ஜாதக பலன்களை நிர்ணயம் செய்வதில் காண வேண்டிய விதிவிலக்குகள்.
ஜாதக பலன்களை நிர்ணயம் செய்வதில் காண வேண்டிய விதிவிலக்குகள்.
செவ்வாய்பட்டி
ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை
ஒரு ஜாதகத்தின் பலனை நிர்ணயிப்பதில் பல்லாயிரக்கணக்கான விதிகள் இருந்தாலும், பலனை துல்லியமாக நிர்ணயம் செய்வதில் விதிகளை விட விதிவிலக்குகள் பேருதவி புரிகின்றன.
உதாரணமாக ஒரு கிரகமானது பாவ கிரங்களான சனி,ராகு மற்றும் கேது உடன்
8 -பாகைக்குள் மிக நெருக்கமாக இணைந்து நிற்கும் போது பாவத்துவமான அமைப்பை பெற்று நின்றால் அதன் தசை காலங்களில் அதிக கெடுபலன்களை தரும் என்றாலும் விதிவிலக்காக இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் தொடர்பு கொண்டு இருப்பின் பாவத்துவம் விலகி சுபத்தன்மை பெற்று நற்பலன்களை தரும்.
ஒருவரது ஜாதகத்தில் ஒரு கிரகமானது ஸ்தான பலத்தை இழந்தால் அதன் வலிமை குறைந்து தரக்கூடிய பலனிலும் குறைவு ஏற்படும் என்பது பொது விதியாக இருந்தாலும் , ஸ்தான பலத்தை இழந்த கிரகங்கள் அனைத்தும் நல்ல பலனைத் தராது என்று முடிவுக்கு வந்து விட முடியாது. உதாரணமாக மிதுன லக்னத்திற்கு நான்காம் இடத்தில் சுக்கிரன் நீசம் பெற்று ஸ்தான பலத்தை இழந்தாலும் திக் பலம் பெற்றிருப்பதால் அதன் தசை காலங்களில் மிகுந்த நல்ல பலனைத் தரக்கூடிய நிலையை அடைகிறது.
அதனால் சோதிடத்தில் ஆயிரக்கணக்கான விதிகள் இருந்தாலும் அந்த ஒவ்வொரு விதிக்குள்ளும் பல விதிவிலக்குகள் உண்டு என்பதை அனுபவத்தின் வாயிலாக பல வருடங்களை கடந்த பிறகுதான் தெரிந்து கொள்ள முடியும்.
ஒரு ஜாதக கட்டத்தில் உச்சம் பெற்ற கிரகங்கள் அதிக நன்மையைத் தரும் என்றும், நீசம் பெற்ற கிரகங்கள் பலன்களை குறைவாக தரும் என்றும் கருதிவிட முடியாது.
உச்சம் பெற்ற கிரகமானது வக்கிரம் பெற்றால் இயல்பு நிலைக்கு மாறான பலன்களை தருகிறது.
அதேபோல நீசம் அடைந்த கிரகமானது வக்கிரம் பெற்றிருந்தாலும் இயல்பு நிலைக்கு மாறான பலன்களை தருகிறது.
நீசம் பெற்ற கிரகங்கள் நீசபங்கம் அடைந்து உள்ளதா ? என்றும், சந்திர கேந்திரத்தில் உள்ளதா? என்றும் ஆய்வு செய்து பார்த்த பின்னரே பலனை முடிவு செய்ய முடியும். பாவ கிரகமான சனிபகவான் உச்சம் பெறுவதைவிட நீசம் பெற்று நிற்பதே அதிக நல்ல பலனைத் தரும். எனவே விதிகளை விட விதிவிலக்குகள் அவசியம்.
இயற்கை சுப கிரகமான குரு பகவானும், புதன் பகவானும் லக்கனத்தில் திக்பலம் என்ற வகையில் இலக்கனத்திற்கு மறைவிட ஸ்தானமான 12ஆம் இடத்தில் அமர்வது திக் பலத்திற்கு அருகில் அமைந்து உள்ளது என்ற வகையில் அதிக நல்ல பலனை தருகிறது.
இயற்கை சுப கிரகங்களுடன் பாவ கிரகங்களான சனி ,ராகு மற்றும் கேது இணைந்து பவத்துவம் அடைந்து தீய பலனை தருமென்று விதி இருந்தாலும், அல்லது மறைவிடங்களில் நின்று பலமிழந்து இருந்தாலும் சந்திர கேந்திரத்தில் அல்லது குருவின் பார்வை பெற்று நின்றாலோ இந்த பாவத்தன்மை நீக்கி நல்ல பலனைத் தரும் என்பதும் விதிவிலக்காகும்.
ஒரு ஜாதக கட்டத்தில் ஒரு ராசி என்பது 30 பாகை வீதம் பன்னிரெண்டு ராசிகளுக்கு 360 பாகைகள் ஆகும்.
ஒரு ராசியில் உள்ள இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே ராசியில் இருந்தாலும்,அவை எத்தனை பாகை வீதத்தில் இணைந்து உள்ளது என்பதை பொறுத்து அக்கிரக இணைவானது நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஒரு நட்சத்திரத்தினை நான்கு பாதம் வீதமாக பிரிக்கப்படுகிறது.ஒரு பாதத்திற்கு 3 பாகை 20 கலை ஆகும்.
ஒரு கிரகமானது ஒரு நட்சத்திரம் பாகைக்குள் அதாவது 4 × 3°.20'=
13 °.20' இருந்தால் மட்டுமே அக்கிரகம் நெருக்கமாக இணைந்து உள்ளதாக கருத்தில் கொண்டு பலன் எடுக்கப்படுகிறது.
13 பாகைக்கு மேல் இருந்தால் ஒரே ராசியில் இருந்தாலும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிய ஆரம்பிக்கிறது என்பதையும் புரிந்து கொண்டு பலன் கிடைக்க வேண்டும்.
22 பாகைக்கு மேல் இருந்தால் அந்த கிரகம் ஒரு ராசியில் இருந்தாலும் ஒன்றாக இல்லை.
இது போன்ற விதிவிலக்குகளை கணக்கில் எடுத்துக்கொண்டு கிரகங்களின் இணைவு மற்றும் சேர்க்கை பலனை கையில் எடுக்க வேண்டும்.
இதேபோன்று பார்வையை கணக்கில் எடுக்கும் பொழுதும் மேலோட்டமாக ஒரு ராசியைக் குரு பார்ப்பது போல் தோன்றினாலும் அவை உண்மையில் பார்ப்பதாக இருப்பதில்லை.
உதாரணமாக மீன ராசியில் 29 டிகிரிக்கு மேல் இருக்கும் குருபகவான் தனது ஐந்தாம் பார்வையாக கடக ராசியை பார்ப்பதைவிட சிம்ம ராசியையே அதிகமாக பார்வை செய்யும் என்ற விதியையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஸ்தானத்தினை இயற்கைப் பாபக் கிரகமான சனி மற்றும் செவ்வாய் பார்வை செய்யும் பொழுது அந்தப் பாவ கிரகத்தினை இயற்கை சுப கிரகமான குருவின் பார்வை படும் பொழுது அந்த பாவ கிரகத்தின் கொடூர பாவ தன்மை வடிகட்டப்பட்டு அதன் பார்வையில் நல்ல மாற்றம் ஏற்படுகிறது.
நன்றி.
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்: 9715189647
செல்
9715189647
7402570899
My website
www.astroravichandransevvai.in
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்,
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்சியாளர் )
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment