Monday, 30 April 2018

கிரகங்கள் படுத்தும் பாடு-- ( 58 )

            கிரகங்கள் படுத்தும் பாடு-( 58 )

                                                                    
                                             ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

                 எல்லா கிரகங்களும் நல்ல கிரகங்களே !

அவர் நல்லவர் ஆவாதும்,
தீயவர் ஆவதும் !
நல்லவர்,தீயவர் என இரண்டும்
கலந்த நிலையை  கொடுப்பதும்
அவரவர் கட்ட ஸ்தான அமைப்பினாலே .



                 மக்களிடம் பொதுவாக குரு திசை என்றால் நல்லது செய்யும் என்றும்,சனி,ராகு திசை என்றால் கெடுதல்தான் செய்யும் என 
ஒரு வித தவறான கருத்து நிலவுகிறது.காரணம் என்னவெனில் அவர்களை பொறுத்தவரை குரு எனில் நல்லவர் எனவும்,சனி,ராகு என கெட்டவர் என்பதால் கெடுதல்தான் செய்வார் .

                 இந்த பதிவை கூர்ந்து படியுங்கள் தங்களது கருத்தை எல்லோறும் மாற்றிக்கொள்வீர்கள்.நல்லவர் ,கெட்டவர் என்பதெல்லாம் அவரவர் ஸ்தானத்தை பொறுத்து மாறிவிடும்.இயற்கை சுபர் கெடுதல் செய்வதையும்,இயற்கை பாவி நல்லது செய்வதையும் கண்கூடாக காணலாம்.

                முதலில் இயற்கை சுபரான குரு பகவான் துலாம் லக்கனத்திற்கு செயல்படும் விதத்தை காணலாம்.

                 ஒரு மனிதனின் ஆளுமைத்திறனில் முக்கிய பங்கு வகிப்பது கிரகநிலைகளே .ஒரு கிரகமானது இயற்கையிலே சுபராக இருந்தாலும் கட்ட அடிப்படையிலான ஸ்தானத்தை பொருத்தவரை மறைவு ஸ்தான ஆதிபத்திய அமைப்பை பெற்றவர்கள் உச்சம்,ஆட்சி போன்ற வலுவான அமைப்பை பெறாமல் அவையும் மறைவு ஸ்தான அமைப்புகள் ,நீசம் போன்ற அமைப்பை பெறும்போதுதான் வலுப்படுகிறது.

                     உதாரணமாக துலா லக்கனத்திற்கு மூன்று மற்றும் ஆறாமிடத்திற்கு  உரிய குருபகவான்  மூன்று மற்றும் ஆறாமிடங்களில் ஆட்சியோ அல்லது பத்தாமிடத்தில் குரு பகவான் உச்சம் பெறாமல் நான்காமிடத்தில் குரு பகவான் நீசம் அடைதல் நலம் பயக்கும்.

                 ஸ்தான அடிப்படையில் பாவியான குரு பகவான் பலவீனப்படுவது நல்லது.அவை ஆறாமிட ஆதிபத்திய பலனான ரோண ,ரோகம் மற்றும் எதிரி போன்ற பாதிப்பிலிருந்து விலகினாலும் அதேநேரத்தில் குருவின் காரக பலனான பணம்,பதவி,பட்டம் ,புகழ் மற்றும் குழந்தை பாக்கியம் இவற்றில் பாதிப்போ அல்லது தடையோ ஏற்படலாம்.


               குருவின் பார்வையை பொறுத்தவரை இயற்கை சுபராக இருந்தாலும் இவை சுப ஸ்தானங்களை பார்க்கின்றபோது அதன் பலனை பலவீனப்படுத்தும் .(இங்கு குருபகவான் இயற்கை சுபராக இருந்தாலும்).மறைவிட ஸ்தானங்களை பார்க்கும்போது அவற்றின் தீய பலனை பலப்படுத்தும்.

                                                             

                துலா வக்கனத்திற்கு குருபகவான் கடக வீட்டில் உச்சம் பெற்று ஐந்தாம் பார்வையாக தன ஸ்தானத்தை பார்க்கும்போது அது தன ,வாக்கு மற்றும் குடும்ப நிலையை வலுவிழக்கத்தான் செய்யும் இங்கு உச்ச குரு பார்வை நல்லது செய்யும் என எடுத்துக்கொள்ள இயலாது.

              அடுத்து சுக ஸ்தானத்தை ஏழாம் பார்வையாக பார்க்கும்போது அவை சுப ஸ்தானம் என்பதால் அந்த இடத்தில் குருபகவான் அதன் பலன்களை பலமிழக்க செய்யும்.எனவே சாதகருடைய வண்டி ,வாகனம்,வீடு,சுகம்,கல்வி,கற்பு மற்றும் தாய் போன்றவற்றால் அடையும் பலன்களை குறைக்கும்.

            அடுத்து ஒன்பதாம் பார்வையாக தனது சொந்த வீடான மறைவு ஸ்தான தன் ஆதிபத்தியத்தை பார்க்கும்போது மட்டும் பலவீனப்படுத்தாமல் அதன் பலனை பலப்படுத்துகிறது.எனவே குருபகவான் உச்சம் பெற்று ஆறாமிடத்தை பார்வை செய்வதால் குரு திசையே நடைபெறும் காலத்தில் மேற்கண்ட தன மற்றும் சுக ஸ்தானத்தை பலவீனமாக்கி சாதகர் எவ்வித வருமானமும் இன்றி கடன் ,எதிரி மற்றும் வியாதி போன்ற ஏதேனும் ஒரு தொல்லைகளை அத்திசை முடியும் காலம் வரை மாறி மாறி வந்த சொல்ல இயலாத தொல்லைகளை சாதகர் அனுபவிப்பார்.

                                                                   

                       சனி பகவான் இயற்கை பாவி என்றாலும் அதே துலாம லக்கனத்திற்கு நான்கு மற்றும் ஐந்தாமிட ஆதிபாத்தியம் பெற்று லக்கன யோகராக இருப்பதால் ஐந்தாமிடத்தில் ஆட்சி பெற்று அதன் திசை நடைபெறும் காலங்களில் யோகங்களை வாரிவழங்குகிறது.இதன் பார்வையும் லக்கன யோகராக இருப்பதால் எவ்வித கெடுதலையும் தந்துவிடுவதில்லை.

                  ஆதலால் குரு திசை என்றால் ஆஹா ,ஒஹா என புகழ்வதும் ,சனி திசை(பாவி என்பதால்) என்றால் கடுமையாக கஷ்டம் தரும் பொதுவாக மக்கள் மனதில் உள்ள கருத்தை தவிர்கவே இவ்வளவு நேரம் விளக்கினேன்.

               இதேபோலவே மேஷ லக்கனத்திற்கு புதன் பகவானும் பாவியோட சேராதவரை சுபராக  இருந்தாலும் மூன்று மற்றும் ஆறாமிட ஆதிபத்தியம்  பெற்று பாவரவாதல் பலமிழப்பது  நல்லது.

  நன்றி
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

     வாட்ஸ் ஆ ப்  

 97 151 89 647       

 செல்

                          740 257 08 99    

                         97 151 89 647.


                                                                               


அன்புடன்சோதிடர்ரவிச்சந்திரன்     M.Sc, MA, BEd,சோதிட ஆராய்சியாளர்வாழ்வியல் ஆலோசகர்,முதுநிலை வேதியியல் ஆசிரியர்ஓம் சக்தி ஜோதிட ஆய்வகம்கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.My email  masterastroravi@gmail.com
My  Astro blogspot. Google search
AstroRavichandran. blogspot. com.
   AstroRavichandransevvai.blogspot. com
.............................................................................

No comments: