Friday, 7 May 2021

"கிரகங்கள் காட்டும் பாதை"

 கிரகங்கள் காட்டும் பாதை


                          


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் துணை!


  

   "அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது " என்பார்கள்.நவ கிரகங்கள் மற்றும் பஞ்ச பூதங்கள் தாக்குதல் மனிதனாக பிறப்பெடுத்த அனைவரையும் பாதிக்கிறது.


  ஒருவன் தலைமையேற்று நடத்தவும்,தந்தை வழி ஆதரவு பெறவும் ,அரசு வழியான ஆதரவு பெறவும் கோள்களின் தலைவனான சூரியன் பகவான் பங்கு இன்றியமையாதது.


  ஒருவரது மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை ஆய்ந்து அறிந்து கொள்ள நவ கிரகங்களில் சந்திரன் பகவானின் பங்கு அலாதியானது.தாய்வழி உறவுகள் பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது.


  ஒருவன் வீர தீர பராக்கிரம விஷயங்களில் ஈடுபட செவ்வாய் பகவான் குறிப்பிட தகுந்தவர் ஆவார்.சகோதர உறவு நிலை பற்றி அறிந்து கொள்ள நிலமகனது பங்கு குறிப்பிடத்தக்கது.


 ஒருவரது இளமைக்கும்,புதுமைக்கும் காரகன் புதன் பகவான் ஆவார்.கணித அறிவுக்கும், கணிப்பொறி அறிவு பெறவும் புதன் பகவான் காரணகர்த்தாவாக திகழ்கிறார்.ஒருவனது திறமைக்கும் மற்றும் நுண்ணறிவுக்கும் காரணம் புதன் பகவான் ஆவார்.அம்மான் வழி உறவுகளை பற்றி தெரிந்து கொள்ள புதன் பகவான் உதவுகிறது.


  திருமண வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ள நவகிரகங்களில் சுக்கிரன் பகவான் பங்கு அலாதியானது.ஒருவரது கலை ரசனைக்கும் காரணமாக அமைகிறது.ஒருவருக்கு சுக்கிரன் தொடர்பு பெற்ற‌ தசா  புத்தி ஒருவருக்கு திருமணத்திற்கு உகந்த காலமாக கருதப்படுகிறது.


ஒருவரது புத்திரபாக்கியம் பற்றி அறிந்து கொள்ள குருபகவான் குறிப்பிட தகுந்தவர் ஆவார்.ஒருவனது கல்வி அறிவுக்கும் மற்றும் போதக தன்மைக்கும் குரு பகவான் முக்கியமானவர்.


  ஒருவரது ஆயுளை நிர்ணயிக்க சனி பகவான் மிக முக்கியமானவர் ஆவார்.


 ஒருவரது போக வாழ்வுக்கு ராகு பகவானும் மற்றும் ஞான வாழ்வுக்கு கேது பகவான் காரணகர்த்தாவாக திகழ்கிறார்.பாட்டான் /பாட்டிகள் பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது.


  நவ கோள்கள் ஜாதக கட்டத்தில் அமரக்கூடிய இடத்தை பொறுத்தும் மேலும் கிரகம் அமர்ந்துள்ள வீடு ,பார்க்கின்ற , சேர்க்கை பெறும் கிரகங்கள் மற்றும் அவை பெற்ற சார நாதன் ஆகியவற்றை பொறுத்தும் நடைபெறும் தசா புத்திகள் ,கோச்சார பலன்கள் ஆகிய அனைத்தும் சேர்ந்து ஒரு கிரகம் தரக்கூடிய பலன்கள் அமைகிறது.


  ஒருவரது ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்களின் கலப்புக்கு (Planet combination) ஏற்றவாறு ஒரு மனிதன் வடிவமைக்கப்படு பிறப்பானது பிறப்பு எடுக்கப்படுகிறது.


  ஒரு குழந்தை ஜெனிக்கும்போது வானவீதியில் உலா வரும் ‌கிரகங்களின் இட அமைப்புக்கு ஏற்றவாறு குழந்தையானது ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட பெற்றோருக்கு குழந்தையாகப் பிறந்து கர்மவினையை அனுபவிக்கிறது.


  ஒருவன் ஒரு பிறப்பில் செய்யும் நல்வினை/தீயவினைக்கு ஏற்ப இப்பிறப்பில் அவனது பிறப்பின் தன்மையானது அமைகிறது.


நன்றி!


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப்

   9715189647


         செல்

      9715189647

     7402570899


My website


www.astroravichandransevvai.in


                        



அன்புடன்

  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

  M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: