதை விடுத்து சம்பாரிக்கிறோம் என செறுக்கு கூடாது என்கிறார்.

            எனவே இதுபோன்ற சமூகசூழல் ஏதுவாக இருப்பதால் கிரகங்கள் அடிப்படையில் அவர்களுக்கு திசையினாலோ அல்லது கோசரப்படி அட்டமசனி ,ஏழரை சனி போன்றவை நடைபெறும் காலங்களில் ஏற்படும் சிறு சிறு வாதங்கள் தம்பதிகளுடையே நிகழ்ந்து அதனால் அவர்களுக்கிடையே கருத்து விவாதம் நிகழ்ந்து சிறு பிரச்சினை பெரிய பிரச்சினையாக வள்ளுவர் கூறியபடி "யாகாவராயினும் நாகாக்க "எனும் கட்டளைக்கு மீறி அவர்களுக்கிடையே நிரந்தர பிரிவு,விவாகரத்து மற்றும் ஒரே வீட்டில் இருந்தாலும் பேசிக்கொள்ளாத நிலை இப்படியாக ஏதாவது பிரச்சினைக்கு உட்பட்டு இதனால் குழந்தைகளின் எதிர்காலமும் கேள்வி கூறியாக மாறிவிடுகிறது.இதுபோன்ற பிரச்சினைகள் படிக்காதவர்களை விட படித்தவர்களின் மத்தியில்தான் இதுபோன்ற ஈகோ கிராஸ் ஆகிறது.

              என்னிடம் போன் வழியாக சோதிட ஆலோசனை பெறுபவர்களில் பெரும்பாலோனோர் இவ்விதமாக தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து அல்லது விவாகரத்து ஏற்பட்டவர்கள்தான அதிகம்.இதில் பெண்கள் துணிச்சலாக ஆடவரை வேண்டாம் என கூறிவிட்டு மறுதிருமணம் செய்துகொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.இது ஒரு விரும்பதகாது மாற்றமாகும்.

           எனவே இம்மாற்றத்தினால் குடும்பம் என நமது முன்னோர்கள் உருவாக்கி  வைத்து விட்டுபோன கட்டுகோப்பு நிலை உடைந்து விடக்கூடாது எனும் ஆதாங்கத்தில்
இப்பதிவை பகிர்கிறேன்.

            இதுவரை சமூக பொருளாதர விடுதலை ,சமூக கட்டுப்பாட்டுக்கு பயப்படுதல் ,பிறரை சார்ந்து நிற்க வேண்டிய அவசியமில்லாமை போன்ற சமூகவியல் மாற்றங்களால் எளிதாக சமூக வரம்பிலிருந்து விலகி மதசடங்குகளுக்கான அர்த்தங்களுக்கும் உட்படாமல் விலகி செல்லும் சூழல் தம்பதிகளுக்கிடையே வளர்ந்து வருதல் ஆரோக்கியமில்லாத சமூகமாற்றமாகும் என்பதை விளக்கினேன்.

               சோதிட அடிப்படையில் இப்பிரச்சினை நிகழ ஏதுவாக சில விஷயங்களை உங்களிடம் எனது சோதிட அனுபவ அடிப்படையாக கொண்டு பகிர்வதால் இதன் உண்மைநிலைகளை புரிந்துகொள்வதற்கும் ஏதுவாக இருக்கும்.இவை திருமணம் முயற்சி செய்யும் .

பெற்றோர்களுக்கும்,புதுமண தம்பதிகளுக்கும் உதவியாக இருக்கும்.
            1) முதலில் ஒரு பெண் (ஊர் ,பெயர் சொல்லவிரும்பவில்லை) திருமணம் ஆகி ஒரு குழந்தை வயிற்றில் ஜெனிக்கும் வரை திருமண வாழ்வை இன்பமாக அனுபவித்தோம்.ஆனால் எனது மகன்  வயிற்றில ஜெனித்ததிலிருந்து எங்களுக்குள் கருத்து வேறுபாடு வந்துவிட்டது.நான் இனிமேல் அவரோடு வாழவே மாட்டேன் .என் பிள்ளை பிறந்தபோதுகூட அவர் வந்து பார்க்கவில்லை என ஆதாங்கப்பட்டார்.நான் இப்பொழுது அம்மா வீட்டில் தான் உள்ளேன்".என்றாள்.

             இருவரது சாதகங்களையும் ஆராய்ந்து பார்த்தபோது நல்லவிவாக பொருத்தம் உள்ள சாதகமாகத்தான் தெரிந்தது.பிறகு ஏன் அவர்களுக்குள் பிரிவு வந்தது  என அவர்களுக்கு பிறந்த குழந்தையின் சாதகத்தை ஆராய்ந்து  பார்த்தபோது அவனுக்கு ஏழரை சனி நடந்து கொண்டு இருப்பதையும்,இரண்டாமிட ராகு தசை நடப்பதையும் காணமுடிந்தது.இதனால் இவன் ஜெனிப்பதற்கு முன்புவரை அன்பாக போன தாம்பத்ய வாழ்க்கை ஜெனித்தபிறகு புயலடிக்க காரணமானது என அந்த பெண்ணிடம் விளக்கினேன்.தற்பொழுதும் தங்கள் கணவன் உண்மையில் உங்கள் மீது அன்பாக உள்ளார்.தற்சமயம் சிறுபிரிவுஏற்பட்டது நல்லது என விளக்கினேன்.

         ஒரு குறிப்பிட்ட காலம்வரை பிரிந்திருக்கும் காலத்தில் அவரைப்பற்றி உறவினர்களிடம் தவறாக சொல்வதை தவிருங்கள்.அவர்கள் பிரச்சினைகளை பெரிதாக்கிவிடுவார்கள்.முடிந்தவரை அமைதியாக இருக்க முயலுங்கள்.தினந்தோறும் வெள்ளிக்கிழமை விரதமிருந்து விநாயகரை வழிபடுங்கள் 

பிரச்சினை தீரும் என விளக்கினேன்.சேரும்வரை அவர்சார்ந்த நல்ல விஷயங்களை மனதிற்குள்  அடிக்கடி நினையுங்கள் என விளக்கினேன்.இவ்வாறு செய்வதால் மீண்டும் சேரும்காலத்தில் அது உங்களுக்கு அவர் பற்றிய தவறான அபிப்ராயங்கள் மறைய  வாய்ப்புண்டு என கூறினேன்.
தொடரும்.......


                                                 

அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd.
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம் சக்தி ஜோதிட ஆலோசனை மையம்,
புதுக்கோட்டை மாவட்டம்.

எனது செல் ;-
97 151 89 647
மற்றோரு செல்
740 257 08 99

வாட்ஸ்அப் எண்
97 151 89 647

(குறிப்பு;தாங்கள் திருமணம் சார்ந்த சோதிட ஆலோசனை மற்றும் விவாக பொருத்தம் மற்றும் ஏனைய சந்தேகங்களுக்கு சோதிட அடிப்படையிலான தீர்வுகளை போன் வழியாக பெறலாம்.கட்டணம் உண்டு,பிறந்தேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது மேற்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து  அனுப்பி கட்டணம் செலுத்தும் வழிமுறையைப் பெறலாம்)

My Email;
masterastroravi@gmail.com

My website.click hear
AstroRavichandransevvai.blogspot.com
My facebook link.click hear
m.facebook.com/ravichandran3538039

No comments: