ஷட் பலம்
செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஷட் என்றால் ஆறு
சப்தமம் என்றால் ஏழு
அஷ்டமம் என்றால் எட்டு
நவம் என்றால் ஒன்பது
தசமம் என்றால் பத்து ஆகும்.
ஆதலால்
"ஷட்" என்றால் ஆறு மற்றும் "பலம்' எனில் வலிமை .
ஆகவே
"ஷட் பலம்"என்பது சாதக கட்டத்தில் ஒரு கிரகம் பெற்றிருக்கும் வலிமையை ஆறு விதமான முறைகளில் தீர்மானித்தல் ஆகும் .
அவையாவன
1) ஸ்தான பலம் ,
2)திருஷ்டி (பார்வை) பலம்,
3) திக் பலம்
4) கால பலம்
5) சேஷ்டா பலம்
6) நைசர்கிக பலம்
ஆகும்.
1) ஸ்தான பலம்
ஒரு ராசியில் ஒரு கிரகம் ஆனது எந்த ஸ்தான நிலையில் உள்ளது என்பதை அறிய ஸ்தானபலம் பயன்படுகிறது .
ஒரு கிரகம் உச்சம் , மூல திரிகோணம், ஆட்சி நட்பு ,பகை மற்றும் நீசம் போன்ற வகையில் ஒரு கிரகத்தின் உண்மையான வலிமை நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஒரு ஜாதக கட்டத்தில் உச்சம் பெற்ற கிரகம் 100 சதவீதம் வலிமையையும்,மூல திரிகோணம் பெற்ற கிரகம் 75 சதவீதம் வலிமையையும், ஆட்சி பெற்ற கிரகம் 50 சதவீதம் வலிமையையும் ,நட்பு நிலையில் உள்ள கிரகம் 25 சதவீதம் வலிமையையும்,பகை பெற்ற கிரகம் 12.5 சதவீத வலிமையையும் மற்றும் நீச பெற்ற கிரகம் பூஜ்ஜியம் சதவீத நிலையையும் பெறுகிறது.
உச்சம் பெற்ற கிரகம் ஜாதக கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பாகை வரை தான் உச்ச நிலையில் உள்ளது.அந்த உச்ச எல்லை வரை உள்ள கிரகம் மட்டுமே 100 சதவீதம் வலிமையை பெறுகிறது. உச்ச எல்லையை தாண்டி உள்ள கிரகங்கள் அதற்கு அடுத்த நிலையான வலிமை பெறுகிறது.
2) திருக் பலம் அல்லது திருஷ்டி பலம்
திருஷ்டி என்றால் பார்வை என்று அர்த்தம் ஆகும். ஒரு கிரகத்தின் பார்வை அந்த ஸ்தானத்தையும் மற்றும் அதிலுள்ள கிரகத்தின் பலனையும் மாற்றக்கூடிய வல்லமை உண்டு.
இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவற்றின் பார்வையைப் பெறும் பொழுது அந்த கிரகம் அல்லது அந்த ஸ்தானம் சுப தன்மையைப் பெற்று அதன் வலிமை முன்பைவிட அதிகமாகி ஜாதகருக்கு நற்பலனை தர கூடிய வாய்ப்பை பெறுகிறது.
இதேபோல இயற்கைப் பாபக் கிரகமான சனி, செவ்வாய் ,ராகு ,கேது போன்ற கிரகங்களுடைய பார்வையை பெரும் கிரகம் அதன் வலிமை குன்றி கெடுபலனை தருவதற்கு வாய்ப்பாக அமைகிறது.
எல்லா கிரகங்களுக்கும் ஏழாம் பார்வை உண்டு. குரு ,சனி ,செவ்வாய் ஆகிய கிரகங்களுக்கு ஏழாம் பார்வையை தவிர சில சிறப்பு பார்வைகளும் உண்டு.
இயற்கை சுப கிரகமான குருபகவானுக்கு சிறப்பு பார்வையாக ஐந்து மற்றும் ஒன்பதாம் பார்வை அமைந்துள்ளது.
பாவ கிரகங்களான சனிபகவானுக்கு மூன்று மற்றும் பத்தாம் இடப் பார்வை சிறப்பு பார்வையாக அமைகிறது.
செவ்வாய் பகவானுக்கு சிறப்பு பார்வையாக நான்கு மற்றும் எட்டாம் பார்வை அமைகிறது.
3) திக் பலம்
திக்கு என்றால் திசை என்று அர்த்தம்.
ஒரு கிரகம் சரியான ஸ்தான பலம் பெறவில்லை என்றாலும் திக் பலம் பெறும் எனில் அந்த கிரகம் வலிமை பெற்ற கிரகமாக கருதப்படும்.
கிரகமானது கேந்திர ஸ்தானமான 1,4,7,10 ல் அமரும் போது எந்த ஸ்தானத்தில் எந்த கிரகம் அமர்ந்தால் திக் பலம் பெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
லக்கனத்தில் குரு மற்றும் புதன் பகவான் திக் பலம் பெறுகிறது.
நான்காம் இடத்தில் சந்திரன் மற்றும் சுக்கிரன் திக்பலம் பெறுகிறது. ஏழாமிடத்தில் சனி பகவானும், பத்தாம் இடத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் பகவானும் திக்பலம் அடைகிறது.
திக்பலம் பெற்ற கிரகம் வலிமை பெற்ற கிரகமாக கருதப்படுகிறது. இது ஒருவருக்கு ஆடை, அணிகலன்கள், வாகன வசதி, அந்தஸ்து , சௌந்தர்யம், கல்வி ,நிலவளம் போன்ற வசதிகளை தருகிறது.
திக் பலத்திற்கு அருகில் உள்ள கிரகமும் திக் பலத்திற்கு நிகரான பலன்களை
தருகிறது.
லக்கனத்திற்கு 12-ஆம் இடத்தில் குரு பகவானும் மற்றும் புதன் பகவானும் அமர்ந்திருந்தாலும் அது மறைவிட ஸ்தானமாகவே இருந்தாலும் திக்பலத்திற்கு அருகில் என்ற வகையில் வலிமை பெற்ற கிரகமாக கருதி பலனளிக்கப்பட வேண்டும்.
நிஷ் பலம் என்றால் என்ன?
எல்லாவற்றிற்கும் இருமுனை உண்டு. ஒரு நன்மை எனில் தீமை என்ற மறுமுனை உண்டு அதுபோல எவ்வாறு உச்சம் பெற்ற கிரகத்திற்கும் ஏழாம் வீடு அந்த கிரகத்திற்கு நீச வீடாக அமைவது போல திக்பலம் பெற்ற கிரகத்திற்கு ஏழாம் வீட்டில் உள்ள கிரகம் கிரகம் "நிஷ் பலம் "பெறுகிறது.
" திக் பலத்திற்கு" எதிர்தன்மை "நிஷ் பலம்" ஆகும்.
திக் பலம் பெற்ற கிரகம் வலிமை பெற்ற கிரகமாக திகழும் எனில் நிஷ் பலம் பெற்று உள்ள கிரகம் தனது வலிமையை இழந்த நிலையில் உள்ள கிரகமாக கருதப்படுகிறது.
லக்கனத்தில் குரு பகவான் திக் பலம் பெற்றால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவான்.நல்ல புத்திரர்கள் உருவாக்குவார்கள்.பணம் பதவி ,பட்டம், புகழ், கல்வி ஞானம், செல்வம் மற்றும் குழந்தை பாக்கியம் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.
லக்கனத்தில் புதன் பகவானை திக் பலமாக பெற்றால் வித்தையில் சாதுர்யமாக திகழ்வார்கள்.கணிதம்,
கணிப்பொறி இயக்குதல்,எழுத்து ,பேச்சு ,நுண்கலை போன்றவற்றில் புலமை மிக்கவர்களாக திகழ்வார்கள்.
நான்காம் இடத்தில் சந்திரன் பகவானை திக் பலமாக பெற்று திகழும் போது நல்ல மனநிலை உடையவராகவும், தாய் வழி ஆதரவு மிகுந்தவராகவும் விளங்குவார்.சுக்கிரன் பகவான் நான்காம் இடத்தில் திக் பலம் பெறும் பொழுது வண்டி வாகன யோகம் உடையவராகவும் மற்றும் நல்ல ஆடம்பரமான வீடு அமையக்கூடிய யோகம் உண்டு.
ஏழாம் இடத்தில் சனி பகவான் திக் பலம் பெற்று நிற்பது கால தாமத திருமணத்தை சாதகருக்கு கொடுக்கும்.
பத்தாம் இடத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் பலம் பெற்று நிற்கும் பொழுது அதிகாரம் செய்யக்கூடிய பணிகளில் ஜாதகர் அமர்ந்து பலன் தரக்கூடிய யோகம் ஜாதகருக்கு உண்டாகும்.
4) கால பலம்
காலத்தினை பகல் மற்றும் இரவு என இரு வகைப்படுத்தப்படுகிறது.
சூரியன்,குரு மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்கள் பகலில் வலுப்பெற்றதாக உள்ளது.
சந்திரன், செவ்வாய் மற்றும் சனி போன்ற கிரகங்கள் இரவில் வலுப்பெற்றுள்ள கிரிங்களாகவும் உள்ளது.
புதன் பகவான் மட்டும் பகல் மற்றும் இரவு இரண்டு நேரங்களிலும் வலுப்பெற்ற கிரகமாக செயல்படுகிறது.
வளர்பிறை சந்திரனில் சுப கிரகங்கள் வலிமை பெற்றதாகவும், தேய்பிறை சந்திரன் காலத்தில் பாவர்கள் பலம் பெற்றதாகவும் விளங்குகிறது.
5) ஜேஷ்டா பலம்
அயனம் இரண்டாக பிரிக்கப்பட்டது.
1) தட்சிணாயனம் : சூரியன் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை ஆறு மாத காலம் சூரியன் தெற்கு திசை நோக்கி நகரும்.அதாவது ராசி கட்டத்தில் கடக ராசியிலிருந்து தனுசு ராசி வரை சூரியன் நகரும் காலம் ஆகும்.
சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் காலம் உத்தராயணம் காலம் ஆரம்பமாகிறது., சூரியன் இதுவரை தெற்கு நோக்கி பிரவேசித்த சூரியன் வடக்கு நோக்கி நகர ஆரம்பிப்பார். உத்தராயண காலம் தை மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை ஆறு மாத காலம் ஆகும்.
சூரியன் மற்றும் சந்திரன் உத்திராயண காலத்திலும்,
மற்ற கிரகங்கள் வக்கிரம் பெரும் பொழுதும், சந்திரனுடன் கூடும் பொழுதும், கிரக யுத்தத்தில் வெற்றி பெறும்போதும் மற்றும் சுப கிரகங்களுடன் கூடும் பொழுதும் ஜேஷ்டா பலம் பெறும்.
6) நைசார்கிக பலம்
நைசார்கிக என்றால் "இயல்பாய் அமைந்துள்ள உள்ளார்ந்த அளவிலான பலம்" என்று அர்த்தம்.சாதக கட்டத்தில் அமர்ந்து உள்ள கிரகங்களின் உள்ளார்ந்த வலிமையை ஒப்பிட்டு கீழ்க்கண்ட படி வரிசையில் கிரகங்கள் அடுக்கப்படுகிறது.
1) சூரியன்-7 க்கு 7
2) சந்திரன் -7 க்கு 6
3) சுக்கிரன் -7 க்கு 5
4) குருவுக்கு -7 க்கு 4
5) புதனுக்கு -7 க்கு 3
6) செவ்வாய்க்கு-7 க்கு 2
7) சனி-7 க்கு 1
மேற்கண்டவற்றில் நிழற் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவானை சேர்க்கும் போது சூரியனை விட ராகு மற்றும் கேது வலிமை மிக்கவை.இதன் அடிப்படையில் பார்க்கும்போது கீழ்கண்ட படி வரிசையில் கிரகங்கள் வலிமை அமைகிறது.
1) கேது-9 க்கு 9 வலிமை
2) ராகு -9 க்கு 8
3) சூரியன்-9 க்கு 7
4) சந்திரன்-9 க்கு 6
5) சுக்கிரன் -9 க்கு 5
6) குருவுக்கு -9 க்கு 4
7) புதன்-9 க்கு 3
8) செவ்வாய் - 9 க்கு 2
9) சனி -9 க்கு 1
மேற்கண்ட வகையில் ராகுவை விட கேது பகவான் பலவான் ஆவார்.சூரியனை விட ராகு பகவான் பலவான். சந்திரனைவிட சூரியன் பலவான் ஆவார். சுக்கிரனை விட சந்திரன் வலிமை மிக்கவர் ,
குருவை விட சுக்கிரன் வலிமை மிக்கவர்,
புதனை விட குருவும், செவ்வாய் பகவானை விட புதனுடன் வலிமை மிக்கவர்கள்.
சனியை விட செவ்வாயும் வலிமை மிக்கவர் ஆவார்.
மேற்கண்ட ஷட் பலம் (ஆறு வித முறையில்) முறையில் கிரகங்களுடைய வலிமை கண்டறியப்படுகிறது.
ஷட்பலம் முறையில் ஒரு கிரகங்கள் பலமிழந்து இருந்தாலும் சுபத்துவ மற்றும் சூட்சும முறையில் அதன் பலன்கள் மாற்றி அமைக்கப்படுகிறது.
நன்றி!
My website
www.astroravichandransevvai.in
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி ,புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment