சனி பெயர்ச்சி-2020
வாக்கிய பஞ்சாங்கம் படி
26.12.2020
திருக்கணித பஞ்சாங்கம் படி
24.01.2020
கும்ப ராசிக்கு
"ஏழரைச் சனி" ஆரம்பமாகிறது. இதில் முதல் இரண்டரை ஆண்டுகள் -விரயச் சனி
ஆரம்பம்.
மகர ராசிக்கு ஏழரைச் சனியில் விரயச்சனி முடிந்து ஜென்மச் சனி ஆரம்பமாகிறது.
தனுசு ராசிக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்து வந்த விரயச்சனி மற்றும் ஜென்ம சனி நிறைவு பெற்று தற்போது பாதச்சனி ஆரம்பமாக உள்ளது.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு கடந்த 7 1/2ஆண்டுகளாக நடைபெற்ற ஏழரைச்சனி முற்றிலும் நிறைவு பெறுகிறது.
ரிஷப ராசிக்காரர்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த அஷ்டமச்சனி நிறைவுபெறுகிறது.
மிதுன ராசிக்காரர்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்ற "கண்டகச்சனி" நிறைவுபெற்று அஷ்டமச் சனி ஆரம்பமாகிறது.
கடகராசிக்காரர்களுக்கு தற்பொழுது கண்டகச் சனி ஆரம்பமாகிறது.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக கன்னி ராசிக்கு நடைபெற்று வந்த அர்த்தாஷ்டம சனி நிறைவு பெறுகிறது.
துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி ஆரம்பமாகிறது.
எனவே இந்த 2020 சனி பெயர்ச்சியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள் மகரம், கும்பம், மிதுனம், கடகம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் ஆகும்.
ஏனைய ராசிகளான மீனம் ,மேஷம் ,ரிஷபம், சிம்மம், கன்னி, விருச்சிகம் மற்றும் தனுசு ஆகிய ஏழு ராசிக்காரர்களுக்கு
சனி பெயர்ச்சியால் எந்த விதமான கெடு பலன்களையும் அனுபவிக்கப் போவதில்லை.
ஒருவருக்கு என்னதான் யோக தசை நடந்தாலும் ஏழரை மற்றும் அஷ்டமச் சனி காலங்களில் அந்த யோக பலனில் பங்கம் ஏற்படும்.
சனிபகவானால் வரும் இன்னல்களைப் போக்க சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து, எள் சாதம் காக்கைக்கு அளிப்பது சிறந்தது.
ஏழைகளுக்கு தானம் செய்யலாம்.
சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றவும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.
நளபுராணம் படியுங்கள்.
கோளறு பதிகம் படியுங்கள்.
தேனி அருகில் உள்ள குச்சானூர் சென்று சனிபகவானை வழிபட்டால் கடுமையான பாதிப்பு குறையும்.
காரைக்கால் அருகில் உள்ள திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபட்டு நேரே வீட்டுக்கு செல்வதும் உத்தமம்.
கிரகங்களுக்கு எல்லாம் தலைவனான சிவபெருமானை இறுகப்பற்றி பிடிப்பது நல்லது.
சனி பகவான் பெயர்ச்சி பற்றி நீங்கள் புரிந்து கொள்ள
சனைஸ் சரன் என்பது மருவி சனீஸ்வரன் என்று ஆகியது. சரம் என்றால் நகர்தல் என்று பொருள். சனைச்சரன் என்றால் மெதுவாக நகருபவர். அதனாலே சனிபகவானை மந்தன், முடவன் என்றும் அழைக்கப்படுகிறது. கரிய நிறம் கொண்டதால் கரியன் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனின் மைந்தன் சனி பகவானாவார்.சனி கோள்களை சுற்றி வளையம் போன்ற அமைப்பு இருப்பதால் இதனை வளையக்கோள் என்றும் அழைக்கப்படுகிறது.
சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் அதாவது 30 மாதங்கள் வாசம் செய்கிறார்.
ஒரு ராசிக்கு இரண்டேகால் நட்சத்திரம் வீதம் அதாவது ஒன்பது பாதம் அடங்கும்.
ஒரு நட்சத்திரம் பாதத்திற்கு மூன்று மாதம் 10 நாள் தங்குவார். ஆக ஒரு நட்சத்திரத்தின் நான்கு பாதங்களை கடக்க சனிபகவான் எடுத்துக் கொண்ட கால அளவு ஒரு வருடம் 40 நாள் ஆகும்.
ஒருவர் ஜனன காலத்தில் எந்த நட்சத்திரத்தில் பிறக்கிறாரோ அதனை "ஜென்ம நட்சத்திரம்" என்று அழைக்கிறோம். ஜென்ம நட்சத்திரம் இடம்பெறும் ராசியில் சந்திரபகவான் அமர்வார். இதனையே "ஜென்ம ராசி" என்று அழைக்கப்படுகிறது.
சனி பகவான் இடப்பெயர்ச்சி ராசி அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது. இதனை "கோச்சார பலன்" என்கிறோம்.
ஏழரைச் சனி
ஒருவரது ஜென்ம ராசிக்கு அதாவது சந்திரன் இடம் பெறும் ராசிக்கு 12-ஆம் இடத்தில் சனி பகவான் வரும் காலம் "ஏழரைச் சனி" ஒருவருக்கு ஆரம்பமாகிறது.
ராசிக்கு 12-ஆம் இடத்தில் சனி பகவான் வந்தால் அதனை "விரயச்சனி" என்றும் ஜென்ம ராசிக்கு வந்தால் அதனை "ஜென்மச்சனி" என்றும், சந்திரன் இருக்கும் இடத்திற்கு இரண்டாமிடத்தில் சனி பகவான் வந்தால் அதனை "பாதச்சனி" என்றும் அழைக்கிறோம்.
ஆக விரயச் சனி(2 1/2), ஜென்மச் சனி(2 1/2) மற்றும் பாத சனி (2 1/2) ஆகிய மூன்றையும் சேர்த்து ஏழரை சனி என்று அழைக்கிறோம்.
ஒரு மனிதருக்கு ஏழரைச்சனி மூன்று சுற்று வருகிறது.
முதல் சுற்று வரும் ஏழரைச் சனியை" மங்கு சனி" என்றும்,
இரண்டாம் சுற்று வரும் ஏழரைச் சனியை "பொங்கு சனி" என்றும்,
மூன்றாம் சுற்று வரும் ஏழரைச் சனியை
" மரணச் சனி" என்றும் அழைக்கிறோம்.
பெரும்பாலும் முதல் சுற்றில் வரும் ஏழரைச் சனி அதிக பாதிப்பைத் தருகிறது.
சிலசமயம் இளவயதில் மிக குறைந்த அளவே வரும் ஏழரைச் சனி ஆக இருப்பின் இரண்டாம் சுற்று முதல் சுற்றாக கணக்கெடுத்து கொள்ளப்படுகிறது.
ஏழரைச் சனியில் விரயச் சனி என்பது தேவையில்லாத கெட்ட விரயச் செலவுகளை சாதகருக்கு தர நேரிடும். இது போன்ற காலகட்டங்களில் விரயச் செலவுகளை சுப செலவாக மாற்ற வீடு, கட்டுதல், திருமணம் செய்தல் போன்றவை சுப விஷயங்களில் ஈடுபட்டு அந்த விரய செலவினை சுப செலவாக மாற்றிக் கொள்ளலாம்.
ஜென்ம ராசியில் அதாவது ஜென்ம சனியில் ஜென்ம நட்சத்திரத்தில் சனி போகும் காலம் அதிக இன்னல்களை கஷ்டங்களை தரக் கூடிய காலம் என்பதால் இக்காலகட்டத்தில் மிகுந்த எச்சரிக்கை உணர்வாக இருப்பது நல்லது.ஒருவரது வாழ்வில் ஏழரைச்சனியில் அதிக கஷ்டம் அடைந்த காலம் எது என்று கேட்டால் அது ஜென்ம நட்சத்திரத்தில் சனி கடந்த காலம் ஆகும்.
ஏழரைச் சனி காலங்களில் படிக்கக் கூடிய மாணவர்கள் படிப்பில் தடை உண்டாகும் அல்லது மதிப்பெண் குறையும் .திருமணமான தம்பதிகளுக்கு இடையே பிரச்சினைகள் உருவாகும். ஏழரை சனியில் குழந்தை பிறந்தால் கணவன்-மனைவிக்கிடையே பிரிவுகளையும் , வாக்குவாதங்களை உருவாக்கும். வியாபாரத்தில் நஷ்டங்களை உருவாக்கும் என்பதால் புது தொழில் செய்யாமல், புது முயற்சிகளில் ஈடுபடாமல் இருத்தல் நல்லது .தொழில் முனைவோர் இக்காலகட்டங்களில் ஏற்கனவே செய்கின்ற தொழிலை எச்சரிக்கை உணர்வுடன் செய்து வந்தால் போதும். தேவை இல்லாமல் வீண் வாதம், வம்பு வழக்கு ஈடுபடாமல் மனதை அமைதியாக வைத்து எந்நேரமும் இறைவனை வழிபட சனிபகவான் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.திருமணம் ஆக நினைக்கும் இளைஞர்கள் இக்காலகட்டத்தில் திருமணத்தை தள்ளிப்போடுதல் நல்லது.
அர்த்தாஷ்டமச் சனி
சந்திர பகவான் இருக்கும் இடத்திற்கு நாலாம் இடத்தில் சனி வரும் காலம் ஆகும். நாலாம் இடம் என்பது சுக ஸ்தானம் என்பதால் தன் சுகம், தாய் சுகம், கல்வி மற்றும் வீடு வாகனம் சுகம் போன்றவற்றில் இன்னல்களை உருவாக்கும்.
கண்டச்சனி
சந்திரன் இருக்கும் இடத்திற்கு ஏழாமிடத்தில் சனி பகவான் வரும் காலம் ஆகும். கண்டக சனி தண்ட செலவை தரும்.
அஷ்டமச் சனி
சந்திரன் இருக்கும் ராசிக்கு எட்டாமிடத்தில் சனி வரும் காலம் அஷ்டமச்சனி ஆகும். இக்காலகட்டத்தில் வீண் வழக்கு, வம்பு, சண்டை பிரச்சனை தரலாம். மரணத்துக்கு நிகரான தொல்லைகள் போன்றவைகள் தரலாம். படிக்கக்கூடிய மாணவர்களுக்கு படிப்பில் தடை அல்லது படிப்பதில் ஆர்வம் இல்லாமல் போகலாம். உடல் நலத்திற்கு கேடு உண்டாகும். புதுமணத் தம்பதிகளுக்கு தேவையில்லாத வீண் பிரச்சனை, புத்திர தடை போன்றவை இக்காலகட்டங்களில் உருவாகும்.
நன்றி.
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
My website
www.astroravichandransevvai.in
அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment