"ஜோதிட விதிகளுக்குள் ஜோதிடர் அறிய வேண்டிய விதிவிலக்குகள்".
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒரு ஜோதிடர் ஆனவர் தன்னிடம் ஜாதக பலன் பார்க்க வரும் ஜாதகருக்கு, அவரது ஜாதகத்தினை பார்த்து பலன் சொல்லுதல் என்பது எளிதான விஷயமன்று.
ஜோதிடம் என்பது தாம் கற்ற அறிவினை அப்படியே மற்றவருக்கு ஒப்படைக்கும் சாஸ்திரம் அல்ல. ஒருவர் பல்வேறு சோதிட நூல்களில் இருந்து தான் பெற்ற ஜோதிட அறிவை தம்மிடம் பலம் பார்க்க வரும் நபர்கள் மற்றும் தம்மைச் சுற்றி உள்ள வெவ்வேறு துறை சார்ந்த நண்பர்கள் பலவற்றின் ஜாதகங்களை ஆய்வுசெய்தும், அனுபவ அறிவைக் கொண்டும் மற்றும் தெய்வ சக்தி கொண்டும் பலன் அளிக்கும் ஒரு உன்னத சாஸ்திரமாகும்.
பெரும்பாலும் ஜோதிட நூல்களில் கூறப்பட்ட விதிகளையும் மற்றும் மூல நூல்களில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கருத்துக்களையும் அப்படியே எடுத்துக்கொண்டு பலன் சொல்ல முற்படும் பொழுது ஜோதிடப் பலன்கள் நிச்சயம் தவறுதலாக போய்விடும்.
பெரும்பாலான ஜோதிட நூல்கள் மற்றும் மூல நூல்களில் பாடப்பட்ட பாடல்களாக இருந்தாலும் சரி மற்றும் ஜோதிட கருத்துகளாக இருந்தாலும் சரி, அவை
ஜோதிட வித்வான்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களால் பல ஜாதகங்களை ஒப்பீடு செய்து அவர்களது அனுபவத்தை கொண்டு வெளியிட்ட கருத்தாகும். அந்த கருத்து தற்பொழுது நாம் பார்க்கும் ஜாதக பலனோடு ஒத்துப் போக வேண்டும் என்கின்ற சாத்தியக்கூறு அல்ல.
பல்வேறு ஜோதிட நூல்களில் இருந்து நாம் விதிகளை கற்று அவ்வாறு கற்ற விதிகளை பயிற்சிக்கு உட்படுத்தி ,ஆய்வு நோக்கில் பலன் சொல்ல முற்படும் போது "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" என்ற வகையில் நம்மை அறியாமலே அந்த விதிகளுக்குள் சில விதிவிலக்குகள் உருவாகி நமது மூளையில் ஒரு புதிய ஜோதிட நுணுக்கம் ஒன்று நம்மை அறியாமலே நாம் சிந்தனையை தட்டும். அதனை தன்னுடைய அனுபவ விதியாக மாற்றி பலன் சொல்லும்பொழுது முற்றிலும் சரியான பதிலை நம்மிடம் பலன் பார்க்க வரும் நபருக்கு தர இயலும்.
இவ்வாறு பலதரப்பட்ட துறைசார்ந்த நபர்களது ஜாதகத்தை ஆராய்ந்து அறியும் பொழுது கடவுள் அருளாலும், பெற்ற ஞானத்தாலும் நமக்குள் ஒரு சிறிய ஒரு மின்னல் உருவாகும்(sparkle).இந்த அனுபவ அறிவால் பெற்ற சிறு கீற்று ஜாதகருக்கு சரியான பலனை அளிக்க வைக்கும்.
எனவே ஒரு நல்ல அனுபவமுள்ள சோதிடர் ஒவ்வொரு விதிகளுக்கும் விதிவிலக்கை கண்டறிந்து தம்முடைய ஞான அறிவால் தான் பெற்ற சூட்சும உண்மைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து பலனளிக்கும் பழக்கம் அவர்களிடம் ஒட்டிக்கொள்ளும்.
ஒன்பது கோள்கள் பன்னிரெண்டு ராசிகளில் 360 பாகையில் வான் வீதியில் திரும்பத் ,திரும்ப சுற்றி வந்தாலும் ஒரு கிரகம் முப்பது பாகை கொண்ட ஒரு ராசிக்குள் ஒரு இடத்தில் சுழற்சி செய்து வந்த ஒரு கிரகம் மீண்டும் அதே ராசியில் அதே இடத்திற்கு வருவது இல்லை எனும்போது ஜாதக பலன்களும் காலத்திற்கு ஏற்றார் போலும் அடிப்படை விதிக்கு உட்பட்டு சிறு மாற்றம் செய்து அந்தக் காலத்தில் அவர் பெற்ற அனுபவத்திற்கும் ஏற்ற வகையில் பலாபலன் அளிப்பதற்கு பயிற்சி எடுத்தல் ஜோதிடர்களுக்கு அவசியமான ஒன்றாகும். இறுதி உண்மை என்று எந்த உண்மையும் இல்லை.
பரந்த இந்த பிரபஞ்சத்தில் பரவியுள்ள பல்வேறு விதிகளுகளுக்குள் பரவியுள்ள காற்றை தன் அனுபவம் எனும் வாயால் பலதரப்பட்ட நபரால் ஊதி பெரிதாக்கி பறக்கவிடப்பட்ட விஞ்ஞானபூர்வமான வித்தைதான் ஜோதிடவியல் ஆகும்.
நன்றி.
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
My website
www.astroravichandransevvai.in
அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment