Monday, 10 May 2021

உங்கள் ஜாதகம் யோக ஜாதகமாக அமைய ?

 உங்கள் ஜாதகம் யோக ஜாதகமாக அமைய..?


                              


      செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


      ஒரு ஜாதகர் மிகுந்த கோடீஸ்வரராக அல்லது ஆட்சி அதிகாரத்தில் உயர் நிலையை அடையவோ அல்லது வியாபாரத்தில் உச்சநிலையை தொடவும் அவரது ஜாதகத்தில் இயற்கை சுப மற்றும் இலக்கன யோகர்கள் எவ்விதத்திலும் பங்கப்படாமல் இருக்க வேண்டும்.


   ஒருவரது ஜாதகத்தில் சூரிய பகவானும் மற்றும் சந்திர பகவானும் சம சப்தமாக 180 பாகையில் சந்தித்துக் கொள்வது பௌர்ணமி யோகம் ஆகும்.


  பௌர்ணமி யோகத்தில் பிறந்தவர்கள் மிகுந்த ஒளி பொருந்தியவர்கள் அவர்களை சுற்றி ஒளி வட்டம் இருந்து கொண்டே இருக்கும் .

இது போன்ற நபர்களை பார்க்கும் பொழுது நம்மை அறியாமலே கைதூக்கி கும்பிடத் தோன்றும்.

 நல்ல தேஜஸ் உடையவர்களாகவும் இருப்பார்கள். அதிகாரத் தோரணை மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.


    சிலர் பௌர்ணமி யோகத்தில் பிறந்தாலும் மேற்கண்டவாறு நீங்கள் கூறியதுபோல இருப்பதில்லேயே என நீங்கள் கேள்வி கேட்பது என் காதில் விழுகிறது.


  இதற்கு பதில் கூற வேண்டுமாயின் பௌர்ணமி யோகத்தில் பிறந்தவர்களுக்கு பொளர்ணமி யோகம் எவ்விதத்திலும் பங்கப்படாமல் இருக்க வேண்டும்.


குறிப்பாக ஒளி கிரகமான சூரியன் மற்றும் சந்திரனுடன் இருள் கிரகமான சனி மற்றும் சாய கிரகமான ராகு மற்றும் கேது சேர்க்கை கூடாது.


 இதேபோல சந்திர 

அதியோகத்தில் பிறந்தவர்களும்   

யோகசாலிகள் ஆவார். பொதுவாக சந்திரனுக்கு ஆறு ,ஏழு எட்டில் இயற்கை சுப கிரகமான குரு புதன் சுக்கிரன் நின்று அதன் தசை தொடர்ந்து வரும் அமைப்பினை உடைய சாதகத்தை பெற்றவர்கள் மிகுந்த யோக சாலிகள் ஆவார்.


  சந்திராதி யோகம் நல்ல பலனைத் தர வேண்டுமாயின் சந்திரன் வளர்பிறைச் சந்திரனாக இருப்பின் மிகுந்த நல்ல‌ யோக பலனைத்தரும். சந்திரனுக்கு ஆறு,ஏழு மற்றும் எட்டில் உள்ள இயற்கை சுப கிரங்களான குரு,புதன் மற்றும் சுக்கிரன் உடன் இயற்கைப் பாவக் கிரகங்களான சனி, ராகு கேது  தொடர்பு பெறாமல் இருப்பது நல்லது.


    பொதுவாக இலக்கனம் , ராசி  மற்றும் அதன் அதிபதிகள் பலம் பெற்ற நிலையில் பெரும்பாலான கிரகங்கள் பங்கப்படாத குரு பார்வை பெற்ற நிலையிலிருந்து தொடர்ந்து குரு பார்த்த கிரகங்களின் தசை நடப்பில் இருப்பினும் அந்த ஜாதகம் யோக மிகுந்த ஜாதகம் ஆகும்.


  ஒருவரது ஜாதகத்தில் லக்கன நட்பு மற்றும் யோகர்கள் ஒன்றுக்கொன்று கேந்திர மற்றும் கோணங்களில் அமர்ந்து,

 அந்த ஜாதகத்தில் பாவர்கள் மற்றும் இலக்கன அவ யோகிகள் ஒன்றுக்கொன்று மறைவிடங்களில் அமர்ந்து ,

கேந்திர மற்றும் கோணங்களில் அமைந்துள்ள இலக்கன யோகர்கள் தசைகள் தொடர்ந்து நடப்பில் இருப்பினும் அந்த ஜாதகம் யோகம் மிகுந்த ஜாதகமாக அமையும் ஆகும்.


  சில நேரங்களில் பாவ கிரகங்கள் அல்லது இலக்கன அவயோக கிரகங்கள் உபஜெய ஸ்தானங்களான 

3 ,6 ,11-ஆம் இடங்களில் அதிலும் குறிப்பாக 3,11 ஆம் இடங்களில்  நட்பு நிலையில் அமர்ந்து அதன் தசை நடப்பில் தொடர்ந்து இருப்பினும் இதுபோன்ற சாதகங்ளை உடைய பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களும் மிகுந்த பாக்கியவான்கள் ஆவார்.


 பாவ கிரகங்கள் இடம் பெற்ற வீட்டின் அதிபதி உச்சம் பெற்று நின்றாலும் அல்லது பாவ கிரகங்கள் கேந்திர மற்றும் கோண அதிபதியுடன் தொடர்பு பெற்ற நிலையில் அதன் தசை உரிய வயதில் நடப்பில் இருப்பின் அந்த ஜாதகம் யோகம் மிகுந்த ஜாதகமாகும்.


  நாட்டில் பல கட்சிகள் இருப்பது போல ஜாதக கிரகங்களிலும் இரண்டு கட்சி ஒன்று  அருள் அணி மற்றொன்று பொருள் அணி ஆகும்.


  பொருள் அணியின் தலைவன் சுக்கிரனாவார் இந்த அணியில் அங்கத்தினர்களாக புதன், சுக்கிரன் ,சனி, ராகு உள்ளார்.இதேபோல அருள் அணியின் தலைவர் குரு பகவானாவார். இந்த அணியில் குரு, சந்திரன் சூரியன், செவ்வாய் மற்றும் கேது உள்ளார்.


   குரு அணியை சேர்ந்த இலக்கனங்கள் ஆன தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், கடகம் மற்றும் சிம்மம் ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கு சூரிய சந்திர, செவ்வாய் மற்றும் கேது பகவான் திசை மிகுந்த யோக பலனை தரும். இந்த தசைகள் தொடர்ந்து நடப்பிலிருக்கும் அமைப்பு பெற்ற சாதகத்தை உடையவர்கள் மிகுந்த யோகசாலிகள் ஆவார்.


   இதேபோல சுக்ரன் அணியைச் சேர்ந்த ரிஷபம் ,துலாம், மிதுனம் கன்னி, மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன், சனி ,புதன், ராகு ஆகிய தசைகள் தொடர்ந்து நடப்பில் இருக்கும் அமைப்பைப் பெற்ற ஜாதகம் இருந்த யோக ஜாதகம் ஆகும்.


  குரு அணியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் அணியை சேர்ந்த கிரகத்தின் தசைகள் வந்தாலும்,

 சுக்கிரன் அணியில் பிறந்தவர்களுக்கு  குரு அணியை சேர்ந்த கிரகங்கள் தசைகள் வந்தாலும் அந்த கிரகங்கள் உபஜெய ஸ்தானங்களான  3,6, 11 ஆமிடங்களில் நட்பு நிலையில் இருப்பின் அதன் தசைகளும் யோகத்தைத் தனது தசையில் தந்து ஜாதகரை யோக மிகுந்தவராக ஆக்கிவிடும் .


   மேற்கண்ட எல்லாவற்றிற்கும் மேலான விதியான "சுபத்துவ தன்மை" என்ற விதி எடுத்துக் கொண்டும் சாதகத்தில் யோக பலனை கணிக்கலாம்.


   ஒரு கிரகமானது நீசம் அடைந்து இருந்தாலும் அல்லது மறைவிடங்களில் நின்றிருந்தாலும் அல்லது இயற்கைப் பாபக் கிரகமான சனி ,செவ்வாய், ராகு கேது போன்ற கிரகங்கள் உடன் சேர்ந்து இருந்தாலும் அந்த கிரகமானது இயற்கை சுப கிரகங்களான  வளர்பிறைச் சந்திரன், குரு பகவான், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் தொடர்பு பெற்ற நிலையில் இருப்பினும் அந்த கிரகங்கள் சுபத்துவம் பெற்று அதன் தசைகள் தொடர்ந்து வரும் அமைப்பு கொண்ட ஜாதகர்களும் மிகுந்த யோக பலனை தந்து யோகசாலிகளாக மாற்றிவிடும்.


  நன்றி.


வாட்ஸ் அப்

   9715189647


     செல்

   9715189647

     7402570899


My website

  www.astroravichandransevvai.in


                            



 அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் )

ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: